prison லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
prison லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஜூலை, 2012

Tamil reported missing found in coma after Vavuniyaa prison raid

Tamil reported missing found in coma after Vavuniyaa prison raid

[TamilNet, Sunday, 08 July 2012, 23:37 GMT]
28-year-old Tamil man, Dilrukshan Muthurasa from Iluppaikkadavai, in Maanthai West of Mannaar district in Vanni, was one of the prisoners in Vavuniyaa prison, which was raided by the Sri Lankan Special Task Force commandos on 29 June. Dilrukshan, seriously attacked and allegedly subjected to torture at Vavuniyaa and Anuradhapura prisons, is currently in coma and is fighting for his life at Mahara prison. His mother, Reeza Muthurasa, who didn't know about the whereabouts of her son, has identified him after visiting her son at Mahara hospital, following press reports. According to Ms Reeza, her son, who had gone on employment in Middle East in 2006 had returned just before the war intensified in Vanni and was caught by the SL Navy when he tried to escape the war zone in a boat in 2009.

Legal sources in Colombo said there has been allegations of discrimination in medical treatment to the prisoner who needs proper medical care.

Dilrukshan's condition has deteriorated at Mahara hospital, according to his mother who said bad odour was emanating from the victim, who is struggling for his life at the hospital.

Ms Reeza further said Dilukshan was the only able son to take care of their family and rejected the claim of the Sri Lankan military that her son was a commander of the LTTE. How could Dilukshan, who had just come back from abroad and was trying escape the war zone, be described as a commander in the LTTE, she asked.

Another 28-year-old Tamil prisoner, Ganesan Nimalarooban from Nelukku'lam in Vavuniyaa, had succumbed to his injuries at Mahara hospital a few days ago.

Nimalarooban had been taken away from his house long after the end of war, alleging that he was associated to the LTTE.

The Judicial Medical Officer in Mahara was attempting to produce a document that falsely suggested that Nimalarooban had died of heart attack, the parents, who had refused to sign the papers said.

78-year-old father and 60-year-old mother of the slain victim have said that their son lost his life after severe torture. They have been demanding that the body should be handed over to them for final rites and cremation according to Saiva tradition.

In the meantime, the Sri Lankan police has been pushing for burial in Mahara prison without allowing the family of Nimalarooban to take his body to Nelukku'lam in Vavuniyaa.

The SL police has argued at the SL court in Mahara that violence could erupt in Vavuniyaa if the body was handed over to the family.

Following this, the SL Court had given permission for the burial at Mahara hospital. But, the parents of the slain victim have opposed the move.

Chronology:

வெள்ளி, 6 ஜூலை, 2012

கொலைவெறி தொட ரும் சிங்களம்! வேடிக்கை பார்க்கும் இந்தியம்!

இலங்கை ச்சிறையில் விடுதலைப் புலி அடித்துக் கொலை



கொழும்பு, ஜூலை 5: இலங்கை அனுராதபுரம் சிறையில் கைதியாக உள்ள விடுதலைப் புலி ஒருவர் போலீஸôரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இவர் நெடுங்குளத்தைச் சேர்ந்த நிமலரூபன் ஆவர். கவலைக்கிடமான நிலையில் ரகமா மருத்துவமனைக்கு புதன்கிழமை நிமலரூபன் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.  இவர் தவிர அனுராதபுரம் சிறையில் உள்ள 6 கைதிகள் மஹாரா சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  காயமடைந்த சிறைக் கைதிகளை பார்வையிடச் சென்ற தமிழ் தேசியக் கூட்டணியின் எம்.பி.க்கள், நிமலரூபன் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.  அதேநேரத்தில், மாரடைப்பு காரணமாக நிமலரூபன் இறந்ததாக சிறைத்துறை அமைச்சர் சந்திரசிறி கஜதீரா கூறியுள்ளார்.  இலங்கையில் உள்ள வவுனியா சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை கைதிகளாக இருக்கும் விடுதலைப் புலிகள் 38 பேர் சிறைக் காவலர்கள் மூவரை 18 மணிநேரம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். பின்னர் அங்கு வந்த போலீஸôரும் அதிரடிப் படையினரும் கண்ணீர்ப் புகை குண்டு வீசி காவலர்களை விடுவித்தனர். பின்னர் அந்தக் கைதிகள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் போலீஸôரால் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.  இதனிடையே, சுகாதாரத்துறை அமைச்சரும் அரசு செய்தித் தொடர்பாளருமான மைத்திரிபால சிறிசேன, வவுனியா சிறைச் சம்பவத்தை "புலிகளின் உறுமல்' என்று கூறியுள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்று கூறிக்கொள்ளும் உருத்திரகுமாரன் இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இருப்பதாகவும் அவர் கூறினார். மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க 500 புலிகள் முயன்று வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

திங்கள், 18 ஜூன், 2012

சிறையில் தமிழ் வகுப்பு எடுக்கும் சா.இராசேந்திரன்

10 ஆம் வகுப்பு படித்த 12 ஆம் வகுப்பு ஆசிரியர்!



பிளஸ் டூ தேர்வு முடிவு. தேர்வு எழுதிய தமிழகச் சிறைக் கைதிகள் 35 பேரும் வெற்றி. படிக்கும் நேரத்தில் படிக்க முடியாமல், பல்வேறு சூழ்நிலைகளால் சிறைக்கு வந்தவர்கள், இப்போது வெளியில் உள்ள மாணவர்களைப் போல நன்றாகப் படிக்கிறார்கள். இந்த ஆண்டு சென்னை புழல் சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தேவராஜ் 365 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். வெளியில் பள்ளியில் படிக்கும் அவர் மகள் வனிதாவோ 294 மதிப்பெண்கள்தாம் எடுத்திருந்தார். இப்படி மூக்கில் விரலை வைத்து வியக்கும் படியான செய்திகள்.சிறையில் உள்ள கைதிகள் எப்படிப் படிக்கிறார்கள்? அவர்களுக்கு யார் சொல்லித் தருகிறார்கள்? சென்னை புழல் சிறையில் கைதிகளுக்குத் தமிழ்ப் பாடம் சொல்லித் தரும் சா.ராசேந்திரனைச் சந்தித்தோம்:""நான் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்குத் தமிழ் இலக்கணம், இலக்கியம் சொல்லிக் கொடுக்கிறேன். 2007 இல் நான் எங்கள் ஊரில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டம் ஒன்றில் தன்னம்பிக்கையை வளர்ப்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவாற்றினேன். அந்தக் கூட்டத்துக்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரகுமாரும் வந்திருந்தார். என் பேச்சைக் கேட்ட அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ""இவ்வளவு நன்றாகத் தமிழ் பேசும் நீங்கள் ஏன் சிறைக் கைதிகளுக்கு தமிழ்ப் பாடம் நடத்தக் கூடாது?'' என்று கேட்டார். நானும் ஒத்துக் கொண்டேன். அன்றைய சிறைத் துறைத் தலைவர் ஆர்.நடராஜ் அவர்களின் அனுமதியுடன் நான், அறிவொளி இயக்க வளர்கல்வி திட்ட ஆசிரியராகச் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்குப் பாடம் நடத்தத் தொடங்கினேன்.எழுதப் படிக்கத் தெரியாத கைதிகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தேன். அவர்கள் அதில் தேர்ச்சி பெற்றவுடன் 8 ஆம் வகுப்பு அரசுத் தேர்வு எழுதினார்கள். அப்படியே 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் கைதிகளுக்கும் தமிழ்ப் பாடம் நடத்தினேன்.நன்கு படித்தவர்கள் சூழ்நிலை காரணமாக சிறைக்கு வந்திருப்பார்கள். அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து தமிழ் தவிர பிற பாடங்களுக்கு வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். இப்படி நாங்கள் கைதிகளுக்குக் கற்றுக் கொடுத்தது வீண் போகவில்லை. 2007 -2008 ஆண் ஆண்டில் 8 - 10 மற்றும் 12 வகுப்புகளில் மொத்தம் 29 பேர் தேர்ச்சி பெற்றனர். 2008 - 2009 இல் 46 மாணவர்களும், 2009 -2010 இல் 82 மாணவர்களும், 2010 -11இல் 75 பேரும் தேர்ச்சி பெற்றனர்.இப்போது 25 வயதுக்கு மேல் உள்ள பல கைதிகள் படிக்கிறார்கள். இப்படிப் படிக்கும் மாணவர்களின் வாழ்நாள் சிறைத்தண்டனை அவர்களின் நன்னடத்தை காரணமாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. சிறையை விட்டு வெளியே சென்றதும் அவர்கள் கற்ற கல்வியைப் பயன்படுத்தி நேர்மையான வழியில் பிழைக்கவும் முடியும். கைதிகளுக்கு நான் முதலில் திருக்குறளைத்தான் கற்றுக் கொடுப்பேன். திருக்குறளைக் கற்று அதைச் சரியானபடி பயன்படுத்தாததுதான் நமது இன்றைய எல்லாத் துயர்களுக்கும் காரணம் என்பது என் கருத்து.சொன்னால் வியப்படைவீர்கள். நான் படித்தது வெறும் 10 ஆம் வகுப்புதான். சொந்த ஊர் செந்துறை. மாணவப் பருவத்தில் கல்வியில் ஆர்வமின்றி சுற்றித் திரிந்த நான், ஒரு குறிப்பிட்ட வயதில் மனம் திருந்தி படிக்க ஆரம்பித்தேன். காரணம், என்னுடன் பள்ளியில் படித்த நண்பர்கள் பலர், நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது, கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் ஆசிரியராக வேலை செய்து கொண்டு இருந்தார்கள். இது என்னை மாற்றியது.சங்க இலக்கியங்களைக் கசடறக் கற்றேன். பெருஞ்சித்திரனார், பொற்கோ போன்ற அறிஞர்களின் தொடர்பும் எனக்குக் கிடைத்தது. அது என்னை வளர்த்தெடுத்தது. அதனால் இப்போது நான் பிளஸ் டூ பயிலும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். சிறைக் கைதிகளுக்குப் பாடம் நடத்தும்போது கிடைத்த அனுபவங்கள் பல. கைதிகளின் பெயரை வெளியில் சொல்லக் கூடாது என்பதால் நிகழ்வுகளை மட்டும் இங்கே நான் சொல்கிறேன். நான் தமிழ்ப் பாடம் நடத்தி முடித்தவுடன் என் வகுப்பில் இருந்த கைதி ஒருவர் என்னிடம் வந்து கைகுலுக்கிப் பாராட்டுத் தெரிவித்தார். அவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 3 ஆசிரியர்கள் ஏதோ பிரச்னை காரணமாக சிறைக்குள் இருக்கிறார்கள். என் வகுப்பில் அவர்கள் பாடம் கேட்பார்கள். திருக்குறளின் பெருமையை விளக்கி பாடம் நடத்தி முடித்தவுடன், அவர்கள் என்னிடம் சொன்னார்கள்: ""திருக்குறளை இப்படி நன்றாகப் புரிந்து கொண்டிருந்தால் சிறைக்கே வந்திருக்கமாட்டோம்''இதில் என்ன வேடிக்கை என்றால், அவர்களிடம் மாணவனாகப் பயின்ற 45 வயதுடைய கைதியும் அவர்களுடன் சேர்ந்து என் வகுப்பில் பயின்று வருகிறார். மாணவர் ஆசிரியரை அடையாளம் கண்டு கொண்டு தன்னை அறிமுகப்படுத்தியபோது ஆசிரியருக்கு அந்த சிறுவயதில் பார்த்த மாணவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.ஒரு கைதி. அவர் மீது 13 க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருந்தன. அதில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். இப்போது முற்றிலும் மாறிவிட்டார். வயது 48 இருக்கும். இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புத் தேர்வில் 617 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். சிறையில் அவரை ஓய்வறை, தியான மண்டபம், நூலகம், பள்ளிக்கூடம் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. பிற மாநிலக் கைதிகளுக்கும் தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறேன். தமிழைத் தவிர பிற மொழிகள் எவையும் எனக்குத் தெரியாது. கைதிகளுக்கும் அவர்களுடைய தாய்மொழி தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. இருந்தாலும் கொல்கத்தாவைச் சேர்ந்த கைதி ஒருவருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தேன். அவர் 10 வகுப்பில் தமிழ்த் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். இந்த நான்கைந்து ஆண்டுகளில் 400 பேருக்கும் மேல் கற்றுக் கொடுத்து இருக்கிறேன். சிறையில் ஆசிரியராக வருவதற்கு முன்பு கைதிகளைக் கொடூரமானவர்கள் என நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அந்த கருத்தை அடியோடு மாற்றிக் கொண்டிருக்கிறேன். கைதிகளை இல்லவாசி என்றும், சிறைக் கண்காணிப்பாளரை இல்லத் தந்தை என்றும் அழைக்கும் பழக்கம் இப்போது உள்ளது. கைதிகளுக்குத் தண்டனை கொடுக்க அல்ல சிறைச்சாலை, அவர்களைப் பண்படுத்தவே என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது'' என்றார்.

திங்கள், 16 ஜனவரி, 2012

prisons becoming shopping complex:



குற்றம் செய்தவர்கள் திருந்துவதற்காக உருவாக்கப்பட்ட மத்திய சிறைச்சாலைகள், தற்போது, "தாபா கடை' ரேஞ்சில் செயல்படுகிறது. பீடிக்கட்டு, 25 ரூபாய்க்கும், குடல்கறி, 50 ரூபாய்க்கும், மொபைலில் ஒரு கால் பேச, 10 ரூபாய் என்ற வகையிலும், அங்கு பணியாற்றும் காவலர்கள் மூலம் அரங்கேறி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், சென்னை, மதுரை, வேலூர், சேலம், பாளையங்கோட்டை, கடலூர், திருச்சி, கோவை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள், திருந்தி வெளியில் செல்ல வேண்டும் என்பதற்காக சிறைக்குள் அடைக்கப்படுகின்றனர். ஆரம்பத்தில், கட்டுப்பாடுகளுடன் செயல்பட்ட சிறைச்சாலைகள், அரசியல்வாதிகள் உள்ளே நுழைந்தபின், சுகமாக வாழும் சுற்றுலாத்தலம் போல் மாறிவிட்டது. ஒன்றும் தெரியாத அப்பாவிகள், ஆத்திரத்தில் அறிவை இழந்து தண்டனைக்கு ஆளாகுபவர்கள், மத்திய சிறைக்குள் செல்லும்போது, அவர்களை சீனியர் கைதிகள் அடிமைப்போல் நடத்தும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால், பலர் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.

ஒவ்வொரு சிறையிலும், கைதிகளை பார்க்கப்போகும் உறவினர்களிடத்தில், அங்குள்ள காவலர்கள், 100 ரூபாய் வரை வசூலிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, காவலர்கள், நீதிமன்றம் செல்லும் கைதிகள் மூலம், பீடிக்கட்டு, கஞ்சா, மொபைல், சிம்கார்டு, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் வாங்கி வரப்பட்டு, கூடுதல் விலைக்கு சிறையில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஒரு பீடிக்கட்டின் விலை, 25 ரூபாய், மொபைலில் பேசுவதற்கு, 10 ரூபாய், கஞ்சா பொட்டலம், 50 ரூபாய், குடல்கறி(போட்டி), 50 ரூபாய்க்கு விற்பதாகவும், ஜாமினில் வெளியில் வரும் கைதிகள் மூலம் தெரியவந்துள்ளது.

சேலம், கோவை, மதுரை, கடலூர், திருச்சி உள்ளிட்ட மத்திய சிறையில், இந்த விற்பனை தற்போது கனஜோராக நடந்து வருகிறது. மொபைல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்படுவதாக, சிறை நிர்வாகம் கணக்குகாட்டினாலும், மொபைல் மீண்டும் எவ்வாறு உள்ளே செல்கிறது என்பதை கவனிக்க அதிகாரிகள் தயங்குகின்றனர். ஓரிரு பெண்கள் கிளைச்சிறைகளிலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. உயர் அதிகாரிகள், கைதிகளிடம் சிறையில் உள்ள நிலை குறித்து விசாரிக்கும்போது, உண்மையை சொல்வதற்கு, அங்குள்ள காவலர்கள் தரப்பில் தடை போடப்படுகிறது. மீறி உண்மையை கூறினால், அவர்களை பழிவாங்கும் செயல் அரங்கேறுகிறது. நான்கு சுவற்றுக்குள் நடப்பது வெளி உலகத்துக்கு தெரியாது என்பதால், சிறைத்துறை அதிகாரிகளும், காவலர்களும், தங்கள் இஷ்டத்துக்கு செயல்படுகின்றனர் என்ற பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.

சேலம் மத்திய சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிறைச்சாலை என்பது முன்பை விட இப்போது சுகபோகமாக வாழும் வகையில் உள்ளது. 2003ம் ஆண்டுக்கு முன், பீடி, மூக்குப்பொடி, ஹான்ஸ் போன்றவை கேன்டீன் மூலமாகவே விற்பனை செய்தோம். அதன்பின், அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. சிறை வளாகத்தில் குறிப்பிட்ட இடங்களில் பீடி குடிக்கக்கூடாது என்று உள்ளது. ஆனாலும், சிலர் குடித்துக்கொண்டு தான் இருக்கின்றனர். நாங்கள் ரொம்ப நெருக்கடி கொடுத்தால், கலவரம் தான் வரும். பல சிறைச்சாலைகளில், பீடியால் தான் பிரச்னையே உருவாகுகிறது. இப்போது, கைதிகளுக்கு, கேன்டீனில், காலை, 7 மணிக்கு சம்சா, 8 மணிக்கு இட்லி, 10 மணிக்கு டீ, வடை, மதியம் 1 மணிக்கு, சிறை மூலம் வழங்கப்படும் சாப்பாடு, மாலை 4 மணிக்கு டீ, 6 மணிக்கு, இரவு 8 மணிக்கு உப்புமா, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு உறவினர்கள் மூலம் கொடுக்கும் பணத்தை பராமரிப்பதற்கென்றே தனி அக்கவுண்ட் உள்ளது.

கைதிகளை பார்க்கும் உறவினர்கள், காவலர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை. சிலர் செய்யும் தவறால் மொத்த சிறை நிர்வாகத்துக்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது. கறியை பொறுத்தமட்டில், புதன்கிழமைகளில் கொடுக்கிறோம். அதை சிலர் கூடுதல் விலைக்கு, விற்பனை செய்வர். எதற்காக தப்பு செய்தவன், அடிக்கடி சிறைக்குள் வருகிறான். எல்லாவித சவுகரியங்களும் இருக்கிறதனால் தான். கைதிகள் திருந்தியதெல்லாம் அந்த காலம். யாராவது பொது நல மனு போட்டால், சிறைக்குள் கட்டுப்பாடுகள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

வெள்ளி, 16 டிசம்பர், 2011

Political prisoner alleges abuse by prision guard to make false confession


Political prisoner alleges abuse by prision guard to make false confession

[TamilNet, Thursday, 15 December 2011, 17:27 GMT]
Navaneethan, a guard in Batticaloa Prison, who allegedly receives instructions from SL Deputy Minister Vinayamoorthy Muralitharan, has been threatening a political detainee at the prison to to give a confession saying that he shot and killed Satchi master inside the prison on 15 July 2004. The victimised political detainee, Gunaseelan, made a complaint Wednesday when he was present in front of the Batticaloa Magistrate. The Magistrate directed the officer in charge of the Batticaloa prison to arrest the prison guard, legal sources in Batticaloa said.

The magistrate direction followed the complaint in open court by the detainee Gunaseelan on Wednesday that he had been threatened and attacked by prison guard Navaneethan to make a confession accepting that he had shot dead Sachchi master while he was being detained along with him.

The magistrate was forced to act because it was an open knowlege that the assassin was a different man.

Kanapathipillai Mahendran alias Satchi Master, a key associate of Vinyagamoorthy Muralitharan alias Karuna, was shot and killed inside the Batticaloa prison on 15 July 2004.

The gunman, M. Puvitharan, who killed Satchi Master and another Karuna associate, surrendered to the SL Police in front of ICRC and Sri Lanka Monitoring Mission (SLMM) officials on the same day.

Puvitharan was later transferred to a prison in Moneragala in the Uva province. The accused had demanded that he be left in Batticaloa prison as a condition when he surrendered.

Legal sources said the latest revelation was descriptive of how confessions are being obtained from political prisoners.

Related Articles:
19.07.04   Batticaloa jail murder accused transferred to Moneragala
15.07.04   Key Karuna associate shot dead in Batticaloa jail

சனி, 17 ஏப்ரல், 2010

சிறைச்சாலைகளில் நூலகங்கள்: தங்கம் தென்னரசு



சென்னை, ஏப்.16: "சிறைச்சாலைகளில் சிறகுகள்' என்ற திட்டத்தின் கீழ் புழல் மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் நூலகங்கள் ஆரம்பிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.​சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பு:​ திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் மாவட்ட நூலக அலுவலர் அலுவலகம் தோற்றுவிக்கப்படும். 10-ம் வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்களில் தேர்ச்சி பெறும் நூலகப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.​"சிறைச்சாலைகளில் சிறகுகள்' என்ற திட்டத்தின் கீழ் புழல் மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் நூலகங்கள் ஆரம்பிக்கப்படும். பொது நூலக இயக்கத்தின் கீழ் வாடகை கட்டடங்களில் செயல்படும் நூலகங்களுக்கு சொந்த நூலகக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.​ அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு, மதிப்பெண் அட்டவணைகளை சரிபார்க்கவும், அசல் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மையறியவும் ஏதுவாக ரூ.20 லட்சம் செலவில் ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பராமரிப்பு செய்யப்படும் என்று அறிவித்தார்.
கருத்துக்கள்

நல்ல திட்டம். பாராட்டுகள். (சிறைச்சாலைகளில் இப்பொழுதும் பள்ளிகளும் அதனால் நூலகங்களும் உள்ளன அல்லவா? )

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar thiruvalluvan
4/17/2010 3:08:00 AM

வெள்ளி, 17 ஜூலை, 2009



. வெலி ஓயா பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றம்

.வணங்கா மண் கப்பல் மூலம் பணம் கொள்ளையிட
நினைக்கும் இலங்கை அரசு


. கொக்குவிலில் ஆயுதக் கும்பலால் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்
.இலங்கையில் சிறைச்சாலைகளும் இராணுவ மயமாக்கப்பட்டு வருகின்றன
பிரசுரித்த திகதி : 16 Jul 2009

சிறைச்சாலைகளில் உள்ளவர்களைக் காண வரும் பார்வையாளர்களையும், சிறைச்சாலை ஊழியர்களையும் சோதனை செய்வதற்காக ராணுவத்தினரதும் போலீசாரினதும் உதவிகளைப் பெறுவதென இலங்கையின் சிறைச்சாலை திணைக்களம் முடிவெடுத்துள்ளது. இதன்படி சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர். டி சில்வா கருத்துக் கூறியபோது, இலங்கை முழுவதும் உள்ள சிறைச்சாலைகளினுள்ளே பல வன்முறைகள் குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகவும் அவற்றைக் குறைக்கும் முகமாகவே சகலரையும் சோதனை செய்து உள்ளே அனுப்புவதற்காக ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை இச்சோதனைகள் தலைமைச் சிறை அதிகாரியின் முன்னிலையிலேயே இடம்பெறும் என்றும் கூறியுள்ளார். எனினும் இம்முடிவானது சிறையில் உள்ளவர்கள் மேலும் மேலும் ராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவதற்கும், இலகுவில் குற்றம் சாட்டப்பட்டு சித்திரவதை போன்றவற்றுக்குள்ளாக்கப்படவும் ராணுவத்தினருக்கு மறைமுகமாக வசதி செய்து கொடுக்கப்படுவதாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.