புதன், 13 அக்டோபர், 2010

காமன்வெல்த் நிறைவு விழாவுக்கு ராஜபட்சவை அழைப்பதா?

சென்னை, அக். 12: காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.வைகோ: இலங்கை அரசு செய்த இனக்கொலை குறித்து உலக நாடுகளில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந் நிலையில் ராஜபட்சவை பாதுகாப்பதற்காக இந்திய அரசு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.தமிழக மீனவர்கள், நமது கடலிலேயே இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் அன்றாடச் சம்பவங்கள் ஆகிவிட்டன. பிரதமர் மன்மோகன்சிங்கும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும்தான் இந்த துரோகத்துக்குப் பொறுப்பாளிகள்.திருமாவளவன்: மக்களவை உறுப்பினர் என்ற முறையில் காமன்வெல்த் நிறைவு விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை கண்டிக்கும் வகையில் அவ் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழின ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் விழாவைப் புறக்கணிக்க வேண்டும்.டாக்டர் கிருஷ்ணசாமி: காமன்வெல்த் விளையாட்டு நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராஜபக்சே இந்திய அரசால் அழைக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
கருத்துக்கள்

காங்.அரசு எப்பொழுதும் தமிழர் நலனுக்கு எதிராகச் செயல்படும் என்பதும் ஈழத்தமிழர் படுகொலையில் அதற்குப் பெரும் பங்கு உண்டு என்பதும் தமிழக மீனவர்கள் படுகொலைசெய்யப்படுவது இதனது அலட்சியத்தாலும் சிங்கள ஆதரவாலும் என்பதும் மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது. இருந்தும் தமிழ், தமிழ் என்று வாய்கிழியப் பேசும் முதன்மைக் கட்சிகள் காங்.உடன் கூட்டு வைத்துக் கொள்ளவும் உறவைத் தொடரவும் விரும்பும் வெட்கக் கேடு தொடர்கிறது. தமிழர் நலனுக்காகப் பேசும் சீமான் சிங்கள இறையாண்மைக்கு எதிரானவர் எனச் சிறையிலடைக்கப்டும் கொடுமையும் நிகழ்கிறது. வாக்காளர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும். பிற மாநிலத்திலும் இது குறித்த பரப்புரையை மேற்கொண்டு காங்.ஐ வீழ்த்த வேண்டும். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/13/2010 3:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக