செவ்வாய், 26 மே, 2009

ஈழத்தின் தீயூழ்!

First Published : 26 May 2009 11:23:00 PM IST







மாவீரன் பிரபாகரன் மாண்டான் என்னும் செய்தி தொலைக்காட்சிப் பெட்டிகளைத் துளைத்துக் கொண்டு வெளிப்பட்டபோது, அடிவயிற்றை முறுக்கிக் கொண்டு, இனம் புரியாத பீதி யாவரையும் ஆட்கொண்டது. தமிழ்நாடு இழவு வீடாக மாறியது! "ஈழம் எங்கள் தாகம்' என்று போர் முரசு கொட்டியவன், தன்னுடைய தாய் நாட்டு விடுதலைக்காகப் பதினெட்டு வயதில் களம் புகுந்தவன், களத்திலேயே செயல்பட்டு, களத்திலேயே உண்டு, களத்திலேயே உறங்கி, சிங்களக் காடையர்களுக்கு முப்பதாண்டு காலம் சிம்ம சொப்பனமாக விளங்கியவன், களத்திலேயே நீடு துயில் கொண்டு விட்டான் என்று சிங்களச் செய்திகள் சொல்லுகின்றன! ஒரு புறநானூற்றுத் தாய் சொன்னாள்: ""அவனை ஈன்ற வயிறு இதுதான்; அதன் பிறகு அவனை நான் எங்கே அறிந்தேன்! பகைவர்களின் கருவறுக்கப் போர்க் களங்களில் தென்படுவான்! அங்கே போய்ப் பாருங்கள்!'' ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி ஒரு மகனை ஈழத் தாய் ஒருத்தி அந்த மண்ணின் விடுதலைக்காகச் சுமந்தாள்! இலங்கை மக்கள் ஒரே நாட்டின் மக்கள் என்று முழங்குகிறாரே ராஜபட்ச! சிங்கள ராணுவக் குண்டு வீச்சுக்கு அஞ்சி ஈழ மக்கள் ஊர்களைக் காலி செய்து கொண்டு போன பிறகு, அந்தப் பகுதியிலே கூட அன்று; அந்தத் தமிழர்களின் வீடுகளிலேயே சிங்களவர்களைக் கொண்டு வந்து ராணுவப் பாதுகாப்போடு குடியேற்றுகிறாரே ஏன்? வஞ்சகம்தானே! தமிழினத்தை முற்றாக அழித்து, அந்தப் பகுதிகளையும் சிங்களப் பகுதிகளாக்கும் அவருடைய வஞ்சகச் செயலை அறிந்தும், மன்மோகன் சிங் - கருணாநிதி கூட்டணி அரசு அவருக்கு வகைதொகை இல்லாமல் போர்க் கருவிகளை வழங்கியதே! போரால் அவருடைய கருவூலம் வறண்டு விட்டது என்று வகைதொகை இல்லாமல் கடன் கொடுத்து உதவியதே! வாலி வலிமையானவன்; நேரியவன்; பெருந்தன்மையானவன்; ஆனால் தன்னால் வாலில் கட்டி அடிக்கப்பட்ட ராவணன் தன்னுடைய நட்புக்காக இறைஞ்சுகிறான் என்று இரங்கி, தீயவனோடு நட்புப் பூண்டான். ராவணனின் நட்பால் வாலிக்கு எந்தப் பயனுமில்லை. ஆனால், சிற்றினச் சேர்க்கை காரணமாக ராமனின் அம்புக்கு இரையாக நேரிடவில்லையா? ராவண வதம் நிகழ்வதற்கு வாலி வதம் நிகழ்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லையா? வலிமையான நாடு இந்தியா! பல்லாயிரக் கணக்கில் தமிழ் மக்களைக் கொன்று மாபாதகம் புரிகின்ற ராஜபட்சவுடன் சேராத கூட்டு ஏன் சேர வேண்டும்? அந்த நீச ஆட்சிக்கு ஆயுதங்கள் ஏன் வழங்க வேண்டும்? இந்த நீச நட்பால் இந்தியா மானக்கேடடைந்தைத் தவிர பெற்ற பயன் என்ன? நடந்து முடிந்த தமிழினப் பேரழிவு குறித்துச் சிங்களக் காடையர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். தமிழினத்தைச் சின்னா பின்னப்படுத்தி விட்டதாகக் குதூகலிக்கிறார் ராஜபட்ச! மண்டியிட்டு மண்ணை முத்தமிடுகிறார்! அந்தக் குறியீட்டின் மூலம் அவர் சிங்கள இனத்திற்குச் சொல்லும் செய்தி இந்த மண்ணை உங்களுக்கு மட்டுமே உரித்தாக்கி விட்டேன் என்பதுதானே! சிறுபான்மை, பெரும்பான்மை என்பதெல்லாம் கிடையாது; ஒருபான்மைதான் உண்டு என்று வெற்றிக்குப் பிந்தைய பாராளுமன்றத்தில் விளம்பி இருக்கிறார் ராஜபட்ச! அதனுடைய பொருள் இதுவரை இருந்து வந்த, இடையில் கேள்விக்குள்ளான, ஒற்றையாட்சி முறையை மீண்டும் உறுதிப் படுத்தி விட்டேன் என்பதுதானே! ஈழப் பிரிவினைக்குக் கூட பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, முடிந்தால் நிறைவேற்றிக் கொள் என்பது ராஜபட்சவின் அறைகூவல்! அப்படி முடியாதென்றால் ""ஜனநாயகத்தில் நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்'' என்று சமாதானமாகப் போய்விட வேண்டும் என்பது ராஜபட்சவின் அறிவுரை! அதை விட்டு விட்டு உரிமை பற்றிப் போராடினால் சிங்கள ராணுவம் சுட்டுப் பொசுக்கும்; அதற்குச் சுடத் தெரியவில்லை என்றால் இந்தியாவைத் துணைக்கழைத்துக் கொள்ளும் என்பது ராஜபட்சவின் எச்சரிக்கை. இலங்கையை ஆண்ட அத்தனை சிங்கள அதிபர்களும் தங்கள் தங்கள் பங்குக்குத் தமிழின அழிப்பு வேலையை மேற்கொண்டவர்கள்தான்! ஆனால் கடைசியாக ஒரு கசாப்புக் கடைக்காரரிடம் அந்தப் பகுதி சிக்கிக் கொண்டதுதான் பேரவலம்! இந்தியா அந்தக் கசாப்புக் கடைக்காரருக்கு வெட்டுக் கத்தி கொடுத்து உதவியது அதை விடக் கொடுமை! அந்த வெட்டுக் கத்தியைக் கொடுக்க விடாமல் தடுத்து, ஆடுகளைக் காக்கும் அதிகார பீடத்தில் கருணாநிதியைத் தமிழ் மக்கள் கீழேயும் மேலேயும் ஏற்றி வைத்திருந்தும், இவரும் சேர்ந்து கொண்டு "ஐயோ! ஆடுகள் வெட்டப்படுகின்றனவே! என்று நீலிக் கண்ணீர் வடித்துக் குரலெடுத்து ஒப்பாரி வைத்தது, வஞ்சகத்திலெல்லாம் வஞ்சகம்! ஈழத் தமிழினத்திற்கு எதிராக நினைக்கவே நெஞ்சு நடுங்கும் கொடுஞ்செயல்கள் ஜெயவர்த்தன காலத்திலேயே தொடங்கி விட்டன! ஆனால் அவருடைய கழுத்தை அப்போதைக்கப்போது பிடித்துக் கட்டுக்குள் வைக்க இந்திரா காந்தி போன்ற வீராங்கனைகளும், எம்.ஜி.ஆர். போன்ற பொன்மனச் செம்மல்களும் ஆட்சிகளில் இருந்தார்கள்! ஈழப் போராளிகளை ராணுவ ரீதியாக வளர்த்தவர்கள் அவர்கள்தான்! முதல் மூன்று ஈழப் போர்களிலும் மூன்றில் இருபகுதிச் சிங்களவர்கள் மூன்றில் ஒரு பகுதித் தமிழர்களிடம் மண்ணைக் கவ்வியதன் விளைவாக தமிழீழம் அறிவிக்கப்படாத விடுதலை பெற்ற நாடாகச் செயல்பட்டது! ஈழத்தில் போராளிகளிடம் தரைப்படை இருந்தது; சிறு கப்பல்களும், விமானங்களும் இருந்தன. ஈழத்தின் 16,000 சதுர கிலோ மீட்டர் பரப்புப் போராளிகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அவர்களின் நாடு ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினராக இல்லையே தவிர மற்ற எல்லாம் நடந்தேறின. இதற்கிடையே ரணில் விக்கிரமசிங்க வரவேண்டிய இடத்திற்கு ராஜபட்ச வருவதற்குத் தங்களை அறியாமலேயே ஈழப் போராளிகள் உதவி விட்டார்கள்! எத்தனையோ பிழைகள் செய்திருக்கிறார்கள்! யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பது போலத்தான் அது! இவர்களின் இடத்தில் டக்ளஸ் தேவானந்தாவையும், இத்தனை லட்சம் தமிழர்கள் அழிவதற்குச் சிங்களவர்களுக்கு உளவு சொல்லி, ஈழப் பிழைப்புக்குப் பதிலாக ஈனப் பிழைப்புப் பிழைத்த கருணாவையும் நினைத்துப் பாருங்கள்! மலத்தை மிதித்து விட்டது போன்ற அருவருப்பு ஏற்படவில்லையா? ரணிலுக்குப் பதிலாக ராஜபட்ச வந்தது தமிழின அழிவுக்கு முதற் காரணம். சோனியாவின் "ரப்பர் முத்திரை' என்று புகழ்கொண்ட மன்மோகன் சிங் பிரதமரான காலமும், சொல் வேறாகவும், செயல் வேறாகவும் வாழ்ந்து பழக்கப்பட்ட கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சரான காலமும் ராஜபட்சவின் ஆட்சிக் காலத்தோடு பொருந்தி அமைந்து விட்டதை ஈழத்தின் தீயூழ் என்றுதான் வள்ளுவ மொழியில் சொல்ல வேண்டும்! இவ்வளவு கொடுமைகளுக்கும் ஈழம் கசாப்புக் கடை ஆனதற்கும் ராஜபட்ச முதற் காரணம்! ஆயுதம் வழங்கிய மன்மோகன் சிங் துணைக் காரணம்! மன்மோகன் சிங்கை முடக்குகின்ற அதிகாரம் முற்றாக வாய்த்திருந்தும், அந்த அதிகாரத்தை உரிய வழியில் பயன்படுத்தி இந்தியாவின் அயல் விவகாரக் கொள்கையையே மாற்றுவதை விடுத்து, நாளைக்கொரு மனிதச் சங்கிலி, ஒருவேளை தொடங்கி மறுவேளை வரும்வரை உண்ணாநோன்பு என்று பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த கருணாநிதி இன்னொரு துணைக் காரணம்! ராஜபட்ச என்னும் முதற் காரணமும் மன்மோகன் சிங், கருணாநிதி என்னும் துணைக் காரணங்களும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பிணமாவதற்கும் நான்காம் விடுதலைப் போர் முடிவுக்கு வரவும் காரணங்களாயின! நான்காம் விடுதலைப் போர் முடிவுற்று விட்டது. அதனுடைய பொருள் ஐந்தாம் விடுதலைப் போர் அடுத்துத் தொடங்கும் என்பதே! நான்கோடு எண்ணிக்கை முடிந்துவிட்டதாக ராஜபட்சவோ, மன்மோகன் சிங்கோ, கருணாநிதியோ, கருணாவோ கருத மாட்டார்கள். நான்கின் வளர்ச்சி ஐந்து என்பதை அவர்கள் அறியாதவர்களில்லை! எந்த விடுதலைப் போராட்டமும் இலக்கை அடையாமல் முற்றுப் பெற்றதாக வரலாறு கிடையாது. ஒருவேளை அந்த ஒற்றைப் பிரபாகரன் இல்லையென்றே ஆகிவிட்டாலும் ஓராயிரம் பிரபாகரன்களை காலம் உடனடியாக உருவாக்கும்! ஈழத்தின் தேவைக்கு ஏற்பக் காலத்தால் வடிவமைக்கப்பட்டவன்தானே பிரபாகரன்! ஈழம்தான் அற்றுப் போய்விட்டதா? அல்லது காலம்தான் அற்றுப் போய்விட்டதா? உலகின் மூத்த இனம், சிந்து சமவெளி நாகரிகம் கண்ட இனம், தெய்வப் புலமைத் திருவள்ளுவனைப் பெற்ற இனம் நாதியற்றுப் போக இயற்கை அனுமதிக்காது!
கருத்துகள்


பழ. கருப்பையா அவர்களே! மிகச சரியாகச் சொல்கிறீர்கள்! ஆனால் இயற்கை அனுமதிக்காது என்பது போன்றவற்றை மனிதநேய உணர்வாளர்கள்தாம் கூறுகின்றார்களே தவிர வரலாறு மன்னி்த்தால என்ன மன்னிக்காவிட்டால் என்ன? என்று கொடும்பாவிகள் தம் விருப்பம்போல்தான் கொடுங்கோல் ஆட்சி புரிகின்றனர். பேடித்தனம் மிக்கப் பன்னாட்டு அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை. உலகமனித நேயர்கள் ஒன்று சேர்ந்துப் புரட்சி ஏற்படுத்தினால்தான் இவை போன்ற கொடுமைகள் இனியும் தொடராது. அது சரி! போகிற போக்கில் உங்கள் நம்பிக்கைக்குரிய ஆரியக் கதையின் அடிப்படையில் இராவணனைத் தீயவன் என்று சொல்கிறீர்களே! ''இராவணன் ஒழுக்கத்திற் சிறந்தவன்;அவனால் சீதைக்கு ஊறு நேர்ந்திருக்காது'' என்று சீதையை விட இராவணனை நம்பிச்சீதையின் ஒழுக்கத்திற்குச் சான்று கொடுத்தவன் வால்மீகி இராமன். உங்கள் இராமனால் பாராட்டப்பெற்ற இராவணனை- இப்பொழுது மேதகு பிரபாகரனைத் தவறாகச் சித்திரிப்பது போல் - ஒரு சாரார் தவறாகக் கூறுவதாலேயே தீயவன் ஆக மாட்டான் என நம்புங்கள். எனினும் ஈழத்தமிழர்கள் வெல்வார்கள் !

By Ilakkuvanar Thiruvalluvan
5/26/2009 4:46:00 AM

ஈழம் வெல்லும் ! அதனைக் காலம விரைவில் சொல்லும் என்னும் நம்பிக்கையை விளைவிக்கும் வண்ணம் கட்டுரை அளித்தமைக்குப் பாராட்டுகள்!
அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/26/2009 4:47:00 AM

----------------------------------------------------------------------------------------------

கருத்துக்கள்

Veerapandia Kattapommanukku oru ettappan than. MAA VEERAN PRABAKARANUKKU irandu ettappans ilangaiyil oru karuna and tamilnattil oru karuna(nidhi)

By VELU
5/27/2009 10:23:00 AM

RSA, KUPPA, தனி ஈழம் கிடைத்தால், தென்னிந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்தா? உண்மையில் தனிஈழம் கிடைக்காவிட்டால், சைனா அப்பகுதியில் கடற்தலம் அமைக்கும். அதன்மூலம் இந்தியாவிற்கே பெரும் அச்சுறுத்தல் உருவாகும். they (ஈழதமிழர்கள்) should learn to live in peace with their Sinhalese brothers. என்று நீங்கள் எழுதியிருப்பதிலிருந்து உங்களுக்கு இலங்கை வரலாறோ, இனவெறி கொண்டு தமிழ்மக்களை அழிக்க நினைக்கும் சிங்களதலைவர்களைப் பற்றியோ எதுவும் தெரியவில்லை என தெரிகிறது. தமிழ் மக்கள் இலங்கை நாட்டின் மக்கள் என்று ராஜபட்சே சொன்னால், ஏன் தமிழர்களுக்கு மட்டும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன? தங்களுக்கு சொந்தமில்லாத தமிழர் பகுதிகளை சிங்களவர்களுக்கே சொந்தம் என்று மண்ணாசை கொண்டு அபகரிக்க நினைக்கும் சிங்கள அரசை ஏன் கண்டிக்கவில்லை? பதிவான ஓட்டுக்களில் 30 சதவீத ஓட்டு வாங்கியவர்களை ஒட்டு மொத்த தமிழர்களும் ஆதரித்திருப்பதாக எப்படி கூறுகிறீர்கள்?

By Murali
5/27/2009 1:15:00 AM

நல்ல கட்டுரையை வெளியிட்டுருக்கிறீர்கள். இருந்தாலும் RSR, KUPPA களின் குருட்டு கண்களை திறக்க முடியவில்லையே எனும் போது நெஞ்சம் விம்மி இதயம் கனத்துப் போகிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல தமிழர்களின் பிரிவு, குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படவேண்டிய சிங்கள அரசு கொண்டாடி கூதுகளித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் நியாயமான போராட்டத்தை, கோரிக்கையைப் பற்றி எதுவும் தெரியாமல், சிங்கள அரசின் பயங்கரவாதத்தை புரிந்து கொள்ளாமல் வெறித்தனமாக புலிகளை மட்டும் விமர்சிக்கும் குப்பாக்களின் இருண்டு போன கண்கள் திறக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.

By Murali
5/27/2009 12:46:00 AM

Wel said RSR. Pl rad my comments on this page given earlier.In 1982 when prabakaran attacked Umamhaeswaran at Pondy Bazaar ,TN police arrested him and later let him off after MGR was informd abt them. during that time itself our leaders should have intervened properly but it was not to be. What you said abt Eelam is right. That would have been a danger to the unity and integrity of TN and India.

By Kuppa
5/26/2009 9:47:00 PM

Tamilnad Electorate has decisively rejected LTTE sympathisers like MDMK and PMK. Even ADMK would have won more seats if she had not got into alliance with these two parties. Look at the plight of Pandyan of CPI! He too has been defeated . Only Thiruma escaped becaise of his caste support base and full support from DMK to defeat PMK. Here is a challenge Karuppaiah. Let PMK, Thiruma, MDMK unite and fellows like DPandyan form analliance and fight the coming state elections. without aligning themselves with any major parties like ADMK, DMK , or Congress. They will lose deposit in every constituency. Why is that? Because, all sensible people in Tamilknad know that an Independent Eelam is a great danger for South India, especially under a terrorist outfilt like LTTE. Tamil people are not against the Tamils in Ceylon but they should learn to live in peace with their Sinhalese brothers. Karuna Amman is a great statesman. Actually, he has brought hopes of really good life

By rsr
5/26/2009 4:12:00 PM

nathiyatrathu ezha tamilan mattumalla thayaga tamilanumthan.inge tamilanai entha nattanum suttalum kodumaipaduthinalum kelvi ketga allillai.appadi kettal the.paa. sattam payum. enna seyiya izhi pirappanathe tamilinam.

By c.mayalagu
5/26/2009 1:26:00 PM

காலம் முழுவதும் தமிழன், தமிழ் என்று வியாபாரம் நடத்தி வந்த முதல்வருக்கு ஈழத்தமிழனைப் பற்றி அக்கறை இல்லை. ஆனால் தனிஈழத்தை எதிர்த்து வந்த ஜெயலலிதா கடைசியில் தனிஈழத்திற்கும், தமிழனுக்கு குரல் கொடுத்தது வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். என்ன தமிழனுக்கு உயிர்க் கொடுக்க வேண்டாம் தமிழர்கள். அவர்களின் வாக்குகளை ஈழத்தமிழர்களுக:கு ஆதரவாக செலுத்தியிருக்கலாம். பணம் வாங்கிய தமிழன் என்றும் மனம் மாறமாட்டான். புதிய மந்திகள் பதவியேற்று தமிழகத்தை சொர்க்கபுரியாக மாற்றுவார்கள் என்பதில் யாருக்கும்ஐயமில்லை.

By Suresh, India
5/26/2009 11:27:00 AM

கட்டுரைக்கு நன்றி. இதே மாதிரி எத்தனை கட்டுரைகள் எழுதியிருப்பீர்கள் பழ. கருப்பையா. பயன் என்ன? யார் வென்றார்கள். காங்-திமுக அல்லவா வென்றுள்ளது. ஆஸ்திரியாவில் சீக்கிய மதகுரு படுகொலை என்றால் பற்றி எரிகிறது பஞ்சாப். தமிழினம் அப்படிப்பட்டதல்ல. தங்கள் கட்டுரையில் சொன்ன தமிழினம் என்றோ மடிந்து போய்விட்டது. தமிழனை காட்டுக் கொடுத்தல், அவன் உயிருக்கு உலை வைத்தல். அவனை கொல்வோருக்கு துணை போதல் போன்ற எல்லாச் செயல்களுக்கும் தமிழனே காரணம். தற்போது வாழ்பவம் புதுத்தமிழன். அவன் சுயநலவாதி. தன் இனத்திற்காக கவலைப்படமாட்டான். பணம் வாங்கிக் கொண்டு யாருக்கும் வாக்களிப்பான். தயவு செய்து இனிவருங்காலங்களில் தமிழனைப்பற்றி புகழவேண்டாம். தமிழன் என்று சொன்னால் தலைகுனிந்துதான் நிற்க வேண்டும்.

By suresh
5/26/2009 11:12:00 AM

ஒரு பிரபாகரனை கொன்று பல ஆயரம் பிரபாக்களை உருவாக்கி விடபோகிறது இந்தியா ம்ற்றும் இலங்கை. இதன் விளைவுகள் மீண்டும் பல்லாயிரம் விலை மதிப்பற்ற தமிழர் உயிர்கள்.

By சந்திரபிரபு
5/26/2009 10:23:00 AM

Where is EELam? In ancient Tamil literature? That will never happen. Because of Israel and pakistan some people dream of creating EELAm but it is a pipe dream. People like Mr Karuppaiah can sit in his chaair at home and write articles like this for hand clappers. But it is not practically achievable. Instead we should force Rajapakse to give equal rights to Tamils so that they can go about their business. They hhave suffered for long and it should end atleast now. India and the world sould force the Lankans. Enough of this war and sufferings.

By kuppa
5/26/2009 7:08:00 AM



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக