election propoganda லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
election propoganda லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 ஏப்ரல், 2011

Kalaignar knows about the needs of the poor - kovan said : ஏழைகளின் தேவையை அறிந்தவர் கருணாநிதி: ஈ.வி.கி.ச.. இளங்கோவன்

கோவனுக்கு அல்லது கோவன் ஆதரவாளர்களுக்கு இடம் தராததால் வந்த  அறிவு எழுச்சி! (ஞானோதயம்!) தெளிந்த புத்தி தொடரட்டும்!  என்றாலும் தேர்தல் முடிந்ததும் மறுபடியும் முருங்கை மரம் ஏறவதற்கே வாய்ப்பு உள்ளது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஏழைகளின் தேவையை அறிந்தவர் கருணாநிதி:
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


ஆம்பூர், ஏப். 10: ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர் திமுக தலைவர் கருணாநிதி என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.  ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெ. விஜய் இளஞ்செழியனை ஆதரித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இது பலமான கூட்டணி. அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. வைகோவும் இப்போது இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. அது இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென நினைப்பது தான்.  திமுக தலைவர் கருணாநிதி கடுமையான உழைப்பாளி. பொருளாதார மேதையும் கூட. ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர். அதனால் தான் இலவசங்களை வழங்கினார். வரும் தேர்தலிலும் மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவற்றை நிச்சயம் வழங்குவார்.  கடந்த அதிமுக ஆட்சியில் யானைகள் மீது தான் ஜெயலலிதா அக்கறை காட்டினார். மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. ஆனால் கருணாநிதிக்கு எப்பொழுதும் மக்கள் மீது அக்கறை உண்டு. யாருக்கு வாக்களிக்க வேண்டுமென சிந்தித்து செயல்படவேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும் என்றார். 

திங்கள், 28 மார்ச், 2011

Propoganda through S.M.S.- Banned: எஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்ய தடை

அறிவு சார்ந்த செயலன்று. பொதுவாகத்தமிழினப் படுகொலை புரியும் காங்.கிற்கு எதிராகவும் ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்றும் கட்சிச் சார்பற்ற பலர் குறுந்தகவல் அனுப்புகின்றனர். இவற்றைத் தடை செய்யும் நோக்கில்தான் கட்சியினரின் பரப்புரையைத் தடுக்க முயல்கின்றனர். இன்றைய அறிவியல் முறைக்கேற்ப குறுந்தகவல் வழியாகத் தேர்தல் பரப்புரை மேற்கொள்வது தவறல்ல. உடனே  விழுப்புரம் ஆட்சியர் இதனை நீக்கிக் கொள்ள வேண்டும். மக்கள் நலம் நாடும் வழக்கறிஞர்கள் உரியவர்களை  அணுகி இவ்வறிவிப்பிற்கான தடையைப் பெற ‌வேண்டும்.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /  
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


எஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்ய தடை


விழுப்புரம், மார்ச் 27: விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தின் போது செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்களிக்க கோருவது தடை செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  ÷இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  எஸ்.எம்.எஸ். செய்தி மூலம் வாக்கு கோருவது அல்லது தேர்தல் பிரசாரமோ நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய எஸ்.எம்.எஸ் செய்தி யாருடைய செல்போனுக்கும் வந்தால், அந்த செய்தியை பெற்ற நபர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு தொலைபேசியில் தெரிவிக்கலாம்.  ÷புகாரை 04146-228200, 222172 என்ற எண்களில் தெரிவிக்கலாம். புகார் அளிக்கும் நபர் எஸ்.எம்.எஸ் செய்தியின் விவரத்தை கூறி அது எந்த செல்போன் எண்ணிலிருந்து வரப்பெற்றுள்ளது என்ற தகவலையும் புகார் அளிப்பவரின் செல்போன் எண் மற்றும் பெயர், முகவரி ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.  ÷அவர்களின் புகார் பதியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த செய்தியை யார் அனுப்பியிருந்தாலும், அதற்கான செலவினத்தை சம்பந்தப்பட்ட வேட்பாளர் கணக்கில் சேர்த்து தேர்தல் செலவினமாக கணக்கில் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.