வியாழன், 9 ஆகஸ்ட், 2012

தீபச்செல்வனுக்கு ச் சிறந்த ஊடகவியலாளர் விருது

Logo

 தீபச்செல்வனுக்கு ச்  சிறந்த ஊடகவியலாளர் விருது

ஈழக் கவிஞரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வனுக்கு நெருக்கடிச் சூழலில் செய்தி சேகரித்தமைக்கான 2011ஆம் சிறந்த ஊடகவியலாளர் விருதை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வழங்கியுள்ளது. நேற்றைய தினம் கொழும்பில் மவுனட்லெனியா விடுதியில் நடந்த 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த பத்தரிகையாளர் விருது வழங்கும் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.

வன்னியில் கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக செயற்பட்டவர். யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கை மற்றும் வளநிலையத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.

ஈழத் தமிழ் மக்களின் போராட்டக் குரலாக பரவலான கவனத்தை பெற்ற கவிதைகளை எழுதிய தீபச்செல்வன் தன்னுடைய கட்டுரைகள் மூலம் போருக்குப் பிந்தைய மக்களின் வாழ்க்கையையும் நிலத்திற்குப் போராடும் மக்களின் உணர்வுகளையும் தொடர்ச்சியாக குளோபல் தமிழ்ச் செய்திகள் உட்பட பல்வேறு ஊடகங்களில் எழுதி வருகின்றார்.

தற்பொழுது சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலை கல்வி கற்று வரும் தீபச்செல்வன் கடந்த ஆண்டு 2010ஆம் ஆண்டுக்கான விருதுகளில் நெருக்கடி சூழலில் இயங்கியமைக்கும் புகைப்படத்துறைக்குமான சிறந்த ஊடகவியலார் விருதுகளைப் பெற்றவர்.

இதுவரையில் நான்கு கவிதை நூல்களையும் இரண்டு கட்டுரை தொகுதிகளையும் எழுதியுள்ள இவர் மரணத்தில் துளிர்க்கும் கனவு என்ற ஈழக் கவிஞர்கள் கவிதைத் தொகுப்பையும் தொகுத்துள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

புற்றுநோய் : தொடக்கத்தில் கண்டறிந்தால் சிக்கல் இல்லை



சொல்கிறார்கள்



"ஆரம்பத்தில் கண்டறிந்தால் பிரச்னையில்லை' 

நோய் மற்றும் கீபுற்று மோதெரபி நிபுணர் அருண் சேஷாசலம்: மார்பகத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்ட அனைவருக்குமே, அதை அகற்றுதல் அவசியமில்லை. ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்ட மார்பகப் புற்று நோய்க்கு பல, கூட்டு சிகிச்சை முறைகளின் மூலம், முழு நிவாரணம் பெற, நவீன மருத்துவத்தில் வழி உள்ளது. அலட்சியம், அறியாமை என, வளர விடப்பட்ட, நாட்பட்ட புற்று நோய் மட்டுமே, நிலைமையை சிக்கலாக்கும். மார்பகப் புற்று நோயில், மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. கட்டியின் அளவு, 2 செ.மீ.,க்கு குறைவாக இருப்பது முதல் நிலை; 2 முதல், 5 செ.மீ.,க்குள் இருப்பது இரண்டாவது நிலை; 5 செ.மீ.,க்கும் மேலாக நெறிக் கட்டியுடன் தலைகாட்டுவது மூன்றாவது நிலை; இந்த நிலையுடன் கூடுதலாக கல்லீரல், நுரையீரல், எலும்பு, மூளை போன்ற உள் உறுப்புகள் ஏதேனுக்கும், புற்று நோய் பரவுவது, நான்காவது நிலை. முதல் இரண்டு நிலைகளில், மார்பக அகற்றத்திற்கு அவசியம் ஏற்படாது; அடுத்த இரண்டு நிலைகளில், பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து, சிகிச்சைக்காக அகற்றப்படலாம். எனவே, ஆரம்ப நிலையில் சுதாரித்து, மருத்துவ சிகிச்சையை நாடினால், இழப்புகளைத் தவிர்க்கலாம். இந்தியப் பாரம்பரியத்தில், ஒரு குடும்பத்தில் உள்ள பெண்களில், எட்டு பேரில் ஒருவருக்கு, மார்பகப் புற்று கண்டறியப்படுவதாக, புள்ளி விவரம் கூறுகிறது. ரத்த உறவுகளில் புற்று கண்டறியப்பட்டால், வயதைப் பொறுத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக, "மேமோகிராம்' எனும், மார்பக, "ஸ்கிரீனிங்' அவசியம். 40 வயதைத் தொட்ட பெண்கள், இந்த பரிசோதனையை ஆண்டுதோறும் செய்து கொள்ளலாம். சுய பரிசோதனையை முதல் முறை, மருத்துவ ஆலோசனைப் படியும், பின் அவ்வப்போது தொடர்ச்சியாகவும் செய்து, சோதித்துக் கொள்ளலாம்.






புதன், 8 ஆகஸ்ட், 2012

பொது நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் தமிழில் வேண்டும்: பாமக

பொது நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் தமிழில் வேண்டும்: பாமக

தினமணி First Published : 08 Aug 2012 11:50:17 AM IST

Last Updated : 08 Aug 2012 12:02:29 PM IST

சென்னை, ஆக., 08 :  இந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்படும் அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளுக்கும் தமிழிலும் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக கோரியுள்ளது.இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட பிறமாநில மொழிகளிலும் தயாரித்து வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 45 வேளாண்மை சார்ந்த கல்வி நிறுவனங்களும் நடத்தபட்டு வருகிறது. இவற்றில் சேருவதற்கான அனைத்திந்திய நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்களை தமிழில் தயாரித்து வழங்கும் திட்டம் இல்லை என்று தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி கோரப்பட்ட வினாவிற்கு இந்நிறுவனம் பதிலளித்துள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்திய வேளாண் ஆராய்ச்சிகழகத்தின் கட்டுபாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வுகள் கடந்த 2000மாவது ஆண்டு வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டுவந்தன. 2001ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தியிலும் வினாத்தாள் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் ஆங்கிலம் தெரியாத, இந்தி மொழி பேசும் மாணவர்கள் கூட இத்தேர்வுகளில் எளிதாக வெற்றிப்பெற முடிகிறது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற நுழைவுத்தேர்வுகளில் மொத்தமுள்ள 5832 இடங்களில் 1412 இடங்களை இந்தி வினாத்தாட்களை கொண்டு நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பிடித்துள்ளனர். கோவை வேளாண் பல்கலைக்கழத்திலிருந்து 92 இடங்களும், சென்னையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பலகலைக்கழகத்தில் இருந்து 6 இடங்களும், மத்திய தொகுப்புக்கு ஒதுக்கபட்டு, அனைத்திந்திய நுழைவுத்தேர்வுகளின் மூலமே அவை நிரப்பப்படுகின்றன. ஆனால் வினாத்தாள்கள் தமிழில் வழங்கப்படுவதில்லை என்பதால் இவற்றில் ஓர் இடம் கூட தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை அளிக்கும் உண்மையாகும். மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளிலும் இந்தி மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகள் மட்டுமே பயிற்று மொழிகளாக உள்ளன. அவ்வாறு இருக்கும்போது அனைத்திந்திய அளவில் நடைபெறும்பொது நுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாட்களை இந்த 9 மொழிகளிலும் தேவைக்கேற்ப தயாரிக்காமல் இந்தியில் மட்டும் தயாரிப்பது மற்ற மொழி பேசும் மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழ் பேசும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். இதன்மூலம் இந்தி படிக்காத மாணவர்களை இரண்டாம் தர மாணவர்களாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது.தமிழ்நாட்டில் ஒவ்வொரு பொதுத்தேர்வை 8 இலட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களில் 75 விழுக்காட்டினர், அதாவது 6 இலட்சம் பேர் தமிழ் வழியில் படித்தவர்கள் ஆவர். பொதுநுழைவுத் தேர்வுக்கான வினாத்தாட்கள் தமிழில் தயாரிக்கபடாததால் இந்த மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்ற, அனைத்திந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாட்களை தமிழ் மொழியிலும் வழங்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

SLA constructs military cantonment in lands of Eezham Tamils in Ampaa'rai

SLA constructs military cantonment in lands of Eezham Tamils in Ampaa'rai

[TamilNet, Tuesday, 07 August 2012, 22:02 GMT]
The occupying Sri Lanka Army in Ampaa'rai district is constructing a military cantonment in the land of sixty acres extent at Ka'napathipuram, situated in Chammaanthu'rai DS division of Ampaa'rai district. The lands belong to 350 Tamil families from the lower echelons of the society, who remain uprooted for 22 years now, according to Tamil civil officials in the district.

In 1990, the Sinhala police installed sentry points in the area after chasing out the Tamil families.

Muslim paramilitary men, who were known as ‘homeguards’ at that time, were deployed by the SL military to evict the Tamil families.

Later, pro-government Muslim politicians appropriated the lands under the guise that these lands were needed for the construction of a university.

Now, the preliminary work for the construction of the SL military cantonment has begun at the same lands, civil officials in Ampaa'rai said.

There is already another SLA camp at Ko'ndaiveddavaan, 4 km away from Ka'napathipuram.

In the meantime, Muslim politicians aligned with the Rajapaksa regime are also attempting to appropriate the lands of Tamils in Puthiya Va'laththaap-piddi village, located in Chammaanthu'rai DS division.

The Colombo government has been ignoring a request made by Tamils to create a separate DS division for Malvaththai area, comprising 18 other DS divisions with more than 7,000 Tamil voters.

But, a ‘Sinhala Only’ DS division was set up for the Sinhalese of I'rakkaamam area with fewer number of people than that of Malvaththai area, civil sources further said.

SL military backs plunder of scrap iron, vehicles, in land of genocide

SL military backs plunder of scrap iron, vehicles, in land of genocide

[TamilNet, Tuesday, 07 August 2012, 19:41 GMT]
While the international system bails out genocidal Sri Lanka by indecisiveness on international investigations, the occupying Sinhala military is engaged in erasing all remaining traces as well as in earning money by systematically backing plunder and trade of vehicles and scrap-iron left in the land of genocide. While citing land mines the public and local people are not allowed to return to Mu’l’livaaykkaal and Maaththa’lan, large gangs of Muslim traders brought from the South, and equipped with oxygen cylinder cutting tools, are openly engaged in removing vehicle parts and scrap iron. The SL military and some high officials earn huge amount of money in the lucrative trade. Meanwhile, 21 local families of Mu’l’livaaykkaal, who were recently allowed to come back in a showcase resettlement, languish without even drinking water and they are treated like slaves by the occupying military.

Plunder of scrape iron in Mu'l'livaaykkaal


The direct involvement of the occupying military in the large-scale plunder and trade became evident when TNA parliamentarian Mr. Sritharan defied the entry ban and went to the site recently, after hearing complaints. When he tried to chase away the Muslims plundering vehicle parts, they confessed that they work with the permission and full backing of the SL military.

The SL Asst. Government Agent in Puthukkudiyiruppu division denies giving permission to any one for removing scrap metal from the war site.

Several thousands of private vehicles were abandoned at the genocidal land comprising of the villages, Ve’l’laam-mu’l’livaaykkaal, Karaiyaam-mu’l’livaaykkaal, Iraddai-vaaykkaal and Puthu-maaththa’lan, which are still not allowed for entry.

A Church organisation recently noticed a vehicle belonging to it and abandoned at the war zone being now used in Colombo by its ‘new owners’.

Every last bit of Eezham Tamils are pillaged, without leaving even scrap metal, commented people enslaved to Sinhala military in Vanni.

In a showcase exercise of resettling Mu’l’livaaykkaal, the occupying military has recently brought 21 families from an IDP camp at Vavuniyaa. They were left at Mu’l’livaaykkaal West.

The meaning of ‘resettlement’ for them was just getting a few poles and tarpaulins. There was not even drinking water. They are kept almost like slaves under the watch of the Sinhala military.

Plunder of scrape iron in Mu'l'livaaykkaal
Plunder of scrape iron in Mu'l'livaaykkaal
Plunder of scrape iron in Mu'l'livaaykkaal
Plunder of scrape iron in Mu'l'livaaykkaal


அம்மா கையால் பரிசு பெற்றேன்

சொல்கிறார்கள்
"அம்மா கையால் பரிசு வென்றேன்!' 
 ஓகாவில், தேசிய அளவிலான சாம்பியன் பட்டம் வென்றுள்ள திவ்ய நந்தினி: என் அம்மா ஜோதி, ஒய்.எம். சி.ஏ., கல்லூரியில், யோகா ஆசிரியராக வேலை செய்கிறார். ஆனாலும், சிறு வயதில் என்னை யோகா கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதில்லை; எனக்கும், யோகா மேல், ஈர்ப்பு வந்ததில்லை. நான் எட்டாம் வகுப்பு படித்த போது தான், எனக்கு யோகாவில் ஈடுபாடு வந்தது; அதற்குக் காரணம் என் அம்மா தான். யோகாவில் அவர் காட்டிய ஈடுபாடு, என்னை ஆச்சரியப்படுத்த, "எனக்கும் யோகா கற்றுக் கொடுங்க' என்று, என் அம்மாவிடம் போய் நின்றேன். அவருக்கும் ரொம்ப சந்தோஷம். தினமும் யோகா பயிற்சி செய்தேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், போகப் போக, வில்லாக வளைந்த என் கை, கால்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. யோகா கற்றுக் கொள்ள ஆரம்பித்த அந்த ஆண்டே, மாநில அளவிலான எட்டாவது யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றேன். அது தான், என் முதல் போட்டியும் கூட. எனக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்காக, கொஞ்சம் இடைவெளி விட்டு, மீண்டும் போட்டிகளில் பங்கேற்றேன். 2008ல், தாய்லாந்தில் நடந்த முதல் ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டிக்கு, இந்தியா சார்பில் பங்கேற்று, மூன்றாம் பரிசு வென்றேன். கடந்த, 2011ல், ராமநாதபுரத்தில் நடந்த, தேசிய அளவிலான யோகா சாம்பியன் ஷிப் போட்டியில் எல்லா மாநிலத்தில் இருந்தும் பங்கேற்ற, 25 "டாப்பர்'களுடன் மோதி, முதல் பரிசு வாங்கினேன். சென்னை வேலம்மாள் பள்ளியில், பிளஸ் 1 படித்த போது, மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்று, வெண்கலப் பதக்கம் வென்றேன். பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக என் அம்மா வந்திருந்தார். அவர் கையால் பரிசு பெற்றது, என் வாழ்வில் மறக்க முடியாதது.

> தினமலர்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதம்சென்னையில்நடைபெறுகிறது.

இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதம்: இ.மா.தே.ச.





http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=80339
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனிராஜா கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவற்றை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை ஏராளமான இயக்கங்கள் மூலமாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாட்டை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மாநாடு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பத்மாராவ் மஹாலில் நடைபெறுகிறது. மாநாட்டை எங்கள் அமைப்பின் அகில இந்திய தலைவர் அருணா ராய் தொடங்கி வைக்கிறார்.

மாநாடு நாளை (புதன்கிழமை) தொடங்கி 11-ந் தேதி (சனிக்கிழமை) வரை 4 நாட்கள் நடைபெறும். இதில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டு கொடியை ஏந்தி பாட்னாவில் இருந்து சீருடை அணிந்த 50 இளம்பெண்கள் ஊர்வலமாக ரெயிலில் சென்னை வருகிறார்கள். மாநாட்டில் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

மேலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தினமும் அதிகரித்து வருகிறது. உணவுக்கு உத்திரவாதச் சட்டம் கொண்டு வரவேண்டும். பொது நவீன பொருளாதார கொள்கை, கல்வி, சுகாதாரம், தொழில் ஆகியவற்றில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மாநாட்டில் விரிவான விவாதம் நடத்தப்படுகிறது. இது அனைத்து மாநில பிரதிநிதிகள் மூலம் அந்தந்த மாநிலங்களை சென்றடையும். 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்தும் அலசி ஆராயப்படுகிறது.

மாநாட்டின் ஒரு பகுதியாக 9-ந் தேதி ஒரு முக்கிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், இலங்கையில் நடைபெற்ற போர் கொடுமையில் கணவனை தமிழ் ஈழப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த பிரச்சினை பற்றி பிரேசிலில் நடைபெற்ற மாதர் தேசிய சம்மேளனத்தில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஹரியானா மாநிலத்தை ஒப்பிடும்போது தமிழகத்தில் பெண் சிசுக் கொலை என்பது மிகமிகக் குறைவுதான். தேசிய அளவில் தற்போது வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஆனிராஜா கூறினார்.

வெளிநாட்டுப் பெயர்களை ப் பயன்படுத்த பள்ளிகளுக்கு த் தடை: நேபாள அரசு உத்தரவு

வெளிநாட்டுப் பெயர்களை ப் பயன்படுத்த பள்ளிகளுக்கு த் தடை: நேபாள அரசு உத்தரவு


வெளிநாட்டுப் பெயர்களை பயன்படுத்த பள்ளிகளுக்கு தடை: நேபாள அரசு உத்தரவு
காத்மண்டு, ஆக. 7 -
 
நேபாளத்தில் டெல்லி பப்ளிக் ஸ்கூல், ஆக்ஸ்போர்ட் ஸ்கூல் மற்றும் ஒயிட் ஹவுஸ் என்னும் வெளிநாட்டு பெயர்களில் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதனால் நேபாளத்தின் கல்வி திட்டத்தின் தனித்தன்மை இழந்து வருவதாக கூறி, அப்பெயர்களை மாற்ற அரசு வேண்டுகோள் விடுத்தது.
 
இதற்கிடையே இப்பள்ளிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் மாவோயிஸ்ட் கட்சியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அரசின் வேண்டுகோளை ஏற்று காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கிய பள்ளிகள் கல்லூரிகள் தங்கள் பெயர்களை மாற்றிவிட்டன.
 
பெயரை மாற்ற நேரம் கொடுத்தும், அதனை பொருட்ப்படுத்தாமல் இயங்கிய பள்ளிகளை கண்டு கொதிப்படைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.  இதனால் பள்ளிகள் இயங்காமல் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 
இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நேபாள அரசு பெயர்களை மாற்றாத பள்ளிகள் செயல்பட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இச்சம்பவத்தை கவனித்த ஐ.நா. நிர்வாகத்தினர், மாணவர்களின் நலனை உரிமையை கருத்தில் கொண்டு மாணவர்கள் உடனடியாக அமைதியான சூழலில் தங்கள் படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளது.

நாடகம் நடத்த விட மாட்டேன் என்கிறார்களே! விலைஞரின் ஆதங்கம்

நாடகம் நடத்த விட மாட்டேன் என்கிறார்களே! விலைஞரின் ஆதங்கம்

நட்பு  : பதிவு செய்த நாள் : 07/08/2012

விலைஞரின் கடிதம், கவிதை என எதுவாக இருந்தாலும் தவறாமல் படிப்பவன் நான். உரசொலியிலேயே வேலை பார்ப்பதால் அச்சிற்கு முன்னதாகவே படித்து விடுவேன், பத்திரிகையில் வெளியான பின்பு மீண்டும் மீண்டும் படிப்பேன்.இன்று விலைஞரின் கண்களில் கண்ணீரும் கையில் தாளுமாகப் பார்த்து எனக்கும் அழுகை வந்து விட்டது. ஏதோ எழுதி வைத்து விட்டு வெளியிடலாமா வேண்டாமா எனக் குழப்பத்தில் இருக்கிறார் எனப் புரிந்தது. எனவே, அவர் கண்களை மூடிச் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது அதனை எடுத்துப் படித்துப் பார்த்தேன். படித்து முடித்ததும் விலைஞர் படும் வேதனையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. யாரிடமாவது சொன்னால்தான் ஆறுதலாக இருக்கும் என்பதால் நான் படித்ததை அப்படியே உங்களிடம் தெரிவிக்கின்றேன்.


உடன் பிறப்பே!

என் உள்ளம் படும் வேதனையை என்னாலே தாங்கிக் கொள்ள முடியவில்லை. உன்னிடம் சொல்லி ஆறுதல் பெறலாம் என்றால் அதற்கும் வழியில்லை. ஆக உனக்கு எழுதுவதுபோல் எழுதி எனக்கு நானே படித்து ஆறுதல் பெறுகிறேன்!தேறுதல் அடைகிறேன்! உள்ளம் மாறுதல் கொள்கிறேன்!

நான் என்ன அறிவித்தேன்? தெசோ மாநாடு நடைபெறும் என்றுதானே அறிவித்தேன். இதனை எதற்காக அறிவித்தேன்?சொக்கத் தங்கம் சோனம்மா மீதும் அவருடன் சேர்ந்த பத்தரைமாற்றுத் தங்கமான என் மீதும் நம் உடன்பிறப்புகள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டைப் போக்குவதற்காக  - நம் மீது ஏற்பட்ட பழியை நீக்குவதற்காக - உலகத் தமிழர்கள் ஆதரவை ஆக்குவதற்காக  - அறிவித்த நாடகம்தான் அது எனக் கோங்கிரசாருக்குத் தெரியாதா?

ஈழத்தில் எரி குண்டுகள் மேலும் வீசப்படும்! அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழர்கள் கொத்து கொத்தாகச் சாகடிக்கப்படுவார்கள் என அறிவித்த பொழுதும் நான் உண்ணாநோன்பைக் கைவிடவில்லையா? ஏதோ அண்ணல் சதுக்கத்தில் காற்று வாங்கினோம்;  அண்ணல் சொன்னார் எனச் சொல்லி ஏதோ அறிக்கை விடுவோம்; என்று படுத்திருந்த என்னை அவசர அவசரமாக  அந்த இடத்தைக் காலி செய்யக் கோங்கிரசு சொன்னதும் நான் என்ன செய்தேன் என்பது உனக்கே தெரியுமே! இந்த ஊருக்கே தெரியுமே! அதனால் நான் நாடகமாடியதாக உலகிற்கே புரிந்ததே! நான் அடாவடி பண்ணாமல் என் கண்மணி பொன்மணி நன்மணி  கவி மணி புவிமணி தனிமொழி தப்பித்தால் போதும் என்பதற்காக உண்ணா நோன்பை உலகச்சாதனையாக்கி முடிக்கவில்லையா?

இதுவரை கோங்கிரசின் ஊழலைப்பற்றியோ  தேர்தலில் ஊழல் புரிந்தால் அமைச்சர் பதவி  முன்னாள் இராணுவத்தினருக்கான குடியிருப்பில் ஊழல் புரிந்தால் மந்திரி பதவி படுகொலைத் திட்டங்களைத் தீட்டித் தந்தால் தலைவர் பதவி என்றெல்லாம் கோங்கிரசு வாரி வழங்குகிறதே அதைப் பற்றியோ நான் கேள்வி கேட்டதுண்டா?

சோனம்மா, இராகையா, திரியங்கா என ஒரு குடும்பத்தின் ஆட்சி தில்லியிலே கோலோச்சுகிறதே  அதைப்பற்றி நான் வாய் திறந்ததுண்டா?

கோங்கிரசார் அணி அணியாகப் பிரிந்து அக்கட்சியை நாறடிக்கிறார்களே அதைப்போல் நான் செய்ததுண்டா?இப்படியும் ஒரு நல்ல அடிமை உண்டா என உலகே வியக்கும் அளவிற்குப் பெட்டிப்பாம்பாக அடங்கவில்லையா? நான் மட்டுமா அடிமையானேன்! மேலும் சில நல்ல அடிமைகளை அவர்களுக்குத் தரவில்லையா? நான் மட்டும் கட்டிப் போட வில்லை என்றால் இனமான ஆசிரியர் அந்தப் பக்கம் என்றோ தாவியிருப்பாரே! கோங்கிரசைக் கிழி கிழி என்று கிழித்திருப்பாரே! நான் மட்டும்அடக்கி வைக்கவில்லை என்றால் தம்பி பேராசிரியர் ஆண்டி வீர உரை ஆற்றிக் கோங்கிரசைத் தோல் உரித்திருப்பாரே! நான் மட்டும் அதிகாரப்பகிர்வில் இணையமைச்சராகவாவது ஆகலாம் என அடக்கி வைக்கவில்லை என்றால் தம்பி அளவன்  வளவள என்று காங்கிரசிற்கு எதிராகப்போட்டுத் தள்ளி இருக்கமாட்டாரா? இவ்வளவு  ஏன் ? நம் கழகப் புலவர்களும் அறிஞர்களும் பாட்டுப்பாடியே கோங்கிரசை இல்லாமல் ஆக்கி இருக்க மாட்டார்களா?
இதை எல்லாம் அறிந்தும் கோங்கிரசிற்காக உதவவே தெசோ மாநாடு நடத்துகிறேன் எனத் தெரிந்தும் அதைக் கோங்கிரசு எதிர்க்கலாமா? கோங்கிரசு சொல்லும் அறிக்கையைத்தான் நான் வெளியிடுகிறேன் அல்லது கோங்கிரசாருக்கு என் அறிக்கையை அனுப்பி அவர்கள் திருத்தித் தந்தபின்புதான் அறிக்கையை விடுகிறேன் என அவர்களுக்குத் தெரியாதா?அவர்களுக்குத் தெரியாமல் நான் ஏதும் தீர்மானம் கொண்டுவர  விடுவேனா?

இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வுத்திட்டங்களைத் தீட்டிச்செயல்படுத்தும் சொக்கத்தங்கம் சோனம்மாவினைப் பாராட்டி நன்றி தெரிவிக்கும் தீர்மானம் போடுவேன் என்பதை அவர்களால் ஊகிக்க முடியாதா? அல்லது தீர்மான வரைவுகளைத் தரும்வரை பொறுமை காக்கக் கூடாதா?

நான் நானாக இருந்திருந்தால் தலைவர் தேர்தலில் ஆரிய முகரைக்கு வாக்களிக்காதீர்! படுகொலை புரிந்த திராவிடப் பகைவனுக்கு வாக்களிக்காதீர்! என்றெல்லாம் பரப்புரை மேற்கொண்டு தோற்கடித்திருக்கமாட்டேனா? சோனம்மா சொல்லே வேதம்! கோங்கிரசு கட்டளையே மந்திரம்! என ஆதரிக்கவில்லையா?

ஏழரைக்கோடித் தமிழர்களின் தலைவனான என்னைச் சில்லறைத் தலைவர்கள் மதிப்பதில்லை என்பதால் - உலகத் தமிழர்கள் எட்டப்பனுக்குப் பதிலாக என் பெயரைப் பயன்படுத்துவதால் - இங்கிருக்கும் உடன் பிறப்புகளையாவது தக்க வைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறதா இல்லையா? அவர்களை எப்படி நான் என் பக்கமே வைத்திருப்பது?இப்படி ஏதும் மாநாடு நடத்தி ஏமாளித் தொண்டர்களிடம் என்னை உண்மைத் தமிழனாகக்காட்டிக் கொண்டால்தானே முடியும்? இது கோங்கிரசாருக்குத் தெரியாதா?  நான், இதுவரை கோங்கிரசு தலைவர்களும் அதிகாரிகளும் இலங்கையில் என்ன பேசி வந்தார்கள் என்று சொல்லியது உண்டா? இந்தியா வழங்கிய குண்டுகள் எண்ணிக்கையைப் பட்டியல் போட்டதுண்டா? அல்லது படைக்கருவிகள் பட்டியலைத்தான் வெளியிட்டதுண்டா? பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் வாய்மூடிமௌனம் காக்கவில்லையா?  அது மட்டுமல்ல உலக நிலையாமை என்று சொல்லி கோங்கிரசின் பழியைத் துடைக்க முயலவில்லையா?
இத்தனையும் பொறுத்திருக்க
இஃதென்ன தமிழ்நாடா அல்லது
இடுகாடா? சுடுகாடா?

எனப் பொங்கி எழுந்தேனா?
விடுதலை வேண்டா வெனும் வெறும் உபதேசம்
நரிகளின் ஊளை
நாட்டு வெறிபிடித்த காளைகளே
கிலி பிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்
புலி வாழ்வின் உச்சியிலே
புதுமைதனைப் பொறித்திடுவோம்
என்றுதான் உங்களைத் தட்டி எழுப்பினேனா?

நீ வருவதற்கு முன்பே
வரலாறு இருந்தது தமிழர்க்கு
ஆனால், நீ வந்தபின்தான் வகையாகத்
தமிழன் வரலாற்றை உணர்ந்தான்
. . .    . . .    . . .
தமிழன் தமிழனானான்
என்று புகழ்ப்பரணி பாடினேனா? கைது செய்தால் எப்படி நடத்த வேண்டும் என்று சொல்வதன் மூலம் கோங்கிரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்புதானே தந்தேன். (என்னைத் தவிர வேறு யாரையும் தலைவன் என்று சொல்ல மாட்டேன் என்பதை அறியாதவர்களா? அப்படிப்பட்டவன் தலைவியின் அடி பணிகிறேன் என்றால் என்னைப் புரிந்து கொள்ள வேண்டாமா?)

நான் என்னதான் செய்ய வில்லை? இன்னும் ஏதும் செய்ய வேண்டும் என்றாலும் நான் செய்திருப்பேனே அதை விட்டு விட்டு ஏதோ பொழுது போக வேண்டும் என்றும் என்னை நம்பியிருக்கின்றவர்களிடமாவது தமிழர் தலைவனாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக வருகின்ற தேர்தலில் காங்கிரசிற்கு வாக்களிக்கச் செய்ய மக்களைத் திசை திருப்ப வேண்டும் என்றும் நான் திட்டம் தீட்டியிருந்த நாடகத்தைக் கோங்கிரசார் எதிர்ப்பதேன்?

அவர்களுக்குத்தான் தன்னாலும் தெரியாது சொன்னாலும் புரியாது. சொக்கத் தங்கம் சோனம்மாவும் தேர்தலில் தோற்றும் அமைச்சராக உள்ள தசிம்பரமும் எனக்கு நெருக்கடி தரலாமா? என்றாலும் நான் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த நாடகத்தை அவர்கள் விருப்பத்திற்கேற்பவாவது நடத்த அனுமதித்ததற்காக.

‘தலைவர் சொல்லியாச்சு ஈழம்வந்தாச்சு’ என்னும் முழக்கத்திற்குப் பொருள்தெரியுமா? கண்மணியே, ஈழம் என்றால் தங்கம் அப்பா தங்கம். குடும்பத்தினர் மூலமாகக் குவித்து வைத்த தங்கத்தின் ஒரு பகுதி கோங்கிரசிற்குத் தந்ததை நினைவு படுத்தவே இந்த முழக்கம்.  வந்தாச்சு என்பது முக்காலத்தையும் குறிக்கும். எனவே, இனியும் பங்களிப்பு தொடரும் என்பதன் இரகசியக் குறியீடுதான் இது.  இதைப் புரிந்து கொள்ளாமல் உடன் பிறப்புகள் உள்ளனர் என்றால் எல்லாம் வல்ல சொக்கத் தங்கம் சோனம்மா புரிந்து கொள்ளாமல் போனதுதான் வேதனையாக உள்ளது. ‘ஈழத்தைக் காணாமல் சாக மாட்டேன்’ என்று சொன்னதுகூட ஓர் எச்சரிக்கைதான். எச்சரிக்கை என்றால் மத்திய அரசிற்கோ கோங்கிரசிற்கோ என எண்ணக்கூடாது. எனக்குவந்து சேர வேண்டிய பங்குத் தங்கம் வராததால் கொடுத்த எச்சரிக்கை.  என் அடிமைத்தனத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைப்போய் வேறு வகையாக எண்ணியதைக் கண்டு உள்ளம் அழுகிறது உடன்பிறப்பே உன் அண்ணனின் உள்ளம் அழுகிறது!
   என்றாலும் நான் உறுதி அளிக்கின்றேன். ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் காயங்களுக்கும் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற சொக்கத் தங்கம் சோனம்மாவிற்கு நன்றி தெரிவித்து நான் உரையாற்றத் தவற மாட்டேன். மொழி பெயர்ப்பவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். வடுமாறன்கள் எல்லாம் ஈழம் என்று சொல்லவே அஞ்சி இலங்கைத் தமிழர்கள் என்று சொல்லும் பொழுது  நான் ஈழம் எனப் பயன்படுத்துவது அவர்களைக் காட்டிலும்  கோங்கிரசு கூட்டணி ஈழத்தமிழர்களை ஆதிரிப்பதில் முனைப்பாக உள்ளது எனக் காட்டுவதற்காகத்தான். இங்கே நான் போர் என்றோ இனப்படுகொலை என்றோ  ஒரு சொல் கூடச் சேர்க்கவில்லை என்பதைப் பின்குறிப்பாகக் குறிப்பிட வேண்டும். “போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்  எம் கடன் குடும்பத்தினருக்குச் செல்வம் சேர்ப்பதே உம் கடன்  அதில் மகிழ்ந்து எமக்குப் பணி செய்து கிடப்பதே” என்பதை உணர்ந்து அருமை உடன்பிறப்புகளே! அன்பு உடன்பிறப்புகளே! அண்ணன் அழைக்கிறேன்!தெசோ மாநாட்டைச் சிறக்கச் செய்ய அணிஅணியாகக் கூடுவீர்!

தனி மொழிக்கு இல்லாத அமைச்சர் பதவி யாருக்கும் வேண்டா என நான் மத்திய அமைச்சர் பதவிகளை வாங்காதிருப்பதை அறிவீர்கள்.  நம் செல்வாக்கைப் பார்த்து அருமை மகள் பெருமை மகள் சிறை மீண்ட செல்வ மகள் தான் பட்ட  துயரங்களுக்கு மருந்தாக  மத்திய மந்திரியாக வேண்டும். அதை நான் பார்த்து மகிழ வேண்டும்.  அப்பொழுது வேறு சிலருக்கும் மத்திய மந்திரிப் பதவிகள் வாங்கித் தர வேண்டும். இதனால் உடன் பிறப்புகள் நன்மைஅடைய வேண்டும்.எனவே,  ஈழம் கண்டெடுத்த தமிழ்ச்செல்வி தனி மொழிக்காகவாவது தெசோ மாநாட்டிற்குத் திரள் திரளாக வருக! ‘இப்படை தோற்பின் எப்படை வெல்லும் ’ என்பதைக் காட்ட வருக !
அண்ணன்
 கு.க.

என்ன இருந்தாலும் தலைவர்தலைவர்தான்.  வேதனையில் தொடங்கினாலும் வீரத்தில் முடித்துவிட்டாரே. என்றாலும் தலைவரைப் புரிந்து கொள்ளாமல் அவர் எதிரியாக இருந்தாலும் அடிமையாக இருந்தாலும் விடாப்பிடியாக உறுதியாக இருப்பார் என்பதை உணர்ந்து கொள்ளாமல் தொந்தரவு கொடுக்கும் கோங்கிரசு மீது கோபம் வந்தது. தலைவர் அழுது எழுதி உள்ளாரே என நினைத்து என் கண்களில் கண்ணீர் பெருகியது.

“டேய் தூங்கு மூஞ்சி என்ன, தூக்கத்தில் அழுது கொண்டிருக்கிறாய் “ என யாரோ தட்டி எழுப்பியதும்தான்  நான் கண்டது கனவு எனப் புரிந்து கொண்டேன். தலைவராவது அழுவதாவது எனத் தேற்றிக் கொண்டேன். என்றாலும் கனவில் படித்த வரிகள் என்னைத் தொந்தரவு செய்து கொண்டுள்ளன என்பது மட்டும் உண்மைதான்.

- தூங்கு மூஞ்சி

வாசகர் கருத்துகள்

  • K..Sundaram says:
    கனவுதான் கற்பனை என்றால் கவிதையைக்கூடக் கற்பனையாக எழுதத் தெரியவில்லையா? தலைவரின் கவிதையைக் குறிப்பிட்டு இருக்கிறாரே! சொந்தமாக எழுதத் தெரியாதவரெல்லாம் எதற்குக் கனவு காண வேண்டும்? போகட்டும்! தூங்குமூஞ்சிக்கு ஆணாக இருந்தால் சொப்பன சுந்தரம் என்றும் பெண்ணாக இருந்தால் சொப்பன சுந்தரி என்றும் பட்டம் அளிக்கிறேன்.
  • இது பகல் கனவா? அல்லது இரவுக் கனவா? கனவு கண்டதுதான் கண்டார் – ஈழம் மலர்ந்ததாகக் கனவு கண்டிருக்கக்கூடாதா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
  • எங்களை வாழவிடுங்கள், எங்களை அழிக்காதீர்கள்: கூடங்குளம் பகுதி குழந்தைகள் இரசிய தூதரகத்துக்கு மடல்

    எங்களை வாழவிடுங்கள், எங்களை அழிக்காதீர்கள்: கூடங்குளம் பகுதி குழந்தைகள் இரசிய தூதரகத்துக்கு மடல்
    எங்களை வாழவிடுங்கள், எங்களை அழிக்காதீர்கள்: கூடங்குளம் பகுதி குழந்தைகள் ரஷ்ய தூதரகத்துக்கு கடிதம் 
    வள்ளியூர், ஆக.7-
     
    கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பினர் இடிந்தகரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
     
    நேற்று அங்கு ஹிரோஷிமா நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
     
    இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமாநகர் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இன்னும் அந்தநகரத்தில் அணுகுண்டின் பாதிப்பு இருந்து வருகிறது. ஆனால் நாம் கூடங்குளம் என்ற அணு குண்டை நமது அருகிலேயே வைத்திருக்கிறோம். அணு உலை என்கிற பெயரில் அணுகுண்டை மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கிறோம். இதில் விபத்து ஏற்பட்டால் தென் தமிழகமே காணாமல் போகிவிடும்.
     
    காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நான், இங்கேயும் பேசிக்கொண்டு வேஷம் போடுவதாக நீங்கள் பேசலாம். வெளியில் இருந்துகொண்டு எதையும் பேசலாம். ஆனால் கூட்டணியில் இருந்து கொண்டு அவர்கள் செய்யும் தவறை பேசுவதற்கு தைரியம் வேண்டும். இன்று உலகம் முழுவதும் கூடங்குளத்தை பற்றி பேசி வருகிறார்கள். அதற்கு காரணம் உங்களது போராட்டம் தான். உலகம் முழுவதும் அணு உலைகளுக்கு எதிர்ப்புகள் உருவாகி வருகின்றன. உங்களுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்.
     
    இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
     
    இந்நிலையில் கூடங்குளம், இடிந்தகரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி குழந்தைகள், எங்களை வாழவிடுங்கள், எங்களை அழிக்காதீர்கள் என்று எழுதிய 500-க்கும் மேற்பட்ட கடிதங்களை டெல்லியில் உள்ள ரஷிய தூதரகத்திற்கு அனுப்பினர். இதுபோன்ற கடிதங்கள் தொடர்ந்து அனுப்பப்படுவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.