சனி, 14 நவம்பர், 2009

மிழர்கள் மீண்டும் கிளர்ந்து எழுவார்கள்: ராஜபட்சவுக்கு பொன்சேகா எச்சரிக்கை



கொழும்பு, நவ. 13: ""தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது; ஆனால் சகோதர குடிமக்களான தமிழர்களிடையே அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதில் அரசு தோற்றுவிட்டது. அத்துடன் ராணுவத்தின் மீதே சந்தேகப்பட்டு அதன் அதிகாரங்களையும் முக்கியத்துவத்தையும் குறைத்து வருகிறது. எதிர்காலத்தில் தமிழர்கள் மீண்டும் கிளர்ந்து எழுவார்கள், அதன் விளைவை இலங்கை அனுபவிக்கப் போகிறது'' என்று ராணுவத்தின் தலைமைத் தளபதி பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ள ஜெனரல் சரத் பொன்சேகா எச்சரித்திருக்கிறார்.
இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் மகிந்த ராஜபட்சவை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பொன்சேகா போட்டியிடுவார் என்ற பேச்சு சில நாள்களாக அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்து பொன்சேகா கடிதம் எழுதியிருந்தார். அதன் மீது இதுவரை முடிவு எடுக்காத அதிபர் ராஜபட்ச, திடீரென வெள்ளிக்கிழமை அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்டு, பதவியிலிருந்து ""உடனடியாக'' விடுவித்துவிட்டார் என்று தெரிகிறது.
இந்த நிலையில், பொன்சேகா எழுதியுள்ள கடிதம் அதிபரது நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கும் குற்றப்பத்திரிகை போலவே இருக்கிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமரசிங்க ஊர்ஜிதம்: பொன்சேகா ராஜிநாமா செய்தது உண்மைதான் என்று உறுதிப்படுத்திய மனித உரிமைத் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க, கடிதம் மீது அதிபர் நடவடிக்கை எடுக்கும் முன்னதாகவே அவற்றைச் செய்தி ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியது தார்மிகமற்ற, நேர்மையற்ற செயல் என்று கண்டித்தார்.
அதிபர் ராஜபட்சவுக்கு, ஜெனரல் பொன்சேகா எழுதிய காட்டமான கடிதம் வருமாறு:
என்னால்தான் வெற்றி: "என்னுடைய தலைமை, தொலைநோக்குப் பார்வை, வழிநடத்தல் காரணமாகத்தான் விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றிகொள்ள முடிந்தது என்று கூறினால் அது மிகைப்படுத்தல் அல்ல என்பது உங்களுக்கே தெரியும். அதிபர் பதவி வகிக்கும் நீங்கள் அளித்த அரசியல் ரீதியான ஆதரவும் அந்த வெற்றிக்குக் காரணம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
"விடுதலைப் புலிகளை இந்த ஆண்டு மே மாதம் வெற்றி கண்ட பிறகு நீங்கள் பேசிய பேச்சும், நடந்துகொண்ட விதமும் ராணுவத்தின் மீதும், என் மீதும் நீங்கள் நம்பிக்கை இழந்து வருகிறீர்கள் என்பதை நன்றாகவே உணர்த்தியது.

திடீர் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வேன் என்று கருதியே என்னை தரைப்படை தலைமை தளபதி பதவியிலிருந்து ஜூலை மாதம் விலக்கினீர்கள்.
தயார் நிலையில் இந்திய ராணுவம்: இலங்கை ராணுவம் திடீர் புரட்சியில் ஈடுபடும் என்று அஞ்சி, அப்படி ஏதும் நடந்தால் துணைக்கு உடனே விரைந்துவந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று அக்டோபர் 15-ம் தேதி இந்திய ராணுவத்துக்குத் தூது அனுப்பி அவர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி கூறினீர்கள். இதைவிட எங்களுக்கு வேறு என்ன அவமானம் வேண்டும்.
மிகத் திறமைவாய்ந்த, ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்க ராணுவங்களில் இலங்கையும் ஒன்று என்று நாங்கள் பெற்றிருந்த புகழைச் சீர்குலைக்கும் வகையில் உங்களுடைய செயல் அமைந்துவிட்டது.
புலிகளுக்கு எதிரான போரை தீரத்துடனும் திறமையாகவும் வழிநடத்தினேன் என்பதற்காக இலங்கையின் ஒவ்வொரு ராணுவ வீரனும் என்னை, தங்களுடைய வீர தளபதியாக ஏற்றுக்கொண்டு விசுவாசம் காட்டியதால் உங்களுக்கு என் மீதும், ராணுவத்தின் மீதும் சந்தேகம் வந்தது.
ராணுவத்துக்கு வலு கூடுவது குறித்து நீங்கள் அஞ்சினீர்கள். அதை தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வெளிப்படையாகவே கூறினீர்கள். நெருக்கடியான நேரத்தில் ராணுவத்தைப் புகழ்ந்து பேசிவிட்டு பிறகு நம்பிக்கை இல்லாமல் பேசியது கண்டு நான் வருந்தினேன்.
என்னை முப்படைகளின் தலைமை தளபதியாக நியமித்தபோது மிகவும் சக்திவாய்ந்த பதவியாகத்தான் இருக்கும் என்று நம்பினேன். முப்படைகளின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு ""ஒருங்கிணைப்பாளர்''தான் நான் என்பதை பின்னர் உணர்ந்து கொண்டேன்.
""மூன்று படைகளுக்கும் கட்டளை பிறப்பிக்கும் பதவி உங்களுக்கு என்றால், உங்களுடைய பதவிதான் மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துவிடும்'' என்று பாதுகாப்பு அமைச்சரும், உங்களுடைய சகோதரருமான கோத்தபய ராஜபட்சவும் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
எனக்கு அடுத்தபடியாக ஜெனரல் ஜகத் ஜெயசூரியாவை ராணுவத் தளபதியாக நியமித்தீர்கள், நான் பரிந்துரைத்தவரை நிராகரித்தீர்கள். ஜகத் ஜெயசூரியா மீது விசாரணை நடைபெறும் விவகாரம் ஒன்று இருக்கிறது என்று தெரிந்தும் அவருக்குப் பதவி தந்தீர்கள். இதனால் ராணுவத்தில் ஒழுங்கும் நேர்மையும் சீர்குலைய ஆரம்பித்திருக்கிறது.
வெறும் சோற்றுப்பட்டாளமாக இருந்த ராணுவம், வீரம் செறிந்த போர்ப்படையாக என் தலைமையில் மாறியது. இப்போது மீண்டும் பழைய கதை ஆரம்பித்துவிட்டது. ராணுவத்திலிருந்து ஓய்வு பெறுகிறவர்களும் விட்டு ஓடுகிறவர்களும் அதிகரித்துவிட்டார்கள். புதிதாகச் சேருகிறவர்களைவிட விட்டு ஓடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
மக்களுக்கு சமாதானத்தை அளிக்கத் தவறிவிட்டது அரசு; சிறுபான்மைச் சமூகமான தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட அரசு நிறைவேற்றவில்லை. அரசு உரிய வகையில் திட்டமிடாததால் தமிழர்கள் வாழும் சூழல் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. முகாமில் இருக்கிறவர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்களுடன் போய் தங்கிக்கொள்ள அனுமதித்திருக்க வேண்டும். தமிழர்களின் அன்பையும் ஆதரவையும் பெறும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை. இது இப்படியே தொடர்ந்தால் நமது ராணுவத்தின் வெற்றியே அடையாளம் இல்லாமல் பாழாகிவிடும். தமிழர்கள் மீண்டும் கிளர்ந்து எழுவார்கள். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
உரிமைகள் மறுப்பு: போரினாலும் அதன் பிறகு அரசு காட்டும் மெத்தனமான நிர்வாகத்தாலும் மக்களுடைய பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. அரசில் ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடுகின்றன. அரசுப் பணம் கோடிக்கணக்கில் விரயமாகிறது. பத்திரிகைககளின் கருத்துச் சுதந்திரமும், ஜனநாயக உரிமைகளும் காலில்போட்டு நசுக்கப்படுகின்றன' என்று கடிதத்தில் எழுதியிருக்கிறார் பொன்சேகா.

கருத்துக்கள்

1/2 உலகிலேயே மதுவையும் மாதுவையும் தீண்டாத ஒரே கட்டுப்பாடும் ஒழுக்கமும் உள்ள படை ஈழப்படைதான். போட்டி போட்டுக் கொண்டும் இந்தியா முதலான நாடுகளின் வஞ்சகத் துணையுடனும் கொடூரமான முறைகளிலும் கூட்டம் கூட்டமாகவும் தமிழ் மக்களைக்கொன்ற விட்டு அதிகாரப் போட்டியால் விடுதலைப் புலிகள் வேறு தமிழர்கள் வேறு என்பது போல் எழுதியுள்ளான். ஒவ்வொரு குடும்பத்திலும் விடுதலைப்படையினர் அல்லது சிங்களக்காடையால் துன்புறுத்தப்பட்டவர்கள் இருக்கும் பொழுது எவ்வாறு வேறுபடுத்த முடியும்? சிங்களப் படையிலிருந்து எவரேனும ஒருவர் இனப்படுகொலை செய்தது தவறு என்ற மனச்சான்றின் உந்துதலைத் தெரிவித்து உண்மைகளை வெளிப்படுத்தினால் அவரை நம்பலாம். அதிகாரப் போட்டியால் எஞ்சியுள்ள தமிழர்கள் மீது பரிவும் பற்றும் உள்ளது போல் நடிக்கும் எவனையும் நம்பக் கூடாது. (தொடர்ச்சி 2/2காண்க)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:12:00 AM

(1/2 இன் தொடர்ச்சி) எனினும் அதிகாரப்போட்டியால் சிங்களப் படையும் அதிகார வெறியர்களும் இரண்டுபட்டு அடித்துக் கொண்டு சாகட்டும்! தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் ஆட்சியேற்றுத் தண்டனை கொடுப்பதற்குத்தேவையின்றி அழிந்து ஒழியட்டும்! மனித நேயமுள்ள சிங்களர்களே தமிழர்களுடன் ஒருங்கிணைந்து உங்கள் தீவை மனிதநேயம் மிக்கதாக மாற்றுங்கள். தனித்தனி உரிமையுடைய தமிழ்ஈழ - இலங்கைக் கூட்டரசு நாடுகளாக நாட்டமைப்பை மாற்றுங்கள். தனித்தனி நாடாக இணைந்த தீவாக மலர்ந்து வாழ்ந்து நல்லரசுகளாக ஆக்குங்கள்! காங்கிரசுஅரசு முதலான பிற நாட்டு வஞ்சகர்களிடம் உங்கள் மக்களைக் காவு கொடுக்காதீர்கள்! வாழ்க தமிழ் ஈழம்! வாழ்க இலஙகை! ஓங்குக மனித நேயம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:11:00 AM

His Excellency the President Through the Secretary, Ministry of Defence, Public Security, Law and Order Presidential Secretariat COLOMBO 12 November 2009 Your Excellency REQUEST TO RETIRE FROM THE REGULAR FORCE OF THE SRI LANKA ARMY 1. I, General G S C Fonseka RWP RSP VSV USP rcds psc presently serving as the Chief of Defence Staff, was enlisted to the Ceylon Army on 05th Feb 1970 and was commissioned on the 01st June 1971. On the 6th Dec 2005 due to the trust and confident placed on me, Your Excellency was kind enough to promote me to the rank of Lieutenant General and appoint me as the Commander of the Sri Lanka Army in an era when the Country was embroiled with the menace of a bloody terrorism and was in a stalemate state after having toiled for a solution politically or otherwise for over 25 years without a success. 2. During my command of 3 years and 7 months, the Sri Lanka Army managed to eradicate the terrorist movement having apprehended an unbelievable stock

By Ragavachari Iyangar
11/14/2009 3:42:00 AM

You're the perpect president for all Srilankans General sarath fonseka. We all Srilankan support to you. We know that you will solve the ethnic problems in Srilanka. You will treat all srilanka Sinhalese , tamils and Muslims in the same way. We all Sinhala , Tamil and Muslum people build Srilanka number 1 country in Asia like Singapore.

By Peter
11/14/2009 3:22:00 AM

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள். -பி.கே. விஜய நிவாஷ் www.tamilspy.com

By Thamilan
11/14/2009 2:52:00 AM

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள். -பி.கே. விஜய நிவாஷ் www.tamilspy.com

By Thamilan
11/14/2009 2:52:00 AM

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்! பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார். பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார். 07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ

By Tamilan
11/14/2009 2:46:00 AM

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்! பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார். பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார். 07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ

By Tamilan
11/14/2009 2:46:00 AM

**யார் தவறு? - பாகம் 19: சூழ்ச்சியும் தமிழர் வீழ்ச்சியும்! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை!m U N A R V U K A L . C O M

By ELLALAN
11/14/2009 1:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக