ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

Economic Times insinuates Tamils to follow Colombo in ditching India

Economic Times insinuates Tamils to follow Colombo in ditching India

[TamilNet, Saturday, 22 September 2012, 09:38 GMT]
The editorial of Mumbai-based The Economic Times on Friday insinuates that Tamils will never get justice from India unless they too compete with Colombo in playing the card of China and Pakistan, commented a political analyst in Jaffna. The Economic Times editorial, criticising the opposition to Rajapaksa’s visit as chauvinism wrecking New Delhi’s strategy said: “India has many bones to pick with Sri Lanka, including thwarting Colombo's game of playing Pakistan and China off against India. This calls for a combination of unrelenting pressure on some subjects, such as political rights of the Tamil minority, and generous accommodation on some others.” Responding, the Jaffna analyst told TamilNet that ‘unrelenting’ here implies indefinite hoodwink and ‘generous accommodation’ accommodates annihilation of the nation of Eezham Tamils.

According to The Economic Times (ET), “India has to promote people-to-people ties, build an expansive economic relationship with Lanka that gives a large cross-section of Lankans a vital stake in maintaining good relations with India and make Colombo deliver on principles and promises of democracy that it cannot afford to forswear.”

This is a wishful thinking the Mumbai-based ET tries to project to camouflage the corporate greed of India bulldozing all other issues, the analyst commented.

Further comments from the political analyst follow:

Colombo playing the card of China and Pakistan is not new. It will go ever escalating. The way New Delhi pampers genocide and chauvinism of Colombo the Sinhala state will not stop without destabilising even Tamil Nadu.

Only a mobilised international action recognizing the right to protection of the long-affected Eezham Tamils and granting independence to their nation would make the Sinhala state to relent, look back and seek reconciliation. India helping to such an international process is the way for reinventing and restructuring good relations with all the peoples of the island.

India’s strategy defended by the ET editorial is also not new. Coming from the Krishna Menon legacy of India’s foreign policy, it is a failed strategy that ended in genocide and opened the southern flank of India to its adversaries. Where was The Economic Times when the strategy was leading to the genocide?

Criticizing the Tamil Nadu politicians as ‘self-styled champions’ The Economic Times says, “If they think that the people of Tamil Nadu do not have the sense to realise that their aggressive competition to stage the most attention-grabbing protest against Rajapaksa will only harm the Lankan Tamils, they are sadly mistaken.”

Seriously out of touch with the grassroot realities in Tamil Nadu, or desperate in giving a deceptive picture to the rest of India, the editorial said that the ‘maturity’ of the Tamil Nadu people would negatively respond to the competitive aggression of the Tamil Nadu political parties against the visiting head of state, i.e., Mahinda Rajapaksa.

While in truth it is the public anger and strong grassroot sentiments that impel the political parties in Tamil Nadu to respond to the situation, only an Extra Terrestrial could conclude like the ET editorial that people of Tamil Nadu would not support the protest against Rajapaksa.

India’s national leaders must convey the virtues of New Delhi’s strategy to the people and checkmate the chauvinists, says the ET editorial.

Which one of the so-called national leaders has credibility for people to trust in this instance, when the current President of India, Mr. Pranab Mukherjee himself, as Foreign Minister in 2009, has gone on record for misleading the world on the number of Tamil civilians in the war zone at the height of the genocide in Vanni?

There was a striking difference in the reporting of The Hindu on Friday. For the first time it has depicted Rajapaksa as “accused of genocide,” and the correspondent Mahim Pratap Singh said that Rajapaksa’s arrival in Bhopal and denial of entry to Vaiko were an irony, even though another feature on the same day by Sandeep Dikshit was painting a rosy picture of Rajapaksa assuring provincial council elections in the North. All have seen what has happened in the East.

Most of the Indian media was rhetorically harping on Mahinda Rajapaksa saying that the Tamil issue should not affect the age-old ties between India and the island. It is high time that Indian media should investigate who was responsible for the age-old ties turning into a partnership for genocide.

But the editorial of The Economic Times, India’s most popular, ‘national,’ financial daily, has crossed all the limits and it looks as though it has come straight away from Mahinda Rajapaksa’s international campaign desk.

The Economic Times headquartered in Mumbai in the Times of India building and published in 12 cities in India, has a circulation of 8,00,000 copies. Mr. Rahul Joshi is its current editor.

External Links:
The Economic Times: Sri Lankan Tamils will not be helped by chauvinist attacks on president Mahinda Rajapaksa


Tamils in UK salute Vijayaraj, condemn India's welcome of Mahinda

Tamils in UK salute Vijayaraj, condemn India's welcome of Mahinda

[TamilNet, Saturday, 22 September 2012, 00:03 GMT]
Saluting the sacrifice of Salem based Tamil Nadu activist Vijayaraj, who had self-immolated protesting Mahinda Rajapaksa's visit to India and who succumbed to his burns on Tuesday, Eezham Tamils in the UK conveyed their solidarity to the protesting Tamils of Tamil Nadu, condemning India's welcome of the genocide-accused SL President. Demonstrating outside the Indian High Commission in London on Friday, the protesters further urged the Indian government to recognize the genocide of the Eezham Tamils.



Protest in UK
The demonstrators in the UK further asked whether India was completely immune to the sentiments of the Tamils worldwide and the Tamils in Tamil Nadu by entertaining a representative of a state that was resposnible for one of the worst genocides in the 21st century, sources told TamilNet.

The demonstration in London was arranged by TCC-UK.

Protest in UK
Protest in UK

Thendral T.V. honouring the teachers of handicapped

மாற்று த் திறனாளி மாணவர்களின் ஆசிரியர்களை ப் போற்றும்  தென்றல் தொலைக்காட்சி!

Thendran T.V., to honour handicapped teachersபணிகளில் சிறந்தது ஆசிரியர் பணி. அதிலும் காதுகேளாத, வாய்பேச முடியாத, பார்வையற்ற குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களின் சேவை ரொம்பவே பெரிது. இதை உணர்ந்த தென்றல் தொலைக்காட்சி அப்படி ஒரு உயரிய சேவையை செய்துகொண்டிருக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது அளித்து கவுரவப்படுத்த இருக்கிறது. அந்த விருதுக்கு ஹெலன் கில்லெர் விருதுகள் என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பிறந்து குழந்தையிலேயே காதுகேற்கும் திறனையும், வாய்பேசும் திறனையும் இழந்த ஹெலன் கில்லர் என்ற பெண்மணி தனது 24வயதில் பட்டம் பெற்றார். உலகிலேயே இதுபோன்ற குறைகளை வைத்துகொண்டு, படித்து பட்டம் பெற்ற முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இவருடைய பெயரிலேயே ஹெலன் கில்லர் விருது  வழங்குகிறது. தென்றல் தொலைக்காட்சி.

இந்த ஆண்டு முதல் இந்த விருதினை வழங்கும் தென்றல் தொலைக்காட்சி இனி ஒவ்வொரு ஆண்டும் இதே பெயரில், இதுபோன்ற சிறப்பு குழந்தைகளுக்கும் , அவர்களுக்கு  ஆசிரியர் சேவை செய்பவர்களுக்கும  விருதினை வழங்க இருக்கிறது. இந்த விருதுடன் அவர்களுக்கு பரிசு தொகையாக பணம் முடிப்பும் வழங்கப்படுகிறது. இந்த முதலாம் ஆண்டு விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் 24ஆம் தேதி சென்னை, காமராஜர் அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஜெகத் ரட்சகன் கலந்துகொள்கிறார். மேலும் திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல் துறை  பிரபலங்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார்கள். இதை தென்றல் தொலைக்காட்சியின் முதன்மை மேலாளர் செழியன் ராதாகிருஷ்ணன் மற்றும் முதன்மை மார்கெட்டிங் மேலாளார் உதயகுமார் இருவரும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்கள். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது தென்றல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பல புதுமையான நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.

இதுப்பற்றி கூறிய செழியன் ராதாகிருஷ்ணன், "தென்றல் டிவி மற்ற டிவி சேனல்களில் இருந்து வேறுபட்டு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் அழுகாச்சி  சீரியல்களை நாங்கள் தவிர்த்திருக்கிறோம். மக்களுடைய வாழ்க்கைக்கும், அவர்களை மேம்படுத்தும் வகையிலும் தென்றல் டிவியின் நிகழ்ச்சிகள் இருக்கும். ஒவ்வொரு மணி நேரமும் செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படும். அதே போல தினமும் சமூதாயத்தில் நடைபெறும் குற்றங்களையும், அதன் பின்னணிகளையும் நேரடியாக குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்தே, அந்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்துவோம். இது போன்ற பல புதுமையான நிகழ்ச்சிகளோடும், உடனுக்கு உடன் செய்திகளோடும் தென்றல் டிவி ஒளிபரப்பாகும்." என்றார்.
தென்றல் டிவியின் முதன்மை மார்கெட்டிங் மேலாளரும், ஹெலன் கில்லர் விருது நிகழ்ச்சியை உருவாகியவருமான உதயகுமார் பேசும் போது, "இது போன்ற மாற்றுத்திறனாலிக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களை கெளரவிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நெடுநாட்களாக இருந்தது. தென்றல் டிவி மூலம் அதை சாத்தியப்படுத்த முடிந்தது சந்தோசம்.   இந்த ஆண்டு முதல் இந்த விருதை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்குவோம். தற்போது இந்த விருதை பெரும் ஆசியர்கள் சென்னையைச் சேர்ந்த பள்ளியில் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இனி வரும் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள இதுபோன்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்குவோம். இந்த விருதுக்காக தேர்வு குழு ஒன்றையும் உருவாக்குவோம்." என்றார்.

இந்த ஆண்டு ஹெலன் கில்லர் விருது 15 ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களுடன் 5 சிறப்பு விருதுகளும் வழங்கப்படுகிறது.

உடல் நலம் தரும் உடற்பயிற்சி

உடல் நலம் தரும் உடற்பயிற்சி
உடல் ஆரோக்கியமாக இருக்க ஒரே வழி உடற்பயிற்சி. இன்றைய நவீன உலகில், உடல் உழைப்பு இல்லாத வேலையைத் தான், பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகின்றனர். அனைத்து வேலைகளையும் செய்வதற்கு, இயந்திரங்கள் வந்து விட்டதால், குடும்ப தலைவிகளுக்கும் உடல் உழைப்பு குறைந்து விட்டது.

எனவே, தற்போது தனியாக உடற்பயிற்சி என்பது அவசியம் ஒன்றாகி விட்டது. உடற்பயிற்சி, உடலை கட்டுக் கோப்பாக வைப்பதோடு, மன அழுத்தம், பதட்டத்தை போக்கும் மருந்தாக பயன்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், பதட்டம், மன அழுத்தம் போன்றவை, மீண்டும் தோன்றாத வண்ணம் சரி செய்ய முடிகிறது. உடல், மூளை செயல்பாடுகளை உடற்பயிற்சி சிறப்பாக்குகிறது. சோம்பல் நீக்கி, சுறுசுறுப்பு உண்டாக்குகிறது. தோற்றப் பொழிவு, நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம் மேம்படுகிறது. இருதயம், நுரையீரல், ஜீரண உறுப்புகள், நரம்பு மண்டலம் போன்ற உள்ளுறுப்புகள் மேம்பட்டு, ஆயுள் கூடுகிறது. உடற்பயிற்சி செய்வதால், மனதை கட்டுக்குள் வைக்க முடிகிறது. ரத்த ஒட்டம் சீராகி, புத்துணர்வு கிடைக்கிறது.

அமெரிக்கா பல்கலைக்கழக உடல்நல ஆலோசகர் "ஸ்மித்' கூறும்போது, ஒருவர் பதட்டப்படும்போது, அவர்களது உண்ர்ச்சித் தன்மை அதிகரிக்கிறது. இவர்கள் உடற்பயிற்சி செய்வால், மனம் அமைதிப்பட்டு, பதட்டத்தின் அளவை குறைக்க முடிகிறது என்றார். உடற்பயிற்சி செய்வதால், கவலைகள், மன அழுத்தத்தை குறைத்து செழுமையான வாழ்வு வாழலாம் என்பதே நிதர்சனமான <உண்மை.
என்ன தேவை?

* தண்ணீர் அதிகளவில் குடிக்க வேண்டும்.
* எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து விட்டு, காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது நேர்மறையான எண்ணத்துடன் எழுந்திருங்கள்.
* உணவுப் பழக்க வழக்கத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும். காலை உணவு அவசியம். சத்தான காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள் ஆகியவை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* "பாஸ்ட் புட்' எனப்படும் உணவுப் பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதில்லை.
* உடல் எடையை சீராக வைத்திருங்கள், அதிக எடையும் இல்லாமல், குறைந்த எடையும் இல்லாமல் உயரத்துக்கு ஏற்ற எடை அவசியம்.
* வேலையின் போது, சீரான இடைவெளியில் ஓய்வு அவசியம்.
* உடற்பயிற்சி செய்வது பாதி நோய்களிலிருந்து மனிதனுக்கு விடுதலை அளிக்கும். எனவே தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
* மனிதனின் ஆயுளை குறைக்கும், மது, சிகரெட் பழக்கத்தை அறவே விட்டு விடுங்கள்.
* கோபத்தை குறைத்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

13இல் பருவம் எய்தும் ஆண்கள்,"எதையும் திணிக்காதீர்கள்!

சொல்கிறார்கள்

"13 இல்  அகவைக்கு  வரும் ஆண்கள்!'
மூலிகை மருத்துவர் வி.ஜமுனா: பெண்கள், பன்னிரண்டு, பதிமூன்று வயதில் வயசுக்கு வருவது மாதிரி, ஆண்களும், சிறுவர்களாக இருக்கும் போது, கிட்டத்தட்ட அதே வயதுகளில், வயசுக்கு வருகின்றனர்.ஆனால், பெண்களுக்கு, வெளிப்படையாக, "பீரியட்ஸ்' ஏற்படுவது போல, ஆண்களுக்கு ஏற்படுவதில்லை என்பதால், அவர்கள், வயசுக்கு வருவது, அவர்களது குடும்பத்தினருக்கே தெரிவதில்லை.பெண்கள் எனில், 12 முதல், 15 வயதுக்குள் பருவம் எய்துகின்றனர். இப்போது எல்லாம், 10 வயதில் கூட இது நிகழ்கிறது. ஆண்கள் எனில், 13 முதல், 18 வயதுக்குள், பருவம் எய்துகின்றனர்.ஆண்களுக்கு மீசை, தாடி மற்றும் மறைவிடங்களில் மென் முடி முளைப்பது, குழந்தை போன்ற குரல் உடைந்து கரகரப்பாக மாறுவது, தசைகள் இறுகுவது, பிறப்புறுப்பு வளர்ச்சி பெறுவது என்று, பல மாறுதல்கள் நிகழ்கின்றன.அந்த சமயம் தான், அந்தச் சிறுவனின் உடம்பில், அதுவரை தூங்கிக் கொண்டிருந்த விதைகள், பிட்யூட்டரி சுரப்பியால் தூண்டப்பட்டு, உயிரணுக்களைத் தயாரிக்கும் பருவத்தை அடைகின்றன. விந்து உற்பத்தியும், அந்த வயதில் தான் ஆரம்பிக்கிறது. பிரச்னையில்லாத சிறுவனுக்கு, இப்படி, இந்த வயதில், விந்து மற்றும் உயிரணு உற்பத்தி தடையின்றி நிகழ்கிறது.குழந்தை பருவத்தில், அவனுக்கு, வாரத்தில் ஒரு நாள், கருணைக் கிழங்கு, இரண்டு நாள், முருங்கைக் கீரை, தினமும் நெய் சாப்பிடக் கொடுக்க வேண்டும். அசைவத்தில், ஆட்டு இறைச்சி கொடுக்கலாம்; மாட்டிறைச்சி வேண்டாம்; அது மலட்டுத் தன்மையை அதிகரிக்கும்.புரோட்டீன், விட்டமின், தாதுப் பொருட்கள் என, அனைத்து சத்துகளும் கலந்த சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் போனாலோ அல்லது ரசாயனக் கலவை அதிகம் சேர்ந்த செயற்கையான ரெடிமேட் உணவுகள் சேர்த்துக் கொள்ளும் போதோ, அந்தச் சிறுவனுக்கு, இயல்பாக உண்டாக வேண்டிய விந்தணுக்கள் வராமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது.அதுபோலவே, அந்தச் சிறுவனுக்கு, உடல் நிலை சரியில்லாமல் போனால் எடுத்துக் கொள்ளும் தொடர் மருந்துகளிலும் அதிக கவனம் வைக்க வேண்டும். இவை அனைத்தும், அந்தச் சிறுவனின் உயிரணு உற்பத்தியை பாதிக்கிறது.

"எதையும் போட்டு த் திணிக்காதீங்க!'
குழந்தை நல மருத்துவர் டாக்டர் சுப்ரமணியன்: பொதுவா, இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், "துறுதுறு'ன்னு இருப்பாங்க. எதையாவது எடுத்து வாயில போட்டுக்குவாங்க. அதனால, இந்த வயசு குழந்தைகள, ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துக்கணும். "சைக்காலாஜிக்'கலாகவும், ரொம்ப கேர்புல்லா பார்த்துக்க வேண்டிய வயசு. பெரியவங்க என்ன பண்றாங்களோ, அதைப் பார்த்து தான், குழந்தைங்க கத்துக்கும். எந்த மாதிரியான வார்த்தைகள், சுற்றி இருக்கிறவங்க பேசுறாங்களோ, அதைத் தான், குழந்தைகளும் பேசும். அதனால, குழந்தைங்க எதிரில் சண்டை போடறது, கெட்ட வார்த்தைகள் பேசறது போன்றவற்றை தவிர்க்கணும். நல்ல விஷயங்கள் கத்துக் கொடுக்கணும். நல்ல விஷயங்களை அவங்களுக்கு எடுத்து சொல்லணும்.ஸ்கூல் போக ஆரம்பிச்சதுக்கப்புறம், கொஞ்சம் கொஞ்சமா அடம் பிடிக்கிறது குறைய ஆரம்பிக்கும். ஊசி போட்டா வலிக்கும்னு சொல்லி அழுதாலும், ஒழுங்கா காட்டுவாங்க. சொன்னா புரிஞ்சுக்க ஆரம்பிக்கிற வயசு.குழந்தைகள் புரிஞ்சுக்க ஆரம்பிக்கற வயசுல, பெரியவங்க சில விஷயங்களைப் புரிஞ்சுக்கறது இல்லை. ஸ்கூல் சேர்த்த உடனே, எல்லா பெற்றோருமே, தங்கள் குழந்தைங்க முதல் மார்க் வாங்கிடணும்னு ஆசைப்பட்டு, அவங்களை, "போர்ஸ்' பண்றாங்க; அது ரொம்ப தப்பு. குழந்தைகள் வயதிற்கு மீறி கல்வி திணிக்கப்படும் போது, நிறைய குழந்தைக தன்னால முடியாதுன்னு சொல்லி அந்த போட்டியிலிருந்து விலகிக்குவாங்க; சிலர் உடனே புரிஞ்சுக்குவாங்க; சிலர் கொஞ்சம் லேட்டா புரிஞ்சுக்குவாங்க.அந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல, பெற்றோர் ஒரு பக்கம், ஆசிரியர் ஒரு பக்கம்னு குழந்தைகளுக்கு, "பிரஷர்' கொடுக்கும் போது, தன்னால முடியலையோன்னு நினைக்க ஆரம்பிப்பாங்க. அப்ப, அந்த வயசுல எவ்வளவு கத்துக் கொடுக்கணுமோ, அவ்வளவு தான் கத்துக் கொடுக்கணும். எதையும் போட்டு திணிக்காம, அவங்கவங்க திறமையை கண்டுபிடிச்சி வளர்க்கப் பாருங்க

மகனை க் காக்க உயிரை ப் பணயம் வைத்த தாய் - Mother saves her son

மகனை க் காக்க உயிரை ப் பணயம் வைத்த தாய்

மூணாறு: நீச்சல் தெரியாத தாய், 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த, தன், இரண்டு வயது மகனை, உயிரை பணயம் வைத்து, கிணற்றில் குதித்துக் காப்பாற்றினார்.

கேரளா, இடுக்கி மாவட்டம், தொடுபுழாவைச் சேர்ந்த தம்பதி, ஜோஷி-சுஜா. தன், இரண்டாவது மகன் ஸ்ரீகுட்டனுடன், சகோதரி சுமித்ரா வீட்டிற்கு, சுஜா சென்றார். அங்கு, ஸ்ரீகுட்டனை குளிப்பாட்டத் தயாரானார். மறுத்த சிறுவன், போக்குக்காட்டி ஓடிய போது, சுற்றுச்சுவர் இல்லாத, 30 அடி ஆழ கிணற்றில் விழுந்தான்.கிணற்றுக்குள் மகனின் அழுகுரலைக் கேட்ட சுஜா, நீச்சல் தெரியாவிட்டாலும், உள்ளே குதித்தார். மகனை மீட்டு, அங்குள்ள குழாயைப் பிடித்துத் தத்தளித்தார். இவர்களின் அபயக்குரல் கேட்டு, அப்பகுதியினர் மீட்டனர்.

அரசு மருத்துவமனை அலட்சியத்தால் குழந்தையை இழந்த பெண் - Mother losses her child due to carlessness of govrt. hospital

சென்னை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், செவிலியர்களின் அலட்சியம் காரணமாக, அழகான ஆண் குழந்தையை இழந்த இளம்பெண், "என் நிலை இன்னொரு தாய்க்கு ஏற்படக்கூடாது' என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன், 31. இவரது மனைவி புவனா, 25; ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது. புவனா கர்ப்பமடைந்தார். அரசு மருத்துவமனை சிகிச்சை மீது, அசுர நம்பிக்கை வைத்த புவனா, பெற்றோர், மாமியார், மாமனார், கணவர் ஆகியோர் எவ்வளவு சொல்லியும், தனது பிரசவம் அரசு மருத்துவமனையில் தான் என்று உறுதியாகக் கூறினார். வீட்டிற்கு அருகில் உள்ள, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், மாதாந்திர பரிசோதனைகளை செய்து கொண்டார். இறுதியில், கடந்த ஜூன் மாதம், 30ம் தேதி நடந்த பிரசவத்தில், அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால், குழந்தையை இழந்து, உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளார் புவனா.

இது குறித்து, "தினமலர்' நாளிதழுக்கு புவனா கண்ணீர் மல்க அளித்த பேட்டி:"அரசு மருத்துவமனையில் பிரசவம் நன்றாக பார்ப்பர்' என்று எனக்கு தெரிந்த பலர் கூறியதால், என் குழந்தையையும் அங்கு பெற்றெடுக்க விரும்பினேன். கருத்தரித்த நாள் முதல், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனைகளை செய்து கொண்டேன். அப்போது தான், முதல் முறையாக அரசு மருத்துவமனைக்கு நான் சென்றேன்.கர்ப்பிணிகளை, அங்குள்ள பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஒருமையில் தான் பேசுகின்றனர். ஒரே மருத்துவர், தொடர்ச்சியாக இருக்க மாட்டார். நாம் செல்லும் போது, பணியில் இருக்கும் மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஒருவர், "ஸ்கேன்' எடுக்கச் சொல்வார். அடுத்த மாதம் அதன் முடிவைக் காட்டினால், "இதை யார் எடுக்கச் சொன்னது?' என்று மற்றொரு மருத்துவர் கேட்பார். நான் ஆறு ஸ்கேன் எடுத்துள்ளேன். ஒருமுறை கூட ஸ்கேன் முடிவை, மருத்துவர்கள் வாங்கிப் பார்க்கவில்லை. குழந்தை நன்றாக இருக்கிறது என்று மட்டும் கூறுவர்.

எனக்கு ஜூன் 25ம் தேதி பிரசவமாகும் என, மருத்துவர்கள் தேதி குறித்துக் கொடுத்தனர். ஆனால், பிரசவ வலி வரவில்லை. இது குறித்து நான் மருத்துவரிடம் கேட்டபோது, 28ம் தேதி மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளுமாறு கூறினார். எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர், குரோம்பேட்டையில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார்.மருத்துவர் சொன்னபடி, 28ம் தேதி மருத்துவமனையில் சேரச் சென்றேன். முதலில் சேர்க்கைக்கு, 20 ரூபாய் லஞ்சம் பெற்றனர். நிறைமாத கர்ப்பிணியாக காலையில் மருத்துவமனைக்குச் சென்ற எனக்கு, 3 மணிக்குத் தான் சேர்க்கை கொடுத்தனர். முதல் நாள், எந்த மருத்துவரும் வரவில்லை. அடுத்த நாள், ஒரு மருத்துவர் வந்து விசாரித்தார். ஜூன் 30ம் தேதி மதியம், இனிமா கொடுத்தனர்.குளுக்கோஸ் ஏற்றினர். இரண்டாவது பாட்டில் குளுக்கோஸ் ஏறிய போது, பிரசவ வலி ஏற்பட்டது. அன்று இரவு, 8 மணிக்கு எனக்கு பனிக்குடம் உடைந்தது.

பணியில் இருந்த செவிலியர்கள், "இதுக்கு இப்போ தான் பனிக்குடம் உடைந்துள்ளது; நாம் சென்று சாப்பிட்டு விட்டு வரலாம் வா' என்று கூறிவிட்டுச் சென்றனர். 30 நிமிடம் கழித்து வந்தனர். வலியில் நான் துடித்துக் கொண்டிருந்தேன்.எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர், குழந்தையை ஆயுதம் வைத்து எடுக்குமாறு செவிலியர்களிடம் கூறினார். இதற்கு, "சுகப் பிரசவத்திற்கே முயற்சிக்கலாம்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று செவிலியர்கள் கூறினர். மருத்துவர் சென்றுவிட்டார்.

என், வயிற்றில் கை வைத்து, குழந்தையின் தலை உள்ள பகுதியில் தாறுமாறாக அழுத்தினர். பெரும் அவஸ்தைக்கு பிறகு, 10.45 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த போது அழவில்லை. குழந்தையை செவிலியர்கள் என்னிடம் காட்டவில்லை.சிறிது நேரம் கழித்து, "குழந்தையின் உடல்நிலை மோசமாக உள்ளது. எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்' என்று கூறினர். "எங்களிடம் கார் உள்ளது; நாங்கள் அழைத்துச் செல்கிறோம்' என்று கேட்டபோது, "அப்படி எல்லாம் தர முடியாது; 108 ஆம்புலன்ஸ் மூலம் தான் அனுப்பி வைப்போம்' என்று கூறினர்.

ஒரு வழியாக என் சகோதரி சுமதி, குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் நள்ளிரவு, 1 மணிக்கு, எழும்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எழும்பூரில் எவ்வளவோ போராடியும், கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி குழந்தை இறந்துவிட்டது. மூச்சுத் திணறலால் குழந்தை இறந்துவிட்டதாக, சான்றிதழ் அளித்தனர். அரசு மருத்துவமனையை நம்பி வந்ததற்கு, தற்போது என் குழந்தையையும் இழந்து, என் உடல்நிலையும் பாதித்து நிற்கிறேன். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, நோயாளிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்க வேண்டும்.என் நிலை, இன்னொரு தாய்க்கு வரக்கூடாது என்பதால், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நடப்பதைக் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க, முதல்வர், அமைச்சர், சுகாதாரத் துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் என அனைவருக்கும், எனக்கு நடந்த கொடுமையை கடிதமாக எழுதினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.இவ்வாறு புவனா கண்ணீர் மல்கக் கூறினார்.

 - தினமலர் செய்தியாளர்


பேசும் படம் - dinamalar photo


1000 புதுப்படி குடிநீர் விலை உரூ. 40: குடிநீர் வாரியம் அறிவிப்பு

1000  புதுப்படி  குடிநீர் விலை  உரூ. 40: குடிநீர் வாரியம் அறிவிப்பு



 
சென்னை, செப். 22: குடிநீர் வாரிய நீரேற்று நிலையங்களில் விற்பனை செய்யப்படும் வீட்டு உபயோகத்திற்கான குடிநீர் 1000 லிட்டர் ரூ.40-க்கு கிடைக்கும் என சென்னை பெருநகர குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.இந்த விலையில் குடிநீர் பெற விரும்புபவர்கள், தங்கள் சொந்த செலவில் லாரிகள் மூலம் நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவ்வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை பெருநகர குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் அபூர்வவர்மா சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னைக் குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் மூலம் வீட்டு உபயோகத்திற்கான குடிநீர்  6 ஆயிரம் லிட்டர் ரூ.400-க்கும், 9 ஆயிரம் லிட்டர் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  வியாபாரப் பயன்பாட்டுக்கான குடிநீர் 6 ஆயிரம் லிட்டர் ரூ.510-க்கும், 9 ஆயிரம் லிட்டர் ரூ.765- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தற்போது, நீரேற்று நிலையங்களிலிருந்து தங்கள் சொந்த செலவில் லாரிகள் மூலம் குடிநீர்  கொண்டு செல்லும் நுகர்வோர்களுக்கு வீட்டு உபயோகத்திற்கான குடிநீர் 1000 லிட்டர் ரூ.40-க்கும், ஹோட்டல்கள், கடைகள் உள்ளிட்ட வியாபார பயன்பாட்டுக்கான குடிநீர் 1000 லிட்டர் ரூ.60- க்கும் விற்கப்பட உள்ளது.இதற்கான முன்பதிவுக்கு,கொளத்தூர் பகுதி நீரேற்று நிலையம்: 044 - 26505435, 8144930313, 8144930906 கீழ்ப்பாக்கம் பகுதி நீரேற்று நிலையம்: 044 - 26441679, 8144930362, 8144930908 தெற்கு பகுதி நீரேற்று நிலையம் (வள்ளுவர் கோட்டம்): 044 - 28341448, 8144930356, 8144930909 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.மேலும் தகவல்களுக்கு, 044 - 45674567 என்ற நுகர்வோர்கள் வாரியத் தலைமை அலுவலக எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தில் 1000 படகுகள் முற்றுகை

தூத்துக்குடி துறைமுகத்தில் 1000 படகுகள் முற்றுகை



தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் கடல்பகுதி நுழைவு வாயிலை சனிக்கிழமை படகுகள் மூலம் முற்றுகையிட்ட அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழுவினர்.
தூத்துக்குடி, செப். 22: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மூலம் போராட்டக் குழுவினர் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும், எரிபொருள் நிரப்புவதை நிறுத்த வேண்டும், 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு ஆதரவு தெரிவித்து, தூத்துக்குடியில் கடந்த 10-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவ அமைப்பினர் அடுத்த கட்டமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.போராட்டத்தில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து 500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் சனிக்கிழமை காலை 7 மணியளவில் துறைமுகத்தை நோக்கி புறப்பட்டன. இதுதவிர, மாவட்டத்தின் பிற பகுதிகளான திருச்செந்தூர், அமலிநகர், புன்னக்காயல், மணப்பாடு, ஆலந்தலை, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளான இடிந்தகரை, உவரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த மீனவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.இப் போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதில், விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சேவியர் வாஸ், நாட்டுப் படகு சங்கத் தலைவர் ஜான்சன், பேராசிரியை பாத்திமா பாபு உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.பலத்த பாதுகாப்பு: போராட்டக்காரர்களால் பிரச்னைகள் ஏதும் நிகழாமல் இருக்கும் வகையில், துறைமுகத்தின் கடல் பகுதி நுழைவு வாயிலில் கடலோர காவல் படைக்குச் சொந்தமான வீராஸ், அகல்யா பாய், நாட்கி தேவி ஆகிய கப்பல்களும், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, கடலோர பாதுகாப்புப் பிரிவு ரோந்து படகுகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. துறைமுக நுழைவுவாயிலில் ராட்சத கயிறு மூலம் படகுகள் உள்ளே செல்ல முடியாதபடி தடை செய்யப்பட்டிருந்தது. மேலும், துறைமுக சுற்றுப் பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் ஆயுதம் தாங்கிய நிலையில் சுமார் 300 பேர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். கடலோர காவல் படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் மூலமும் போராட்டம் கண்காணிக்கப்பட்டது.இந்தப் போராட்டத்தையொட்டி, தூத்துக்குடி மாநகரப் பகுதியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸôர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.துறைமுக நிலவரம்: தூத்துக்குடி துறைமுகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 7 கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்தக் கப்பல்களில் இருந்து நிலக்கரி, சுண்ணாம்பு, பொது சரக்குகள் போன்ற பொருள்களின் இறக்குமதி வழக்கம்போல் எவ்வித பாதிப்புமின்றி நடைபெற்றது.மேலும், வெளித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 5 கப்பல்களைச் சுற்றியும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இதுதவிர, நிலக்கரி ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் நிலக்கரிக்கான தனி தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.கட்சிக் கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்ப்பு:  இதற்கிடையே திரேஸ்புரம் பகுதியில் சனிக்கிழமை காலை அணு உலைக்கு எதிராகவும், கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டபடி வந்த சிலர் அந்தப் பகுதிகளில் நடப்பட்டிருந்த கட்சிக் கொடிக் கம்பங்களை வெட்டி சாய்த்தனர். பின்னர் கொடிகளை தீ வைத்து எரித்தனர்.இதனால் அந்தப் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் உடனடியாக அடைக்கப்பட்டன.மனிதச் சங்கிலி: வஉசி துறைமுக முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் பலர் இனிகோ நகரில் இருந்து மீன்பிடி துறைமுகம் வரை  பனிமய மாதா பேராலய பங்குத் தந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் மீனவர்கள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். பாதிப்பு இல்லை: போராட்டம் குறித்து வஉசி துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நடராஜன் கூறியது: பல்வேறு காரணங்களால் கப்பல்கள் வருவதிலும், செல்வதிலும் தாமதம் ஏற்படுவது உண்டு. இந்தப் போராட்டத்தால் துறைமுக செயல்பாட்டில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.