குற்றாலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குற்றாலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

குற்றாலம் சிததிரக்கூடத்தில் பேசும் சித்திரங்கள்...

குற்றாலம் சித்திரசபையில் பேசும் சித்திரங்கள்...


























குற்றாலத்தின் மெயினருவி போவதற்கான வளைவைத் தாண்டி ஐந்தருவி போகும் வழியில், தேர் நிலைக்கு பக்கத்தில் வலது பக்கத்தில் எந்தவித விளம்பர பலகையும் இல்லாமல் காணப்படுவதுதான் சித்ரசபை.
இந்த இடம் வாகனங்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்படுவதால் வாகனங்கள் வந்து நின்றவுடன் "அவசரத்திற்கு' ஒதுங்கி இந்த சித்திரசபை கோவிலின் மதில் சுவரை கொஞ்சமும் மனசசாட்சி இல்லாமல் ஈரம் செய்பவர்கள், கொஞ்சம் ஈரமனதுடன் உள்ளே போய் என்னதான் இருக்கிறது என்று எட்டிப்பார்க்கலாம்.
இந்தியாவில் அமைந்துள்ள சிவாலயங்கள் ஐந்து திருச்சபைகளின் பெயரால் அழைக்கபடுகிறது.
சிதம்பரம் நடராசர் ஆலயம் "கனகசபை" என்றும்
திருவாலங்காடு சிவாலயம் "இரத்தினசபை" என்றும்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் "வெள்ளிசபை" என்றும்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் "தாமிரசபை" என்றும்
குற்றாலம் குற்றாலநாதர் கோவில் "சித்திரசபை" என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக கோவில்களில் விக்கிரஹ வழிபாடுதான் பிரதானமாக இருக்கும். ஆனால் சித்திர வடிவில் இறைவனை வழிபடுவது உலகிலேயே இங்கு மட்டும்தான். இங்கு இறைவன் ஓவியமாக காட்சியளிக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெற்றதாக திருப்பத்தூர் புராணம் கூறுகிறது.
சித்ரசபையில் நடராஜபெருமான் தேவியாருடன் எழுந்தருளியிருக்கிறார். மார்கழி மாதம் திருவாதிரை விழா இங்கு விமர்சையாக நடைபெறும். சபையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக் கண்டு பிரம்மதேவன் ஆதி சிவனின் சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசர் முதலியோர் இதனைச் சித்திரசபை என்று அழைத்ததாக புராணங்கள் கூறுகிறது.
சித்திர சபை, குற்றால நாதர் கோயிலுக்குப் அருகில் தனிக்கோயிலாக உள்ளது.
சபையின் உட்சுவற்றில் துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடற்புராண வரலாறுகள், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்தகோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகவான் ஆகியவை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. பல நூறு வருடங்களுக்கு முன் அழியாத மூலிகை வண்ணத்தில் வரையப்பட்ட இந்த சித்ரசபையின் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்திருப்பதால் இப்போது இன்னும் பொலிவு பெற்று விளங்குகிறது. இனிமேலாவது அந்தப்பக்கம் போனால் எட்டிப்பாருங்கள்.
- எல்.முருகராசு

திங்கள், 29 ஜூலை, 2013

சாரல் விழாவில் காய்கனி, பழக் கண்காட்சி



சாரல் விழாவில் முதல்முறையாகக் காய்கனி, பழக் கண்காட்சி



கண்காட்சியில் இடம்பெற்றுள்ள காய்கனிகளால் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில், டிராகன், காய்கனிகள்.















குற்றாலம் சாரல் திருவிழாவின் ஒரு பகுதியாக முதல்முறையாக காய்கனி, பழக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஐந்தருவி அருகே நடைபெற்ற இக்கண்காட்சி தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி தலைமை வகித்தார். வீட்டுவசதி வாரியத் தலைவர் ஆர்.முருகையாபாண்டியன் முன்னிலை வகித்தார். காய்கனி, பழக் கண்காட்சியை அமைச்சர் பூ.செந்தூர்பாண்டியன் திறந்துவைத்துப் பேசியதாவது: உதகை, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் மட்டுமே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நமது ஊரிலும் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியரின் முயற்சிக்கு பாராட்டுகள்.
சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து இந்தக் கண்காட்சியைக் கண்டு ரசிக்க வேண்டும். சுற்றுச்சூழல் பூங்காவையும் சுற்றிப் பார்த்து மகிழ வேண்டும் என்றார் அவர்.
மகேந்திரகிரி இஸ்ரோ திரவ இயக்க திட்ட மையம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தையும் அமைச்சர் திறந்துவைத்தார்.
இந்த அரங்கில் மாதிரி ராக்கெட்டுகள், செயற்கைக்கோள் மாதிரிகள், ராக்கெட்டுகள் ஏவப்படும் முறை குறித்து விளக்கப்பட்டது. கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதல்வர் எம்.ஏ.கே.பிள்ளை வாழ்த்திப் பேசினார்.
வேளாண் துறை இணை இயக்குநர் கி.சௌந்திரராஜன் வரவேற்றார்.
கண்காட்சியில் பல்வேறு காய்கனிகளால் டிராகன், மயில், முயல், பச்சோந்தி, கிங்காங், டைனோசர், பெங்குவின், பஞ்சவர்ணக் கிளிகள், முதலை, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட உருவங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.


ஞாயிறு, 21 ஜூலை, 2013

இயற்கை குடிகொண்டுள்ள இனிய கருவூலம் குற்றாலம்

இயற்கை குடிகொண்டுள்ள இனிய கருவூலம் குற்றாலம்
குற்றாலம்.

தமிழகத்திற்கு இயற்கை தந்துள்ள இணையில்லா நன்கொடை.
ரியல் எஸ்டேட்காரர்களின் பிடியில் சிக்கி அதிகம் சீரழியாத தண்ணீர் தேசம்.
நெல்லை மாவட்டம் தென்காசி வட்டத்தில் தமிழகத்தின் எல்லையாக இருக்கும், அகத்தியர் வாசம் செய்த பொதிகை மலையில் பிறப்பெடுத்து வரும் ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, செண்பகா அருவி, புலியருவி என்று பல்வேறு அருவிகளைக் கொண்டுள்ள அற்புதமான இடம்.
ஏழை,எளிய மக்களுக்கு இறையும், இயற்கையும் கொடுத்த வரப்பிரசாதம்.
அதிகம் செலவில்லாமல் குடும்பத்துடன் குதூகலிப்பதற்கு ஏற்ற ஒப்பற்ற தலம்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம்தான், சீசன் துவங்கியது முதல் எல்லா அருவிகளிலும் தண்ணீர் வற்றாது கொட்டிவருகிறது. இங்குள்ள மலைகளுக்குள் பெய்யும் மழையானது மூலிகை செடிகளின் வழியாக அருவியாக விழுவதால் எவ்வளவு நேரம் குளித்தாலும் அலுக்காது.
தீம் பார்க்குளில் தேக்கிவைக்கப்பட்ட தண்ணீரை மோட்டார் மூலம் சிறிது உயரத்திற்கு எடுத்துச் சென்று செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவியாக விடுவார்கள், பத்து நிமிடம் குளிப்பதற்கு நிறைய கட்டணம் உண்டு தவிர நிறைய மின்சார சக்தியும் செலவிட வேண்டும், பலர் குளித்த தண்ணீரேயே திரும்ப, திரும்ப குளிக்கவேண்டிய சுகாதார கேடான சூழ்நிலையும் கூட.
ஆனால் சுத்தமான, சுகாதாரமான அற்புதமான இந்த மூலிகை தண்ணீரில் குளிக்க எந்த கட்டணமும் கிடையாது, இதற்கு இணையாக செயற்கையாக எந்த அருவியும் உருவாக்க முடியாது, இது போல இனி உருவாக்க நினைத்து கூட பார்க்கமுடியாது.
இப்படிப்பட்ட புனிதமான அருவி தண்ணீரை போற்றி வணங்காவிட்டாலும் பரவாயில்லை குடித்துவிட்டு அருவிக்கு குளிக்கவராதீர்கள், தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று சொல்லியுள்ளனர், அந்த அளவிற்கு தாயினும் மேலான அருவியை தெய்வமாக வணங்கும் நிலையில் அருவிக்கு வாருங்கள் என்பதுதான் வேண்டுகோள்.
அதே போல இந்த அருவி தண்ணீர்தான் பல கிராமங்களின் விவசாயத்திற்கும், குடிநீர் உபயோகத்திற்கும் செல்கிறது, ஆகவே ஷாம்பு, சோப்பு போட்டு குளிக்க வேண்டாம். ஷாம்புவின் ரசாயனத்தன்மை நச்சுத்தன்மையாக மாறி குடிநீரைக் கெடுத்துவிடும் என்கிறார்கள். யாரும் கேட்பதாக இல்லை, தயவு செய்து கேளுங்கள்.
இதுவரை குற்றாலம் போகாதவர்கள் இந்த சீசனுக்கு போய் அருவிகளில் குளித்து பாருங்கள் ஆனந்தம், மகிழ்ச்சி, ஜாலி, உவகை என்ற எல்லா வார்த்தைக்கும் ஒரே அர்த்தம் குற்றாலம் என்பது தெரியவரும்.
குற்றாலம் தொடர்பான படங்களை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்யவும்.

எல்.முருகராசு, 









ஞாயிறு, 11 நவம்பர், 2012

குற்றாலத்தில் அருமையான சுற்றுச்சூழல் பூங்கா -எல்.முருகராசு

குற்றாலத்தில் அருமையான  சுற்றுச்சூழல் பூங்கா -எல்.முருகராசு

குற்றாலத்தில் ஐந்தருவிக்கு அருகே உள்ள பழத்தோட்டம்.
இங்குள்ள பழத்தோட்ட அருவிக்கு ஒரு காலத்தில் சிபாரிசு கடிதம் வாங்கிப்போய் குளித்தவர்கள் உண்டு. ஆனால் திடீரென ஒரு நாள் பழத்தோட்ட அருவி மூடப்பட்டது.

சில ஆண்டுகளாக மூடியே கிடந்த பழத்தோட்ட அருவி பகுதியில் என்னதான் நடக்கிறது என்பதை பற்றி யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில் திடீரென கடந்த மாத இறுதியில் குற்றாலம் பழத்தோட்ட பகுதியில் சுமார் ஆறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுழல் பூங்காவை முதல்வர் ஆன்லைனில் திறந்து வைத்தார் என்பதை பார்த்த உடனேயே மனதிற்குள் சந்தோஷம்.

குற்றால பிரியரான நான் உடனடியாக அங்கு ஆஜரானேன்.
பழத்தோட்ட அருவியினுள் உள்ள தோட்டக் கலைத்துறை அலுவலர் முத்துமாலை, இந்த சுற்றுச்சூழல் பூங்காவினை அங்குலம், அங்குலமாக நேசிக்கிறார் என்பது அவர் சுற்றிக் காட்டும்போதே தெரிந்தது.

அடர்ந்த காடாக கிடந்த அப்போதைய பழத்தோட்டம் அடியோடு மாறியுள்ளது. ஒவ்வொரு இடத்தையும் பார்த்து, பார்த்து உருவாக்கியுள்ளனர். சுமார் 40 ஏக்கரில் மூங்கில் தோட்டம், வண்ணத்துபூச்சி பூங்கா, நீருற்று, மலர்த்தோட்டம், சிறுவர் பூங்கா, இளைஞர்களுக்கான சாகச பூங்கா, அருவியின் ஒசையைக் கேட்டுக்கொண்டே நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட மரப்பலகை பாதை, கற்பாறை பூங்கா, பசுமை குடில், வியூ பாயின்ட் என்று ஓரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இயற்கை ஆர்வலர்கள் இந்த இடத்தை பார்த்தால் வெளியே வரவே மாட்டார்கள் அந்த அளவிற்கு இயற்கையின் அனைத்து விஷயங்களும் நிறைந்து கிடக்கிறது.

இவ்வளவு நாளும் குற்றாலத்தில் குளியலைவிட்டால் பொழுது போவதற்கு சரியான இடமில்லாமல் சுற்றுலா பயணிகள் தவித்து வந்ததனர், அவர்களது சுற்றுலா தாகத்தை இந்த சுற்றுச்சூழல் பூங்கா நிச்சயம் தீர்த்து வைக்கும். காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை வருடத்தில் 365 நாளும் விடுமுறையின்றி இந்த பூங்கா திறந்து இருக்கும்.
முக்கிய குறிப்பு: சுற்றுச்சூழல் பூங்கா பற்றிய படங்களை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரியை கிளிக் செய்யவும்.



புதன், 16 செப்டம்பர், 2009

குற்றாலம் மலையில் அழிந்து வரும்
அரியவகை மூலிகைகள்



தென்காசி, செப். 15: குற்றாலம் மலையில் பல்வேறு காரணங்களால் அரிய வகை மூலிகையினங்கள் அழிந்து வருகின்றன. தென்னகத்தின் ஸ்பா என்றழைக்கப்படும் குற்றாலத்தின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது அருவிகளில் எந்த நேரத்தில் குளித்தாலும் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்பதுதான். மாறாக, அருவிகளில் குளித்தவுடன், உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறும். மலைப் பகுதியில் கொட்டும் நீர், முன்னதாக பல்வேறு மூலிகைகள்மீது விழுகிறது. மேலும், பேரருவியில் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு வரை, அதிகாலையில் தினந்தோறும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குளிப்பதற்கு என நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. குற்றாலத்தில் இயங்கி வந்த மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான வைத்தியசாலைகளிருந்து நோயாளிகள் பேரருவியில் குளிக்க வைக்கப்பட்டனர். குற்றாலத்தில், குறிப்பாக பழைய குற்றாலம் மலைப் பகுதியிலிருந்து ஐந்தருவி பகுதி வரையிலும் மலைப் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளும், தாவர வகைகளும், இயற்கையான மருந்து செடிகளும் உள்ளன. அகத்தி, அத்தி, அரணை, அமிர்தவல்லி, அரிச்சந்திர பூண்டு, அரிவாள்மனைப் பூண்டு, அழகுகண்ணி, ஆடாதொடை, ஆடுதின்னாப்பாளை, இடம்புரி, இண்டு, இலந்தை, இலவங்கபட்டை, இறங்கழுஞ்சி, எட்டி, உடம்புளி, கரிசலாங்கண்ணி, கருந்துளசி, கருநீலி, கருநொச்சி, கல்தாமரை, கல்துளசி, நன்னாரி, நரி வெங்காயம், நாகலிங்கம், நாகவல்லி, செம்பை, செந்நாவல், சிறு அகத்தி, சிந்திக்கொடி, குப்பைமேனி, கொடிவலி, சங்குபுஷ்பம், சதுரக்கள்ளி, சரக்கொன்றை, சாம்பிராணியிலை, கூதிர்ப்பச்சை, குழிதாமரை, மருதம், மரமஞ்சள், மருதோன்றி, மான்செவிக்கள்ளி, மூக்கிரட்டை, பொன்ஊமத்தை, நிலப்பனை, பெரியாநங்கை, பேய்துளசி என்பது உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மலைப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளாலும், தினந்தோறும் நூற்றுக்கணக்கான கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதாலும், மரங்களை வெட்டுவதாலும், காலம் தவறிய மழையின் காரணமாகவும் மூலிகையினங்கள் அழிந்து வருகின்றன. ஒருமுறை தீ விபத்து ஏற்பட்டால் அந்த தீ சில சதுர கிலோ மீட்டர் தொலைவு வரையிலும் பரவுகிறது. இதை அணைப்பதற்கு குறைந்தபட்சம் ஒருநாள் முதல் இரண்டுநாள் வரை ஆகிறது. தீ விபத்தில் பாதிக்கப்படும் மூலிகையினங்கள் மீண்டும் வளருவதில்லை. இதுகுறித்து, குற்றாலத்தில் 50 ஆண்டுகளாக மனநல மருத்துவமனை நடத்திவரும் சித்த மருத்துவர் டாக்டர் அ.வீரமணி கூறியதாவது: குற்றாலம் மலைப் பகுதியில் முன்பிருந்த மூலிகையினங்களில் அரிய வகையினங்கள் 25 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவை தற்போது அழிந்துவிட்டன. ஒருகாலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்குவந்து மூலிகைச் செடிகளை பறித்துச் சென்றனர். ஆனால், தற்போது இந்தநிலை மாறிவிட்டது. பல்வேறு காரணங்களால் இங்கிருந்த மூலிகைகள் அழிந்துவிட்டன என்றார் அவர். எனவே, தமிழக அரசும், மத்திய அரசும் மூலிகைகளைப் பாதுகாக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. குற்றாலம் மலையில் எஞ்சியிருக்கும் மூலிகைகளை பாதுகாக்க வனத் துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்கள்

Adei Sambanthan..., moolikainaa ennaanu theriumaa...unakku...., Iduppa Pathi sonna ehtayo sollura...., thamilan thamilan thaan..., avan eppothum thannai paathukaathu kolvaan...., unnai pol aatkal iruppthanaal thaan... ulakil in sandai varukirathu.... atharkaaka thamilanai sollavillai... muthalil irandu thamilanai otrumayaaka irukka sol....oru varudathirkku...., irukka maattaan... sathi... sontham.. entru pala konanklail pirinthu kitakkiraan...., thamil athu oru aala maram, athil irukkum paravaikal thaan naam...., thamilai yaarum valarkka villai, thevayum illai... thamil peyarai solli.... pirar thaan vaalkiraarkal.... Tamil Vaalka, Tamilan Vaalka...

By PR. Jayabal
9/16/2009 3:19:00 PM

அழிந்து வரும் மூலிகை மாதிரி, உலகத்தில் அழிந்து வரும் இனம் ஒன்று உண்டு அது தான் தமிழ் இனம். இத பத்தி பேசாம செடி, அது இதுனு மூலிகை பத்தி பேசுறிங்க, இதுக்குதான் அப்பவே சொன்னாங்க, ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசிதானம். தமிழின விரோதிகள் தான் இப்படி எதையாவது பேசி நாட்டுல நடக்குற முக்கியமான விசயத்த மூடி மறைகிரானுக.

By sambanthan
9/16/2009 2:46:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *