வியாழன், 26 மே, 2011

அலைக்கற்றை வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் அமர்ந்து படமாக வரைந்தவருக்குக் கண்டனம்

இதில் என்ன குற்றம் உள்ளது? எல்லாமே வெளிப்படையாக நடக்கும் பொழுது அவை படமாக்கப்படும் பொழுது வரைவதில் என்ன தவறு? ஒளிப்படத்தை விடத் தன் திறமையை நம்பிய கலைஞரை ஊக்கப்படுத்தலாம்? ஒளிப்படம் அல்லது காட்சிப்படம் எடுக்கத் தடை இருப்பின் அதனையும் நீக்கலாம். மறைமுக உசாவலில் (in  கேமரா inquiry)தான் தடை விதிக்க வேண்டும்.  காலம் மாறுகிறது. நீதிமன்றம் பழமையிலேயே ஊறிக்கிடக்கிறது. புதுமை எண்ணம்  கொண்ட நீதிபதிகள் அதனை மாற்ற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


2ஜி வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் அமர்ந்து படமாக வரைந்தவருக்கு கண்டனம்

First Published : 26 May 2011 02:34:08 AM IST


புது தில்லி, மே 25: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நடவடிக்கைகளை படமாக வரைந்த பத்திரிகை வரைபடக் கலைஞருக்கு நீதிமன்றம் புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கனிமொழி உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அப்போது நீதிமன்றத்துக்குள் நின்றுகொண்டிருந்த பத்திரிகை கலைஞர் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளை படமாக வரைந்து கொண்டிருந்தார்.இதனைப் பார்த்த நீதிமன்ற ஊழியர் ஒருவர் படம் வரைவதை நிறுத்துமாறு கூறினார். எனினும் அவர் நீதிமன்றத்தின் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டு தொடர்ந்து படம் வரைந்தார். இதையடுத்து நீதிபதி ஓ.பி.ஷைனியிடம் அந்த ஊழியர் புகார் தெரித்தார்.இதனையடுத்து அந்த கலைஞரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தின் மரியாதையைக் குறைக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவரை எச்சரித்தார்.அவர் வரைந்த படங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அவரது அடையாள அட்டையின் நகல் ஒன்றையும் நீதிமன்ற ஊழியர்கள் பெற்றுக் கொண்டனர்.தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த அந்த நபர், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடமாட்டேன் என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக