செவ்வாய், 12 ஏப்ரல், 2011

U.P.Govt. follows a new trick to ware helmet :தலைக்கவசம் அணியவைக்க உ.பி.யில் புதிய உத்தி!

நல்ல திட்டம். பாராட்டுகள். இந்தியா முழுமையும் இதனைப் பின்பற்றலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஹெல்மட் அணியவைக்க உ.பி.யில் புதிய உத்தி!



 பரூக்காபாத்,ஏப்.11: ஹெல்மட் என்று அழைக்கப்படும் தலைக்கவசத்தை அணியுமாறு எப்படி வலியுறுத்தினாலும் கேட்காதவர்களைப் பணியவைக்க உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரூக்காபாத் மாவட்ட நிர்வாகம் புதிய வழியைக் கண்டுபிடித்துவிட்டது.  ஹெல்மட் அணியாமல் ஸ்கூட்டர், பைக் என்று எந்த டூ வீலரை யார் ஓட்டி வந்தாலும் பெட்ரோல் போடக்கூடாது என்று எல்லா பெட்ரோல் பங்குகளுக்கும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். எனவே ஹெல்மட் இல்லாத தலைகளே இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டுவருகிறது. இந்த உத்தரவை அமல்படுத்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் ஒத்துழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக