வெள்ளி, 7 ஜனவரி, 2011
EEzha refugees camps: ஈழத் தமிழ் அகதிகள் முகாமும் தமிழர் முன்னுள்ள கடமையும் – யுவபாரதி
திங்கள், 12 ஏப்ரல், 2010
சொந்தஊர்களுக்கு அனுப்பப்பட்டதாக இலங்கையும் இந்தியாவும் பரப்புரை மேற்கொணடாலும் அவர்களின் சொந்த வீடுகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாலும் முகாம்களில்தான் அடைக்கப்பட்டுள்ள்னர். அஃதாவது முகாம்களை மாற்றியுள்ளனர். அவ்வளவுதான். இதனையே தமிழர்களுக்கான மறுவாழ்வு அளிக்கப்பட்டதாகக் கதை அளந்து வருகின்றனர். உலக அமைப்புகள் எனப் பலவற்றை வைத்துக் கொண்டு மனித நேயத்தை மடியச் செய்வது உலகிற்கே அழிவு என்பதை அனைத்து நாடுகளும் உணர வேண்டும். கடும் போராட்டங்களின் மூலம் விடுதலை பெற்ற வியத்துநாம் போன்ற நாடுகள் கூட அரசியல் காரணங்களுக்காக மண்ணின் மைந்தர்களின் விடுதலை வேட்கைக்கு எதிராகச் செயல்படும் போக்கு மேலோங்கியுள்ள போது ஈழத் தமிழினத்தைக் காப்பாற்றுவதற்கு நடுநிலை என்றும் அணிசேராமை என்றும் பேசி வரும் நாமாவது முன்வரவேண்டாமா? இதற்கு இந்தியா ஒத்துழைப்பு தருவதால்தானே காட்டுமிராண்டி ஆட்சியில் அமைதி திருமபிவிடடதாகக் கூறித் தாயகத்திலிருந்து ஏதிலிகளாகத் திருமபி வருவோரை வரவேற்காமல் விரட்டியடிக்கின்றன ஆசுதிரேலியா முதலிய நாடுகள்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
வாய்க்கு வந்த பொய்க் கணக்கைத் தெரிவிப்பது மட்டுமல்ல, ஒரு கொத்தடிமை முகாமிலிருந்து வேறொரு முகாமிற்கு மாற்றுவதையும் மறு குடியமர்த்தமாகக் கூறுகிறார்கள். இலங்கையில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் பொழுது இவர்கள் காப்பாற்றப்பட இந்த முகாம்கள் உதவுமோ? இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
2/9/2010 3:11:00 AM
dinamalar: 0 ஆயிரம் இலங்கை தமிழர் குடியமர்த்தல் எப்போது? அரசு நடவடிக்கை பற்றி இலங்கை விளக்கம்
சனி, 6 பிப்ரவரி, 2010
அநாதை அகதி நாய் பயலுகளா : இந்தியப் பொலிசார் வார்த்தைகள்
நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும், என்று கூறி தமிழ் நாட்டுப் பொலிசார் செங்கல்பட்டு சிறப்புமுகாமில் இருக்கும் ஈழத் தழிர்களை அடித்துள்ளனர் என சம்பவதை நேரில் கண்டவர் ஒருவர் அதிர்வு இணையத்திற்குத் தெரிவித்துள்ளார். கருணாநிதி தலைமையில் இயங்கும் தமிழ் நாடு அரசின் கோரத்தாண்டவத்தின் உச்சக்கட்டமே இது. இந்திரா கங்கிரசுடன் இணைந்து இவர்கள் ஈழத் தமிழினத்தின் கருவறுக்கத் துணிந்துவிட்டனர். தமிழகப் பொலிசார் பேசிய விதம் பின்வருமாறு:வாழ்ந்த வீடும் இழந்து, வாழ்வதற்கு இருந்த நம்பிக்கைகளும் இழந்து உப்புச் சப்பற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தங்கள் வாழ்க்கையின் நிரந்தர அடையாளமாய்ச் சுமந்து திரியும் ஈழத் தமிழ் அகதிகள் கடைசியில் தமிழகத்திலேயே வைத்து தாக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமன்றி கடுமையான கண்டணத்திற்குரியது, ஒவ்வொரு தமிழனும் வெட்க்கி தலைகுனியவேண்டிய ஒன்று.
ஒரு உணர்ச்சி மிக்க இந்தியன் புலம்பல்:
இந்த தேசத்தில், நீங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு நாங்கள் பத்ம பூஷனோ, இல்லை பத்மஸ்ரீயோ கொடுத்துக் கொண்டாடி இருப்போம், உங்கள் குற்றங்களை எங்கள் தேசிய மலக்கிடங்கில் மறைத்து சிதம்பரம் ஐயாவின் வேட்டியைப் போட்டு மறைத்து விடுவோம், நீங்கள் பாவம் வாழ வழியின்றித் தொப்புள் கொடி உறவுகளைத் தேடி வந்தீர்கள், இங்கே பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளையும் நீங்கள் உங்கள் உறவுகள் என்று கருதி விட்டீர்கள், அவர்களுக்கு கூட்டணி தர்மங்களையும், ஆட்சிக் கட்டில்களையும் காப்பாற்றும் மிக உன்னதமான பணி இருக்கிறது, இந்திய இறையாண்மையை அலுங்காமல் பாதுகாக்கும் அளப்பரிய பணிக்கு இடையூறாக உங்கள் போராட்டம் இருக்குமேயானால் இப்படித்தான் அடிப்பார்கள், அது முள்ளிவாய்க்காலோ இல்லை செங்கல்பட்டோ எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம், வேறுபாடின்றிப் பேரினவாதத்தின் தடிகள் இப்படித்தான் இறங்கும்.
அதிரடிப்படைத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு மாவட்ட அளவில் இருக்கும் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும், மிகுந்த உணர்வுப் பூர்வமான சிக்கல்கள் நீடிக்கும் ஒரு ஏதிலிகளின் சிறப்பு முகாமில் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட வேண்டுமாயின் அதற்கு உறுதியாகத் தமிழக அரச தலைவர்களின் வாய்மொழி உத்தரவாவது பெறப்பட்டிருக்க வேண்டும், என்கிற நிலையில் இது அனுமதி பெற்று நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்றே கருத இடமிருக்கிறது.
நீங்கள் ஏழைகளுக்கு வழங்கும் அரிசியைக் கடத்திப் பிழைப்பு நடத்தும் ஒருவராக இருந்தால் உங்களை நாங்கள் ஏற்றுமதியாளர் என்று சிறப்புச் செய்து விரைத்த காவல்துறை வணக்கம் வைப்போம், நீங்களோ பாவம் உழைக்கவும், பொருள் ஈட்டவும் வழி இல்லாத ஈழத் தமிழர்களாய்ப் போனீர்கள், உங்களை அடித்துத் துவைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
நீங்கள் மணல் கொள்ளை நடத்தி மானம் கேட்ட வாழ்வு நடத்தும் மதிகெட்டவராக இருந்தால் உங்களுக்கு சாமரம் வீசி வரவேற்கும் அல்லக்கைகளாக நாங்கள் இருந்திருப்போம், நீங்களோ பாவம், பிழைக்கவே வழி இல்லாத பஞ்சப் பரதேசிகள் ஆனீர்கள், உங்களை எப்படி நாங்கள் விட்டு வைப்போம் உரிமைகள் கேட்க????
இவை எல்லாம் போக நீங்கள் தமிழர்களாய் அல்லவா போனீர்கள், தமிழர்களுக்கு வாக்களிக்க உரிமையுண்டு, தேர்வு செய்ய உரிமையுண்டு, ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்வதற்கு அவர் பணம் அல்லவா கொடுக்கிறார், சோற்றுப் பொட்டலங்களுக்கு வோட்டுப் போடும் சோரம் போன நமக்கு யாரையும் கேள்விகள் கேட்கும் அதிகாரமெல்லாம் எதற்கு??
யாரையும் குறை சொல்லிப் புலம்பிக் கொண்டு திரிவதில் எந்தப் பயனும் இல்லை உறவுகளே, இனி ஒவ்வொரு ஈழத் தமிழ்க் குடிமகனும் அவனுடைய குழந்தைகளும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு காணும் நிலை பெறப்பட வேண்டும், காலம் வழங்கிய அநீதியைத் துடைத்து வரலாற்றில் வெற்றி
பெற்ற இனமாக மாறும் வெறியோடு உழைப்பதும் திட்டமிட்டு ஒருவருக்கொருவர் உதவும் நோக்கோடு பயணம் செய்வது
பயன் தரும். புலம் பெயர்ந்த மக்கள் நடத்தும் பகட்டு விழாக்களைக் குறைத்து, ஈழத்தின் பெயரில் வாழ்க்கையும் அரசியலும் நடத்தும் போலி வேடதாரிகளைப் பல லட்சம் செலவு செய்து அழைப்பதை விடுத்து இனி வருங்காலங்களில் பொருளாதார ரீதியில் வலுவிழந்து காணப்படும் உறவுகளை கைதூக்கி விடுவதிலும், கல்வி மற்றும் சமூக ரீதியில் இளைய தலைமுறையை மேன்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதிலும் தான் முகாம்களில் வாடும் ஏதிலிகளின் வாழ்க்கை உள்ளடங்கி இருக்கிறது.
செய்வார்களா புலம் பெயர் உறவுகள்??
வெள்ளி, 5 பிப்ரவரி, 2010
வியாழன், 4 பிப்ரவரி, 2010
தமிழக அரசு உடனடியாக ஈழ ஏதிலிகளை விடுதலை செய்ய வேண்டும்: சீமான் கண்டனம்
இது குறித்து சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில் 60 க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் புதன்கிழமை தம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.விடுதலைப்புலிகளுக்கு பொருட்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கியூ பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டவர்களாகும்.
இவர்கள் கடந்த புதன்கிழமையுடன் 20 ஆவது தடவையாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த முறை காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர்கள் தெரிவித்து அதன் படி நேற்று உண்ணாவிரதமும் துவக்கினர். செங்கல்பட்டு ஏதிலிமுகாம்களில் உள்ளோர் தொடர்பான பெரும்பாலான வழக்குகளில் காவல்துறை எந்தவொரு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை. அத்துடன், வழக்குகளை கொண்டு செல்வதற்கும் அவர்கள் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
பெரும்பாலோனோர் முகாமில் 5 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகின்றார்கள், சிலரின் வழக்குகள் முடிவடைந்துவிட்டன. ஆனால், திறந்த முகாமில் இருக்கும் அவர்களின் உறவினர்களிடம் இணைந்துகொள்வதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு போகக்கூட அனுமதிக்கப்படவில்லை இலங்கையில் தமிழர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு உள்ளனர். அதேபோன்று, செங்கல்பட்டு முகாமிலும் கொடுமை நடைபெறுகின்றது, முகாம்களில் இருப்பவர்களில் அநேகமானோர் நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். சிங்கள ஏகாதிபத்தியத்தின் முள்வேலி முகாம்களை விட அதீத கட்டுப்பாட்டுடன் இங்கு எம் சக தமிழன் தீவிரவாதியாய்ச் சித்தரிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்வது இங்குள்ள தமிழன் ஒவ்வோருவருக்கும் பெருத்த அவமானம் ஆகும். தமிழன் உலகின் எல்லா மூலைகளிலும் அடிபட்டான், கடைசியாய் ஆறறைக்கோடி தமிழர்கள் வாழும் தமிழர் தேசத்திலும் இந்த அவலம்.
இந்த நிலையில் தமிழக அரசு தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்னும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாநிலை இருந்த எம் ரத்த உறவுகள் மீது காவல்துறை மிருகத்தனமாகத் தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.தமிழக அரசு உடனடியாக எம் அனைத்து தமிழ்ச்சொந்தங்களையும் விடுதலை செய்ய வேண்டுமாயும் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமாயும் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
(Visited 118 times, 118 visits today)
Read more: http://meenakam.com/?p=5127#ixzz0eVuwXMAe
செங்கல்பட்டு ஏதிலிகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலிற்கு பழ.நெடுமாறன் கண்டனம்
செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் ஏதிலிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பழ.நெடுமாறன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு
செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் ஏதிலிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தங்கள் குறைகளைத் தீர்ப்பதாக முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நேற்று அந்தக் கைதிகள் அனைவரும் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால் இரவு 10 மணிக்கு மேல் திடீரென 200க்கும் மேற்பட்ட காவல்படை வீரர்கள் உள்ளே புகுந்து உறங்கிக்கொண்டிருந்த ஏதிலிகள் மீது மிகக்கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
அதிகாலை 4 மணி வரை விடிய விடிய நடைப்பெற்ற இந்தத் தாக்குதலின் விளைவாக ஏதிலிகள் அனைவருமே படுகாயமடைந்துள்ளனர். மிகமோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள 13 ஏதிலிகளை மட்டும், அங்கிருந்து காவல்துறை அகற்றிவிட்டது. அவர்கள் கதி என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை. ஏதிலிகளுக்குச் சொந்தமான துணிகள் மற்றும் பொருட்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. உணவும் தரப்படவில்லை..
தமிழ்நாட்டில் உள்ள ஏதிலிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்துக்கொடுக்கப்போவதாக பசப்பிவரும் முதலமைச்சர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, உண்ணாநிலை இருந்த ஏதிலிகள் மீது நடத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுப்படுத்தியிருக்கிறது.
படுகாயமடைந்த அனைத்து ஏதிலிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்களை மருத்துவமனையில் சேர்த்து தக்க சிகிச்சையளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 15 times, 15 visits today)செங்கல்பட்டு ஈழ ஏதிலிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
[4ஆம் இணைப்பு காணொளி] செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில் இன்று காலை கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கலவரத்தின் போது காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
நன்றி: தமிழன் கலைக்கூடம்
செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமிலிருக்கும் மக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமிலிருந்து தங்களை விடுவிக்க கோரி உண்ணாநிலை மேற்கொண்டனர். பின்னர் தமிழகரசு செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமை மூடி அங்கிருப்பவர்களை ஏனைய முகாங்களிற்கு மாற்றம் செய்யப்போவதாக அறிவித்ததன் பின்னர் அந்த உண்ணாவிரதப்போராட்டம் கைவிடப்பட்டது.
தமிழக அரசின் அந்த அறிவித்தல் நடைமுறை படுத்தபடாத காரணத்தினால் அதன் தொடர்ச்சியாக நேற்று பகல் மீண்டும் அவர்கள் தமது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.
கடவுச்சீட்டு வழக்கு மற்றும் ஏனைய வழக்குகளில் அங்கு மக்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை வேறு முகாம்களிற்கு மாற்றக்கோரியே இந்த உண்ணாநிலைப் போராட்டதை நடத்தினார்கள்.
இருப்பினும் அவர்களது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் மக்களை அடித்து சித்திரவதை செய்திருக்கிறது. உள்ளிருந்து கொண்டு உண்ணாநிலை மேற்கொண்ட மக்கள் மீது இரவு 10 மணியளவில் உள்நுழைந்த காவற்துறையினர் சரமாரியாக தாக்கினர்.
காவற்துறையினரின் தாக்குதலில் 16க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்த நிலையிலும் அவர்களிற்கு தகுந்த மருத்துவ உதவியை செய்யாமல் வேலூர் சிறையில் அடைப்பதற்காக அவர்களை இழுத்துச் சென்றிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செம்மொழி மாநாடு நடக்கவிருக்கின்ற இந்த நேரத்தில் செங்கல்பட்டு ஈழ ஏதிலிகளின் உண்ணாநிலை அதற்கு இடையூறாக இருந்துவிடும் எனக்கருதிய தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் ஏதிலிகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக மீனகம் இணையம் அறிகிறது.
காவற்துறையினரின் தாக்குதலில் காயமடைந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு :
செல்வக்குமார்
ஜெயமோகன்
பத்மநாபன்
தம்பிதுரை
பிரபாகரன்
பிரதீபன்
அமலன்
ரமணன்
சிறீதரன்
அருண்
தாசன்
சேகர்
நவீன்
முத்து
ஏதிலிகளின் உண்ணாநிலையால் தமக்கு நெருக்கடி ஏற்படப்போவதை உணர்ந்த தமிழகரசு எஸ்பி.பிரேம் ஆனந்த் சின்கா ,எ.எஸ்.பி சேவியர் தன்ராஜ் ,இன்ஸ்பெக்டர் ஆல்பட் வில்சன், எஸ்.ஐ ராஜேந்திரபிரசாந்த் இவர்கள் தலைமையில்
சுமார் 150 காவற்துறையினர் மற்றும் 25 கியூபிரான்ச் காவற்துறை இரவு 9 மணி முதல் 2 மணி வரை கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத் தாக்குதலில் அமலன் என்பவரது இடது கை ஒடிந்து விட்டது. மற்றும் ரமணன், பத்மராஜா,ஜெயமோகன், பகிரதன், பிரதிபன், அருண், கிரிதாஸ், பரமேஸ்வரன், அமலன், கிருஷ்னநீதன், கங்காதரன், பிரதிதாசன், ருக்சன்,
சேகர், செல்வகுமார், இவர்கள் 15 பேரை தனியாக ஒரு வாகனத்தில் அடைத்து இரவு 3 மணிக்கு செங்கல் பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கமால் ஓபி சீட்டை மட்டும் வாங்கி கொண்டு அங்கு இருந்து அவர்களை சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்று உள்ளார்கள்.
வேறு என்ன காரணத்திற்காகவோ தெரியாமல் அவர்களை வேலூர் சிறைக்கு அழைத்து சென்று உள்ளனர்
அவர்கள் செல்லும் வழியிலும் உணவு, தண்ணீர், மலம் ,கழிக்க கூட விடாமல் அடித்து கொண்டே தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டும் அழைத்து கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கு விபரம்
கிரைம் எண்: 58/2007 D1 டவுன் காவல் நிலையம் ,செங்கல்பட்டு
வழக்கு பிரிவுகள்:
147 கலகம் விளைவித்தல்
148, அபாயகரமான ஆயுதத்தை தாங்கி கலகம் விளை வித்தல்
324, அபாயகரமான ஆயுதங்கள் அல்லது பொருட்கள் மூலம்தம்மிச்சையாக காயம் விளைவித்தல்
294, ஆபாச செயல்களும் பாடல்களும்
506, மிரட்டுதல்
332, பொது ஊழியரை அவரதுகடமையிலிருந்து தடுத்தல்
307, கொலை முயற்சி
1. இந்த பொய்வழக்குகளை போட்டுள்ளனர் சிறையில் இருக்கும் ஒருவர் இதனை செய்யமுடியுமா?
2. சிறையில் எப்படி அபாயகரமான ஆயுதங்கள் வரும்?
3. 2 பேருக்கு ஒரு அறை யில் எப்படி கலகம் செய்யமுடியும்
4. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 96ன் படி தற்காப்புக்காக செய்யப்படும் போது செய்யப்படும் எதுவும் குற்றம் இல்லை
5. சிறை கம்பிக்குள் இருக்கும் ஒரு சிறை கைதி எப்படி பொது ஊழியரை கடைமையை தடுக்க முடியும்
இதனை எதிர்த்து வழக்கறிஞர் புகழேந்தி நாளை உயர்நீதி மன்றத்தில் RIT PETTISHON போட உள்ளார்.
பத்திரிகை ஆசிரியர் அய்யநாதன் தலைமையில் செங்கல் பட்டு தாக்குதலைக் கண்டித்து நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
செங்கல்பட்டில் ஈழ அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 5517
Posted By : Ilakkuvanar Thiruvalluvan [website] on 03 February, 2010
Comments : புலம் பெயர்ந்த திபேத்தியர்கள் கல்வி வாய்ப்புடனும் தொழில் வாய்ப்புடனும் சிறப்பாக வாழ முடிகிறது. புலம் பெயர்ந்த வங்காள தேசத்தவரை அயல் நாட்டுப் பார்வையில் இல்லாமல் வங்காள இனப் பார்வையில் மேற்கு வங்காளத்தில் உதவ முடிகிறது. வட நாட்டான் உகாண்டாவி்ல் இருந்து விரட்டப்பட்டால் கோடிகோடியாய்ப்பணம் கொட்ட முடிகிறது. இலங்கையில் இருந்து ஆரியன் வந்திருந்தால் காங்கிரசு கொள்கையே வேறு மாதிரியாக இருந்திருக்கும். இத்தகு சூழலில் முகாமகளில் வைத்திருப்பதே கடும் தண்டனை என்பதையும் மறந்து அவர்களைக் காவல துறையினர் மூலம் துன்புறுத்துவது முறைதானா?அறம் தானா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Posted By : *lli on 03 February, 2010
Comments : f***in slumdog ind***, we r on the way to f***k u
Posted By : kanthan (paris) on 03 February, 2010
Comments : உயிர் காக்க தானே நீ தமிழகம் சென்றாய்
உன் உறவு என்ன தமிழகம் -தொப்பிள்கொடி
உன் மீது ஏன்டா வன்முறை -நாம்
ஈழத் தமிழன் என்றா? என் அண்ணன்
பிரபாகரன் இருந்தால் தொடுவான
யாரும் நம்மீது! நாங்களே இப்பொது
அனாதைகள் அப்ப அடிப்பான் தான்
சிங்களனும் +இந்தியனும் வாங்கத்தான்
வேணும் அண்ணன் வருமட்டும்
ஈழத்தமிழன்
*காந்தன்*
Posted By : nantha on 03 February, 2010
Comments : வஜித்து பிளைய நம்பினாலும் வடக்கத்தயனை நம்ப கூடாது எண்டத்த நாம் மறந்து விட்டதால வந்த வினை ?
Posted By : vetri on 03 February, 2010
Comments : that's good.
திங்கள், 30 நவம்பர், 2009
தன்மானத் தமிழர்களுக்குப் பாராட்டுகள். உணர்வுகளுக்கு வடிகால் அமைத்து விட்டால் எச்சிக்கலும் எழாது என்பதை உணர்ந்து அரச வன்முறையில் காவல்துறை இறங்காமல் இரு்க்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/30/2009 3:42:00 AM
திங்கள், 23 நவம்பர், 2009
அவ்வாறெல்லாம் பரிவு காட்டுவதாக இருந்தால் 26ஆண்டுகளுக்கு முன்பே காட்டியிருக்க மாட்டார்களா? ஈழத்திலிருந்து குற்றுயிரும் குறையுயிருமாய் வந்தவர்களைத் தடுத்திருப்பார்களா? தமிழர்கள் தமிழரல்லாதவர்களைத்தான் காலில் விழுந்து வரவேற்பார்கள்.தமிழர்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள். ஏதோ திடீர் ஞானம் பிறந்தது போல் தற்பொழுது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து நீங்களுமா ஏமாறுகிறீர்கள்! இந்தியாவில் உண்மையான சம உரிமையுடன் கூடிய கூட்டரசாட்சி நடைபெறும் பொழுதுதான் தமிழர்களுக்கு விடிவு பிறக்கும். காங்கிரசு வாழும்வரை தமிழர்கள் வாழ இயலாது. என்றாலும் பல நல்ல திட்டங்களைத் தெரிவித்துள்ளீர்கள். சிலவற்றையாவது செய்ய முதல்வர் முன்வரலாம் . அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/23/2009 2:40:00 AM
வெள்ளி, 13 நவம்பர், 2009
தமிழக அரசு. இலங்கைத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கிய காங்கிரசு இப்பொழுது ஈழத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்குவதற்கு இந்த நாடகம் என்று கூறப்படுகிறது. காரணம் என்னவாக இருப்பினும். ஏதோ இத்தனை ஆண்டுகள் கழித்துச் சிறிது கண் திறந்து பார்க்கிறது . எனினும் இலங்கைத் தமிழர்களஅகதிகள் என்று குறிப்பிடாமல் அவர்கள் விரும்பியஇடங்களில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் கல்வி , தொழில் , வேலை வாய்ப்புகளைப் பெறவும் தமிழக அரசு உதவினால்தான்உண்மையான உதவியாக அமையும். அவர்கள் தாயகம் திரும்பும் பொழுது ஏதிலிகளாக இல்லாமல் நன்னிலையில் செல்ல வேண்டும். ஆனால் காங்கிரசிற்கு அடிமையான தமிழக அரசு இதனைச் செய்யாது. தமிழினப் படுகொலையில் கருத்து செலுத்தும் காங்கிரசு இதனைச் செய்ய விடாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/13/2009 3:12:00 AM
Karunanidhi, for aiding the attrocities against Tamils, somebody in your family will pay a price. You are too old to live to go through the penalty. Tamils of SL willl rise from ashes to the top of the world. They have rich history behind them, and have necessary talent to come up. They will certainly rise up with the grace of Lord Murugan. The govt of Tamilnadu alloting Rs. 100 crores for the welfare of SL Tamils is a peanut. Lord Murugan is behind them. They are going through the time of testing their patience by the great Lord. Bright future ahead of them awaits them.
11/13/2009 2:51:00 AM
வெள்ளி, 6 நவம்பர், 2009
20 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தமிழர்களை முள் வேலியி்ல் அடைத்து வைததிருக்கும் ஆளும் /ஆண்ட கட்சிகள் எவ்வாறு ஈழத் தமிழர்கள் நலனில் கருத்து செலுத்துவர்? எல்லாமே நாடகம்தான்! புரிந்து கொண்டால் சரி! தமிழர் நலனுக்குக் குரல் கொடுத்துப் போராடி வாதாடி உரிமைகளைக் காக்க இயலாதவர்கள் ஆள்வதற்கு நேரடியாகக் காங். கொலைகாரர்களே ஆளலாமே! எதற்குத் தனியாக வேறு கட்சி? ஆளும் / ஆண்ட கட்சிகள் காங்.உடன்இணையலாமே! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/6/2009 2:55:00 AM
வியாழன், 5 நவம்பர், 2009
ஏதோ நேற்று தான் இலங்கைத் தமிழர்கள் இங்கு வந்தார்கள். இன்று அறிக்கை அளிக்கிறார்கள். நாளையே அவர்கள் வாழ்வில் தென்றல் வீசும் என்றல்ல! இலங்கைத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கி ஒரு தலைமுறை கடந்து விட்டது. இனி ஈழத் தமிழர்களையும் நாடற்றவர்களாக ஆக்க வேண்டாவா? இலங்கை முகாமகளில் தேனும் பாலும் கொட்டுகிறது என்றால்தானே அவர்களை இங்கு இழுக்க முடியும். அவர்களை அங்கிருந்து விரட்டச் சிங்களக் கொடுங்கோலரசிற்கு உதவ முடியும்! காங். அரசின் நல்லெண்ணத்தைப பெற முடியும்! உண்மையிலேயே இலங்கைத் தமமிழர்கள மீது பரிவும பற்றும இருந்தால் அவர்களுக்கு வாழ்வுரிமை தாருங்கள். விரும்பிய இடத்தில் விரும்பியவாறு வாழ வாய்ப்பும் வசதியும் ஏற்படுத்தித் தாருங்கள். இங்கிருந்து தங்களின் தாயகத்திற்கு அவர்கள் திரும்புகையில் பிச்சைக்காரர்களாக அல்லாமல் செல்வர்களாகச செல்லட்டும்! ஏதோ இப்பொழுதாவது நாடக அரங்கேற்றத்தின் ஒரு பகுதியால் சிறிது நன்மை கிடைக்கும என்ற மகிழ்ச்சி இருந்தாலும் இலங்கைத் தமிழர்களை நம்முடன் இணைந்து நன்னிலையில் வாழச் செய்வதே அரசின் கடமை என்பதை உணர வேண்டும். உணர்ந்து உரியன செய்வார்களா?
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/5/2009 3:01:00 AM
அறிக்கை வெளியிடப்பட்டது: இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் இனிதே வாழ அத்துணை வசதிகளும் தந்து அவர்தம் இன்னல் தடுத்து வந்தாரை வாழவைத்த தமிழகம் எனும் பெயரை என்றும் நிலைபெறச் செய்து தமிழன் என்றும் வீழான் எனும் நிலையைப் பெற்றிடச் செய்திட்ட தமிழினத்தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு முகாம்களில் வாழும் நம் உடன் பிறப்புகள் அன்புக் காணிக்கையாக தங்கள் இன்னுயிரையும் தர தயாராக உள்ளார்கள்.
11/4/2009 5:39:00 PM