திங்கள், 11 ஏப்ரல், 2011

Raghul about curruption: ஊழல் நாட்டின் பெரிய சிக்கலாக உள்ளது: இராகுல் காந்தி

ஊழல் வெளிபப்டும் பொழுது ஊழல் முகவரை இடம் மாற்றம் செய்து மக்களை ஏமாற்றுவது காங். வழக்கம். உண்மையிலேயே ஊழலற்ற ஆட்சியை விரும்புபவராக இராகுல் இருநதால் அவர் காங்.ஐ விட்டு வெளியேறி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கி நாட்டை நேர்மையான வழிக்குத் திருப்ப வேண்டும். ஆனால், தேர்தல் பரப்புரையின் உத்தியாக  இவ்வாறு பேசினால் உரியவிலையை மக்கள் தேர்தலில் தருவர்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஊழல் நாட்டின் பெரிய பிரச்னையாக உள்ளது: ராகுல் காந்தி


திருவனந்தபுரம், ஏப்.10: ஊழல் நாட்டின் பெரிய பிரச்னையாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் ராகுல் காந்தி தெரிவித்தார்.  திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ராகுல் மேலும் கூறியது: நாட்டின் பெரிய பிரச்னையாக ஊழல் உள்ளது. இதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மத்தியில் செயல்படும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தகவல் உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தது. ஊழலை ஒழிக்கவும், அரசு நிர்வாகம் வெளிப்படையாக அமையவும் தகவல் உரிமைச்சட்டம் உதவும். ஆட்சி நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள இச்சட்டம் உதவும். இந்தச் சட்டத்தைத் தடுக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. மாறாக இதை இன்னும் பொறுப்புடன் செயல்படுத்த சட்டம் கொண்டுவரப்படும்.  காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் ஊழல் பற்றிய புகார் எழுந்ததுமே நாங்கள் நடவடிக்கை எடுத்துவந்துள்ளோம். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆளும் கேரளத்தில் ஊழல் புகார் எழுப்பப்பட்டும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழை மக்களின் பணத்தை சுரண்டும் ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கும்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் கேரளத்தின் தொழில் வளர்ச்சியை இடதுசாரி கூட்டணி அரசு அடியோடு அழித்துவிட்டது. தொழில் அதிபர்கள் தொழில் துவங்க விரும்பும் மாநிலங்கள் பட்டியலில் கேரளமில்லை. தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகளை கேரள அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. நிலம், மது, மற்றும் லாட்டரி மாஃபியாக்கள் கேரளத்தை ஆண்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் 43 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர். இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெற வேண்டுமானால் அவர்களுக்கு 3 வழிகள்தான் உள்ளன. ஒன்று வேறு மாநிலத்துக்குச் செல்லவேண்டும், அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல வேண்டும், இல்லாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என்றார்.  கேரளம் வளர்ச்சியடைய மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் இணைந்து செயல்படும் அரசு இங்கு அமைய வேண்டும். மத்திய அரசு ஒதுக்கிய வளர்ச்சித்திட்ட நிதியைப் பயன்படுத்த கேரள அரசு தவறிவிட்டது. கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு அமையுமானால் இங்கு தொழில் துவங்க சாதகமான சூழ்நிலை உருவாகும். அதன்மூலம் இங்கு வேலைவாய்ப்புப் பெருகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  பிரசாரக் கூட்டத்தில் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி, சசிதரூர் எம்.பி. ஆகியோரும் பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக