வெள்ளி, 18 செப்டம்பர், 2009

பெரியாருடன் பிரபாகரன் படம்:
இளங்கோவன் தலைமையில் காங்கிரஸôர் மறியல்



ஈரோடு, செப். 17: ஈரோட்டில் பெரியாருடன் பிரபாகரன் இருக்கும் சுவரொட்டியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, மத்திய முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரியார் பிறந்த நாளையொட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் வியாழக்கிழமை காலை மாலை அணிவித்தனர். பெதிக, தமிழ்தேசப் பொதுவுடமைக் கட்சி சார்பில் அங்கு பெரிய அளவிலான போஸ்டர் வைக்கப்பட்டிருந்தது. அதில் பெரியார் படத்துடன், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படம் இடம்பெற்றிருந்தது. அப்போது பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன், எம்எல்ஏ விடியல்சேகர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தந்தை பெரியார் படத்துடன், பிரபாகரன் படம் இடம்பெற்றுள்ள போஸ்டரை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து முதல்வரிடம் முறையிடப் போவதாக ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார். போலீஸôர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றபோது, பிரபாகரன் படத்தை அகற்றும்வரை மறியல் போராட்டம் தொடரும் என காங்கிரஸôர் தெரிவித்தனர். சாலை மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதே, போலீஸôரும், மாநகராட்சிப் பணியாளர்களும் சர்ச்சைக்குரிய போஸ்டரை அங்கிருந்து அகற்றினர். இதையடுத்து காங்கிரஸôர் போராட்டத்தைக் கைவிட்டனர்.

கருத்துக்கள்

கருத்துரிமை, (கருத்தை வெளிப்படுத்தும் உரிமை) எனப் பல உரிமைகளை அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. தமிழர்களின் வாழ்வுரிமைக்குப் போராடிய தந்தை பெரியாரின் படத்துடன் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் புரட்சிப் போராளி தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் படமும் ஒரு சேர அமைப்பதில் தமிழ்த் தேசிய உணர்வாளரக்ளுக்கு இருக்கும் உரிமையைப் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. முகவரியைத் தொலைத்து விட்ட இளங்கோவன் செய்தித்தாள்களில் பெயர் வரவேண்டும் என்பதற்காகக் கீழ்த் தரமாக நடந்து கொள்கின்றார். என்றாலும் அவரது இறுதிப் பயணம் வேறு வழியின்றித் தமிழ்த் தேசியம் பக்கம் தான் அமையும். இதனை உணர்ந்து அடக்கி வாசிப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது. இல்லையேல் இளங்கோவன் என்றால் யார் என்று கேட்கும் நிலைக்கு ஆளாவார். (இப்பொழுதும் அப்படித்தான் உள்ளாரோ? ஆனால், செய்தித்தாள்கள் அவருக்கு முதன்மை கொடுக்கின்றனவே! மக்களால் புறக்கணிக்கப்பட்டவரைப் புறக்கணிக்க வேண்டாவோ? தங்க பாலுவின் இடத்தில் அமர வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார் என அறிந்தும் அவரை முதன்மைப்படுத்தலாமா?)

அன்புடன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2009 3:07:00 AM

Ilangovan wants his politics life to keep live. AND Also he wants to cool his leader sonia. DONT MAKE ANY NEWS ABOUT THIS KIND OF SELFISH IDIOTS. PERIYAR & PRABA BOTH WERE FIGHTING FOR FREEDOM OF TAMILS. WHAT IS THE MISTAKE OF THIS POSTER. BLEDDY DRUNKER ILANGOVAN.

By prema
9/18/2009 2:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக