வியாழன், 3 மே, 2012

இசையுடன் புத்தக வாசிப்பு:

சொல்கிறார்கள்

இசையுடன் புத்தக வாசிப்பு:


பள்ளிக் குழந்தைகளுக்கு கதைகள் மூலம் புத்தகம் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வரும் நரேஷ்: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னை ஐ.ஐ.டி.,யில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தேன். குழந்தைப் பருவத்தில் இருந்தே நடிப்பு மீது எனக்கு ஆர்வம் அதிகம். படிப்பு முடித்தவுடன், ஒரு நாடகக் குழுவில் இணைந்து நாடக நடிகரானேன். இந்த சமயத்தில், என் கல்லூரி நண்பர், மிஸ்ராவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர், குழந்தைகளுக்கான கதைகளை புத்தக வடிவில் தயாரித்ததுடன், அதை ஆன்-லைனிலும் பிரபலப்படுத்த விரும்பினார். புத்தகத்தில் உள்ள கதைகளில் ஒன்றை பள்ளிக் குழந்தைகள் முன் நாடகமாக நடித்துக் காட்டலாம் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. முதன்முறையாக, மயிலாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் இதற்கான சோதனை முயற்சியில் இறங்கினோம். இந்நிகழ்ச்சி, மாணவர்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், நூலகம் உள்ள பள்ளிகளை தேர்வு செய்து, அங்குள்ள புத்தகத்தில், ஏதேனும் ஒரு பகுதியை நடிப்புடன் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். பள்ளி நூலகத்திற்கு, 15 சதவீதமே வருகை தந்து கொண்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை, என் நிகழ்ச்சிக்குப் பின், 85 சதவீதமாகியுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது. புத்தகம் படிப்பதற்கான இந்தப் புதுமை நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் பரவச் செய்ய இந்த முயற்சியை, மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக