புதன், 16 மே, 2012

ஈழப்படுகொலைக்குத் துணை நின்ற நிருபமா ராவ்-விற்கு மதிப்புநிலை முனைவர் பட்டம் - மே 19 ஆம் நாள் புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

ஈழப்படுகொலைக்குத் துணை நின்ற நிருபமா ராவ்-விற்கு  மதிப்புநிலை முனைவர் பட்டம் - மே 19 ஆம் நாள் புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
1 post by 1 author in தோழமை
Tamil Internet Protester
Post reply
8:21 AM (10 hours ago)

ஈழப்படுகொலைக்கு துணை நின்ற நிருபமா ராவ்-விற்கு கவுரவ முனைவர் பட்டம் - மே 19ம் தேதி புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
புதுவை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற 19ம் தேதி நடைபெறவிருப்பதாகவும், இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் பங்கேற்பதாக துணைவேந்தர் தரீன் தெரிவித்துள்ளார்.
புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுவை பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா வருகிற 19ம் ÷தி நடைபெற உள்ளதென்றும், இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
அவருக்கு புதுவை பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதென்ற துணைவேந்தர் தரீன், இதேப்போன்று இந்திய அரசின் முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாச்சலய்யாவுக்கு டாக்டர். பட்டம் வழங்கப்பட உள்ளதாகவும், விழாவில் 16 ஆயிரத்து 755 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளதென்றார்.
புதுவை பல்கலைக்கழகத்தில் கூடுதலாக புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதென்ற துணைவேந்தர், மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடும் கண்டனம் தெரிவியுங்கள்
Prof.  J. A.  K. Tareen, Vice-Chancellor


1 கருத்து:

  1. கொலைகாரக் கூட்டாளிக்குப் புதுவையில் பட்டமளிப்புக் கொடுமை : அயலகத்தமிழர்களெனில் ஓட ஓடவிரட்டி அடிப்பார்கள். நாம் வரவேற்புப்பாமாலை சூடுவோம்!

    பதிலளிநீக்கு