திங்கள், 14 மே, 2012

விடுதலையின் அடிப்படை உணவு இறையாண்மை ?

இறையாண்மை என்னும் சொல்லை அவரவர் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்துகின்றனர். இந்த இடத்தில் இந்தச் சொல் பொருந்தாது. உணவு நிறைவாண்மை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


விடுதலையின் அடிப்படை உணவு இறையாண்மை: எம்.எஸ். சுவாமிநாதன்

தினமணி First Published : 14 May 2012 03:28:26 AM IST


புது தில்லி, மே 13: தேச விடுதலையின் அடிப்படையே "உணவு இறையாண்மை'தான். நாடாளுமன்ற மகுடத்தின் மணியாக ஆற்றல் மிக்க உணவுப் பாதுகாப்பு மசோதா திகழும்.  எனவே, தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும். அது ஏழைகளுக்கு மானிய விலையில் உணவு தானியம் பெறுவதற்கான உரிமையை சட்டமாக்குகிறது என்று எம்.எஸ். சுவாமிநாதன் (மாநிலங்களவை நியமன உறுப்பினர்) குறிப்பிட்டார். நாடாளுமன்ற முதல் அமர்வின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசியவர்கள் விவரம்:  சுகேந்து சேகர் ராய் (திரிணமூல் காங்கிரஸ்): வளர்ந்து வரும் அரசியல் அவநம்பிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நாடாளுமன்றத்தின் தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் நம்பிக்கையை நாம் வெல்ல முடியும்.  மோகன் சிங் (சமாஜ்வாதி): ஜனநாயகத்தை வலுப்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  திருச்சி சிவா (திமுக): கமிட்டி முறையை கொண்டுவந்ததையும்; நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் காண்பதற்கு வழி செய்ததையும் நான் வரவேற்கிறேன்.  தாரிக் அன்வர் (தேசியவாதி காங்கிரஸ்): இடையூறுகளால் 30 சதவிகித நாடாளுமன்ற நேரம் வீணடிக்கப்படுவதாகத் தெரிகிறது. நாம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்போது, இடையூறுகளின்றி விவாதிக்க முடியும். ஊழல், தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மங்கள கிரண் (பிஜு ஜனதா தளம்): வேலையில்லாத் திண்டாட்டமும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் நல்லாட்சி இல்லை என்பதையே பறைசாற்றுகின்றன.  தேவேந்தர் கெüட் (தெலுங்கு தேசம்): நாட்டின் கூட்டாட்சித் தன்மையை உறுதிப்படுத்த ஒரு குறிப்பிட்ட அமைப்புமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக