திங்கள், 8 ஜூன், 2009

தமிழர்களின் நண்பர்கள் போல் நடிக்கும் கட்சி மார்க்சிய பொதுவுடைமைக் கட்சி எனப்படும் இ.கம். எனவே தான் பெருமளவு இனப்படு கொலை குறித்துக் கண்டனையோ பேரவலம் குறித்து இரங்கலோ தெரிவிக்கவில்லை. தாய்மொழிக் கல்வி என்று சொல்லிக் கொண்டே இந்தி முதன்மைக்குப் போராடுவதும் தமிழர் நலன் என்று சொல்லிக் கொண்டே தமிழர் நலனுக்கு எதிரானவற்றை முதன்மைப்படுத்துவதுமே இதன் தொழில். அயல்நாட்டு இறையாண்மை எனப் பேசிக் கொண்டு வருவாய்த்துறை, கல்வித்துறை, நீதித்துறை, சுங்கத்துறை, போக்குவரத்துத்துறை, மறுவாழ்வுத்துறை, வங்கித்துறை முதலான பல துறைகளைக் கொண்டுஅரசு நடத்தி வந்த தமிழ் ஈழ நாட்டு இறை யாண்மையில் தலையிட்டு இதில் காங்.கின் கொள்கைதான் தன் கொள்கை என்று அறிவித்த இக்கட்சி வாய்மூடி இருந்தால் போதும்.


-- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/8/2009 4:22:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக