மன உறுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன உறுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஜூலை, 2013

மன உறுதிக்குப் பெயர் பெற்ற மலாலா

மன உறுதிக்கு ப் பெயர் பெற்ற மலாலா

மலாலா யூசுப்சாய், 16 வயது பாகிசுத்தான் சிறுமி; மன உறுதியின் மறுபக்கம்.பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில், பஷ்டூன் பழங்குடியின மக்கள் நிறைந்த பகுதியில், குஷால் பப்ளிக் பள்ளி என்ற பெயரில், கல்வி நிறுவனங்களை நடத்தி வரும், ஜியாயுதீன் யூசுப்ஜாய் மகள் இவர்.

அப்பகுதியில் அதிகாரம் செலுத்தி வரும் தலிபான்களுக்கு எதிராக, 11 வயது முதல், குரல் கொடுத்து வரும் மலாலா, பி.பி.சி., "டிவி'யின், உருது மொழி பிரிவில் பல கட்டுரைகள் எழுதியவர்.மலாலாவுடன் பிறந்தவர்கள், இரண்டு சகோதரர்கள். இவர்களின் தந்தை ஜியாயுதீன் யூசுப்ஜாய், தன் மகன்களைப் போலவே, மகள் மலாலாவையும் தைரியமாக வளர்த்தார். இரவில் நெடுநேரத்திற்குப் பிறகும் வெளியே நடமாட விடுவது, பள்ளிக்குத் தைரியமாக அனுப்புவது, பொதுக் கூட்டங்களில் பேசச் செய்வது என, தலிபான்களுக்குப் பிடித்தம் இல்லாத பல செயல்களில் மலாலாவை ஈடுபடுத்தினார்.மலாலாவுக்கு, டாக்டர் ஆக வேண்டும் என்ற விருப்பம். ஆனால், அவரின் தந்தைக்கு, மலாலாவை, அரசியல்வாதியாக மாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது.

பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில், பெண்கள் படிக்கக் கூடாது; பொது இடங்களுக்குத் தனியாகச் செல்லக் கூடாது; பிற ஆண்களுடன் பேசக் கூடாது என, கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள தலிபான்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால், 13 வயதில், தலிபான்களால் சுடப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில், லண்டன் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று, பூரண உடல் நலம் பெற்றார் மலாலா.

சமீபத்தில், இவரின், 16வது பிறந்த நாளின் போது, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது, இவரின் பிறந்த நாளை, "மலாலா நாள்' என, ஐக்கிய நாடுகள் சபை கவுரவித்து உள்ளது. ""துப்பாக்கி மூலம், என்னைக் கட்டுப்படுத்த முடியாது. துப்பாக்கிக் குண்டுகளை விட, கல்விக்குச் சக்தி அதிகம்,'' என்று வீராவேசமாக பேசினார்.""மலாலா நாள், என்னுடைய நாள் மட்டுமல்ல; இந்த உலகின் ஒவ்வொரு பெண்ணின் நாள்; உரிமைக்காகப் போராடும், ஆண், பெண் அனைவரின் நாள்,'' என, மலாலா ஆற்றிய உரை, உலகம் முழுவதும் ஒலித்தது.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

துரத்திய தோல்வி வென்ற மன உறுதி

சொல்கிறார்கள்

"துரத்திய தோல்வி  வென்ற மன உறுதி!'
"பேப்பர் கப்' தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தேவகி: பேராசிரியை வேலை தான், என் கனவு. அரசு வேலையில் உள்ள மாப்பிள்ளை என்ப தால், டிகிரி முடித்ததும், திருமணம் செய்து விட்டனர். கொஞ்ச நாளிலேயே, "சட்டி, பானை சுரண்டுவதிலேயே என் வாழ்க்கை கழியப் போகுதா... பணத்திற்கு கடைசி வரை, உங்க கையை தான் எதிர்பார்க்க வேண் டுமா?' என, கணவரிடம் ஆதங்கப்பட்டேன். என் எண்ணத்தை புரிந்து கொண்ட அவர், சுய தொழில் துவங்க ஆதரவளித்தார். ஐஸ் கிரீம் பார்லர் துவங்கினேன். கோடையில் ஓரளவு ஓட்டம் இருக்கும்; பின், மந்தமாகி விடும். ஒரு கட்டத்தில் என் நிலைமை கணவருக்கு தெரிய வர, குத்திக் காட்டி பேசாமல், அனுசரணையாக இருந்தார். அப்போது, குடும்ப நண்பர் ஒருவர், என் பேச்சுத் திறமையைப் பார்த்து, "எல்.ஐ.சி., முகவராகலாமே' என, யோசனை கூறினார். ஏற்கனவே சந்தித்த தோல்வியால் நான் தயங்க, என் கணவர் பணம் கட்டி, என்னை தேர்வெழுத வைத்தார்; தேர்வில் பாஸ் ஆகிவிட்டேன். ஆரம்பத்தில் தடுமாறினாலும், ஐந்து ஆண்டில், மாதம், 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு, தேறி விட்டேன். அடுத்து புதிதாக ஏதாவது தொழில் செய்யலாம் என, யோசித்த போது, என் கணவர், பணம் தர மறுத்து விட்டார். மனம் சோர்ந்து போகாமல், "பேப்பர் கப்' தொழில் செய்ய முடி வெடுத்தேன். ஒரே ஆளாக, "பேப்பர் கப்' தொழில் செய்யலாம் என, புரிந்து கொண்டேன். வங்கியில் கடன் வாங்கி, ஏழு லட்சம் ரூபாய் முதலீட்டில், தொழில் துவங்கினேன். தொழில் துவங்கிய போது, கேரளாவில் இருந்து வந்த, ஆர்டருக்காக, 50 ஆயிரம் கப்களை தயாரித்து, டெலிவரிக்காக வைத்திருந்தேன். சில பிரச்னையால், பொருட்கள் தேக்கம் அடைய, சோர்ந்து போனேன். சில நாளில் அந்த பிரச்னை தீர்ந்து, தயாரித்த கப்கள் அனைத்தும் விற்பனையாகின; தொழிலும் வளர்ந்தது. இப்போது, பெரிய நிறுவனங்களை நானே தொடர்பு கொண்டு, என் தயாரிப்பு பற்றி சொல்கிறேன்; "ஆர்டர்' வாங்குகிறேன்.