சனி, 19 செப்டம்பர், 2009

உறுதியான நடவடிக்கை எடுங்கள்!:
மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை



சென்னை, செப். 18: ""தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க மத்திய அரசு இப்போதாவது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என முதல்வர் கருணாநிதி கேட்டுகொண்டார். கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்குள்ள மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டின் வாயிலாக, இலங்கை கடற்படையினருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி. இதுதொடர்பாக, அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ""ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்று ஆழ்கடலில் வலைகளை விரித்து மீன்களுக்காக காத்திருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் சிறிய கப்பல்களில் அணிஅணியாக வந்துள்ளனர். இதைக் கண்டு அச்சமுற்ற தமிழக மீனவர்கள் தங்களது படகுகளை அவசரம் அவசரமாக கரைக்குத் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து, கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து, டீசல் கேன்களையும், மீன்பிடி சாதனங்களையும் கடலில் தூக்கி வீசியுள்ளனர். மீனவர்களை துப்பாக்கிக் கட்டையால் தாக்கி, படகுகளைச் சேதப்படுத்தி இறுதியாக 5 படகுகளையும், 21 மீனவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். காற்றில் பறக்கும் உறுதிமொழி... இலங்கைக் கடற்படையினரால் அத்துமீறி நடத்தப்படும் முதல் வன்முறைச் சம்பவம் அல்ல இது. இதுவரை ஏராளமான நிகழ்வுகள் நடந்து, தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து தமிழக அரசின் தலையீட்டின் அடிப்படையில் பல்வேறு நிலைகளில் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சு நடத்தியுள்ளது. அப்போதெல்லாம் இலங்கை அரசின் தரப்பில் தரப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்படுகின்றன. இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற வன்முறை நிகழ்வுகளுக்கு இப்போதாவது ஒரு முடிவு ஏற்படும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும், இலங்கை கடற்படையினருக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

இப்பொழுதெல்லாம் கலைஞர் என்ன சொன்னாலும் அதற்கு வேறு உட்பொருள் இருப்பதாகக் கருதப்படும் நிலையே உள்ளது. உறுதியான நடவடிக்கை என்பது மேலும் திமுகவிற்கு அஃதாவது தன் மகளுக்கு அமைச்சர் பதவி தருவதற்கு உறுதியான நடவடிக்கை எடுங்கள் என்பதற்காக இவ்வாறு கூறுகிறார். பதவி கிடைத்ததும் வாளா விருந்து விடுவார் என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் செய்த நலத் திட்டங்களில் நம்பிக்கை இருந்ததென்றால் உடனே மத்திய அரசிற்கு எதிரான கடுமையான போக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மத்திய அரசின் போக்கில் மாற்றம் நிகழும். இல்லாதவரை எப்பயனும் இல்லை. மீனவர்களுக்குச் சார்பாகத் தான் எடுத்த நடவடிக்கை எனக் கலைஞர் புள்ளி விவரம் தருவதற்கு மட்டுமே இந்த மடல் அல்லது அறிக்கை உதவும். பாவப்பட்ட தமிழர்கள். இந்திய நாட்டில் இருந்தும் இந்தியக் குடிமக்களாகக் கருதா மத்திய அரசு. குடும்பநலம் கருதி எதையும் பொருட்படுத்தாத ஆட்சித் தலைமை. இதன் விளைவு நாளை என்னவாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கவலையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 3:09:00 AM

TALAIVAR AVARKALE...NAMADHU MEENAVA SAMUDHAYAM PADUM ALLALKALAIYUM DHUYARANKALAIYUM KALAIYA ,,KADUMAIYANA NADAVADIKKAI EDUTHU,,,SINGALA DHROHIKALUKKU SARIYA PADAM PUKATTA VENDUM....PALLUKKU PAL...SOLLUKKU SOL....ENTRA VAKAIL PADHILADI KODUTHU NAM TAMIZH MEENAVA SAMUTHAYAM MUNNERA UDHAVA VENDUM....MELUM SINGALARKALIN VAALINAI OTTA NARUKKA VENDUM....BY TANJAI R..RAJESHKANNAN.....DUBAILIRUNDU......

By RAJESH PARIMALA..RAM
9/19/2009 12:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக