செவ்வாய், 12 அக்டோபர், 2010

கர்நாடக ஆளுநரை நீக்க வேண்டும்: பாஜக கோரிக்கை


பெங்களூர், அக்.11- கர்நாடக ஆளுநர் ஹெச்.ஆர். பரத்வாஜை நீக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில பாஜக தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:"ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரைப் போல செயல்படுகிறார். அவர் ஆளுநராக பதவியேற்றது முதல் பாஜக அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். எனவே, அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். சட்டப்பேரவைத் தலைவரை தானே வழிநடத்த வேண்டும் என்று நினைக்கிறார். இத்தகைய ஆளுநர் அகற்றப்பட வேண்டும்." என்றார்."ஆளுநர் சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள முற்பட்டுள்ளார். இது துரதிஷ்டவசமானது. கர்நாடக மக்கள் ஆளுநரிடம் இருந்து இத்தகைய ஒருதலைப்பட்சமான போக்கை எதிர்பார்க்கவில்லை." என்று முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

உண்மைதான். உடனடியாகக் கருநாடக ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/12/2010 2:35:00 AM
EDIYURAPPA IS RIGHT IN HIS OBSERVATIONS.GOVERNOR IS DEFINITELY TRYING TO ACT IN AN OVER BEARING MANNER. HE SHOULD NOT HAVE ISSUED DICTATS TO SPEAKER OF ASSEMBLY. CONGRESS IS THE RESULT OF THE SINS OF INDIAN PUBLIC AND IT IS A SHAME THAT AN ITALIAN IS DIRECTING SUCH ILLEGAL ACTS . SHAME! SHAME!! MR MINNAL WHAT IS THE MEANING OF LAST LINE YOU WROTE? NICE QUIP!!
By S Raj
10/11/2010 7:35:00 PM
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி..... வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி..... ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல..... நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல..... பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல..... எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல..... ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல..... அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல.....
By மின்னல்
10/11/2010 6:20:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக