வியாழன், 17 செப்டம்பர், 2009

தமிழகத்தை மீட்க வேண்டும்: வைகோ



திருச்சி, செப். 16: ஜனநாயகத்தை அழிக்க நினைப்பவர்களை எதிர்த்து நாம் போராட வேண்டும்; அழிவுப் பாதையில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்க வேண்டும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. திருச்சியில் மதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திருச்சி மண்டல மாநாட்டில் அவர் பேசியது: "அண்ணாவுக்கு விழா எடுக்கும் உரிமை கொண்ட இயக்கம் மதிமுகதான். தமிழகத்தில் ஜனநாயகத்தை அழித்து பணநாயகத்தை உருவாக்கினீர்கள். அப்படியும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 12 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் 14 லட்சம்தான். தமிழகத்தின் உரிமைகள் எல்லாம் இன்று பறிபோய் கொண்டிருக்கின்றன. தமிழ் மான, மரபு உரிமைகள் எல்லாம் பாழாகிக் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் ஆட்சி நடத்துபவர்களை அகற்றும் கடமை நமக்கு உண்டு. அன்று ஈழத்தில் 25 தமிழர்கள் இறந்ததற்கு பதறிப் போனார் அண்ணா. ஆனால், இன்று நாதியற்ற நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனர். மிருகத்தை விட கொடுமையான முறையில் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். அமெரிக்க நாட்டில் விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அங்குள்ள நகரங்களில் அவர்களைப் பற்றிப் பேச உரிமை உண்டு. ஆனால், தமிழகத்தில் அவர்களைப் பற்றி பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆடை அணிய வேண்டும் என்ற முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவன் தமிழன். ஆனால், ஈழத்தில் ஆடையற்ற நிலையில், கை, கால்களைக் கட்டி கொடுமைப்படுத்தப்பட்டு தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். தமிழர்களிடம் இலங்கையில் நடக்கும் அவலங்களை எடுத்துகூறும் குறும்படங்களைக் கொண்டு செல்ல வேண்டும். உலகெங்கும் இருக்கும் தமிழ் சகோதர, சகோதரிகள் எல்லாம் சேர்ந்து நாம் இருக்கும் சமுதாயத்தை புதிய தேசமாக மலரச் செய்ய வேண்டும். விலைவாசி உயர்வால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் காரணமாக உள்ள இந்தத் தமிழக அரசை தூக்கியெறிய நாம் மக்கள் சக்தியை திரட்ட வேண்டும். ஈழத்தில் தமிழ் ஈழம் மலர அனைவரும் சபதம் ஏற்போம்' என்றார் வைகோ.

கருத்துக்கள்

தமிழகத்தை மீட்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், மீட்பதுமற்றொரு கொள்ளைக் கும்பலிடம் ஒப்படைக்கவா? வைக்கோ தன் தலைமையில் ஓர் அணியை உருவாக்கினார் எனில் நன்று. ஆனால், தம் கட்சியினரை முதலில் அதற்கு ஆயத்தப்படுத்த வேண்டும். துணிந்து இம்முயற்சியில் இறங்கினார் எனில் அவர் கனவு நனவாகும். ஈழத் தமிழர்களின் விடியலுக்காகவாவது அவர் இதனைச் செய்ய வேண்டும். இல்லையேல் பாறையில் தூவிய விதைகளாக இவரது கருத்துகள் பாழாகும். மக்களைத் திரட்டும் முயற்சியில் வைக்கோ வெல்க! தமிழ் ஈழம் வெல்க! ஈழ-உலக நட்புறவு ஓங்குக!

வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/17/2009 2:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திரு சுபாசு அவர்களே நன்றி. தமிழர்க்கு எதிராக எழுதுபவர்கள் தமிழ்ப்பெயரிலோ தமிழின உணர்வாளர்கள் பெயரிலோ ஒளிந்து கொண்டுதான் தங்கள் தவறான நச்சுக் கருத்தை எழுதுகிறார்கள். இதிலிருந்தாவது மானங் கெட்டவர்கள் உணர்ந்து திருந்துகின்றார்களா என்றால் இல்லை. சிலர் தமிழர்கள் மேல் - ஈழத் தமிழர்கள் மேல் -பரிவு இருப்பதுபோல் காட்டிக் கொண்டு தமிழர்க்கு எதிரான உணர்வுகளைப் பதிகின்றார்கள். ஆக அவர்களுக்கும் கேடயமாகத் தமிழ் உணர்வுதான் தேவைப்படுகிறது.அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான உணர்வாளர்களுக்கு அவர்கள் கலப்பது 'பாலையா பாலிடாலையா' என்பது நன்றாகவே புரியும். பிறகு ஏன் இதில் நச்சுக் கருத்துகளைப் பதிந்து தங்கள் பெயர்களைக் கெடுத்துக் கொள்கிறார்கள். ஒருவேளை பெயர்களே இல்லாத 'அனாதைகளாகத்' தங்களை முடிவெடுத்துக் கொண்டதாலோ இங்ஙனம் துணிந்து தங்கள் மேல் அமிலத்தைக் கொட்டிக் கொளகிறார்கள். அல்லது வாங்கும் கூலிக்கு மாரடிக்கின்றார்களா? எப்படியோ எல்லாப் பகுதியிலும் அங்ஙனம் கருத்துகளைப் பதிவோரை இப்பகுதி வாயிலாகத் தினமணி இணைய நேயர்கள் சார்பாகக் கண்டிக்கின்றேன். புதைகுழியில் விழும் முன் திருந்திக் கொள்ளுங்கள்;
By Ilakkuvanar Thiruvalluvan
9/17/2009 1:11:00 PM




தலைவன் எவ்வளி குடிகளும் அவ்வளி. தமிழக ஊடகங்களும் சிங்கள அரசிடம் பிச்சை வாங்கி புழைப்பது பிடிபட்ட நிலையில்கூட வெட்கப்படவில்லை. அதுதான் தலையே வாங்குகிறதே என்ற நிலையில் தமிழகம். இங்குகூட சின்ன சின்ன முசுறுகள் வந்து ஐந்தோ பத்துக்கோ ஒரு நேர சாப்பாட்டுக்கோ கமன்ட் என்'ற பெயரில் தம்மால் இயன்'றதை எழுதி புழைப்பு நடத்துகின்'றன. அதுவும் ஒரு சில்லறை வியாபாரம்தான். இந்த நிலையில் உன் நேர்மையும் தமிழுணர்வும் இப்போதைக்கு தமிழகத்தில் வாழாது. தமிழகம் முதலில் பிச்சை எடுக்கும் நிலையிலிருந்து முன்னேறவேண்டும். அதன்பிந்தான் எதுவும் தமிழகத்தில் சாத்தியமாகும்.

By pichchaivelu
9/17/2009 11:59:00 AM

Mr Vaiko, I respect your consistant stand regarding ''free tamil eelam''. But i fail to understand your ''ina manam'' by aligning for electoral gains with tamil throki like jayalalitha. If you really wish to liberate tamilnadu from moneypolitics/cineculture/selfish, short sighted political culture- then even election loss does not matter because masses/people have to be ''informed/educated'' to identify the traitors and selfish to really liberate tamilnadu to the leadership of than mana tamilan who will have statesman like vision for 10/20/30 year projects/devolopments, whom the tamils can be proud to be identified with ..people with character of sacrifice like prabakar, kamaraj, periyar, MGR, Nedumaran, seeman!!

By babu
9/17/2009 10:50:00 AM

கிளம்பிடாயா!

By rainshot
9/17/2009 10:30:00 AM

9/17/2009 10:17:00 AM
Ilakkuvanar,David, Navi Chennai , Keep your comments here . At least some genuine tamils will understand our feelings and eelam cause.
By nee
9/17/2009 10:04:00 AM

Mr.Vaiko YOUR only weak point is your aliance with Jayalalitha. Jaya is not tamil and she has no real feeling of tamils. She is enemy no1 for tamils like thiruttu payal Karunnidhi is no1 super throki. Please come out and fight with other like minded parties. Jaya will not respect tamils and will not respect you also.

By nee
9/17/2009 10:00:00 AM

Not sure how he can fight for Tamil cause when he is in alliance with AIADMK. Jaya says in public she is asking for seperate ellam land on inputs from ravi shankar why she will not believe Vaiko and others , she doesn't even pass on the credit to the alliance parnter how she is going to deliver good for Tamil people. Do not fool Tamil people for your own sake. This is a problem. You need to come out and fight we will join you.

By sakthivelan
9/17/2009 9:21:00 AM

திரு.வைகோ அவ்ர்களே: வெறும் பேச்சு எதையும் விளைவிக்காது என்பது உங்களுக்கு தெரியும். எப்படி ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வெற்றி அடைந்தது என்பதும் உங்களுக்கு தெரியும். எனவே உங்கள் பாதை எது என்பதை நீங்கள்தான் தேர்ந்து எடுக்க வேண்டும். தமிழ் மாக்களுக்கு ஈன உணர்வுதான் அதிகம். வெந்ததை தின்று விதி வந்து சாவதுதான் அவர்களுக்கு தெரியும். அவர்கள் பணத்துக்காக எதையும் விட்டுக் கொடுக்க தயாராகிவிட்டார்கள். எனவே அவர்களை ஆபாச சினிமாக்கள், சாராயம், அந்நிய மோகம் இவற்றில் இருந்து வெளியே கொண்டுவந்து மறுபடியும் மனிதர்களாக மாற்ற மிகவும் பாடுபடவேண்டும்.

By sbala
9/17/2009 9:15:00 AM

தமிழக தலைவர்களில் எல்லோரும் பணத்தாசை, அதிகாரம், மிரட்டலுக்கு பயந்து விலை போய் விட்டார்கள். ஆனால் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கிறார். அவர் இதற்கு கொடுத்த விலை அதிகம். சுயநல ஜெவை விட்டு விலகி வந்து உலக நாடுகளுக்கு பயணம் செய்து உலக தமிழர்களை ஒன்றிணைத்தால் அவர் வரலாற்றில் அழியா புகழ் பெறுவது உறுதி.

By நவீன் சென்னை
9/17/2009 8:58:00 AM

Ilakkuvanar Thiruvalluvan comments are excellent Regarding this topic also Welldone Mr.THIRU

By Subash
9/17/2009 8:30:00 AM

What ever he is telling is correct, but he has alliance with Mrs.Jayalalitha who is dead against to the tamil and their culture. How he protect tamil and their culture with the help of Mrs. Jayalalitha.

By Abdul Hameed
9/17/2009 5:46:00 AM

long live vaiko

By kovilpatti.sathya
9/17/2009 4:21:00 AM

THIS GUY ONLY TALK(CHATTER BOX) AND HE IS FUNNY ASWEL

By INDIAN-TAMIL
9/17/2009 4:11:00 AM

வைக்கோ தலைமையில் ஓர் அணியை உருவாக்கினார் எனில் நன்று. துணிந்து இம்முயற்சியில் இறங்கினார் எனில் அவர் கனவு நனவாகும். ஈழத் தமிழர்களின் விடியலுக்காகவாவது அவர் இதனைச் செய்ய வேண்டும்.

By karthi
9/17/2009 4:08:00 AM

THIRU VAIGO AVARALE NEENKAL PESIYA INDHA PECHU,,,PESUVADHODU MATTUM ALLAMAL ,,KALATHIL IRANKI SEYALILUM KATTUNKAL...EEZHAM URUVAKA TAMIZHARKALAKIYA NAAM ANAIVARUM ONTRU PATTU PORADUVOM... SILAPERUKKU NAAN SOLVADHU ENNAVENTRAL ,TAMIZHARKAL ANAIVARUM OOR ENAME...IDHIL EZHATHAMIZHARKAL,,,INDIA TAMIZHARKAL ENTRU EEN PIRITHU PARKKIRIRKAL ENTRE THERIYAVILLAI...MUDHALIL NEENKAL ANAIVARUM ENDHA KARUTHU PAKUTHIIL SANDAI PODUVADHAI NIRUTHUNKAL...VAZHKA TAMIZHINAM....BY TANJAI R.RAJESHKANNAN....DUBAILIRUNDU......

By RAJESH PARIMALA..RAM
9/17/2009 4:03:00 AM

THIS GUY LOOK LIKE A MENTAL.

By kuppu
9/17/2009 4:00:00 AM

இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! ஈ.வே.ராவின் கொடி வழி உறவு மந்திரா பேடி! விளக்குமாறுக்கு பட்டுக் குஞ்சம் ஏன்? இராவணன் தமிழன் இல்லை! unarvukal.com/index.php?showforum=183 நிஜ முகங்கள் 9! இயற்குநர் பாரதிராஜாவின் பயிற்சிப் பாசறை! ரஜினியின் புது முகம்! சைமன்(சீமான்) எப்பிடி சாப்பிடுவார்??! unarvukal.com/index.php?showforum=185 unarvukal.com

By சிவபெருமான்
9/17/2009 3:17:00 AM

Tamil Eelam will be formed soon, final victory is ours.

By david
9/17/2009 2:55:00 AM

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக