வியாழன், 17 செப்டம்பர், 2009

"தினமணி' முதுநிலை உதவி ஆசிரியருக்கு சரோஜினி நாயுடு பரிசு



கோவை, செப்.16: தில்லியைச் சேர்ந்த "தி ஹங்கர் புராஜக்ட்' அமைப்பு சார்பில் வழங்கப்படும் 2009-ம் ஆண்டுக்கான சரோஜினி நாயுடு பரிசு "தினமணி' நாளிதழின் கோவை பதிப்பில் பணிபுரியும் முதுநிலை உதவி ஆசிரியர் ஜி.மீனாட்சிக்கு கிடைத்துள்ளது. தினமணி ஞாயிறு கொண்டாட்டம் பகுதியில் வெளியான "கல்விக் கண் திறக்கும் உள்ளாட்சிப் பெண்கள்!' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை பிற இந்திய மொழிகளின் பிரிவில் வெளியான கட்டுரைகளில் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையாக ரூ.2 லட்சமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். தில்லியில் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் விழாவில் அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

கருத்துக்கள்

பாராட்டுகள்! பாராட்டுகள்! பாராட்டுகள்! இப் பரிசு அவருக்கு மட்டுமல்ல, தினமணிக்கும் தினமணி நேயர்களுக்கும் பெருமை சேர்க்கக் கூடியது. திருமிகு மீனாட்சி மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்துகள்!

அன்பு வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/17/2009 2:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக