ஞாயிறு, 8 நவம்பர், 2009

கச்சத்தீவை மீட்க ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்: ராமதாஸ்



சென்னை, நவ. 7: கச்சத்தீவை மீட்க ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவுக்குச் சொந்தமான அந்தமான் தீவுகள், இலங்கையின் கடல் எல்லைப் பகுதிக்குள் வருகிறது என்றும், அந்தமான் தீவுகள் இலங்கைக்கே சொந்தம் என்றும் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகலகாமா அறிவித்திருக்கிறார். கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்கு மிகத் தாராளமாக விட்டுக்கொடுத்தது. அதன் காரணமாகவே, அந்தமான் தீவுகளும் எங்களுக்கே சொந்தம் என்று இலங்கை மார்தட்டுகிறது. இலங்கையில் சீனா புதிதாக கால்பதித்துள்ள நிலைமையும், இலங்கைக்கு முன் எப்போதும் இல்லாத துணிச்சலை கொடுத்திருக்கிறது. இலங்கையின் இந்த மண் ஆசைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு ஒரேவழி, இலங்கைக்கு தவறாக தாரை வார்க்கப்பட்டுள்ள கச்சத்தீவை மீட்டு தமிழகத்தோடு இணைக்க வேண்டும். இதற்கு தமிழகம் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளில் நமது செயல்பாடுகள் நாட்டின் கட்டுக்கோப்பை குலைத்து விடக் கூடாது என்பது முக்கியமானதுதான். அதேநேரத்தில் நமது உரிமைகளுக்காகவும், நமக்குச் சொந்தமான மண்ணை மீட்கவும் மத்திய அரசிடம் போர்க்குரல் எழுப்புவதில் தவறில்லை. இத்தகைய உணர்வோடுதான், அண்ணா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், சேலம் உருக்காலைக்காகவும், வேறு சில கோரிக்கைகளுக்காகவும் "எழுச்சி நாள்' கொண்டாடியிருக்கிறார். அந்த வழியில் இப்போதும் இலங்கையிடம் பறிகொடுத்துவிட்ட கச்சத்தீவை மீட்கவம், அதன் மூலம் தமிழக மீனவர்களைக் காக்கவும், நதிநீர் பிரச்னைகளில் நமது உரிமைகளை நிலைநிறுத்தவும் பழைய எழுச்சியோடு செயல்பட அனைவரும் முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துக்கள்

தமிழகக்கட்சிகளுக்கு, உருப்படாத காங்கிரசுக்கட்சியின் மீது ஒரு கண் இருக்கும் வரை எதுவும் உருப்படாது. இந்திய மண்ணில் இருந்து காங்கிரசு கட்சி அகற்றப்படும் வரை இந்தியப்பாதுகாப்பு என்பது ஒரு கேள்விக் குறியே! தமிழர்கள் இன மானத்துடன் வாழக் குறைந்தது தமிழ்நாட்டில் இருந்தாவது காங்கிரசு ஓட ஓட விரட்டி அடிக்கப்பட வேண்டும். காங்கிரசு கட்சியில் இருப்பதைத் தலைகுனிவாகவும் அவமானமாகவும் ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும். ஆனால், பண ஆசையும் பதவி ஆசையும் உள்ளவர்கள் உள்ளதனால் அதற்கான வாய்ப்பு இல்லை. எனவே. கட்சத் தீவை மீட்கும் வாய்ப்பே இல்லை. ஆதலின் தமிழ் ஈழம் அமையும் வரை பொறுமையாக இருக்க வேண்டியதுதான்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/8/2009 4:27:00 AM

ORU PAYALUM VARAMAATAN AIYAA NAAMA NAMB VALAIYAI PAKALAM

By vanniyakannan
11/8/2009 2:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக