புதன், 11 நவம்பர், 2009

காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்



சென்னை, நவ. 10: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை மாநிலத் தலைவர் கே.வீ. தங்கபாலு, இணையதளத்தில் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி. சுதர்சனம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தங்கபாலு கூறியதாவது:
உறுப்பினர் சேர்ப்பு இயக்கப் பணிகள் நவம்பர் 10-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும்.
18 வயது நிரம்பிய அனைவரும், ரூ.3 உறுப்பினர் கட்டணம் செலுத்தி உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்.
உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் சுதந்திரமாக நடைபெறவும், அனைவருக்கும் உறுப்பினர் படிவம் எளிதாக கிடைக்கவும், தமிழ்நாடு காங்கிரஸ் இணையதளத்தில் உறுப்பினர் படிவம் வெளியிடப்பட்டுள்ளது என்றார் தங்கபாலு.

கருத்துக்கள்

இராகுல்காந்தி வருகையின் பொழுதே கோடி்ககணக்கில் சேர்கக்ப்படுவதாகக் குதித்தும் ஒன்றும் பயன் இல்லையா? மானமுள்ள அறிவுள்ள உணர்வுள்ள மக்கள் யாரும் கொலைகாரக் கட்சியில் சேர வேண்டா. அப்படிச் சேருபவர்கள் தலைமுறையினருக்குக் கடவுள் தண்டனை கொடுக்கக்காத்திருக்கிறார். எனவே இனப்படுகொலைக் கட்சியில் சேராமல் உணர்வூட்டுவோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/11/2009 3:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக