புதன், 10 ஜூன், 2009

இலங்கையில் தமிழர்கள் ஆளும் தனி மாநிலம் அமைய வேண்டும்:
ம.தி.மு.க
தினமணி
கருத்துகள்

மதிமுகவின் ஒரே உறுப்பினர் கணேசமூர்த்தி கட்சி தாவுகிறாரா? அல்லது என்றைக்கும் விடுதலைப்புலிகளையும் தமிழ் ஈழத்தையும் ஆதரிப்பேன் என்று கூறி வந்த அவரது தலைவர் அதிமுகவில் கட்சியை இணைக்கப் போகிறாரா? இதற்காகத்தான் அவரை மக்கள் தேர்ந்தெடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பி வைத்தனரா? வெட்கக் கேடு! இக் கருத்துதான் உண்மையெனில் திமுகவைத் தாக்கிப் பேச மதிமுகவிற்கு எந்த உரிமையும் இல்லை. யாரைத்தான் நம்புவாரகளோ பேதை ஈழத் தமிழர்கள்! இந்தியாவில் உள்ள யாரையும் நம்பக் கூடாது எனத் தெளிவடைந்தார்கள் எனில் அவர்கள வெற்றி காண்பர்! மலரட்டும் தமிழ் ஈழம்! ஓங்கட்டும் ஈழ-இந்திய நட்புறவு!


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2009 4:51:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக