திங்கள், 22 ஜூலை, 2013

சிறுநீரை அடக்கக்கூடாது!

சிறுநீரை அடக்கக்கூடாது!

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும், தொற்று பற்றியும், அதற்கான தீர்வையும் கூறும், மருத்துவர் சியாமளா கோபி: நான், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுகிறேன். நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு, சம்பளம் மற்றும் பணிச்சுமை அதிகம் என்பதால், கூடுதலாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்தால், யாராவது தவறாக நினைப்பரோ என்ற எண்ணத்தில், பலர், சிறுநீர் கழிக்க மாட்டார்கள். சிறுநீர் பையின் சாதாரண கொள்ளளவு, வெறும், 300 முதல் 500 மி.லி., மட்டுமே. எனவே, சராசரியாக நாள் ஒன்றுக்கு, 3 லிட்டர் நீர் குடித்து, இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, சிறுநீரை வெளியேற்றுவது அவசியம். இல்லையெனில், அடிவயிற்றில் வலி, காய்ச்சல் வருவது போன்ற உணர்வு, ரத்தம் கலந்து வருவது, அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் தானாக வெளியேறுதல் என, பல பாதிப்புகள் வரும். குறிப்பாக, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, சொட்டு சொட்டாக சிறுநீர் கசிவதும், சிறுநீரகத்தில் கல் வளர்வதும் அதிகரிக்கும். இரவில் குறைந்தளவே நீரை பருகி, தூங்குவதற்கு முன்னரே வெளியேற்றுவது நல்லது. இரவில் தான், சிறுநீர் அதிக நேரம் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால், சிறுநீர் பையில் கிருமிகள் வளர்ந்து, "யூரினரி இன்பெக்ஷன்' எனும், சிறுநீர் தொற்றை உருவாக்கும். டயாபட்டீஸ் மற்றும் பக்கவாத நோய்களாலும், இந்த தொற்று ஏற்படுகிறது. மேலும், பொது இடங்களில் உள்ள, "வெஸ்டர்ன் டாய்லெட்'டை பயன்படுத்தும் போது, "கம்மோட்' என்ற அமரும் பகுதி அசுத்தமாக இருக்கும் பட்சத்தில், நம் தோலில் கிருமி தொற்று ஏற்பட்டு, அது சிறுநீர் தொற்றாகவும் மாற வாய்ப்பு இருக்கிறது. சிறுநீரக பிரச்னைக்கு, நவீன மருத்துவ வசதிகள் நடைமுறையில் இருந்தாலும், போதிய விழிப்புணர்வுடன், தேவையான நீர் அருந்தி, சரியான நேரத்தில் சிறுநீர் கழித்தாலே, சிறுநீர் தொற்றால் பாதிப்படையாமல், நலமாக இருக்கலாம்.

மன உறுதிக்குப் பெயர் பெற்ற மலாலா

மன உறுதிக்கு ப் பெயர் பெற்ற மலாலா

மலாலா யூசுப்சாய், 16 வயது பாகிசுத்தான் சிறுமி; மன உறுதியின் மறுபக்கம்.பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில், பஷ்டூன் பழங்குடியின மக்கள் நிறைந்த பகுதியில், குஷால் பப்ளிக் பள்ளி என்ற பெயரில், கல்வி நிறுவனங்களை நடத்தி வரும், ஜியாயுதீன் யூசுப்ஜாய் மகள் இவர்.

அப்பகுதியில் அதிகாரம் செலுத்தி வரும் தலிபான்களுக்கு எதிராக, 11 வயது முதல், குரல் கொடுத்து வரும் மலாலா, பி.பி.சி., "டிவி'யின், உருது மொழி பிரிவில் பல கட்டுரைகள் எழுதியவர்.மலாலாவுடன் பிறந்தவர்கள், இரண்டு சகோதரர்கள். இவர்களின் தந்தை ஜியாயுதீன் யூசுப்ஜாய், தன் மகன்களைப் போலவே, மகள் மலாலாவையும் தைரியமாக வளர்த்தார். இரவில் நெடுநேரத்திற்குப் பிறகும் வெளியே நடமாட விடுவது, பள்ளிக்குத் தைரியமாக அனுப்புவது, பொதுக் கூட்டங்களில் பேசச் செய்வது என, தலிபான்களுக்குப் பிடித்தம் இல்லாத பல செயல்களில் மலாலாவை ஈடுபடுத்தினார்.மலாலாவுக்கு, டாக்டர் ஆக வேண்டும் என்ற விருப்பம். ஆனால், அவரின் தந்தைக்கு, மலாலாவை, அரசியல்வாதியாக மாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது.

பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில், பெண்கள் படிக்கக் கூடாது; பொது இடங்களுக்குத் தனியாகச் செல்லக் கூடாது; பிற ஆண்களுடன் பேசக் கூடாது என, கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள தலிபான்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால், 13 வயதில், தலிபான்களால் சுடப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில், லண்டன் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று, பூரண உடல் நலம் பெற்றார் மலாலா.

சமீபத்தில், இவரின், 16வது பிறந்த நாளின் போது, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது, இவரின் பிறந்த நாளை, "மலாலா நாள்' என, ஐக்கிய நாடுகள் சபை கவுரவித்து உள்ளது. ""துப்பாக்கி மூலம், என்னைக் கட்டுப்படுத்த முடியாது. துப்பாக்கிக் குண்டுகளை விட, கல்விக்குச் சக்தி அதிகம்,'' என்று வீராவேசமாக பேசினார்.""மலாலா நாள், என்னுடைய நாள் மட்டுமல்ல; இந்த உலகின் ஒவ்வொரு பெண்ணின் நாள்; உரிமைக்காகப் போராடும், ஆண், பெண் அனைவரின் நாள்,'' என, மலாலா ஆற்றிய உரை, உலகம் முழுவதும் ஒலித்தது.

தாயகம் திரும்ப ஆர்வம் இல்லை




http://img.dinamalar.com/data/gallery/gallerye_004510868_762774.jpg


தமிழக மறுவாழ்வு முகாம்களில் வசித்து, மீண்டும் தாயகம் திரும்பும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இலங்கையை விட, தமிழகம் பாதுகாப்பு என, அவர்கள் உணர்வதே, இதற்கு காரணம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதிலும் உள்ள, 102 அகதிகள் முகாம்களில், 60,725 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், நிதியுதவியும், அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படுகின்றன.

அகதிகள் மறுவாழ்வு முகாம்:
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, சொந்த நாட்டுக்கு செல்லும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பும்போது, முகாம் அமைந்துள்ள, அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பர். பின் அந்த மனு,மறுவாழ்வு துறைக்கு அனுப்பப்படும். அவர்கள் போலீசாரிடம்இருந்து பெறப்படும் அறிக்கையோடு, மனுவை இணைத்து,
உலக நாடுகளின் அகதிகளுக்கான கமிஷனர் அலுவலகமான, யூ.என்.எச்.சி.ஆர்., நிறுவனத்துக்குஅளிப்பர்.

பொருள் உதவி:
அவர்கள், சொந்த நாடு செல்ல விரும்பும் அகதிகளிடம் நேர்காணல் நடத்தி, இலவசமாக விமானம் மூலம் செல்ல, ஏற்பாடு செய்வர். மேலும், நம் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கான சான்றிதழ் பெறுவதற்கும், பாஸ்போர்ட் எடுப்பதற்கும் துணை புரிவர்.இலங்கைக்கு சென்றவுடன், விமான நிலையத்தில் இருந்து, அவர்களது சொந்த ஊர் செல்ல, போக்குவரத்து செலவாக, 4,000 இலங்கை ரூபாய் அளிக்கப்படும். பின் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கும், புதிதாக வாழ்க்கை ஆரம்பிப்பதற்கும், 18 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு, 12 ஆயிரம் ரூபாயும், 18 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு, 9,000 ரூபாயும் வழங்கப்படும்.

குறைவு:
கடந்த, 10 ஆண்டுகளில், 2004ல், இலங்கையில் சமாதான பேச்சு வார்த்தை நடந்தபோது, அதிகபட்சமாக, 3,078 பேர் சென்றனர். அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில்,
Advertisement
இறுதிப்போர் துவங்கிய போது, முற்றிலும் குறைந்தது. 2007ல் யாரும் இலங்கைக்கு செல்லவில்லை.பின், 2009ல் போர் முடிவுக்கு வந்தபோது, மீண்டும் தாயகம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், உச்சத்துக்கு சென்ற எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:இறுதி போருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்தவர்களே, போரின் முடிவுக்கு பின், சொந்த ஊருக்கு செல்கின்றனர். மற்றபடி, தற்போதுள்ள இளைய தலைமுறையினர் யாரும், இலங்கைக்கு செல்ல விரும்புவதில்லை.காரணம், "தங்கள் சொந்த நாட்டை விட, தமிழகமே பாதுகாப்பானது; உறவானது' என, நினைக்கின்றனர்.முகாம்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களில், பெரும்பாலான இளைஞர்கள், தமிழகத்துக்கு வந்த பின்னரே பிறந்தவர்கள்.

சிங்களர் குடியிருப்பு :
எனவே அவர்கள், இலங்கை செல்வதை காட்டிலும், தமிழகத்தில் இருக்கவே விரும்புகின்றனர். அதுமட்டுமின்றி, போருக்கு பின், தமிழர்களின் குடியிருப்புகளில், சிங்களர் குடியிருப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. எனவே, அங்கு செல்வதைப் பாதுகாப்பு குறைவானதாக நினைக்கின்றனர். எனவே, தாயகம் செல்கிறவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எதிர்வரும் காலங்களில், இன்னும் குறையலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

-தினமலர் செய்தியாளர் -

அரசு பள்ளிகளைத் தொழிற்சாலை நிறுவனங்கள் தத்தெடுப்பு

அரசு பள்ளிகளை த் தொழிற்சாலை நிறுவனங்கள் தத்தெடுப்பு:சரியும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க புது முயற்சி

காஞ்சிபுரம்:அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதங்களை உயர்த்தும் வகையில், பள்ளிகளை தொழிற்சாலைகள் தத் தெடுப்பதற்கு, வரவேற்பு தெரிவிக்கப் பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்களில், 94 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், கிராமப்புறங்களில் மட்டும், 52 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. மாணவர்களுக்கு தேவையான ஆய்வுக்கூடங் களும் இல்லை. இதனால், மாணவர்கள், 35 சதவீதம் என்ற அளவில் கூட, மதிப்பெண்களை எடுக்க முடியாமல் தோல்வி அடைகின்றனர்.

சிக்கல்கள் :


கடந்தாண்டு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாவட்டத்தில் உள்ள 94 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஒரு பள்ளிகூட 100 சதவீதம் தேர்ச்சி பெறவில்லை. ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிசம்பர் மாதத்திலேயே அனைத்து பாடங்களும் முடிக்கப்படும். அதன்பிறகு, திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாடங்களும் நடத்தப்படவில்லை. திருப்புத் தேர்வுகளும் வைக்கவில்லை. இதற்கு, ஆசிரியர்கள் பணியிடம் காலியாக இருப்பதும், கிராமங்களில் பணிபுரிய, ஆசிரியர்கள் தயங்குவதும் தான் காரணம் என, கூறப்படுகிறது.

ஏற்பாடுகள் மும்முரம்:


இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி கூறுகையில், ""நடப்பு கல்வி ஆண்டில், அனைத்து அரசு பள்ளிகளும், 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்துதல், காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன,'' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ""அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும், அரசு பள்ளிகளை, தனியார் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு தத்து வழங்கும் முடிவும் எடுக்கப்பட்டுள் ளது. இதுவரை, 16 அரசு பள்ளிகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலை நிறுவனங்கள் மூலம், பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, சம்பளமும் வழங்கப்படுகின்றன,'' என்றார்.

அரசு பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும், தனியார் தொழிற்சாலை நிறுவனங்கள், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தியை அலுவலக தொலைபேசி 044 - 2722 2128, அலைபேசி 73730 02671 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Wigneswaran should not weaken diaspora and Tamil Nadu

Wigneswaran should not weaken diaspora and Tamil Nadu

[TamilNet, Sunday, 21 July 2013, 17:15 GMT]
Hindustan Times carrying out an interview of CV Wigneswaran on Friday highlighted his statement against Tamil Nadu polity in the title. The highlight shows the priority in New Delhi’s polity and media in diffusing and detracting the uprising in Tamil Nadu for the independence of Eezham Tamils that is denied primarily by New Delhi and Washington. Hindustan Times just follows The Hindu, The Times of India and The New Indian Express in this regard. The gang up of Indian’s mainstream media behind the agenda of the genocidal partners has to be vigilantly perused by the peoples’ polity in Tamil Nadu as it is a re-enactment of the times that led to the Mu’l’livaaykkal genocide, commented Tamil activists for alternative politics in the island.
C.V. Wigneswaran
Former SC Judge CV Wigneswaran [Photo courtesy: Daily Mirror]
Justice C V Wigneswaran, TNA’s chief minister candidate in the Northern Provincial Council election under the unitary constitution of genocidal Sri Lanka, told Hindustan Times at the end of his interview: “It is natural for friends in Tamil Nadu to show emotions but the Sri Lankan issue is being used there for political gains. To them, I will only say this: You are welcome to give us any other kind of support but please allow us to work out our own solutions to our own problems within a united Sri Lanka.”

Is it worse than the bureaucracy-intelligence-run New Delhi Establishment using the Eezham Tamil issue for its military and corporate gains by partnering genocide, by upholding the genocidal unity of the Sinhala State and by denying liberation for the nation of Eezham Tamils in the island, asked the Tamil activists in the island. In the same spirit, why can’t the Tamils tell New Delhi that is propping up the ‘unity’ of the Sinhala State to allow us to work out our own solutions to our own problems by finding independence? There was always the probability that had New Delhi stood aside, we could have by now found the solutions, the activists said.

Justice Wigneswaran is not justified in making such a statement only against Tamil Nadu polity that too by taking an extra-mandate liberty in being partial to “united Sri Lanka.” Tomorrow if he is elected as the CM, he would say people have ‘mandated’ for ‘united Sri Lanka’. He continues with the treacherous blunder the TNA was forced to commit in the previous elections by the powers behind, the activists in the island observed, adding that keeping Tamil Nadu and the diaspora quiet is now the task of the forces that had ganged up for the genocide and are now engineering for the structural completion of it.

* * *

Further comments from the Tamils for alternative politics in the island: “When a wife is beaten up by a husband, it is not an internal affair. Neighbours have a duty to intervene […] it is natural to then turn to our next-door neighbour,” Wigneswaran said in the interview answering a question why the TNA seeks international opinion to an internal matter.

First of all Justice Wigneswaran contradicted his own logic in telling Tamil Nadu to allow Tamils in the island to resolve their problems by themselves.

If the justice’s perception of the next-door neighbour is not people but State, and if it is New Delhi, what to do if that next-door neighbour, with a sinister desire on the wife, is worse than the husband? One has to naturally expect the next-door neighbour’s wife, who is also equally suffering from injustice, to take care of it. That’s what Tamil Nadu is doing.

Justice Wigneswaran who was telling that he feels “like a person who has jilted his lover and is getting married to the person his parents found for him," explained the phrase “parents” to Hindustan Times as friends, fellow lawyers, judges and his students.”

But political observers say that the ‘parents’ are Washington and New Delhi, and the greedy couple wants the independence and sovereignty of the nation of Eezham Tamils as dowry to be extracted by their ‘son’ for passing it to their pet daughter in Colombo.

There are many Eezham Tamils who silently appreciate the noble candidature of Justice Wigneswaran the TNA was able to come out with, even though it should have done so after rejecting outright the treachery of Washington and New Delhi for telling to try the PC model of the unitary constitution, after all what had happened and what is happening.

But Wigneswaran with his connections with the Colombo Establishment cannot turn into another ‘Laxman Kadirgamar.

If he could achieve anything by playing the agenda of the genocidal culprits, let him try and prove it. If he is destined to become the CM of the hollow PC, he could be so even if people boycott voting. When it is the USA and India that want the Sinhala military to occupy the country of Eezham Tamils and to carryout demographic and development ‘solutions,’ let him deceive himself in sending the military out without deploying counter geopolitical strength in the form of mass uprising in Tamil Nadu and in the diaspora, or let him deceive Tamils by talking on phased withdrawal of the military, keeping it in the barracks etc. But he should refrain from weakening Tamil Nadu and the diaspora calling for the independence of Eezham Tamils.

Justice Wigneswaran should not take up the task of proving to the world that a set of international criminals could commit any extent of crime and escape scot-free without delivering due justice, by hoodwink and engineering of victims, so that it will be a paradigm for future human civilisation, cautioned the Tamil activists for alternative politics in the island.

Related Articles:
19.07.13   Habitual detraction of due justice to Eezham Tamils continue..
28.04.13   Justice Wigneswaran delivers ITAK’s Chelva Memorial Lecture

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கவிஞர் சாமி பழனியப்பன் மரணம்: கருணாநிதி இரங்கல்

கவிஞர் சாமி பழனியப்பன் மரணம்: கருணாநிதி இரங்கல்
கவிஞர் சாமி பழனியப்பன் மரணம்: கருணாநிதி இரங்கல்
சென்னை, ஜூலை. 21– தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் நெருங்கிய மாணவர்களில் ஒருவரும், தமிழரசு பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற வரும், தம்பி பழனி பாரதியின் அருமைத் தந்தையுமான கவிஞர் சாமி பழனியப்பன் மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
திராவிட இயக்க லட்சியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, பாவேந்தர் பாணியில் கவிதைகளை எழுதுவதை வழக்கமாகக் கொண்டு சாமி பழனியப்பன் எழுதிய கவிதைகள் ஏராளம்.
கழக ஆட்சிக் காலத்தில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட போதே, முதல்– அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உதவி நிதி அளித்தது என் ஞாபகத்தில் உள்ளது. அவரது மறைவு தமிழ்க் கவிதை உலகிற்கு ஓர் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Activists discuss strategies of resistance at London event

Activists discuss strategies of resistance at London event

[TamilNet, Saturday, 20 July 2013, 23:33 GMT]
Activists involved with different contemporary political and social movements came together on Thursday at an event in London to discuss strategies of resistance in the 21st Century. Titled ‘Modern Day Protest’, the event was chaired Hugh Muir, columnist with the Guardian, and saw the panellists, with experience in different spheres and types of activism, engage in lively debate and sharing their views on the models of effective activism to be considered especially in the West. Eezham Tamil activist Gobi Sivanthan’s argument that non-violent direct action was a very effective strategy to be pursued in the West given the level of criminalization of activists and protests was taken up well by the participants.


Mr. Sivanthan, an activist with the TCC-UK, talked about how different non-violent strategies were used by the Tamils in the UK to draw attention to the genocide that their brethren face in their occupied homeland.
Elaborating from personal experience, he also spoke of the need for campaigning among people as opposed to trusting establishments.

Dr. Nadine El-Enany, Lecturer in Law at Birbeck, University of London spoke about the importance of challenging the law. Talking about the corruption in the police system, she also explained how the state used convenient definitions of ‘violence’ and ‘non-violence’ to curb protests.

Madeline Carroll, campaign director of activist group 38 Degrees and Trenton Oldfield, activist working against inequality in British society, also spoke at the event.

1. காய்கறித்தோட்டம் நாமே உருவாக்கினால் என்ன? 2. சிக்கலைத் திறமையாகச் சமாளியுங்கள்

நாமே உருவாக்கினால் என்ன!

காய்கறிகளின் விலை உயர்வை ச் சமாளிக்க, வீட்டிலேயே தோட்டம் அமைப்பதன் அவசியத்தை கூறும், சுல்தான் அகமது இஸ்மாயில்:
நான், சென்னை புதுக் கல்லூரியின், முன்னாள் துணை முதல்வர். சுற்றுச்சூழல் மற்றும் மண்புழுக்களை ஆராய்வதில் மிகுந்த ஆர்வம். இதுதொடர்பாக உரையாற்ற, பயிற்சியளிக்க என, பல வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளேன். தற்போது, காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால், வீட்டிலேயே தோட்டம் அமைக்க, சிலருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எல்லாருக்குமே, வீட்டு தோட்டம் அமைப்பதில், விழிப்புணர்வு தேவை. பெரிய பெரிய கட்டடங்களின் சுவர் வெடிப்புகளில், அரச மரமே வளரும் போது, கைப்பிடி மண்ணில், ஏன் காய்கறி செடியை வளர்க்க முடியாது என்ற, நேர்மறையான சிந்தனை இருந்தாலே, ஒரு பைசா கூட செலவில்லாமல், நாமே கொத்து கொத்தாக காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். இதனால், விண்ணை முட்டும் விலைவாசியில் இருந்து எளிதில் தப்பிக்கலாம். நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் டப்பா, பெயின்ட் வாளிகளை முதலில் சேகரிக்க வேண்டும். குப்பையாக தூக்கி எறியும் காய்கறி கழிவுகளை, மண்ணுடன் சேர்த்து அதில் போட்டால், இயற்கை உரம் ரெடி. அத்துடன் சிறிது மண்ணை சேர்த்து, சற்று அழுகிய அல்லது உடைந்த தக்காளியை பிழிந்தால், சில நாட்களில் தக்காளி செடி முளைக்கும். சந்தையில் விற்பனையாகும், மற்ற காய்கறி விதையும் போடலாம். தேங்காய் நார், ஒரு மிக சிறந்த நீர் தேக்கி. அதை மண்ணுக்குள் புதைத்து, காய்கறி அலசிய நீரை ஊற்றினாலே போதும்; ஒரு வாரத்திற்கு தாக்கு பிடிக்கும். வீட்டு தோட்டம் என்றாலே, பூச்சிகள் அதிகம் இருக்கும் என்ற பயம் வேண்டாம். இஞ்சி, பூண்டு, பெருங்காயத்தை 100 கிராம் வீதம் சேர்த்து அரைத்து, 10 லிட்டர் நீரில், 15 நாட்கள் ஊற வையுங்கள். பசுவின், 1 லி., கோமியத்துடன், 9 லி., நீர் சேர்த்து ஊற வைத்து, அந்த இரண்டையுமே செடிகளின் மீது தெளித்தால், பூச்சி தாக்குதல் இருக்காது. அனைத்தும் இயற்கை முறை என்பதால், எந்த பாதிப்பும் வராது. குடும்ப செலவும் மிச்சப்படும்.


பிரச்சினையைச் சாதுரியமாகச் சமாளியுங்கள்!

வீட்டை விட்டு பெண்கள் வெளியே போக கூடாது என்ற குடும்பத்தின் எதிர்ப்பை, சாதுர்யமாக சமாளித்து, எச்.ஆர்., துறையில் சாதித்த, அனிதா
: என் அப்பாவின் வேலையில் மாற்றல் அதிகம் இருந்ததால், மும்பையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்தேன். பட்டப் படிப்பில் அதிக மதிப்பெண் பெற்றதால், கோல்கட்டா, ஐ.ஐ.எம்.,மில், எம்.பி.ஏ., சீட் கிடைத்தது. "கட்டிக் கொடுக்க போகும் பொண்ணுக்கு படிப்பு எதற்கு' என, என் படிப்பை நிறுத்த முயற்சித்தனர். வந்த வரை லாபம் என, மும்பையிலேயே, எம்.பி.ஏ., படித்தேன். பேச்சு போட்டியில் வென்ற பல கோப்பைகளை கூட, மற்றவர் பார்வையில் படும்படி வைக்க அனுமதிக்கவில்லை. "வாயாடி' என, நினைத்து, உன்னை பெண் பார்க்க வரமறுப்பர் என, காரணம் கூறினர். படிப்பு முடிந்ததும், என் திறமையை பார்த்து, மனித வள துறையில் பெரிய நிறுவனமான, ஏ.எப். பர்கூசனில் வேலை கிடைத்தது. "நீ தான் வசதியான குடும்பத்துல பிறந்தவளாச்சே... நீ சம்பாரிச்சு தான் சொத்து சேர்க்கணுமா? நல்லவங்க, கெட்டவங்க என, பல ஆண்கள் வேலை செய்வதால், தேவையற்ற பிரச்னை வரும்' என, பெண்களை வீட்டின் உள்ளேயே பூட்டி வைக்க, நம் சமுதாயம் அடிக்கடி சொல்லும் அறிவுரை இது தான்.
பெண்ணாக பிறந்தது முதல், இப்படி பல பிரச்னைகளை சந்தித்து வந்தாலும், யாரிடமும் சண்டை போடாமல், சாதுர்யமாக சம்மதிக்க வைத்தேன். இதனால் தானோ என்னவோ, கோடிகளில் புழங்கும் பெரிய நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையில், ஏதாவது பிரச்னை இருந்தால், சாதுர்யமாக சமாதானப்படுத்தி, பிரச்னையை தீர்க்கும், "ரிவார்ட் மேனேஜ்மென்ட்' என்ற கடினமான வேலையை கூட, திறம்பட செய்ய முடிந்தது. எச்.ஆர்., துறையின் நுணுக்கங்களை அறிந்து, படிப்படியாக முன்னேறியதால், "செரிபிரஸ் கன்சல்டன்ட்' என்ற, எச்.ஆர்., நிறுவனத்தை நானே ஆரம்பித்தேன். பெரிய நிறுவனங்களின் பிரச்னையை சாதுர்யமாக தீர்த்து வைப்பதால், இன்று, மனிதவள மேம்பாட்டு துறையில், இந்தியாவின் மிக முக்கிய முகமாக கவனிக்கப்படுகிறேன்.

Behind China’s Hindu temples, a forgotten history

Behind China’s Hindu temples, a forgotten history

Ananth Krishnan
Share  ·   Comment (25)   ·   print   ·   T+  
  • A panel of inscriptions of the God Narasimha adorns the entrance to the main shrine of the temple, believed to have been installed by Tamil traders who lived in Quanzhou in the 13th century. Photo: Ananth Krishnan
    The Hindu A panel of inscriptions of the God Narasimha adorns the entrance to the main shrine of the temple, believed to have been installed by Tamil traders who lived in Quanzhou in the 13th century. Photo: Ananth Krishnan 
    For the residents of Chedian, a few thousand-year-old village of muddy by-lanes and old stone courtyard houses, she is just another form of Guanyin, the female Bodhisattva who is venerated in many parts of China.
    Click here for video
    But the goddess that the residents of this village pray to every morning, as they light incense sticks and chant prayers, is quite unlike any deity one might find elsewhere in China. Sitting cross-legged, the four-armed goddess smiles benignly, flanked by two attendants, with an apparently vanquished demon lying at her feet.
    Local scholars are still unsure about her identity, but what they do know is that this shrine’s unique roots lie not in China, but in far away south India. The deity, they say, was either brought to Quanzhou — a thriving port city that was at the centre of the region’s maritime commerce a few centuries ago — by Tamil traders who worked here some 800 years ago, or perhaps more likely, crafted by local sculptors at their behest.
    “This is possibly the only temple in China where we are still praying to a Hindu God,” says Li San Long, a Chedian resident, with a smile.
    “Even though most of the villagers still think she is Guanyin!” Mr. Li said the village temple collapsed some 500 years ago, but villagers dug through the rubble, saved the deity and rebuilt the temple, believing that the goddess brought them good fortune — a belief that some, at least, still adhere to.
    The Chedian shrine is just one of what historians believe may have been a network of more than a dozen Hindu temples or shrines, including two grand big temples, built in Quanzhou and surrounding villages by a community of Tamil traders who lived here during the Song (960-1279) and Yuan (1279-1368) dynasties.
    At the time, this port city was among the busiest in the world and was a thriving centre of regional maritime commerce.
    The history of Quanzhou’s temples and Tamil links was largely forgotten until the 1930s, when dozens of stones showing perfectly rendered images of the god Narasimha — the man-lion avatar of Vishnu — were unearthed by a Quanzhou archaeologist called Wu Wenliang. Elephant statues and images narrating mythological stories related to Vishnu and Shiva were also found, bearing a style and pattern that was almost identical to what was evident in the temples of Tamil Nadu and Andhra Pradesh from a similar period.
    Wu’s discoveries received little attention at the time as his country was slowly emerging from the turmoil of the Japanese occupation, the Second World War and the civil war. It took more than a decade after the Communists came to power in 1949 for the stones and statues to even be placed in a museum, known today as the Quanzhou Maritime Museum.
    “It is difficult to say how many temples there were, and how many were destroyed or fell to ruin,” the museum’s vice curator Wang Liming told The Hindu. “But we have found them spread across so many different sites that we are very possibly talking about many temples that were built across Quanzhou.”
    Today, most of the sculptures and statues are on display in the museum, which also showcases a map that leaves little doubt about the remarkable spread of the discoveries. The sites stretch across more than a dozen locations located all over the city and in the surrounding county. The most recent discoveries were made in the 1980s, and it is possible, says Ms. Wang, that there are old sites yet to be discovered.
    The Maritime Museum has now opened a special exhibit showcasing Quanzhou’s south Indian links. Ms. Wang says there is a renewed interest — and financial backing — from the local government to do more to showcase what she describes as the city’s “1000-year-old history with south India,” which has been largely forgotten, not only in China but also in India.
    “There is still a lot we don't know about this period,” she says, “so if we can get any help from Indian scholars, we would really welcome it as this is something we need to study together. Most of the stones come from the 13th century Yuan Dynasty, which developed close trade links with the kingdoms of southern India. We believe that the designs were brought by the traders, but the work was probably done by Chinese workers.”
    Ms. Wang says the earliest record of an Indian residing in Quanzhou dates back to the 6th century. An inscription found on the Yanfu temple from the Song Dynasty describes how the monk Gunaratna, known in China as Liang Putong, translated sutras from Sanskrit. Trade particularly flourished in the 13th century Yuan Dynasty. In 1271, a visiting Italian merchant recorded that the Indian traders “were recognised easily.”
    “These rich Indian men and women mainly live on vegetables, milk and rice,” he wrote, unlike the Chinese “who eat meat and fish.” The most striking legacy of this period of history is still on public display in a hidden corner of the 7th century Kaiyuan Buddhist Temple, which is today Quanzhou’s biggest temple and is located in the centre of the old town. A popular attraction for Chinese Buddhists, the temple receives a few thousand visitors every day. In a corner behind the temple, there are at least half a dozen pillars displaying an extraordinary variety of inscriptions from Hindu mythology. A panel of inscriptions depicting the god Narasimha also adorns the steps leading up to the main shrine, which houses a Buddha statue. Huang Yishan, a temple caretaker whose family has, for generations, owned the land on which the temple was built, says the inscriptions are perhaps the most unique part of the temple, although he laments that most of his compatriots are unaware of this chapter of history. On a recent afternoon, as a stream of visitors walked up the steps to offer incense sticks as they prayed to Buddha, none spared a glance at the panel of inscriptions. Other indicators from Quanzhou’s rich but forgotten past lie scattered through what is now a modern and bustling industrial city, albeit a town that today lies in the shadow of the provincial capital Xiamen and the more prosperous port city of Guangzhou to the far south.
    A few kilometres from the Kaiyuan temple stands a striking several metre-high Shiva lingam in the centre of the popular Bamboo Stone Park. To the city’s residents, however, the lingam is merely known as a rather unusually shaped “bamboo stone,” another symbol of history that still stays hidden in plain sight.

இயற்கை குடிகொண்டுள்ள இனிய கருவூலம் குற்றாலம்

இயற்கை குடிகொண்டுள்ள இனிய கருவூலம் குற்றாலம்
குற்றாலம்.

தமிழகத்திற்கு இயற்கை தந்துள்ள இணையில்லா நன்கொடை.
ரியல் எஸ்டேட்காரர்களின் பிடியில் சிக்கி அதிகம் சீரழியாத தண்ணீர் தேசம்.
நெல்லை மாவட்டம் தென்காசி வட்டத்தில் தமிழகத்தின் எல்லையாக இருக்கும், அகத்தியர் வாசம் செய்த பொதிகை மலையில் பிறப்பெடுத்து வரும் ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, செண்பகா அருவி, புலியருவி என்று பல்வேறு அருவிகளைக் கொண்டுள்ள அற்புதமான இடம்.
ஏழை,எளிய மக்களுக்கு இறையும், இயற்கையும் கொடுத்த வரப்பிரசாதம்.
அதிகம் செலவில்லாமல் குடும்பத்துடன் குதூகலிப்பதற்கு ஏற்ற ஒப்பற்ற தலம்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம்தான், சீசன் துவங்கியது முதல் எல்லா அருவிகளிலும் தண்ணீர் வற்றாது கொட்டிவருகிறது. இங்குள்ள மலைகளுக்குள் பெய்யும் மழையானது மூலிகை செடிகளின் வழியாக அருவியாக விழுவதால் எவ்வளவு நேரம் குளித்தாலும் அலுக்காது.
தீம் பார்க்குளில் தேக்கிவைக்கப்பட்ட தண்ணீரை மோட்டார் மூலம் சிறிது உயரத்திற்கு எடுத்துச் சென்று செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவியாக விடுவார்கள், பத்து நிமிடம் குளிப்பதற்கு நிறைய கட்டணம் உண்டு தவிர நிறைய மின்சார சக்தியும் செலவிட வேண்டும், பலர் குளித்த தண்ணீரேயே திரும்ப, திரும்ப குளிக்கவேண்டிய சுகாதார கேடான சூழ்நிலையும் கூட.
ஆனால் சுத்தமான, சுகாதாரமான அற்புதமான இந்த மூலிகை தண்ணீரில் குளிக்க எந்த கட்டணமும் கிடையாது, இதற்கு இணையாக செயற்கையாக எந்த அருவியும் உருவாக்க முடியாது, இது போல இனி உருவாக்க நினைத்து கூட பார்க்கமுடியாது.
இப்படிப்பட்ட புனிதமான அருவி தண்ணீரை போற்றி வணங்காவிட்டாலும் பரவாயில்லை குடித்துவிட்டு அருவிக்கு குளிக்கவராதீர்கள், தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று சொல்லியுள்ளனர், அந்த அளவிற்கு தாயினும் மேலான அருவியை தெய்வமாக வணங்கும் நிலையில் அருவிக்கு வாருங்கள் என்பதுதான் வேண்டுகோள்.
அதே போல இந்த அருவி தண்ணீர்தான் பல கிராமங்களின் விவசாயத்திற்கும், குடிநீர் உபயோகத்திற்கும் செல்கிறது, ஆகவே ஷாம்பு, சோப்பு போட்டு குளிக்க வேண்டாம். ஷாம்புவின் ரசாயனத்தன்மை நச்சுத்தன்மையாக மாறி குடிநீரைக் கெடுத்துவிடும் என்கிறார்கள். யாரும் கேட்பதாக இல்லை, தயவு செய்து கேளுங்கள்.
இதுவரை குற்றாலம் போகாதவர்கள் இந்த சீசனுக்கு போய் அருவிகளில் குளித்து பாருங்கள் ஆனந்தம், மகிழ்ச்சி, ஜாலி, உவகை என்ற எல்லா வார்த்தைக்கும் ஒரே அர்த்தம் குற்றாலம் என்பது தெரியவரும்.
குற்றாலம் தொடர்பான படங்களை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்யவும்.

எல்.முருகராசு,