கொழும்பு, செப்.2: இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், இலங்கை அதிபர் ராஜபட்சவை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.இந்தச் சந்திப்பின்போது இடம்பெயர்ந்த மக்களுக்கான குடியிருப்புத் திட்டம், வடக்கில் ரயில் பாதை புனரமைப்பு உள்ளிட்ட இந்தியா உதவுவதாகக் குறிப்பிட்ட திட்டங்கள் விரைவில் செய்துதரப்படும் என ராஜபட்சவிடம் நிருபமா உறுதியளித்ததாக இலங்கை அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.இலங்கையில் இந்திய முதலீட்டு ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும், கைத்தொழில் அதிபர்களும், இதர துறைகளைச் சேர்ந்தவர்களும் இலங்கையில் வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டி வருவதாக ராஜபட்ச தெரிவித்தார்.ராஜபட்சவுடனான நிருபமா ராவின் இந்தச் சந்திப்பின்போது, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ராஜபட்சவின் செயலர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனிருந்ததாக இலங்கை அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 4:56:00 PM
9/2/2010 4:56:00 PM
By KOOPU
9/2/2010 4:28:00 PM
9/2/2010 4:28:00 PM
By நிருபமா
9/2/2010 2:44:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/2/2010 2:44:00 PM