திங்கள், 26 செப்டம்பர், 2011

Obama Refused ot meet war criminal Rajapakshe: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, போர்க்குற்றவாளி இராசபக்சேவைச் சந்திக்க மறுப்பு!

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா போர்க்குற்றவாளி ராஜபக்சேவை  சந்திக்க மறுப்பு! 
அமெரிக்க அதிபரை பாராட்டுவோம்!
 
தற்போது அமெரிக்காவில் உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே மீது தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கில், அவருக்கு நியூயார்க் மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது .

விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த கர்னல் ரமேஷின் மனைவி வத்சலாதேவி நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில், போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளார் (வழக்கு எண்: 1:11-cv-06634-NRB).

இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் தன் கணவர் கர்னல் ரமேஷை படுகொலை செய்துவிட்டதாக, வத்சலாதேவியின் சார்பில் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 -ம் தேதி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

ரமேஷின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் இலங்கை ராணுவ தளபதிக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜபக்சேவுக்கும் இப்போது சம்மன் அனுப்ப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து அவர் அவசரமாக இலங்கை திரும்பும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்.

ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்க சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற ராஜபக்சேவுக்கு அங்குள்ள தமிழர் மற்றும் அவர்களுக்கு ஆதரவான இன மக்கள் பெரும் எதிர்ப்பு காட்டினர். இதனால் நியூயார்க்கை விட்டு எங்கும் செல்ல வேண்டாம் என ராஜபக்சேவுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டிருந்தது.

மேலும் அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா இந்த முறை ராஜபக்சேயை சந்திக்கவும் மறுத்துவிட்ட நிலையில், அவருக்கு போர்க்குற்ற வழக்கில் நீதிமன்ற சம்மன் அனுப்பப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 
ம.இளங்கோ,
புதுச்சேரி.

summon to Rajapakshe: இராசபட்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை

ராஜபட்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை

First Published : 26 Sep 2011 10:14:55 AM IST


நியுயார்க், செப்.26: தற்போது அமெரிக்காவில் உள்ள இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவுக்கு நியுயார்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது எனத் தெரிய வருகிறது.விடுதலைப்புலிகளின் தளபதியாக இருந்த ரமேஷின் மனைவி நியுயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிலேயே ராஜபட்சவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கர்னல் ரமேஷின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 -ம் தேதி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.ரமேஷின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே ராஜபட்ச மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ராஜபட்சவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து அவர் அவசரமாக இலங்கை திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவனமாய்க் கற்றால் "கவனகக்' கலையும் எளிது; சாதனை வாலிபரின் சரித்திரம்


கடைசியாக நீங்கள் ஏறிய பஸ்சின் எண் என்ன? நேற்று அணிந்திருந்த சட்டையின் நிறம் என்ன? எப்போது சூரியனை கடைசியாகப் பார்த்தீர்கள்? கடந்த ஆண்டு எந்த நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாடினீர்கள்? இந்த கேள்விகளுக்கு, நம்மால் ஞாபகத்தோடு பதில் சொல்ல முடியும்.



ஆனால், ஒரே சமயத்தில் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு, உடனடியாக பதில் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்த கலைக்கு, "கவனகம்' என்று பெயர். தமிழர்களின் மரபு சார்ந்த இந்தக் கலை, கவனகர்கள் குறைந்து வருவதால் அழிந்து வருகிறது.

சென்னையைச் சேர்ந்த இளைஞர் கலைச் செழியன், அழிந்து வரும் இந்தக் கலையை மீட்டெடுத்து, பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முயற்சித்து வருகிறார்.பலரின் கேள்விகளுக்கு, உடனடியாகப் பதில் சொல்வதற்கு வடமொழியில், "அவதானம்' என்று பெயர். எட்டு கேள்விகளுக்கு பதில் சொன்னால், அஷ்ட அவதானம், பத்துக்கு தசாவதானம், நூறுக்கு சதாவதானம். இந்த, "அவதான'த்தை தனித்தமிழில், "கவனகம்' என்று பெயர் மாற்றி, புழக்கத்திற்கு கொண்டு வந்தவர் ராமையா பிள்ளை.

தற்போது, தமிழகத்தில் அருகி வரும் இந்தக் கலையை, சென்னை வாலிபர் கலைச் செழியன் சிறப்பாகப் பொது மக்களிடையே கொண்டு சென்றிருக்கிறார். எட்டாம் வகுப்பு படிக்கும் போது, தந்தையோடு தமிழ்ச் சான்றோர் பேரவை விழாவிற்குச் சென்றிருந்த கலைச் செழியன், அங்கு நடந்த கவனக நிகழ்ச்சியைப் பார்த்து, தானும் அது போல நிகழ்ச்சியைச் செய்து காட்ட வேண்டும் என்று நினைத்து, அன்றிரவே வீட்டில் உள்ளவர்களை கேள்வி கேட்க வைத்து, பதில் சொல்லி இருக்கிறார். அன்று ஆரம்பித்த ஆர்வம் இன்று, "எழுபதில் கவனகம்' வரை கொண்டு சென்றிருக்கிறது.

தனித் தமிழில் கவனகம்:ஆந்திரா, கர்நாடகா, டில்லி, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில், கவனக நிகழ்ச்சி நடத்தியிருக்கும் கலைச் செழியன், தனித் தமிழில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
கவனகத்தை வெறும் அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், மொழியுணர்வு ஊட்டக் கூடிய அவையாக மாற்ற வேண்டும் என்பது, கலைச் செழியனின் எண்ணம்.அதனால், தமிழகத்தில் தனித் தமிழில் நிகழ்ச்சியை நடத்தி வருகிற இவர், மொழி புரியாத வெளிநாடுகளில், ஆங்கிலத்தில் நிகழ்ச்சி நடத்துவதை, வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

படைப்பாற்றல் அவசியம் :""கவனகக்கலையை நடத்துவதற்கு, நினைவாற்றல் மட்டும் போதாது; படைப்பாற்றலும் வேண்டும். அவையோர் திடீரென வெண்பா, கட்டளை களித்துறை என, பல்வேறு இலக்கணங்களில் பாடல் வடிக்கச் சொல்வார்கள். நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.இதற்கு, வெறும் நினைவாற்றல் மட்டும் இருந்தால் போதாது.கூடவே படைப்பாற்றலும் இருக்க வேண்டும். அப்போது தான், கவனகத்தில் நிலைத்து நிற்க முடியும். கவனமாய் கற்றால் கவனகக் கலையும் எளிதுதான்'' என்பது கலைச் செழியனின் அனுபவ மொழி.

நினைவாற்றலில் மனப்புரட்சி:பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் போது, இவர் எழுதிய "நினைவாற்றலில் மனப்புரட்சி' என்ற நூலுக்கு, தமிழக அரசின், "குறள் பீடம்' விருது கிடைத்திருக்கிறது.தனக்குப் பின்னால் கவனகக்கலை நிகழ்த்துவோரின் எண்ணிக்கை, அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் கலைச் செழியன். அதனால், தமிழகம் முழுக்க உள்ள பள்ளிக்குச் சென்று, கவனகக் கலையை பரப்பி வருகிறார்."" பள்ளிகளில் கவனகத்தைப் பாடமாக வைத்தால், பிற்காலத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். அது பாடம் சார்ந்ததாக மட்டும் இல்லாமல், பொது வாழ்க்கைக்கு பயன்படும் வகையிலும் அமையும்'' என்றார்.

தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும், கவனகக் கலையை நிகழ்த்தியிருக்கும், கலைச் செழியன், தற்போது பெண் காவலர்களுக்கு, கவனகப் பயிற்சி கொடுத்து வருகிறார்.

- அ.ப.இராசா -

மரண தண்டனை குறித்து மறு ஆய்வு தேவை மூவருக்கு மரண தண்டனை விதித்த நீதியரசர் கே.டி. தாமஸ் கருத்து

மரண தண்டனை குறித்து மறு ஆய்வு தேவைமூவருக்கு மரண தண்டனை விதித்த நீதியரசர் கே.டி. தாமஸ் கருத்து!
தமிழாக்கம் : பூங்குழலி
(கே.டி. தாமஸ் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி. இராசீவ் காந்தி கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்றவர்)

இந்தியக் குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை ஏற்க மறுத்தது, தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது மற்றும் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் அப்சல் குரு பற்றி இணையத்தில் எழுதியது ஆகியவை மரண தண்டனை குறித்த விவாதத்தை மீண்டும் முதன்மைப் படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்கள் மக்களின் உணர்வுகளோடு தொடர்புடைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கும்போதெல்லாம் இந்த விவாதம் எழும்புகிறது. ஆனால், பிற நேரங்களில் இந்த விவாதம் கவனிப்பாரற்று இருக்கிறது. இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் சென்னை கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தபோது விவாதம் இன்றி அது கடக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 22 பேருக்கு விதித்த மரண தண்டனையை இரத்து செய்தது. வெறும் நான்கு பேருக்கு விதிக் கப்பட்ட மரண தண்டனையை மட்டுமே அது உறுதி செய்தது. அந்த காலக்கட்டத் திலும்கூட, இந்த முக்கியமான பிரச்சினை ஒரு பொது விவாதத்தில் இருந்து தப்பித்தது.

எனினும், வன்புணர்வு செய்த ஒருவருக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்து, அவரது கருணை மனு இந்தியக் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப் பட்டபோது இந்த விவாதம் முதன்மை பெற்றது. மிக நீண்ட காலத்திற்குப் பின் குற்றம் சாட்டப்பட்டவர் இறுதியாக தூக்கிலிடப்பட்டார். இராசீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்குகூட சூழல் வேறுமாதிரியாக இல்லை. ஏனெனில், தங்கள் கண்முன்னே தூக்குக் கயிறு தொங்கும் நிலையிலே அவர்கள் மிக நீண்ட காலத்தை சிறையில் கழித்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்ட இந்த நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கும் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவிற்கு நான் தலைமை ஏற்றது என்பது எனது வினைப்பயன் ஆகும்.

உண்மையில் இராசீவ் காந்தி கொலை வழக்கைப் போல தொடக்கத்தில் இத்தனை அதிகமான நபர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட எந்த ஒரு வழக்கையும் நான் வரலாற்றில் பார்த்த நினைவு இல்லை. ஒரு வழக்கறிஞராக நான் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் மரண தண்டனைகள் அடிக்கடி விதிக்கப் பட்டன. மரண தண்டனை விதிக்காமல் இருப்பதற்கான சிறப்பான காரணங்களை மாவட்ட நீதிபதிகள் வழங்கவேண்டும் என அன்றைய சட்டம் கோரியது. பின்னர் அந்தச் சட்டம் மாற்றப்பட்டது. ஆயுள் தண்டனையே பொதுவான தண்டனையாக மாறிய நிலையில் மரண தண்டனை விதிப்பதற்கான சிறப்பான காரணங்களை மாவட்ட நீதிபதி வழங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்தச் சட்டம் பின்னர் உச்சநீதிமன்றத்தால் மேலும் இறுக்கமாக்கப்பட்டது. அதன்படி அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால் 'அரிதினும் அரிதான வழக்குகள்' என்ற இந்த சொற்றொடர் ஆனது, எழுத்துப்பூர்வமானதாக மட்டுமே இருந்தது.

ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் பிறவற்றைவிட மிக அதிகமான கொடூரத் தன்மை இருப்பதாக உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ கருதியபோதெல்லாம் அவர்கள் மரணதண்டனை விதித்துள்ளனர். பெரும்பாலான கொலைகள் கொடூரமாகவே இருப்பதால் அந்தக் குறிப்பிட்ட வழக்கு ஒரு அரிதினும் அரிதான வழக்கு என்பதாக விவரிப்பது நீதிபதிகளின் திறனைப் பொறுத்ததாக அமைந்தது. பயங்கரவாதத் தாக்குதல்களினால் நிகழ்ந்த பெரும்பாலான கொலைகள் அரிதினும் அரிதான வழக்குகளாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதை அறிய உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால், கொலையுண்டவர் ஒரு புகழ்பெற்ற நபராக இருப்பின் அந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்காக விவரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்திராகாந்தி கொலை வழக்கு, ராசீவ் காந்தி கொலை வழக்கு, ஜெனரல் வைத்யா கொலை வழக்கு ஆகியவற்றின் தீர்ப்புகள் இதையே உறுதிப்படுத்துகின்றன. ஆனால், 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளில் நிகழ்ந்த கொலை வழக்குகள் எவையும் அரிதினும் அரிதான வழக்காக நடத்தப்படவில்லை. அரிதினும் அரிதான வழக்குகளின் கோட்பாட்டை வழங்கிய பச்சன்சிங் வழக்கில் அந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சர்க்காரியா வழங்கினார்.

அதன்படி அவர் அரிதினும் அரிதான வழக்கு என்பது எவ்வாறான வழக்கு எனில், அதில் மாற்றுத் தண்டனையான ஆயுள் தண்டனை என்பது எந்தக் கேள் வியும் இன்றி வழங்கப்படவே முடியாத ஒன்றாக இருப்பதே எனக் குறிப்பிடுகிறார். இதை நான் இங்கு சுட்டிக்காட்டுவது எதனால் எனின் இராசீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது முக்கியமான ஒரு நிகழ்வு நடந்தது.

அது நான், நீதிபதி வாத்வா மற்றும் நீதிபதி முகமது காதிரி ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவாகும். நளினியைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றம் அவரும் தண்டனைக்குரியவர் என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் மூன்று நீதி பதிகளில் ஒருவர், நளினியை தூக்கில் இட முடியாது என்பதற்கான காரணங்களை முன்வைத்தார்.

எனினும் மற்ற இரு நீதிபதிகளும், அவர் புரிந்த குற்றங்கள் காரணமாக அவரும் சாகும்வரை தூக்கில் இடப்படவேண்டியவர் எனத் தீர்ப்பளித்தனர். இந்த நிலையில் பெரும்பான்மை தீர்ப்பை அடிப்படையாக வைத்து அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. எனினும் இந்தத் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வுக்கு அளிக்கப்பட்டது. அந்த நீதிபதிகள் குழுவின் மூத்த நீதிபதி என்ற முறையில் மறு ஆய்வுக்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ளதாக நான் வழக்கறிஞர்களிடம் தெரிவித்தேன். ஏனெனில், உச்சநீதிமன்றம் தான் அளித்த தீர்ப்பில் முதன்மையான ஆவணங்களின் வெளிப்படையான தவறுகள் ஏதும் இருந்தால் மட்டுமே தீர்ப்பை மாற்ற முன்வரும். எனவே நாங்கள் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தோம். எனினும் மறுஆய்வு மனுமீதான ஆணையைப் பிறப்பிப்பதற்கு முன் என் மனதில் ஒரு புதிய யோசனை தோன்றியது. எனவே, மறுஆய்வு மனுவை ஒரு புதிய அடிப்படையின் கீழ் ஏற்றுக்கொள்வதாக நான் ஆணை பிறப்பித்தேன். மூன்று நீதிபதிகளில் இருவர் மரண தண்டனையை விதித்த நிலையில், ஒருவர் அதே குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த சூழலில், அரிதினும் அரிதான வழக்குகள் குறித்த கோட்பாடுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நான் தெரிவித்தேன். அதாவது முன்பு குறிப்பிட்டதைப் போல ஆயுள் தண்டனை வழங்கப்பட முடியாத ஒன்றாக இல்லை. ஏனெனில் ஒரு நீதிபதி மரண தண்டனைக்கு எதிராக வாக்களித் துள்ளார். மற்ற இரு நீதிபதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இறுதியில் அரசியல் சட்டத் தலைவர் நான் கூறியதை ஏற்றுக்கொண்டார். அரசியல் சட்டத்தின் பிரிவு 21ன்படி சட்டத்தினால் நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி எந்த ஒரு மனிதருக் கும் அவரது வாழ்வு மற்றும் சுதந்திரம் மறுக்கப்பட இயலாது. சட்டம் நேர்மையான தாக, முறையானதாக, அறிவுப்பூர்வமானதாக இருக்கும் எனில், அச்சட்டத்தின்படியே உங்கள் உயிரை எவரும் எடுக்க இயலாது. மரணத்தண்டனை என்பது ஒரு மனிதரைக் கொலை செய்வது. ஒரு மனிதரைக் கொலை செய்வது சட்டப்படியான பாதுகாப்பை உடையதெனில் அது குற்றமாகாது என சட்டம் சொல்லுகிறது. சட்டப்பூர்வமான அங்கீகாரத்துடன் ஒரு மனிதரை கொலை செய்யலாமா?

நீதியாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இருவிதமாகப் பிரிந்து நிற்கின்றனர்; மரண தண்டனை நீடிக்கவேண்டும் என்பவர்களும் அதை ஒழிக்க வேண்டும் என்பவர்களுமாக. ஒரு மனிதரை கொலை செய்துவிட்டு எவ்வாறு தண்டனையில் இருந்து விலக்குப் பெற முடியும்? தண்டனை என்பது என்ன? உங்கள் குழந்தைகளை நீங்கள் எதற்குத் தண்டிக்கலாம்? உண்மையில் ஒரு மனிதரைத் திருத்துவதற்கே தண்டனை அளிக்கப்படுகிறது.

கடந்த காலத்தில் தண்டனைக்கு மூன்றுவிதமான நோக்கங்கள் இருந்தன; திருத்துவது, அச்சுறுத்துவது மற்றும் தண்டிப்பது. தண்டிப்பது என்ற கோட்பாடு தற்காலத்தில் காலத்திற்குப் பொருந்தாத ஒன்றாகவும், நாகரிகமற்றதாகவும் கருதப்படுகிறது. நவீன கால குற்றவியல் ஆய்வாளர்கள் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதில்லை. மீதி இரண்டு நோக்கங்களைப் பொறுத்தவரையில் திருத்துவது என்ற நோக்கம் குற்றம் செய்தவரை இவ்வுலகில் இருந்து நீக்கியபிறகு சாத்தியமற்றதாக மாறிவிடுகிறது.

எஞ்சியிருப்பது அச்சுறுத்துவது மட்டுமே. மரணதண்டனை நீடிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் அதனை நியாயப்படுத்த முன்வைக்கும் ஒரே காரணம் அது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதே. ஆனால் அது உண்மையா? செளதி அரேபியாவில் இன்றளவிலும் மசூதி வழிபாடு முடிந்தபிறகு வெள்ளிக்கிழமைகளில் குற்றமிழைத்தவர்களை தலையை வெட்டிக் கொல்லும் கொடூரக் காட்சியைக் காணலாம்.

இதன்மூலம் அம்மாதிரியான நாடுகளில் மிகக்குறைவான மக்கள் தொகை இருந்தபோதிலும்கூட, இத்தகைய தண்டனைகளின் மூலம் இந்த ஆயிரம் ஆண்டுகளில்கூட குற்றம் இழைப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பதே தெரியவருகிறது. தண்டனையிலிருந்து தப்பிக்கும் ஒரு குற்றவாளி அம்மாதிரியான குற்றங்களை பிறர் செய்வதற்கு தூண்டுகோலாக இருக்கிறார் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனினும், மரண தண்டனை உண்மையிலேயே ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறதா என்பதை அறிவதற்கான ஒரு ஆய்வை நாம் மேற்கொள்ளவேண்டும். நான் அறிந்தவரையில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை ஆகியவற்றின் தாக்கத்தை எவரும் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை.

ஆனால், பண்டைய திருவனந்தபுரம் மற்றும் கொச்சி அரசுகளின் இது குறித்த ஆவணங்கள் இருக்கின்றன. 1940இல் முதன்முதலாக மரணதண்டனையை ஒழித்தவர் திருவனந்தபுரம் அரசர் ஆவார். பின்னர் அதே ஆண்டில் கொச்சின் அரசரும் அதேபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் 1950இல் இந்தியக் குடியரசின் பகுதியாக அவர்கள் ஆனபிறகு மரண தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில், 1940 முதல் 1950வரையிலான காலக்கட்டத்திலும் பின்னர் 1950 முதல் 1960 வரையிலான காலக்கட்டத்திலும் நடைபெற்ற கொலைகளை குற்றவியல் ஆய்வாளர்கள் ஒப்பிட்டாய்வை செய்தனர். மரண தண்டனை சட்டத்தில் இல்லாத காலக்கட்டத்தில் நடைபெற்ற கொலைகளைவிட 1950-1960 காலக்கட்டத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை அதிகமானதாக இருந்ததைக் கண்டு அவர்கள் துணுக்குற்றனர். இதன்மூலம், மரணதண்டனை ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்பது ஒரு மாயத்தோற்றம் என்பது புலனாகிறது. இங்கிலாந்தில் பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்குகூட மரண தண்டனை விதிக்கப்பட்ட காலத்தில் நடந்த மிக சுவாரசியமான நிகழ்வை சிந்தனையாளர் ஆர்த்தர் காய்சுலர் விவரிக்கிறார்:

பிக்பாக்கெட் திருடர்களை அச்சுறுத்தும் என்ற எண்ணத்தில் அக்குற்றத்திற்கு மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் குற்றத்திற்காகக் குற்றவாளி கொல்லப்படும்போது அதை பொதுமக்கள் காணும் வகையில் நிறைவேற்றினர். அப்படியான ஒரு நிகழ்வின்போது தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டபின் அதைக் காணக்கூடி இருந்த மக்களில் 63 பேரின் பைகள் திருடுபோனது குறித்து காவல்துறைக் குப் புகார்கள் வந்தன. இதன்மூலம் மரண தண்டனை ஒரு அச்சுறுத்தலாக இல்லை என்பது மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. மரண தண்டனையை சூழ்ந்துள்ள மனிதத் தன்மையற்ற கூறுகளை அடுத்து காணலாம்.

முதலாவதாக, குற்றம் இழைத்தவரை திருத்தும் நோக்கத்தை அது அழிக்கிறது. இரண்டாவதாக, நீங்கள் எடுத்த முடிவை திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பினை அது முற்றிலுமாக அது மறுக்கிறது. அதிலும் குறிப்பாக அந்த முடிவு பின்னர் தவறென அறியப்படும் சூழலில் இது பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது.

மூன்றாவதாக, மரணதண்டனையின் மூலம் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட முறையில் உண்மையில் நீங்கள் ஒரு கொலையையே செய்கின்றீர்கள். நான்கா வதாக, சட்ட அதிகாரத்தைப் பெற்று நீங்கள் ஒரு கொலையைச் செய்யும்போது கொலையாளியின் பழிவாங்கும் மனநிலையை நீங்களும் கொண்டுள்ளீர் கள். ஐந்தாவதாக, மீண்டும் அளிக்கமுடியாத உயிரை எடுப்பதற்கான உரிமை உங்களுக்கு இல்லை. ஆறாவ தாக, நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் மரணதண்டனை அளிப்பது என்ற முடிவை எடுப்பது குறித்து சில கேள்விகள் உள்ளன. எனது அனுபவங்களில், ஒரு வழக்கறிஞராகவும் விசாரணை நீதிபதியாகவும் நான் பார்த்தவரையில் நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களை அதிகாரத்தின் மூலம் எளிதாக உருவாக்கலாம். அதோடு, கொலை யுண்டவரின் உற்றார் உறவினர்கள் இயல்பாகவே கொலையின் கொடூரத் தன்மையை மிகைப்படுத்தியே கூறுவர். எனவே இந்த நிலையில், நடந்த கொலை மிகவும் கொடூரமான முறையில் நடந்தது என்று நீங்கள் எடுக்கும் முடிவானது மிகவும் வலுவற்ற அடிப்படை யில் அமைந்திருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும், கொலை வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வர்களை கணக்கில் எடுத்தீர்கள் எனில் அவற்றில் 90 விழுக்காட்டினர் சமூகத்தின் கீழ்த்தட்டில் உள்ளவர் களாகவே இருக்கின்றனர். நான் கொலை செய்தது இல்லை. உங்களில் எவரும்கூட செய்வதில்லை. இதற்கு உங்களின் வளர்ப்பு ஒரு காரணம். ஆனால், சேரிகளில் வாழ்பவர்கள் மற்றும் நாடோடிகளின் குழந்தைகள் கற்றறிந்த வகுப்பினரின் குழந்தைகளின் அளவிற்கு உயிரின் மதிப்பை அறிந்திராமல் இருக்கலாம். அதனை ஆன்மீக அளவிலும் அறிந்திருக்க அவர்களுக்கு வாய்ப்பில்லை. எனவே, எவ்வித உளவியல் தடையும் இன்றி அவர்கள் வன்முறையை கையில் எடுக்கின்ற னர். மகாசசே விருதுபெற்ற கிரண்பேடியின் நூலைப் படித்த பிறகு எந்த ஒரு குற்றவாளியையும் திருத்த முடியும் என நான் முழுமையாக நம்புகிறேன்.

ஆனால் வேதனைக்குரிய ஒன்றாக அரசோ அல்லது பொது மக்களோ, திருத்துவது என்ற மனித நேய நோக்கத்திற்கு தங்கள் கவனத்தை செலுத்துவது இல்லை. அவர்களுக்கு குறுக்கு வழி மட்டுமே தெரிந் திருக்கிறது. அது, குற்றவாளியை அழிப்பது மற்றும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய கொடூர இன்பத்தை அனுபவிப்பது. எனது நீண்ட அனுபவங்களின் அடிப் படையில் நான் உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். குற்றம் இழைத்தவர் நீதிமன்றத்தால் குற்றம் இழைக்காத வர் என அறியப்படலாம். ஆனால் சில நேரங்களில் மிகமிக அரிதாக என்றபோதும் குற்றம் இழைக்காத வர்களும் குற்றம் இழைத்தவர்களாக அறியப்படலாம்.

இதுதான் வழக்குகளை உணர்வு மயப்படுத்தும் போது எழும் பலனாகும். வரலாற்றின் நீதிபதி ஒருவர், உண்மையில் குற்றம்சாட்டப்பட்டவர் எவ்விதக் குற்ற மும் செய்யவில்லை என்று அறிந்த நிலையிலும், கூடி யிருந்த மக்களின் உணர்வுகளுக்கு ஈடுகொடுக்க அவ ருக்கு மரணதண்டனை அளிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது குறித்து ஒற்றை நிகழ்வு மட்டுமே உள்ளது. அது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜெருசலம் நகரில் நடந்தது. அந்த நீதிபதியின் பெயர் பாந்தியஸ் பிளதவுஸ் என்பதும் தண்டனை விதிக்கப்பட்ட அந்தக் கைதியின் பெயர் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு என்பதும் நான் கூறவேண்டிய அவசியம் இல்லை.

ஈகத்தூண்கள் அமைக்க நன்கொடை தாரீர்!

திரு. பழ. நெடுமாறன் அவர்களின் மாவீரர் நாள் உரை - 2009

திரு. வைகோ அவர்களின் மாவீரர் நாள் உரை - 2009

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான
உலகத் தமிழர் பிரகடனம்

பழ. நெடுமாறன் நூல்கள்

பழ. நெடுமாறன் அறிக்கைகள்

சிறப்புப் படங்கள் பக்கம்

சிறப்பு உரைகள் பக்கம்

இந்துத்துவா பற்றிய
பழ. நெடுமாறனின்
நூல்
விவரங்கள்

இந்தியா.இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளுக்கு வேண்டுகோள்

தென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்


A.I.R. seminar on Dr.S.Ilakkuvanar: முனைவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்கம்

முனைவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்கம்

பதிவு செய்த நாள் : 25/09/2011

இலக்குவனாரின் பன்முக ஆளுமை” இந்திய ஒலிபரப்பு நிறுவனம் – அகில இந்திய வானொலி நிலையம் – மாநிலக் கல்லூரி – இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து நடத்தும்  முனைவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்கம்




http://meenakam.com/news/tamilnational/tamilnadu-tamilnational/2011/09/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8.html

கொலை வெறியர்களைத் தூக்கிலிடுங்கள் (காணொளி)

அன்புடையீர்

மூவர் உயி்ரைக் காக்க வேண்டும் என்னும் மனித நேயர்களும்
மூவர் உயிரைப் போக்க வேண்டும் என்னும் கூலிக்கு மாரடிப்பவர்களும்

காண வேண்டிய என் உரை  நட்பு இணை ய இதழில் காணுங்கள்.

தொடர்பு   :

http://www.natpu.in/?p=15899

கொலை வெறியர்களைத் தூக்கிலிடுங்கள் (காணொளி)

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/09/2011



மூவர் உயிரைக் காக்க வேண்டுமா? போக்க வேண்டுமா?

3
Tags: 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

--

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

கவிஞர் வாலிக்கு எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது

கவிஞர் வாலிக்கு எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது

First Published : 25 Sep 2011 02:39:07 AM IST


எஸ்.வி. சண்முகம் கவிஞர் வாலி எம்.பி. இராமச்சந்திரன்
சென்னை, செப். 24: எம்.ஏ.சி. அறக்கொடை நிறுவனம் சார்பில் 2011-ம் ஆண்டுக்கான டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருதுக்கு கவிஞர் வாலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  எம்.ஏ. சிதம்பரம் அறக்கொடை சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை அறக்கொடை அறிவித்துள்ளது.  டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது: தமிழ் இலக்கியம் மற்றும் மொழி பங்களிப்பில் சிறந்து விளங்கும் தமிழ் அறிஞர்களுக்கான டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது தமிழறிஞர் டாக்டர் எஸ்.வி. சண்முகத்துக்கு வழங்கப்பட உள்ளது.  டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது: நுண்கலைகளான சித்திரம், சிற்பம், இசை, நாடகம், நாட்டியம், படைப்பிலக்கியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது தமிழ் கவிதைத் துறையில் சிறந்து விளங்கும் கவிஞர் வாலிக்கு வழங்கப்பட உள்ளது.  டாக்டர் ஏ.சி. முத்தையா விருது: சிறந்த முதல் தலைமுறை தொழில் முனைவோராக சிறந்து விளங்கும் சாதனையாளருக்கான டாக்டர் ஏ.சி. முத்தையா விருது தொழிலதிபர் எம்.பி. ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட உள்ளது.  இந்த விருதுகள் டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியாரின் 93-வது பிறந்த நாளான அக்டோபர் 12-ல் ராஜா அண்ணாமலை மன்றத்தில் வழங்கப்படும். விருது பெறுவோருக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும்.

குமரி அனந்தன், கௌதம நீலாம்பரனுக்கு இலக்கியப் பரிசு

குமரி அனந்தன், கௌதம நீலாம்பரனுக்கு இலக்கியப் பரிசு

First Published : 25 Sep 2011 03:28:10 AM IST


சென்னை, செப். 24: குமரிஅனந்தன், கௌதம நீலாம்பரன் ஆகியோருக்கு 2011-ம் ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது."தினத்தந்தி' நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனாரின் பிறந்த நாளில் ஆண்டுதோறும் "மூத்த தமிழறிஞர்' விருது, இலக்கியப் பரிசு ஆகியவற்றை தினத்தந்தி வழங்கி வருகிறது.வெள்ளிப் பட்டயத்துடன் ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்ட மூத்த தமிழறிஞர் விருது இந்த ஆண்டு குமரிஅனந்தனுக்கு வழங்கப்பட உள்ளது.ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு கொண்ட இலக்கியப் பரிசு "புத்தர் பிரான்' என்ற நூலுக்காக எழுத்தாளர் கௌதம நீலாம்பரனுக்கு வழங்கப்பட உள்ளது.சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் செப்டம்பர் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் சி.பா. ஆதித்தனாரின் பிறந்த நாள் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும்.சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. திருவாசகம் இலக்கியப் பரிசுகளை வழங்குகிறார். தினத்தந்தி இயக்குநர் பா. சிவந்தி ஆதித்தன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.

தஞ்சாவூர் பொம்மை


தஞ்சாவூரு பொம்ம

சித்திரசேனன்.க
பதிவு செய்த நாள் : 23/09/2011


எனது நண்பன் செந்தில் ராசாவின் திருமணத்திற்குச் சென்றான் மாரிமுத்து. அவனை செந்தில் ராசாவின் பெற்றோர் வரவேற்று நன்றாக உபசரித்தனர். திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்ததும் பெற்றோர், உறவினர்கள் சூழ அமர்ந்திருந்த மணமக்களிடம், தான் கொண்டு சென்ற பரிசுப் பொருளைக் கொடுத்தான் மாணிக்கம். அதை ஆவலுடன் பிரித்த மணமகளுக்கு உள்ளே இருந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அருகில் இருந்த ஒருவர் மணமகளிடம் “நீ சொல்றதுக்கெல்லாம் செந்தில் ராசாவும் இந்த பொம்மையைப் போலத்தான் தலையாட்டுவான்” என்றதும் இன்னும் சிரிப்பு அதிகமானது. எல்லோரும் சிரித்ததும் மணமகன் செந்தில்ராசாவுக்கு என்னவோ போல் இருந்தது. என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
நண்பனின் முகத்தைப் பார்த்து அவன் மனதை உணர்ந்த மாரிமுத்து, “என்ன தலையாட்டி பொம்மையை அவ்வளவு கேவலமாக சொல்லிட்டீங்க? இந்த பொம்மையை எப்படி கீழே தள்ளினாலும் எழுந்து நிற்கும். அதுபோல வாழ்க்கையில எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், இவனும் எழுந்து நிற்பான்” என்றான் பெருமையாக. இதைக் கேட்டதும் சுற்றியிருந்தவர்கள் வாயடைத்து நின்றனர். செந்தில் ராசா முகத்தில் மலர்ச்சி.
0

வாசகர் கருத்துகள் (1)
நன்று. கண்ணோட்டம்தான் கருத்தை முடிவு செய்கிறது. தலைகுனிவு தந்த தஞ்சாவூர் பொம்மை புதிய விளக்கத்தால் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார்திருவள்ளுவன் /எழுததைக் காப்போம்! மொழியைக்காப்போம்! இனத்தைக் காப்போம்! /

Local body elections - pending tax paid: உள்ளாட்சி த் தேர்தலில் வரி நிலுவை செலுததப்படுகிது.

உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் தனித்து போட்டியால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு பெருகும் வருவாய் `வரி பாக்கி தீவிரமாக வசூல் ஆகிறது

பதிவு செய்த நாள் : 24/09/2011



தமிழக உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி ஏற்படாமல் தனித்து போட்டியிடுவது அ.தி.மு.க., தி.மு.க. தவிர, மற்ற கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தினாலும், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி பாக்கியை வசூல் செய்ய நல்ல தருணம் என்பதால் அரசுக்கு வர வேண்டிய வரி பாக்கிகள் பெரும்பாலும் வசூல் ஆகும் நிலை உள்ளது.
தனித்து போட்டி
தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கடந்த சில மாதங்களாக கடும் போட்டியில் இறங்கியிருந்தார்கள்.
அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைசிறுததைகள், கம்யுனிஸ்டு கட்சியினர் என முக்கிய கட்சிகள் எல்லாம் தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. இது, அரசுக்கு நல்ல வருவாயை ஏற்படுத்தி தந்துள்ளது. பொதுவாகவே அரசுக்கு செலுத்தவேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்பட அனைத்தையும் செலுத்துவதில் அரசியல்வாதிகள் அக்கறை காட்டுவது இல்லை.
அரசுக்கு வருவாய்
ஆனால், தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டவேண்டிய வரி பாக்கியை கட்டியே தீரவேண்டும் என்ற சூழ்நிலையில், வேறு வழிஇல்லாமல் இப்போது வரி பாக்கியை செலுத்தி வருகிறார்கள்.
சென்னை புறநகர் பகுதியில் மட்டும் சுமார் ரூ.3 கோடி வரை இதுபோல வரி பாக்கி வசூல் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் வசூல் ஆகும் நிலை உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்கள், கவுன்சிலர்கள் பதவி வகித்தவர்கள் கூட, தங்கள் வீட்டு வரி பாக்கியை கட்டாமல் இருந்துள்ளனர். புறநகர் நகராட்சியில் பாதாளசாக்கடை திட்டம் நடைபெறும் பகுதியில் நகராட்சி தலைவராக இருந்தவரே, பாதாளசாக்கடை கட்டணம் கட்டாமல் இருந்துள்ளார். தேர்தலில் போட்டியிட நகராட்சி அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற இந்த வரிகளை கட்டியே ஆக வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததால், பல அரசியல்வாதிகள் `என்ன கொடுமை சார்? நம்ம கூட வரி கட்டவேண்டியுள்ளது, என மனம் நொந்தபடி வரி பாக்கியை செலுத்தி வருகின்றனர்’.
போட்டி அதிகமாக உள்ளதால் எந்த கட்சி வேட்பாளராவது தேர்தல் நடத்தைகளில் தவறு செய்கிறார்களா? என அதிகாரிகளைவிட போட்டி வேட்பாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வேட்பாளர்கள் சொத்து கணக்குகளை சரியாக காட்டுகிறார்களா? என்பதை கண்காணிப்பதில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் முக்கிய கட்சி வேட்பாளர்கள் கூட சொத்து கணக்குகளை எப்படி காண்பிப்பது, அனைத்து சொத்துகளையும் காண்பித்தால் வருமானவரி சோதனைக்கு ஆளாகுவோமா? என்றெல்லாம் சிந்தித்து வருகிறார்கள்.