interview லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
interview லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஜூலை, 2013

Wigneswaran should not weaken diaspora and Tamil Nadu

Wigneswaran should not weaken diaspora and Tamil Nadu

[TamilNet, Sunday, 21 July 2013, 17:15 GMT]
Hindustan Times carrying out an interview of CV Wigneswaran on Friday highlighted his statement against Tamil Nadu polity in the title. The highlight shows the priority in New Delhi’s polity and media in diffusing and detracting the uprising in Tamil Nadu for the independence of Eezham Tamils that is denied primarily by New Delhi and Washington. Hindustan Times just follows The Hindu, The Times of India and The New Indian Express in this regard. The gang up of Indian’s mainstream media behind the agenda of the genocidal partners has to be vigilantly perused by the peoples’ polity in Tamil Nadu as it is a re-enactment of the times that led to the Mu’l’livaaykkal genocide, commented Tamil activists for alternative politics in the island.
C.V. Wigneswaran
Former SC Judge CV Wigneswaran [Photo courtesy: Daily Mirror]
Justice C V Wigneswaran, TNA’s chief minister candidate in the Northern Provincial Council election under the unitary constitution of genocidal Sri Lanka, told Hindustan Times at the end of his interview: “It is natural for friends in Tamil Nadu to show emotions but the Sri Lankan issue is being used there for political gains. To them, I will only say this: You are welcome to give us any other kind of support but please allow us to work out our own solutions to our own problems within a united Sri Lanka.”

Is it worse than the bureaucracy-intelligence-run New Delhi Establishment using the Eezham Tamil issue for its military and corporate gains by partnering genocide, by upholding the genocidal unity of the Sinhala State and by denying liberation for the nation of Eezham Tamils in the island, asked the Tamil activists in the island. In the same spirit, why can’t the Tamils tell New Delhi that is propping up the ‘unity’ of the Sinhala State to allow us to work out our own solutions to our own problems by finding independence? There was always the probability that had New Delhi stood aside, we could have by now found the solutions, the activists said.

Justice Wigneswaran is not justified in making such a statement only against Tamil Nadu polity that too by taking an extra-mandate liberty in being partial to “united Sri Lanka.” Tomorrow if he is elected as the CM, he would say people have ‘mandated’ for ‘united Sri Lanka’. He continues with the treacherous blunder the TNA was forced to commit in the previous elections by the powers behind, the activists in the island observed, adding that keeping Tamil Nadu and the diaspora quiet is now the task of the forces that had ganged up for the genocide and are now engineering for the structural completion of it.

* * *

Further comments from the Tamils for alternative politics in the island: “When a wife is beaten up by a husband, it is not an internal affair. Neighbours have a duty to intervene […] it is natural to then turn to our next-door neighbour,” Wigneswaran said in the interview answering a question why the TNA seeks international opinion to an internal matter.

First of all Justice Wigneswaran contradicted his own logic in telling Tamil Nadu to allow Tamils in the island to resolve their problems by themselves.

If the justice’s perception of the next-door neighbour is not people but State, and if it is New Delhi, what to do if that next-door neighbour, with a sinister desire on the wife, is worse than the husband? One has to naturally expect the next-door neighbour’s wife, who is also equally suffering from injustice, to take care of it. That’s what Tamil Nadu is doing.

Justice Wigneswaran who was telling that he feels “like a person who has jilted his lover and is getting married to the person his parents found for him," explained the phrase “parents” to Hindustan Times as friends, fellow lawyers, judges and his students.”

But political observers say that the ‘parents’ are Washington and New Delhi, and the greedy couple wants the independence and sovereignty of the nation of Eezham Tamils as dowry to be extracted by their ‘son’ for passing it to their pet daughter in Colombo.

There are many Eezham Tamils who silently appreciate the noble candidature of Justice Wigneswaran the TNA was able to come out with, even though it should have done so after rejecting outright the treachery of Washington and New Delhi for telling to try the PC model of the unitary constitution, after all what had happened and what is happening.

But Wigneswaran with his connections with the Colombo Establishment cannot turn into another ‘Laxman Kadirgamar.

If he could achieve anything by playing the agenda of the genocidal culprits, let him try and prove it. If he is destined to become the CM of the hollow PC, he could be so even if people boycott voting. When it is the USA and India that want the Sinhala military to occupy the country of Eezham Tamils and to carryout demographic and development ‘solutions,’ let him deceive himself in sending the military out without deploying counter geopolitical strength in the form of mass uprising in Tamil Nadu and in the diaspora, or let him deceive Tamils by talking on phased withdrawal of the military, keeping it in the barracks etc. But he should refrain from weakening Tamil Nadu and the diaspora calling for the independence of Eezham Tamils.

Justice Wigneswaran should not take up the task of proving to the world that a set of international criminals could commit any extent of crime and escape scot-free without delivering due justice, by hoodwink and engineering of victims, so that it will be a paradigm for future human civilisation, cautioned the Tamil activists for alternative politics in the island.

Related Articles:
19.07.13   Habitual detraction of due justice to Eezham Tamils continue..
28.04.13   Justice Wigneswaran delivers ITAK’s Chelva Memorial Lecture

செவ்வாய், 1 ஜனவரி, 2013

தமிழர்க்கு விருது தமிழில் அல்ல..!



தமிழர்க்கு விருது தமிழில் அல்ல..!
தில்லியில் அரங்கேறிய அவலம்
-  ஆரா

  தேசிய வளர்ச்சி சபைக் கூட்டத்தில் தாமும் தமிழ்நாடும் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி வெளிநடப்பு செய்திருக்கிறார் தமிழக முதல்வர் செயலலிதா. இப்படித் தமிழ் நாட்டை அவமதித்த மத்திய அரசு, சில நாட்களுக்கு முன் தமிழையும் அவமானப்படுத்தியது.
  அது குடியரசுத் தலைவர் மாளிகையில்.
 உலகின் மூத்த மொழி என்றும் மொழிகளுக்கெல்லாம்  தாய் என்றும் உயர்தனிச் செம்மொழி என்றும் போற்றப்படுவது தமிழ் மொழி.  செம்மொழித் தமிழின் இளம் அறிஞர்களுக்கான விருதுகள் திசம்பர் 21-ஆம் நாள் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்சியால்  அவரது மாளிகையில் வழங்கப்பட்டது.
  விருது வழங்குவது தமிழ் அறிஞர்களைப் போற்றுவதற்காக! விழா நடந்ததோ தமிழுக்கு அயலான இந்தி மொழியில்!  விருதுவாங்கும்  தமிழறிஞர்களுக்குத் தங்களைப்பற்றி என்ன கூறுகிறார்கள்? என்னவாறு பாராட்டி விருது வழங்குகிறார்கள்?  என்றெல்லாம் தெரியாது. விருது உரை, அழைப்புரை, தொகுப்புரை, என எல்லாமே இந்தி! இந்தி! இந்திதான்! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலர்கள் தமிழில் அறிவிக்க வேண்டியும், ஆங்கிலத்திலாவது அறிவிக்க மன்றாடியும்  புறக்கணித்து இந்தியில்மட்டும்தான் எல்லாம் எனத் தமிழறிஞர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்று முடிந்துள்ளது.
  இதுபற்றித் தமிழர்கள் மத்தியில் கோபமும் குமுறலும் நிலவிவந்த நிலையில் நாம் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவனிடம் பேசினோம்.

  மத்திய அரசிற்கு  மக்கள் நலம் சார்ந்த கொள்கைகளில் உறுதிப்பாடு  இல்லை.  ஆனால்,  இந்தித்திணிப்பில் விடாப்பிடியான உறுதிப்பாடு  உள்ளது.  மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் மத்திய அரசின் இந்தித் திணிப்பு என்பது திட்டமிட்டுச் சீராக நடைபெற்றுக் கொண்டு பிற தேசிய மொழிகளை அழித்து வருகின்றது. இத்தகைய பிற மொழித் தேசிய இன அழிப்பு வேலையின் அரங்கேற்றக் காட்சிதான் அண்மையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
 முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி தம் கெழுதகை நண்பர் எனப் போற்றி குடியரசுத் தலைவராக முதன்முதலில் ஆதரவு கொடுத்தாரே அந்தப் பிரணாப் முகர்சி பணியேற்றதும்  பணியேற்றதும் இனி எல்லாம்  இந்தியில்மட்டும்தான் நடக்க வேண்டும் எனக் கட்டளையிட்டு விட்டாராம்! எனவேதான், தமிழ் விழாவிலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாம்! இந்தியிலும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பின் ஏற்றிருக்கலாம்.  ஆனால், இந்தியில்மட்டும்தான் எல்லாம் என்பதும் தமிழ் முதலான பிற தேசிய மொழிகள் புறக்கணிக்கப்படுவதும் ஆணவப்போக்கா? அலட்சியப்போக்கா? மமதைப்போக்கா?  பிரிவினைக்கு  வழிவிடும் அஞ்சத்தக்கப் போக்கா?

ஆரவார முழக்கங்களில்  மகிழ்ச்சி காணும் தமிழர்கள் எதிர்க்கமாட்டார்கள் என்ற எண்ணமா?  எதிர்ப்பு வந்தாலும உடனே  அடங்கிவிடும் என்ற அஞ்சாமையா?

ஏக இந்தியா என்று எந்தமிழை மாய்க்க வந்தால்
சாக இந்தியா என்றுசாற்றிடுவோம்
என்ற பாவேந்தரின் பாடலைக்கூறி உணர்ச்சியூட்டிய  முத்தமிழறிஞர் கலைஞரின் நண்பரின்  செயல்பாட்டால்தான் தமிழுக்கு மேடைவாய்ப்பு மறுப்பும்  இந்திக்கு மேடையேற்றமும் நடந்தேறியிருக்கிறது. அவர்,  தம் நண்பரிடம் கூறி உடனே இப்போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழினப் படுகொலையின்பொழுது வாய்மூடி அமைதியாக இருந்ததன் தவற்றை உணர்ந்தவர்கள் சீறி எழ வேண்டிய நேரம் இது என்று கொதித்தவர் கோபத்தோடு தொடர்ந்தார்.
  இங்கே மற்றோர் அவலத்தையும் குறிப்பிட வேண்டி உள்ளது. இளம் அறிஞர்கள் ஐவருக்கு விருதுகள் வழங்க வேண்டும். ஆனால், நால்வருக்கு மட்டும்தான்  வழங்கப்பட்டன. ஏன்?  நால்வர் மட்டும்தான் தகுதி வாய்ந்தவர்களாம். எட்டுக்கோடியை எட்டிப்பிடிக்கும் தமிழக மக்கள் தொகையில் இளம் தமிழறிஞர் யாருமில்லை என்பது  நமக்கும் இழிவு! தமிழுக்கும் இழிவு! இவ்வாறு சொன்னவர் யார்?  எப்பொழுது?
   தமிழாய்ந்த தமிழறிஞர் முதல்வர் என்ற முறையில் செம்மொழி நிறுவனத்தின் தலைவராக இருந்தபொழுது நால்வர் மட்டுமே தகுதியானவர் என்று நால்வரை மட்டுமே பரிந்துரைத்ததால்தான் இந்த நிலை. ஒரு வகையில் தகுதியில்லாதவருக்கு விருது வழங்கப்படக்கூடாது என்ற இந்த   எண்ணம் பாராட்டிற்குரியது.  ஆனால்,  என்ன செய்திருக்க வேண்டும்? விருதுபற்றிப் பரவலாக விளம்பரப்படுத்தி இருக்க வேண்டாவா? அவ்வாறு செய்யாமல் விருதுக்குரிய இளந்தமிழறிஞர்கள் இல்லை என அறிவிப்பது  மானக்கேடல்லவா?
  இளம்அறிஞர் விருதுகள்  நால்வருக்கேனும் வழங்கப்பட்டன. ஆனால்,  வாழ்நாள் முழுமைக்குமான  ஆண்டுதோறும் உருபாய் 50,000  வழங்கப்பெறும் மூத்த அறிஞர்களுக்கான விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. நம்மை விட்டால் தமிழறிஞர் யாருமில்லை என ஒவ்வொருவரும் எண்ணினால் தமிழறிஞர்களைப் போற்றுவது எங்ஙனம்? தமிழை வாழ வைப்பது எங்ஙனம்?
  ஆண்டுதோறும் 15 சமசுகிருத அறிஞர்களுக்கும் அரபி, பெர்சியன், பாலி, பிராகிருத அறிஞர்களுக்கும் வழங்கப்பெறும் மூத்த  அறிஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படாமை தமிழுக்கான தலைக்குனிவன்றோ!  மூத்த தமிழறிஞர்களுக்கான செம்மொழி விருது வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டும் இதுவரை யாருக்கும் வழங்க எந்நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது நமக்கு இழப்பு மட்டும் அல்ல!  இழிவுமாகும்! 2004 ஆம் ஆண்டில் தமிழின் செம்மொழிச்சிறப்பை உணர்ந்து அறிந்தேற்பு வழங்கப்பட்டது.  எனவே,  அந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் 15 தமிழறிஞர்கள் மூத்த தமிழறிஞர்கள்  விருதுகள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதன் தலைவர் என்ற பொறுப்பு முதல்வருக்குத்தான் உள்ளது. அவரின் இன்றியமையாக் கடமைகளில் செம்மொழி நிறுவனத் தலைவருக்கான பணியை நிறைவேற்றுவதும் ஒன்று என்பதை அவரது அலுவலகத்தினர் உணர வேண்டும். எனவே, அனைத்து விவரங்களையும் அளித்து இச்செம்மொழி நிறுவனம் சிறப்பாகச் செயல்பட வகை செய்ய வேண்டும். தமிழறிஞர்களே இயக்குநராகவும் பிற பொறுப்பில் உள்ளவர்களாகவும் பிற குழுக்களில் உள்ளவர்களாகவும் அணி செய்யும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
  மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட  சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி மூலம் நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சர் பேச முடியாத நிலை ஏற்பட்டிருப்பது, மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. தமிழில் பேசும் உரிமையைப்பெற்றுத் தர வேண்டும் எனச் செப்டம்பர் 15, 200 அன்று வருந்திச் சீறிய இந்நாள் முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நாள் நண்பர்கள் மூலம் குடியரசுத்தலைவர் மாளிகையில் தமிழ்த்தாய் அவமானப்படுத்தப்பட்டிருப்பதற்கு வருத்தம் தெரிவிக்கச் செய்ய வேண்டும். தமிழ், தனக்குரிய இடத்தைப்பெற உறுதி பெற வேண்டும் என்று உணர்ச்சிக் கொந்தளிப்போடு  முடித்தார்.
நன்றி : தமிழக அரசியல் நாள் 02.01.2013 பக்கங்கள் 26-27


புதன், 21 நவம்பர், 2012

கருத்து வெளியிடடமைக்குக் கைது செய்தது முறையற்ற செயல் - Bal Thackeray post

தாக்கரே பற்றி கருத்து வெளியிட்டதற்காக மன்னிப்பு : ிணைில் வெளிவந்த பெண்கள் பேட்டி

மும்பை: "பால் தாக்கரே குறித்து, "பேஸ்புக்'கில், கருத்து வெளியிட்டதற்காக, மன்னிப்பு கோருகிறோம்; தாக்கரே, மிகச் சிறந்த மனிதர். ஆனால், கருத்து வெளியிட்ட குற்றத்திற்காக, எங்களை கைது செய்தது, நியாயமற்ற நடவடிக்கை' என, கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த, இரண்டு இளம் பெண்களும் கூறினர்.சிவசேனா தலைவர் பால் தாக்கரே, 17ம் தேதி, காலமானார். அடுத்த நாள், அவரது இறுதிச் சடங்குகள் நடந்தன. இதற்காக, மும்பை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து, மும்பையைச் சேர்ந்த, ரேணு, ஷகீன் தாதா என்ற, இரண்டு இளம் பெண்கள், சமூக வலைத் தளமான, "பேஸ்புக்'கில் கருத்து தெரிவித்திருந்தனர்.அதில், அவர்கள் கூறியிருந்ததாவது:
உலகில், தினமும், ஏராளமானோர் இறக்கின்றனர். அவர்களின் மறைவுக்காக, கடைகள் அடைக்கப்படுவது இல்லை. தாக்கரே மறைவுக்கு மட்டும், ஏன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.மரியாதை என்பது, தானாக கிடைக்க வேண்டும்; கட்டாயப்படுத்தி பெறக் கூடாது. தாக்கரே மீது உள்ள, மரியாதை காரணமாக, மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டதாக கூறுவது, தவறு; பயம் காரணமாகவே, கடைகளை அடைத்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்திருந்தனர்.இந்த விவகாரம், மகாராஷ்டிராவில், பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. சிவசேனா கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில், இரண்டு பெண்களையும், நேற்று முன்தினம், மும்பை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மீது, மக்களின் உணர்வுகளை புண்படுத்தியது உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும், அதிகபட்சமாக, மூன்று ஆண்டு வரை, சிறைத் தண்டனை கிடைக்கும்.கைதான இரண்டு பேரையும், 14 நாட்கள், காவலில் வைக்க உத்தரவிட்ட, மும்பை கோர்ட், பின், அவர்களுக்கு ஜாமின் அளித்தது. ஜாமினில் வெளிவந்தாலும், இரண்டு பேரும், இன்னும் பீதி விலகாத நிலையில் தான் உள்ளனர். முகத்தை முழுவதுமாக மூடிய நிலையில், இரண்டு பேரும், பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:தாக்கரே மறைவுக்காக, கடைகள் அடைக்கப்பட்டது குறித்து, நாங்கள் தெரிவித்த கருத்துக்களை வாபஸ் பெறுகிறோம். இதற்காக, மன்னிப்பு கோருகிறோம். தாக்கரே மிகச் சிறந்த தலைவர் தான்; இதில், எந்த சந்தேகமும் இல்லை.வலைத் தளத்தில் தெரிவித்த கருத்துக்காக; எங்களை கைது செய்தது, நியாயமற்ற நடவடிக்கை. மூன்று நாட்களாக, பெரும், மன உளைச்சலிலும், பீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஷாகீன் கூறுகையில், ""இனிமேல், "பேஸ்புக்'உள்ளிட்ட, சமூக வலைத் தளங்களின் பக்கமே, தலை வைத்து படுக்க மாட்டேன்,''என்றார். ரேணு கூறுகையில், ""பேஸ்புக்கில், இனிமேல் கருத்துக்களை தெரிவிக்கும்போது, பலமுறை யோசித்து தான், தெரிவிப்பேன்,''என்றார்.இந்த இரண்டு பெண்களில், ஒருவரின் உறவினர், மும்பையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையின் மீது, சில மர்ம நபர்கள், நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். அங்கு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, "சமூக வலைத் தளத்தில் தெரிவித்த கருத்துக்காக, பெண்களை கைது செய்தது சரியான நடவடிக்கை அல்ல' என, சமூக ஆர்வலர்கள் பலரும், கருத்து தெரிவித்து உள்ளனர்.

Bal Thackeray post: Shaheen Dhada, Renu Shrinivas 'rights hurt'


 
Shaheen Dhada
Eminent lawyer Abha Singh today filed a complaint before Maharashtra State Commission for Women, alleging human rights violation in the arrest of two girls who wrote comments on Facebook in regard to shutdown in the city for the funeral of Shiv Sena Chief Bal Thackeray.
Describing the arrest of Shaheen Dhada and Renu Shrinivas as gross violation of human rights, Singh, the wife of IPS officer-turned-lawyer Y P Singh, demanded that the State Women's Commission should visit the concerned police station, inspect the case diaries and inquire into the matter.
"The manner in which the girls were arrested clearly indicates that there has been gross violation of human rights as well as Supreme Court directives for affecting arrests," said Singh who lodged complaint with the Women's Commission in suburban Bandra.
Normally, in serious cases such as dacoity, murder, robbery and rape, an accused can be arrested if he is likely to abscond or evade the process of law or if he indulges in violent behaviour or is a habitual offender. "But none of these conditions are applicable to this case," she said.
According to Singh, the girls had not committed any offence at all and it appears that the police had acted under the pressure of local politicians.
"The liberty of the two girls was seriously breached just because they were invoking their fundamental rights guaranteed by article 19 of the Constitution," she said.
Singh alleged that the two girls were brought to the local police station at Palghar before sunrise without showing their arrests.
In keeping with section 46(4) of CrPc, a female accused can be arrested only after sunrise and not before. In this case, the rule was violated and they should not have been brought to the police station in the night, the lawyer said.
Singh further alleged that the girls were first booked under section 195 IPC (giving or procuring false evidence with intent to secure a conviction of an offence) and later this section was changed to 505 (2) IPC (statements creating or promoting enmity, hatred or ill-will between classes).
Singh also demanded dismissal of the police officers involved in registering this case.
She further said that she had lodged a complaint with the Women's Commission despite police ordering a probe as she was afraid that investigations would not be transparent and would never conclude.
Singh said if the State Commission for Women did not respond to her complaint then she would move an appropriate court seeking judicial intervention to get justice for the two girls.
In keeping with section 46(4) of CrPc, a female accused can be arrested only after sunrise and not before. In this case, the rule was violated and they should not have been brought to the police station in the night, the lawyer said.
Singh further alleged that the girls were first booked under section 195 IPC (giving or procuring false evidence with intent to secure a conviction of an offence) and later this section was changed to 505 (2) IPC (statements creating or promoting enmity, hatred or ill-will between classes).
Singh also demanded dismissal of the police officers involved in registering this case.
She further said that she had lodged a complaint with the Women's Commission despite police ordering a probe as she was afraid that investigations would not be transparent and would never conclude.
Singh said if the State Commission for Women did not respond to her complaint then she would move an appropriate court seeking judicial intervention to get justice for the two girls.

....

செவ்வாய், 1 மே, 2012

திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால்... பேராசிரியர் மா.நன்னன் அவர்களோடு ஒரு நேர்காணல்

 

திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால்...


திராவிட இயக்கம் தோன்றியதன் நூற்றாண்டு விழா தருணத்தில் இந்த இயக்கம் நிறைவான பணிகளைச் செய்ததாகக் கருதுகிறீர்களா?
திராவிட இயக்கம் நிறைவான பணிகளைச் செய்வதற்கு முயன்றிருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். இது ஒரு சமுதாய இயக்கம். அதனால் இது எப்போதுமே தனது கடமைகளைச் செய்து முடித்துவிட்டது என்ற முடிவு நிலையை அடைய இயலாது. அரசியல் கட்சிகள் போல இதன் இலக்கு எல்லைக்குட்பட்டதன்று! திராவிட இயக்கம் பல சமூக மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. அவற்றில் முதன்மையானது, திராவிடனை, அஃதாவது தமிழனை தன் உணர்வு பெறச் செய்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் மனிதனை மனிதனாக ஆக்க முயன்றிருக்கிறது. அதில் குறிப்பிடத்தகுந்த வெற்றியையும் பெற்றிருக்கிறது.
ஒரு வேளை இப்படி ஓர் இயக்கம் தோன்றியிராவிட்டால் என்னவாகி இருக்கும். இதுபற்றி நீங்கள் நினைத்ததுண்டா?
நினைத்ததுண்டு! அதற்குரிய விடைகளையும் கண்டதுண்டு. பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனத் தொடங்கிய, திராவிடர் இயக்கம் தோன்றியிராவிட்டால், நாமெல்லாம் கல்வி அறிவற்ற விலங்குகளைப் போலக்கூட வாழ்ந்திருக்க முடியாது. ஏனென்றால் விலங்குகளில் உயர்வு, தாழ்வு கிடையாது. மனித விலங்குக்கு மட்டுமே உயர்வு தாழ்வு உண்டாக்கப்பட்டிருந்தது. இந்த நாட்டுக்குரிய மக்களைக் கல்வி பெறத் தகுதியில்லாதவர் களாகவும், ஒருவனை ஒருத்தி மணந்து வாழத் தகுதியில்லாதவர்களாகவும், பார்ப்பனர்களுக்கு குற்@றவல் செய்வதற்கே பிறந்தவர்களாகவும் இருந்த அந்த பழைய நிலையானது வேரூன்றி, விழுதுவிட்டு, பல்கிப் படர்ந்து செழித்து வளர்ந்திருக்கும்.
திராவிட இயக்கம் இனி எப்படிச் செல்ல வேண்டும் என எண்ணுகிறீர்கள்?
திராவிட இயக்கம் தன்னுடைய இலக்கில் இருந்து சற்றே நகர்ந்ததும் உண்டு! விலகிச் சென்றதும் உண்டு! ஆனால் அவ்வப்போது தன்னைச் சரி செய்து கொண்டும் வந்துள்ளது. உதாரணமாக, பெரியார் காலத்திலேயே திராவிடர் இயக்கம் தன் பகுத்தறிவுப் பாதையில் இருந்து விலகிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதுண்டு. தேர்தலில் நீதிக்கட்சியை ஆதரிப்பது என்ற நிலையில் சில ஆண்டுகள் அது அரசியல் கட்சிபோலவே இயங்கியது. இதை உணர்ந்த பெரியார் மீண்டும் அதனைச் சரிசெய்து பகுத்தறிவுப் பாதைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்!
திராவிடர் இயக்கம் இந்தச் சமூகத்தை செப்பனிட அல்லது புதுமைப்படுத்த உண்டான இயக்கம். அதன் மாசு துடைத்து, ஒளி ஊட்டி, இக்காலத்துக்கும், எக்காலத்துக்கும் தக்கதாக ஆக்க வேண்டும். இதுதான் அதன் ஒரே பணி, தலையாய பணி. அரசியல் இன்றியமையாதது என்றாலும், பொருளியல் போன்றவற்றைப் புறக்கணிக்க முடியாது. இதற்கென்று ஒரு பிரிவாவது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் கருத்து. இக்கால அரசியல் போன்ற எந்தவிதமான பளபளப்பிலும் கண் கூசுதல் இல்லாமல் தன் பாதையைத் தெரிந்து நடக்க வேண்டும்.
திராவிட இயக்கத்தின் மையப்புள்ளியாக விளங்கிய வகுப்புவாரி அரசியல் பிரதிநிதித்துவம் நிறைவேறிவிட்டதாக நினைக்கிறீர்களா?
திராவிட இயக்கத்தின் மையப்புள்ளியாக விளங்கியதே வகுப்புவாரி அரசியல் பிரதிநிதித் துவம் என்பதல்ல. இது அதன் ஒரு கூறு மட்டுமே. திராவிட இயக்கத்தின் மையப்புள்ளியாக இருப்பது மனிதனை மனிதனாகக் கருத வைப்பதுதான். அதாவது தமிழனைத் தமிழனாக!
வகுப்புவாரி உரிமை என்பது பெருமளவு நிறைவேறிவிட்டது என்று சொல்லலாம். நம் இன எதிரிகள் அவர்களுக்கு வகுப்புவாரி உரிமை கேட்கும் நிலை வந்துவிட்டது. பெரியாரால் உருவாக் கப்பட்ட பெரியார் கல்வி நிறுவனங்களில் பார்ப்ப னர்களுக்கும் இடம் ஒதுக்கித் தருகிறார்கள். சமூக நீதியை விழைந்த இயக்கம். தங்கள் நிறுவனத்திலும் நேர்மையாக அவர்களுக்கும் சமூக நீதியை வழங்கும் பொருட்டு அங்கு இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்கிறார்கள்.
இட ஒதுக்கீடு குறித்து இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுவதில்லை?
பெரும்பாலும் அது நிறைவேறிவிட்டது. அதனால் பேசப்படுவதில்லை. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றுவிட்டனர். அமைச்சரவையில் கூட ஏதாவது ஓர் இடத்தைத்தான், 'அவர்கள்' பெறுகிறார்கள்! மற்ற இடங்களில் நாம்தான். இதில் அ.இ.அ.தி.மு.க.வை நான் திராவிட இயக்கமாகக் கருதுவதில்லை!
திராவிட இயக்கக் கோட்பாடுகளில் உங்களைக் கவர்ந்தது எது?
பகுத்தறிவு. இது ஓர் அறிவியல் இயக்கம். பகுத்தறிவு ஏற்பட்டுவிட்டால் சுயமரியாதை தானே வந்துவிடும். சுயமரியாதை வந்துவிட்டால் பகுத் தறிவு வருமா என்பது எனக்குத் தெரியவில்லை!?
மனித இனம் பகுத்தறிவுக்கு முதன்மை தர வேண்டும். பகுத்தறிவுக் கோட்பாட்டில் அடங்காதது என்பது எதுவுமே இல்லை. தவிரவும், பகுத்தறிவுக் கோட்பாட்டைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள இன்னொரு கோட்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
திராவிட இயக்கங்களைப் பற்றித் தமிழ்த் தேசியம் பேசுவோர் கூறும் கருத்துகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இன்றைய தமிழ்த்தேசியம் பேசுவோரின் கோட்பாடு என்பது திராவிட இயக்கக் கோட்பாடுகளில் அடங்காதது அன்று. தமிழ்த்தேசியத்தின் மறுபெயர்தான் திராவிட தேசியம். அல்லது திராவிட தேசியத்தின் மறுபெயர்தான் தமிழ்த்தேசியம் அல்லது இரண்டும் ஒன்றேதான்! பல்வேறு வகைப்பட்ட தனித்தனிக் காரணங்களுக்காக திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் கூட்டாக ஏற்படுத்திக் கொண்டுள்ள கோட்பாடுதான் தமிழ்த்தேசியம்.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், தி.மு.க. என்று யாராக இருந்தாலும் சரி. எல்லோரும் உழைத்தது, உழைப்பது தமிழர்களுக்கே. தமிழ் நிலத்துக்கே. எந்தத் தலைவர்களும் தனியே, தெலுங்கர்களுக்காக பனகல் அரசர், மலையாளிகளுக்காக டி.எம். நாயர் போன்றோர் இல்லை.
அப்போது இருந்த ஒரே நாடு சென்னை மாநிலம். அன்றிருந்த பார்ப்பனரல்லாதவர்களுக்கான, அனைவருக்குமான ஓர் இயக்கமாகத் தான் அது விளங்கியது. பின்னர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் இந்த உடன்பாட்டு உணர்வுக்குள் ஒத்துவராதபோது, தமிழ்நாடே திராவிட நாடு எனக் கூறப் பட்டது. விடுதலை ஏட்டில் தமிழ்நாடு தமிழருக்கே என்று போட்டார்கள். பின்னர் திராவிட நாடு தமிழருக்கே என்று கூறினர். திராவிட நாடு தமிழ்நாடு என்ற மூலக்கோட்பாட்டிலிருந்து பிறழவில்லை.
தமிழ் இலக்கணத்தில் சுசந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகிவிடாது. சந்தனக் கோல் சந்தனக்கோல்தான். அதுபோல் திராவிட நாடு தன் எல்லையில் குறுகநேர்ந்தாலும் தன் குணம் மாறாது!
இன்றைய அரசறிவியல் என்ற கல்வி அளவுகோலில் திராவிட இயக்கம் குறித்து ஒரு மதிப்பீட்டைக் கூறுங்களேன்?
திராவிட இயக்கம் தோன்றிய காலத்தில் இருந்து எத்தனையோ நிலநடுக்கங்கள்! புயல்கள்! காட்டுத் தீ போன்றவை ஏற்பட்டும் அது தன் இயல்பிலிருந்து முற்றிலும் அழிந்துவிடாமல் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறது.
திராவிட இயக்க எழுச்சியால்தான் இடதுசாரி சிந்தனைப் பெருக்கம் முடங்கியதாகக் கூறப்படுகிறதே?
திராவிட இயக்கத்தின் எழுச்சியால் இடதுசாரி சிந்தனை முடங்கி இருப்பதாகக் கூறுவதைவிட, இடதுசாரிகளின் முடங்கிப்போன சிந்தனை வெற்றிடத்தால்தான் திராவிட இயக்கம் வளர்ந்திருக்கிறது என்பதே உண்மை!
இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு முன்பெல்லாம் கூச்சப்பட்டனர். இன்று பகிரங்கமாக நெற்றிக்குறி, தேர் இழுப்பது என மாறியுள்ளதே?
இது திராவிட இயக்கத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள்! அது அக அழுக்கா, புற அழுக்கா என்று தெரியவில்லை!
நன்றி: ஆழம் மாத இதழ் ஏப்ரல் 2012