வியாழன், 26 மே, 2011

Kalaignar explains his non meeting of Sonia: சோனியாவை ஏன் சந்திக்கவில்லை? கருணாநிதி விளக்கம்

சந்திக்காமைக்கான காரணம்  உண்மையாகவே இவ்வாறுஆயின் தவறாகும். ஏனெனில் இது சரியெனில், மத்திய அரசின் பொறுப்பிலுள்ள கழகத்தவரைக் கூடச்  சந்திப்பது என்பது தவறாகும். புது தில்லியில் ஆசாத்,ப.சி. ஆகியோரைச்  சந்தித்ததும் தவறாகும்.  ஒருபுறம் சட்டம் தன் கடமையைச் செய்யும் பொழுது தந்தை தன் கடமையை ஆற்றுவது தவறல்ல. இவ்வாறு பேசுவது சட்டத்தை மீறிய உதவிக்காகத்தான் பிறரைச் சந்திக்கிறார் என்னும்  நிலைப்பாட்டை உறுதியாக்கும். வேறுகாரணத்திற்காக இப்படிப் பேசியிருந்தால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
௨.சமச்சீர் கல்வி பற்றிய கருத்து சரிதான். ௩.புலிகளைப் பற்றிக்கைக்கூலி உளறியதைப் பொருட்படுத்தாமை மிகச் சரி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சோனியாவை ஏன் சந்திக்கவில்லை? கருணாநிதி விளக்கம்

First Published : 26 May 2011 01:10:28 AM IST


சென்னை, மே 25: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு இருந்தும் தவிர்த்துவிட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:தில்லி பயணம்: திகார் சிறையில் இருக்கின்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, என்னுடைய மகள் கனிமொழி, சரத்குமார் ஆகியோரைக் காண்பதற்காகச் சென்றேன். தில்லியில் தங்கியிருந்த ஹோட்டலில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத்,புதுவை நாராயணசாமி, பரூக் அப்துல்லா மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் என்னைச் சந்தித்துப் பேசினார்கள். கனிமொழி துணிச்சலோடும், உறுதியோடும் இந்த நிலையைச் சமாளிப்பதாகக் கூறியிருக்கிறார். அத்துடன் சட்ட ரீதியாகவும் நீதி கிடைக்கும் என்று நானும், கனிமொழியும் கருதுகிறோம்.சோனியாவைச் சந்திக்காததன் காரணம்: சோனியாவைச் சந்திக்கும் வாய்ப்பும், நேரமும் இருந்தது. என் மகள் கனிமொழி சிறையில் இருந்ததால், இந்த நேரத்தில் சோனியாவைச் சந்திப்பது முறையாக இருக்காது என்பதற்காகவே நான் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.சமச்சீர் கல்வித் திட்டம் ரத்து: எல்லா மாணவர்களுக்கும் சமநிலையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் உள்பட சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். அவர்களுடைய கருத்துக்கு மதிப்பளித்து திமுக ஆட்சியில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, தலைசிறந்த கல்வியாளர்களின் ஒப்புதலோடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களோடும் கலந்து பேசி சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டம் இப்போது நிறுத்தப்படுவதால் எதிர்கால தலைமுறைக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.பறிக்கப்பட்ட சொத்துகள்: திமுக ஆட்சிக் காலத்தில் பறிக்கப்பட்ட சொத்துகள் உரிய முறையில் மீட்கப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படி ஏதாவது இருந்தால் அதைத் திரும்பப்பெற்று உரியவர்களிடமோ அல்லது உரிய அமைப்புகளிடமோ ஒப்படைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றார் கருணாநிதி.தலைமைச் செயலகம், சமச்சீர் கல்வி, மேலவை என்று திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றாக ரத்து செய்யப்படுவது குறித்து கேட்கப்பட்டதற்கு, "இதற்காக வருந்த வேண்டியவர்கள் வாக்களித்தவர்கள்' என்றார்.இதைப்போல "ராஜீவ்காந்தி கொலையில் திமுகவிற்கும் பங்கு உண்டு என்பதுபோல ஒருவர் (பத்மநாதன்) கூறிருக்கிறாரே' என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, "அவர் யாரென்றும், அவர் என்ன சொன்னாரென்றும் எங்களுக்குத் தெரியாது' என்று கூறினார்.

1 கருத்து: