வெள்ளி, 29 மே, 2009

இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததை மன்னிக்க முடியாது: பழ.நெடுமாறன்

தினமணி
First Published : 29 May 2009 01:33:00 AM IST


திருநெல்வேலி, மே 28: இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையம் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்ததை உலகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறினார். திருநெல்வேலியில் அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி: இலங்கை அதிபர் ராஜபட்சவின் போர் குறித்து விசாரிக்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தபோது அதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அத்துடன், இந்தத் தீர்மானத்துக்கு எதிராக மற்ற சில நாடுகளையும் வாக்களிக்குமாறு இந்தியா வற்புறுத்தியுள்ளது. இந்தியாவின் இச் செயல், நேரு காலத்தில் இருந்து இந்திய அரசு பின்பற்றி வந்துள்ள கொள்கைகளுக்கு முரணானது. மனித உரிமைகளை மீறி, ராஜபட்சவின் சிங்கள ராணுவம் தமிழர்களை இனப் படுகொலை செய்துள்ளது. இந்திய அரசு அதற்கு ஆதரவாக செயல்பட்டு இருப்பதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். பிரபாகரன் இறந்துவிட்டதாக சர்வதேசப் பொறுப்பாளர் பத்மநாதன் அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? பத்மநாதன் இலங்கையில் இல்லை. சர்வதேசப் போலீஸôர் தேடி வரும் ஒரு குற்றவாளி அவர். பிரபாகரன் உடன் நின்று போரிட்ட புலிகள் இதைச் சொல்லி இருந்தால் நம்பலாம். அவர்கள் அதைப் பற்றி கூறவில்லை. பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். குறித்த நேரத்தில் அவர் வெளியே வருவார். இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் அவர் தலைமையில் ஈழப் போர் தொடரும் என்றார்.

நாளைய உலகம் மன்னிக்குமா மன்னிக்காதா என்பது குறித்து காங். அரசிற்குக் கவலை இல்லை. அகம்பாவத்தால கிடைக்கும் இன்றைய போலிப் பெருமையே முதன்மையானது. எனவே இதனைத் தோலுரிக்க வேண்டும் என்றால் இந்தியாவின் எல்லா பெரு நகரங்களிலும் மனித நேய ஆர்வலர்களைத் திரட்டி மக்களிடையே விழிப்புப் பேரணிகள் நடத்தி ஈழத்தின் பக்கம் இந்திய மக்களைத் திருப்ப வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக இந்திய-ஈழ உறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/29/2009 3:47:00 AM

அய்யா! நீங்க சொல்லுதெல்லாம் சரிதான் ஆனா என்ன செய்ய. எல்லா போராட்டம் அது இதுன்னு எல்லாம் ஒரு முன்னேற்றமும் இல்ல. அப்பாவி மக்கள் அனேகம் செத்ததுதான் மிச்சம். வேறு ஏதாவது வழி இருக்கா அதப் பேசுங்க. நடக்கப் போறத பேசுங்க. சும்மா வீண் அறிக்கையினால ஒரு பிரயோசனமும் இல்லயே. தமிழ் நாட்டுக்குள்ளேயே துரோகிகள் இருக்கும்போது எப்படி. அந்த கருணாவுக்கும் இங்கு இருக்கிற துரோகிகளுக்கிம் வித்தியாசம் ரெம்ப இல்ல. முதல்ல அவங்கள ஓர்ங்கட்டனும். அதிகமா மக்களிடம் போய் இத விளக்கி ஒரு விடியலை ஏற்படுத்துங்க. ஒரு எழிச்சிய உண்டாக்குங்க அப்புறம் பெரிய காரியம் நல்ல காரியம் நடக்கும். சரியா?

By thambi
5/29/2009 3:02:00 AM

You, vaiko and few communist party leader are the only persons talking about srilanka humanitarian problem, It look like all other indian/tamail leaders and people were forgot about their responsibility for rising up humanitarian problem. It seems like we lost our feeling or we were dead on this.

By Dinesh from vellore
5/29/2009 2:08:00 A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக