புதன், 27 மே, 2009

பிரபாகரனின் 13 வயது மகன் எங்கே?
தினமணி
First Published : 27 May 2009 12:01:00 AM IST


வவுனியா, மே 26: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திரன் எங்கே என்பது மர்மமாக இருக்கிறது. 13 வயதாகும் அச் சிறுவன் பற்றி எங்களுக்குத் தகவல் இல்லை என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச உறவுகளுக்கான பிரிவின் தலைவர் செல்வராசன் பத்மநாதன் தெரிவித்ததாக, பிரபாகரனிடமிருந்து 2004-ல் விலகிச் சென்ற கருணா தெரிவிக்கிறார். இவர் இப்போது இலங்கை அரசின் ஃபெடரல் அமைச்சராகப் பதவி வகிக்கிறார். பிரபாகரன் இறந்துவிட்டார், அவரது மனைவி, மகள், இரண்டாவது மகன் இறந்துவிட்டனர் என்று இலங்கை ராணுவம் கூறிய தகவல்களை பத்மநாதன் முதலில் மறுத்தார் என்பதும் பிறகு ஒப்புக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அவர் சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்ற ஐயம் சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது. பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் இரண்டாவது மகன் பாலச்சந்திரன் ஆகியோர் இறந்துவிட்டதாகவும் அனைவரின் சடலங்களும் நந்திக்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு கூறியது. இப்போது அவர்கள் இறந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை என்கிறது. இலங்கையின் வடக்கில் பிரச்னை தீவிரமடையும்போதே மதி வதனியும் மகளும் ஐரோப்பிய நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கடைசி கட்டத்தில் மிகவும் கடுமையாக பீரங்கிச் சண்டை நடந்த பகுதியில்தான் பிரபாகரனின் குடும்பம் கடைசியாக இருந்திருக்கிறது. எனவே அவர்கள் அனைவருமே உயிரிழந்திருக்கத்தான் வாய்ப்பு அதிகம் என்கிறார் கருணா. பிரபாகரனின் மறைவு பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, அரசியல் ரீதியான சமரசத் தீர்வை அவர் ஏற்றிருந்தால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும், ஏராளமான சொத்துகளும் சேதம் அடைந்திருக்காது என்றார் கருணா. வவுனியா வந்த நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் பேசிக்கொண்டிருந்தார். சண்டையில் பொட்டு அம்மான் இறந்துவிட்டார் என்பதை பத்மநாதன் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தினார். இவர்தான் பிரபாகரனுடன் கடைசி வரை இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்

சிங்கள அரசு தமிழர் சிக்கல்களுக்கு அரசியல் முறையில் தீர்வு கண்டிருந்தால் அனைத்துத் தமிழர்களும் ஈழத் தமிழ் நாடும் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்குமே! ஓ! அவர் என அவரின் புது முதலாளி பற்றித்தான் கூறுகிறாரா? சரி!சரி! வெளிப்படையாக உண்மையைக் கூறினால் நாளை பறிக்க இருக்கும் உயிரை இன்றே பறித்து விடுவார்களே! இந்தஅளவிற்குத்தானே உண்மையைச சொல்ல முடியும். அது சரி. மேதகு பிரபாகரனின் குடும்பத்தவர் அனைவரைப் பற்றியும் கண்டறிந்தது போலும் இரண்டாவது மகனைப்பற்றித்தான் ஒன்றும் தெரியவில்லை என்பது போலும் இஃது என்ன நாடகம்!

--- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/27/2009 3:46:00 A.M

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக