புதன், 21 அக்டோபர், 2009

கடற்கரை-தாம்பரம் மின் ரயில்களில் தமிழில் அறிவிப்பு



சென்னை, அக். 20: சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகர் மின் ரயில்களில், தமிழில் ஒளிரும் எழுத்துகளுடன் செவ்வாய்க்கிழமை முதல் அறிவிப்பு செய்யப்படுகிறது.
இந்த மின் ரயில்களின் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு பலகைகளில், அடுத்து வரும் ரயில் நிலையங்கள், நேரம் குறித்து ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழிலும் இனி அறிவிப்பு செய்யப்படும் என தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏதோ அயல்நாட்டில் தமிழில்அறிவிப்பு செய்வது போல் சொல்ல வேண்டிய கொடுமை விடுதலை இந்தியாவில் அடிமைத் தமிழுக்கு இருக்கிறது என்பது இதன் மூலம் புரிகின்றது.தொடர்வண்டித்துறையிலும் தொலை பேசித் துறை முதலான பிற மத்திய அரசு அலுவலகங்களிலும் நமசுகார் எனப் பதிவுக் குரலை ஒலிபரப்பாமல் வணக்கம் என ஒலி பரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கும் தமிழ் என்பதை இன்னும் வாய்ப்பேச்சாகச் சொல்லிக் கொண்டிராமல் செயலாக்கம் காண வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் கடைநிலை மொழியாக இருக்கும் அவல நிலையை உடனே போக்க வேண்டும். தமிழுக்கு மதிப்பு தந்தால் தமிழன் தானாக உயருவான். தமிழனை உயர்த்தினாலும் தமிழ் வளம் பெறும். இரண்டும் இணையாக நடைபெற வேண்ணடும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2009 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக