M.P. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
M.P. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 மே, 2012

மத்திய அரசுக்கு எதிராக புதிய உத்தி வகுக்கிறது சிறிலங்கா


இந்திய மாநில முதல்வர்களுக்கு பீரிஸ் கடிதம் – மத்திய அரசுக்கு எதிராக புதிய வியூகம் வகுக்கிறது சிறிலங்கா

prof_-g_l_peiris
 http://meenakam.com/wp-content/uploads/2012/05/peris-news1.jpg

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

Indian delegation's visit to East, an eyewash: Batticaloa MP

Indian delegation's visit to East, an eyewash: Batticaloa MP

[TamilNet, Saturday, 21 April 2012, 18:01 GMT]
For more than 6 years, five thousand uprooted people from Moothoor East in the Trincomalee district have been languishing without denied resettlement. The Indian parliamentary delegation that had vowed to talk to uprooted Tamils before they departed India, has changed the agenda and was only attending “tea parties” and “opening ceremonies” without hearing the real concerns of the affected people during their visit to East, Tamil National Alliance MP from Batticaloa P. Selvarasa, told media Friday. The itinerary of the delegation was fully decided by the Sri Lankan Foreign Ministry, the Tamil MP said.

The TNA parliamentarians from Batticaloa were only invited for a tea party hosted by the Eastern Province Chief Minister Sivanesathurai Chandrakanthan, but the TNA parliamentarians refrained from attending the tea party, expressing their protest against the deliberate ignorance by the organisers in making necessary arrangements for the visiting Indian delegation to meet with the citizens committee members, civil society representatives, religious dignitaries and the affected people themselves from Ampaa'rai, Batticaloa and Trincomalee districts, Mr. Selvarasa further said.

The MP was of the opinion that the Indian delegation should have at least met the people uprooted from Champoor.

More than 5,000 people, belonging to 1,600 families, have been deprived of resettlement and entirely abandoned after the Indian backed coal power plant project in Champoor.

For the last four months, the families have even been deprived of receiving the assistance from the World Food Programme, he said.

The visiting Indian delegation “re-opened” a labour training centre at Vanthaa'rumooalai before proceeding to Upcountry. The TNA was not invited to the event.

The visit of the Indian parliamentary delegation to the eastern province was a mere an eyewash, the MP told media.

He further said parliamentarians from the east had not attended any event organized for the visit of the Indian parliamentary delegation as the agenda included only tea and lunch.

Only the TNA hierarchy met the Indian delegation on April 16. The Indian team had changed its agenda once arrived according to the wishes of the Colombo government, he said.

Chronology:

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

MDMK M.P. met muuvar : சாந்தன், முருகன், பேரறிவாளனுடன் மதிமுக நா.உ.., சந்திப்பு

சாந்தன், முருகன், பேரறிவாளனுடன் மதிமுக எம்.பி., சந்திப்பு

First Published : 23 Sep 2011 01:37:54 AM IST


வேலூர், செப். 22: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனைக் கைதிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.  அவருடன் மதிமுக மதுரை மாவட்டச் செயலர் பூமிநாதன், சிவகங்கை மாவட்டச் செயலர் செவந்தியப்பன் ஆகியோரும் சென்றனர். இந்தச் சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நடைபெற்றது.  பின்னர், கணேசமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது:  மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 5 பேரையும் சந்தித்தோம்.  தற்போது நடைபெறும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமோ என்ற சந்தேகம் குறித்து மூவரும் விசாரித்தனர். நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஏற்கெனவே, மதிமுக பொதுச் செயலர் வைகோவும், நானும் தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்ய வலியுறுத்தினோம்.  ராம்ஜேத்மலானி உள்ளிட்ட மூத்த வழக்குரைஞர்கள் மூலம் வைகோ மேற்கொண்ட முயற்சியால் 8 வார காலத்துக்கு தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழ் உணர்வுள்ள அனைவருடனும் இணைந்து மூவரையும் தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்கத் தொடர்ந்து முயற்சிப்போம் என்றார் அவர்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நாடாளுமன்றத்தில் இலங்கை நா.உ.(எம்பி)க்கள்: அதிமுக கடும் எதிர்ப்பு

தலைவிரித்தாடும் ஊழல்கள் பற்றிய  வாதங்கள் தவிர வேறு முதன்மையான நிகழ்வு இல்லாத பொழுது இந்த அவலத்தைக் காட்டச்  சிங்கள நா.உ.களை அழைத்திருக்க வாய்ப்பில்லை. வேறு எதற்கோ அழைத்து  அவைக்கும் வரச் சொல்லி உள்ளார்கள். கற்பனையிலும் எண்ணிப்பார்க்க முடியாத மிக மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து தமிழ் மக்களின் உயிர்களைப் பறித்த சிங்களர்களின் சார்பாளர்களைக் கூட்டாளியான காங்.தான் விருந்தாளி என்கின்றது என்றால், கூட்டாளிக்கட்சியினரும் சிங்களத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைமை தாங்கிய தங்கபாலுஅணியினரும் என்ன செய்கிறார்கள்? உலகத்தின் முன்னால் நம் நாட்டிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தும் செயலில் காங். வெட்கமோ நாணமோ மன உறுத்தலோ இன்றி,  கொலைகாரக் கூட்டாளிகளை வரவேற்கிறது என்றால் இக்காலத்தில் வாழும் நமக்கும் அவமானம்தான். 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/ எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

நாடாளுமன்றத்தில் இலங்கை எம்பிக்கள்: அதிமுக கடும் எதிர்ப்பு

First Published : 01 Aug 2011 04:28:26 PM IST

புதுதில்லி, ஆகஸ்ட் 1: இன்று இந்திய நாடாளுமன்றத்துக்கு இலங்கை எம்பிக்கள் வருகை தந்தனர். அதற்கு அதிமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு கிளப்பினர்.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல்ராஜபக்சே தலைமையில் இலங்கை எம்.பி.க்கள் குழு இந்தியாவுக்கு வந்துள்ளது. அவர்கள் இந்தியாவின் அழைப்பின் பேரில் வருகை புரிந்ததாகத் தெரிகிறது. அவர்கள் இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் காண்பதற்காக அவைக்கு வந்திருந்தனர். அவர்களை சபாநாயகர் மீராகுமார் வரவேற்று, இலங்கை எம்.பி.க்கள் குழு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருப்பதை அவைக்கு அறிவித்து, அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து, அதிமுக எம்பிக்கள் கூச்சல் எழுப்பினர். தம்பித்துரை எம்.பி. தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எழுந்துநின்று, இலங்கை எம்பிக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், சபாநாயகர் மீராகுமார் இதனை கண்டித்தார். இலங்கை எம்பிக்கள் நமது அழைப்பின் பேரில் வந்துள்ள விருந்தினர். அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றார். ஆனால், இதனை ஏற்காத அ.தி.மு.க. எம்.பி.க்கள், வெட்கம் வெட்கம் என்று கோஷமிட்டனர். தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

புதன், 4 மே, 2011

tamil woman got victory in canada parliament election :கனடா நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ்ப் பெண் வெற்றி


தினமணி நேயர்கள் சார்பில் பாராட்டுகளும் வாழ்த்துகளும். கனடா மக்கள் புலம்பெயர் மக்களுக்குஆதரவாக இருப்பினும்முதன்மைக் கட்சிகள் எதிராக உள்ளன.இந்நிலையை மாற்றி ஈழத்தமிழர்களின் இன்னல் போக்கிடவும் தமிழ் ஈழம் மலர்ந்திடவும் உலகத் தமிழர்கள் செழித்திடவும் தமிழ் ஓங்கிடவும் பெண்மை போற்றிடவும் தொண்டாற்றிட வாழ்த்துகள். அன்புடன் .இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!


கனடா நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ்ப் பெண் வெற்றி

வியாழன், 14 ஏப்ரல், 2011

America has no right to speak about war crime -says singala M.P. : போர்க்குற்றம் பேச அமெரிக்காவுக்குத் தகுதி இல்லை: இலங்கை நா.உ.

அமெரிக்க அரசாங்கத்திற்குச் சிங்கள இனவெறி அரசின் போர்க்குற்றங்கள் பற்றிப் பேசத் தகுதி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அமெரிக்க மக்களுக்கும் பிற உலக மக்களுக்கும் தகுதி உண்டு. யாருக்குத் தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இனவெறிப் படுகொலைகளுக்கான தண்டனைகளை உரியவர்கள்
அடையும் நாள் வந்தே தீரும்! கொக்கரிக்கும் சிங்களத் தலைவர்கள் அன்றைக்கு வாய்பேச வழியின்றி இருப்பார்கள். அந்த நாள் விரைவில் வருவதாக! அறம்  பிழைத்தோர்கள் தண்டனை அடையும் நாளே உயிர்கள் நேயநாள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!




போர்க்குற்றம் பேச அமெரிக்காவுக்கு தகுதி இல்லை: இலங்கை எம்.பி.







கொழும்பு, ஏப்.13- இலங்கையின் போர்க்குற்றம் குறித்து பேச அமெரிக்காவுக்கு தகுதி இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. தயாஸ்ரீ ஜயசேகர கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன."நீண்ட     காலமாக அமெரிக்காவின் மீது போர்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. ஈரான், இராக், ஆப்கன் ஆகிய நாடுகளில் அமெரிக்கா மனித உரி்மை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இலங்கை மீது குற்றம் சுமத்த அமெரி்க்காவுக்கு தகுதி கிடையாது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்." என்று தயாஸ்ரீ ஜயசேகர கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கருத்துகள்

கோபால!!!! ஆம்மாம்..நேரம் தான் பதில் சொல்லவேண்டும் .. மலையாளப்படம் "TIME" போல தான் ...That is the only way to solve the problems
By IVAR
4/13/2011 7:18:00 PM
அமெரிக்காவுக்கு தகுதி இல்லையென்றால் உனக்கு என்ன தகுதியிருக்கின்றது , ஈழத்தமிழர்கல்மீது யுத்தம் செய்வதற்கு, நாய்களே எங்கள் மண்ணை விட்டு முதல் வெளியேறு.
By வாசு யேர்மனி
4/13/2011 5:23:00 PM

When war was in full swing and genocide took place, no countries in world could stop and have a puppet UN Assembly. Now they do post mortem. Except India, no country can tip finger against Lanka but India will maintain silence. When back seat driver announced no fishermen will be killed by Lanka but very next couple of days, fishermen lynched and of course Patriarch announced compensation owing to election is round the corner. A couple of days back, communication exchaned between Patriarch and his daughter proved futile and ultimately Natesan killed. All are bound to go one or the other day but difference is lives of fishermen forced. Sense of human dead, money/muscle power reign. It is proved beyond doubtful in the entire world, that power/money can play vital role and no regard for courtesy, sense of human etc. Time only should teach them.
By V Gopalan
4/13/2011 4:37:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 9 மார்ச், 2011

attack on M.P. - condemned by EEzha govt;:நா.உ. மீது தாக்குதல்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கண்டனம்

தமிழ்ஈழப் புற அரசு மட்டும் அல்ல அனைவருமே கண்டிக்க வேண்டும். என்றாலும் இதுதானே சிங்கள இந்தியக் கூட்டுத் திட்டம். எனவே, முன்னிலும் முனைப்பாகத் தமிழ் ஈழத் தேவையை உலகநாடுகளிடம் வலியுறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/



எம்.பி. மீது தாக்குதல்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கண்டனம்


கொழும்பு, மார்ச் 8- இலங்கை எம்.பி. ஸ்ரீதரன் மீதான தாக்குதலுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனும் அவரது உதவியாளர்களும் பயணம் செய்த வாகனம் மீது கைக்குண்டுகள் வீசியும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் நடத்தப்பட்ட தாக்குதலை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வன்மையாகக் கண்டனம் செய்கிறது.இத் தாக்குதலில் ஸ்ரீதரனும் அவரது உதவியாளர்களும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிய வருகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட இடம், விதம் போன்றவை இவர்களைக் கொலை செய்யும் நோக்குடனேயே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. இலங்கை அரசினால் இயக்கப்படும் ராணுவப் புலனாய்வுக் குழுவினரே இத்தாக்குதலின் பின்னணியில் இருந்திருக்க வேண்டும். இலங்கை அரசின் உயர்பீடத்தின் திட்டத்தின் அடிப்படையிலேயே தாக்குதல் நடத்தியோர் இயங்கியிருக்க வேண்டும். இத்தகைய சந்தேகங்கள் எழுவதற்கு வலுவான காரணங்கள் உண்டு.அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஆவணங்களும் இலங்கை அரசின் உயர்மட்ட ஆதரவுடன் சட்டத்துக்குப் புறம்பான முறையில் ராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இயங்கி வந்ததை அம்பலப்படுத்தியது. இத்தகைய சம்பவங்கள் மூலம் தமிழ் மக்களை அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்கிவிடலாம் என்று இலங்கை அரசு தொடர்ந்தும் எண்ணுகிறது என்பதை இச்சம்பவத்தின் மூலம் உணர முடிகிறது. அண்மையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அன்னையின் அஸ்தி சிதைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருப்பது சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது. இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்த காலம் முதல் ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்களம் தொடுத்த வந்த போரும், முள்ளிவாய்க்கால் பேரவலமும் ஈழத் தமிழர் தேசத்திடம் மூட்டியுள்ள கோபக்கனலை இத்தகைய சம்பவங்கள் மேலும் கொழுந்துவிட்டு எரிய வைக்கக் கூடியவை.இலங்கை அரசு மீதான போர்க்குற்றம் மற்றும் தமிழர் மீதான இனப்படுகொலை போன்றவை குறித்து அனைத்துலக விசாரணை தேவை என்ற குரல்கள் மேலெழுந்துவரும் சூழலில், மக்கள் பிரதிநிதி ஒருவர் மீதான கொலை முயற்சியும் நடைபெற்றிருக்கிறது. இலங்கை அரசே இந்த குற்றச்செயலுக்குப் பின்னணியில் இருப்பதாக நாம் கருதுவதால் இச்சம்பவமும் அனைத்துலக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோருகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

இலங்கை தமிழனுக்கான முதல் குரல். வரவேற்கிறோம் - தமிழ் சங்கம். டெல்லி
By சதீஷ்
3/8/2011 5:54:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 31 மே, 2010

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானம்: பா.ம.க. தலைவர்கள் அதிருப்தி

சென்னை, மே 30: கூட்டணி தொடர்பாகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இடம் தருவது தொடர்பாகவும் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பா.ம.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.÷2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7 இடங்களில் எதிலுமே பாமகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. எனவே மாநிலங்களவையில் உறுப்பினர் என்ற முறையில் அன்புமணி மட்டுமே நாடாளுமன்றத்தில் பா.ம.க.வின் பிரதிநிதியாக இருந்தார்.÷இப்போது நடக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் அன்புமணிக்கு இடம் கிடைக்காமல் போனால், நாடாளுமன்றத்தில் பா.ம.க.வுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும்.÷கட்சி நிறுவனர் ராமதாஸின் மகன் என்பதற்காக இல்லாவிட்டாலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வரும் கட்சி என்ற வகையில் இந்த பிரதிநிதித்துவம் தேவை என்று கட்சியின் உயர் தலைவர்கள் கருதுகின்றனர்.÷சாதிவாரி மக்கள் தொகை வேண்டும் என்று கோரியது, மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல் செய்ய வைத்தது போன்றவற்றில் பா.ம.க.வின் பங்கு முக்கியமானதாக இருந்தது என்று அந்தத் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.÷2011-க்குப் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு ஓர் இடம் என்று திமுகவின் தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 2013 ஜூலையில்தான் கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் பதவிக் காலம் முடிகிறது. அப்போதுதான் அடுத்த தேர்தல் வரும். அது வரையில் பா.ம.க.வுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்று அந்தத் தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 1998-ல் முதன்முறையாக மக்களவையில் காலடி எடுத்து வைத்த பா.ம.க.வுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாத நிலை ஏற்படும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கருத்துக்கள்

பதவி போனால் எல்லாம் போகும் என அஞ்சிய பாமக ஈழப்போர் உச்சத்தில் இருந்த பொழுது அன்புமணியைப் பதவி விலக வைத்திருந்தால் இன்றைக்கு ஈழத்திலும் விடிவு ஏற்பட்டிருக்கும். பாமகவிற்கும் முழு வெற்றி கிடைத்திருக்கும். நல்ல கொள்கையைப் பரப்புரை செய்தாலும் எதிரிகள் எமை நத்துவாய் எனக் கோடி இட்டழைத்தாலும் தொடேன் எனும் மனஉறுதியின்றிக் கொலைகாரக் கூட்டணியில் சேரத் துடித்ததற்குச் சரியான தண்டனை. தேர்தல் ஆதாயத்திற்காகக் கூட்டுச் சேர வரும் பாமகவிற்குக்கிடுக்கிப் பிடி போடாமல் பதவியைத் தாரைவார்க்க திமுகவோ அதன் தலைவர்களோ அறிவிலிகள் அல்லர். இனியேனும் திருந்தட்டும் பாமக! தமிழ்நலக் கொள்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளட்டும்! மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடிக்கட்டும்! சாதி வெறியைச் சாக்கடையில் எறியட்டும்! சங்கத்தமிழ் மன்பதையை மீண்டும் உருவாக்கட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/31/2010 5:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++

நடுநிலையுடன் எழுதும் கருத்துகளை வீர வன்னியன் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும். சாதிக்கட்சி என்னும் நிலையிலிருந்து மாறித் தமிழ் நலக்கட்சியாகவும் போதை முதலான நலக்கேட்டுப் பொருள்களை ஒதுக்கும் உணர்வை உருவாக்கும் கட்சியாகவும் தமிழ் ஈழத்திற்குக் குரல் கொடுக்கும் கட்சியாகவும் காட்சியளிக்கும் பாமக தேர்தலுக்கு முன்பு காங்கிரசின் கொலைவெறிச் செயல்களுக்கு எதிராகப் பதவிவிலகியிருந்தால் ஒரு மாற்றம் வந்திருக்கும் என்பதில் என்ன தவறு? இன்றைக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆனதும் கூட்டணியின் தலைமையான காங்கிரசிடம் அமைச்சர் பதவியை எதிர் நோக்கி ஈழத் தமிழர் நலனில் கண்மூடி வாய் பொத்தித் தாழும் நிலை ஏற்படலாம் அல்லவா? இப்படிப்பட்ட ஆசைகளை விட்டு விட்டுத் தேர்தல் தோல்வியால் கையில் எடுத்துள்ள சாதிக் கொடியைத் தூர எறிந்து விட்டுத் தமிழ்ச்சாதிக்காக அக்கட்சி பாடுபடவேண்டும். பாமகவின் பணி வன்னியப் பாடடாளிகளுக்கு என்று குறுகாமல், தமிழ்ப்பட்டாளிகளுக்காகச் சிறக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/31/2010 1:14:00 PM

Dianamani editor vaidyanathan naradhar game started

By saravanan
5/31/2010 1:12:00 PM

The PMK party founder Dr.Ramadoss's intention is to uplift his son and family members as doing by some political leaders. if they contest in the election they will certainly lose deposits.Hence Dr.Ramadoss has made a plan to bring his son thro' indirect way,as he is not a candidate in the election.

By v.thatchanamoorthy
5/31/2010 12:52:00 PM

99.99999999999999999% tamilians will be very very very very very ..happy to hear this news.

By prasath.T
5/31/2010 12:17:00 PM

சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த தமிழக அரசுகளில் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியே பொற்காலமாக இன்னமும் மக்களின் மனதில் உள்ளது. தனக்கென்று சொத்து ஏதும் செர்காதவர், பிரதமர் பதவியையே வேண்டாமென்று விட்டுக் கொடுத்தவர், தன் தாயாரின் வீட்டுக்கு சென்ற தண்ணீர் குழாயை நிறுத்தச் சொல்லி அவரை மற்ற மக்கலோடோ போய் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சொன்னவர். அந்த மாதிரி நல்ல உள்ளம் படைத்த தலைவனுக்கு ஜாதி என்ற கரியைப் பூசி கேவலபடுத்துவது குரூர புத்தியுள்ளவன் செய்யும் செயல். அவரை தோற்கடித்துவிட்டு இன்று நடக்கும் ஆட்சியின் லட்சனத்தைப் பாருங்கள். எல்லோரையும் ஒரு ரூபாய் அரிசியில் வாழும் பிச்சைக் காரனாக மாற்றி, குடிகாரனாக்கி வைத்துள்ளான். பெருகி ஓடும் சாராய சாம்ராஜ்யம், இதைச் செய்பவன் மஞ்சள் துண்டு போட்ட, மதுவே வேண்டாமென்று ஒழிக்கச் சொன்ன பெரியாரின் தொண்டன் என்று சொல்லிக்கொள்பவன். தூ..

By இடி அமீன், உகாண்டா.
5/31/2010 11:37:00 AM

மிஸ்டர் இலக்குவனார், தாங்க்ள் ஏதோ பெரியாரின் பேரன் என்பதைப்போல கருத்தெழுதியுள்ளீர்கள்! ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள முயற்ச்சியுங்கள்! இது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களாகிய ஒரு சமூகத்திற்க்காகமட்டும் போராடுகிற கட்சியல்ல அதில் வன்னிய மக்கள் பெரும்பாலுள்ளார்கள். அதையும் மீற கடந்த காலங்களில் பா.ம.க ஒரு பொருப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டிருக்கிறது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரேகட்சி பா.ம.க. புகையிலைக்கெதிரான நடவடிக்கைகள், ஊடகங்களில் தமிழே முன்னிறுத்தப்பட்டும் அதிலும் வென்றிருக்கும் ஒரு உறுதியான கொள்ளை கொண்ட தலைவர் கொண்டது பா.ம.க. அதன் செயல்பாடுகளை மற்றும் விமர்சியுங்கள்! காழ்ப்புணர்ச்சியில் எதைஎதையோ எழுதாதீர்கள். திமுக வின் எதிர்கால நன்மைக்கு வேண்டி வடக்கு மாவட்டங்களில் வலுவுள்ள ஒரு கட்சி அவர்களுக்கு தேவை கலைஞருக்கும் பிறகு நடக்கும் நடவடிக்கைகளை பற்றி ஆராயமுடியுமானால் புரியும் அதன் தற்ப்போதைய இந்த கூட்டனி. அது இதுதான் ஸ்டாலின் முதல்வராகவேண்டுமானால் அதற்க்கு பா.ம.க வின் ஆதரவு நிச்சயம் தேவை பொறுத்திருந்து பாருங்கள்.

By வீர வன்னியன், ஆத்தூர்
5/31/2010 10:53:00 AM

திமுக சார்பில் எம்பி பதவி கிடைத்துள்ள மூவரும் மிகவும் சிறப்பாக கட்சி பணியாற்றுபவர்கள். வாழ்த்துகள். பாமக திமுக கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் எம்பி சீட் கிடைத்திருக்கும். கடுமையாக திட்டுவதும் தினமும் அறிக்கை விட்டு குடைச்சல் கொடுத்ததும் காடு வெட்டி பேசிய பேச்சும் கூட்டணிக்கு மதிப்பு கொடுக்காத பாமக தற்போது எம்பி சீட் எதிர்பார்ப்பதற்கு எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை. தற்போதும் திமுக இல்லாவிட்டால் அதிமுகவுடன் பேரம் பேசுவதாக பத்திரிக்கையில் செய்திகள் கசிகின்றன. இப்படி ஒரு மானங்கெட்ட அரசியல் பதவி தேவையா? இனிமேலாவது எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறீர்களோ அந்த கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்காமல் இருக்கப் பாருங்கள்..தற்போது திமுகதான் வெற்றிக்குதிரை. நல்ல உறவு தொடர்ந்தால் எதிர்காலத்தில் அன்புமணி மத்தியஅமைச்சர் ஆவர்....

By veera Ganapathy
5/31/2010 10:41:00 AM

தி. மு.க. அவசர பட்டு அவர்களை கூட்டணியில் சேர்த்து இருக்க வேண்டியது இல்லை. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வருவதனால் தி.மு.க. வுக்கு நஷ்டமே தவிர லாபம் ஏதும் இல்லை. தான் ஒரு ஜாதி வெறியர் என்பதை திரு. ராமதாஸ் அவர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த பென்னாகரம் இடை தேர்தலில் மற்றும் ஒரு முறை நிரூபித்து காட்டி இருக்கிறார். இவருடைய அரசியல் நடவடிக்கைகள் எதுவுமே ஒரு தலைவனுக்கு உள்ள ஒரு தகுதி இவருக்கு உண்டா என்பதை கேள்விகுறி ஆக்கி இருகிறதே தவிர இவர் இன்னும் தன தகுதியை வரரது கொள்ள வேண்டிய இடத்தில தான் இருக்கிறார்.

By Tamilan
5/31/2010 10:33:00 AM

"thithum nanrum pirar thara vara". Tani manitha muyarchi miga mukkiam

By Sha
5/31/2010 10:26:00 AM

மிஸ்டர் இலக்குவனார், தாங்க்ள் ஏதோ பெரியாரின் பேரன் என்பதைப்போல கருத்தெழுதியுள்ளீர்கள்! ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள முயற்ச்சியுங்கள்! இது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களாகிய ஒரு சமூகத்திற்க்காகமட்டும் போராடுகிற கட்சியல்ல அதில் வன்னிய மக்கள் பெரும்பாலுள்ளார்கள். அதையும் மீற கடந்த காலங்களில் பா.ம.க ஒரு பொருப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டிருக்கிறது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரேகட்சி பா.ம.க. புகையிலைக்கெதிரான நடவடிக்கைகள், ஊடகங்களில் தமிழே முன்னிறுத்தப்பட்டும் அதிலும் வென்றிருக்கும் ஒரு உறுதியான கொள்ளை கொண்ட தலைவர் கொண்டது பா.ம.க. அதன் செயல்பாடுகளை மற்றும் விமர்சியுங்கள்! காழ்ப்புணர்ச்சியில் எதைஎதையோ எழுதாதீர்கள்.

By வீர வன்னியன், ஆத்தூர்
5/31/2010 10:25:00 AM

Mr. M.K took correct action. Weldon!! M.K.

By Tamilan
5/31/2010 10:14:00 AM

Ilakuvanar Thiruvalluvan.I am not able to understand you.why you want Anbumani to resign at that time.The main culprit is your leader Karuna and congress.Otherwise very big loss in Srilanka could hand been averted. Note: I do not know tamil typing.Other wise I can give fitting reply in tamil.

By legal fan
5/31/2010 8:22:00 AM

இலக்குனார் திருவள்ளுவனின் கருத்தே என்னுடையதும். சாதிகள் என்ற பெயரைச் சொல்லியோ, ஆட்சிக்கு வந்தபின் தங்கள் சாதிகளை ஈடேற்றும் வேலையையோ செய்யக்கூடிய அரசியல் கட்சிகள் நம் இந்தியத் திருநாட்டில் இனியும் இருக்கக் கூடாது. சில ஆண்டுகளே ஆட்சியில் இருந்த காமராசர் தன் சாதியை வாணிபத்துறையில் மேலோங்கச் செய்துவிட்டு கர்மவீரர் என்ற பட்டப் பெயரை அந்தச் சாதிமக்களிடத்தில் பெற்றுவிட்டுச் சென்றார். இப்படிப்பட்ட ஓர் அவலநிலை தமிழகத்திற்கோ இந்தியத் திருநாட்டிற்கோ இனித் தேவையில்லை. ஆகவே தொடர்ந்து சாதிகளற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் திமுகவும் மத்தியில் சோனியா அவர்களின் ஆட்சியும்தான் தொடர்ந்து நம் நாட்டிற்குத் தேவை. சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மறந்து இதனை முயன்றால் வேறு ஒரு பெரியார் பிறந்து வந்தாலும் சாதிக் கொடுமைகளை அகற்ற முடியாது. இனி ஒரு பாரதி பிறந்துவந்து சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினால் ’வேலையைப் பார்த்துக்கொண்டு போப்பா’ என்று எதிர்பாட்டுப் பாடத் தொடங்கிவிடுவார்கள். ஆகவே கலைஞர் அவர்கள் தன்னுடைய அறிப்பகலவன்களாக நினைக்கும் தந்தை பெரியார்,

By Vanan
5/31/2010 7:36:00 AM


செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

மக்கள் சார்பாளர்களை எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கும் பண்பாட்டில என்ன தவறு உள்ளது? தமிழ் நாட்டிலும் இது போன்ற ஆணை உள்ளது. எதையும் கட்சி அரசியல் கண்ணோட்டத்தி்ல் பார்க்க வேண்டா. இரு தரப்பாரும் ஒருவருக்கொருவர மரியாதை செலுத்துவதே பண்பாடாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Front page news and headlines today

திருவனந்தபுரம் : "மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்., அரசு அதிகாரிகள், துறை தலைவர்கள், பொதுத்துறை நிர்வாகிகள் உட்பட அரசு அதிகாரிகளை சந்திக்க, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் வரும்போது, எழுந்து நிற்க வேண்டும்' என, கேரள மாநில அரசு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.



தலைமைச் செயலகம், ஐகோர்ட் பதிவாளர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், பிற துறை அரசு அலுவலகங்கள், வாரிய அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அலுவலகங்கள் என, அரசு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலகங்களுக்கும், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பல் வேறு பணிகளுக்காக செல்வது வழக்கம்.அவ்வாறு அவர்கள் அங்கு வரும்போதும், பணிகளை முடித்து திரும்பும் போதும், அதிகாரிகள், அலுவலர்கள் எழுந்து நிற்க வேண்டும் என, கேரள மாநில தலைமைச் செயலர் நீலகங்காதரன், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.



பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளை சந்திக்கச் செல்லும்போது, அதிகாரிகள் அவர்களை சட்டை செய்வதில்லை என, புகார்கள் வந்தன. புகாரின் அடிப்படையில், அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, தற்போது மாநில தலைமைச் செயலர், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.



சுற்றறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அளிக்கும் மனுக்கள் மற்றும் புகார் கடிதங்களில் தெரிவிக்கப்படும் அனைத்து விஷயங்களுக்கும், விரைவாக சரியான பதில் அளிக்க வேண்டும்; அவர்களுக்கு ஆதரவாக, அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.அலுவலக நேரத்திலோ அல்லது பார்வையாளர் நேரத்தி லோ, மக்கள் பிரதிநிதிகள் அங்கு செல்லும்போது, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளிலும், அவர்களுக்கென ஒதுக்கப்படும் இருக்கைகள் விஷயத்திலும், இந்த உத்தரவு பின்பற்ற வேண் டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

++++++++++++++++++++++++

மக்கள் சார்பாளர்களை எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கும் பண்பாட்டில என்ன தவறு உள்ளது? தமிழ் நாட்டிலும் இது போன்ற ஆணை உள்ளது. எதையும் கட்சி அரசியல் கண்ணோட்டத்தி்ல் பார்க்க வேண்டா. இரு தரப்பாரும் ஒருவருக்கொருவர மரியாதை செலுத்துவதே பண்பாடாகும்.

by I. Thiruvalluvan,chennai,India 2/2/2010 4:41:01 AM IST

புதன், 10 ஜூன், 2009


இலங்கைத் தமிழர் படுகொலையை இந்தியா வேடிக்கைப் பார்த்தது: மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் உரை
தினமணி


சென்னை, ஜூன் 9: இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று, திங்கள்கிழமை அவர் பேசியது: 1940-ல் ஜெர்மனியில் ஹிட்லரால் லட்சக்கணக்கான யூத மக்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடுமையை உலக நாடுகள் அனைத்தும் கண்டித்தன. இறுதியாக ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டது. இப்போது இலங்கைத் தீவில் போர் நடைபெறாத பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 60 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் படுகொலையை உலகமே கண்டித்தது. ஆனால் இப்போது இலங்கைத் தமிழர்கள் படுகொலையை உலகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. குறிப்பாக, மிக நெருங்கிய அண்டை நாடான இந்தியா; வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாக பெருமைப்படுகின்ற நாம்; பல்வேறு மதங்களுக்கும், மொழிகளுக்கும் சம உரிமை வழங்கியிருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கத் தவறிவிட்டோம். இப்போதாவது இலங்கைத் தமிழர்களுக்கு உதவ இந்திய அரசு முன்வர வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்து, பொருள்களை இழந்து, நோய்வாய்ப்பட்டு, உடல் ஊனமுற்று தவிக்கும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.சேது கால்வாய்: சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து குடியரசுத் தலைவர் உரையில் எந்த உறுதியும் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கக் கூடியது சேது கால்வாய் திட்டம். ஆனால் இத்திட்டத்திற்கு ராமரின் பெயரால் தடை ஏற்படுத்தப்படுகிறது. இதனால் இந்த திட்டம் நிறைவேற வேண்டும் என எண்ணுகிற தமிழ்நாட்டு ராம பக்தர்கள் வேதனை அடைவார்கள். மத்திய அரசு இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றுவோம் என்ற உறுதியை தமிழக மக்களுக்கு வழங்கியாக வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கூட்டணி அரசியலே சிறந்தது: எந்த ஒரு கட்சியும் இந்திய அரசியலில் இனி தனித்து செயல்பட முடியாது என்பதை கடந்த 13 ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம். இந்தியாவில் இனி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, இடதுசாரிக் கூட்டணி என கூட்டணி அரசியல்தான் அமையும். அதன் மூலம்தான் மத்தியில் நிலையான ஆட்சியையும், பல்வேறு மாநிலங்களில் முறையான வளர்ச்சியையும் நாம் பெற முடியும். கடந்த 3-ம் தேதி தனது பிறந்த நாளின்போது, மாநில சுயாட்சி கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி பேசியுள்ளார். மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி, நிர்வாகத்தை செம்மைப்படுத்த வேண்டும் என்றார் இளங்கோவன்.

தத்துவ மேதை திரு டி.கே.சீனிவாசன் அவர்களின் திருமகனார். தன் முதல் உரையிலேயே (கன்னிப பேச்சில்) ஈழத் தமிழர் படுகொலையை உலகம் வேடிக்கை பார்த்ததைத் துணிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார. பாராட்டுகள்! ஆனால், இந்தியா வேடிக்கை பார்க்கவில்லை. இந்தியாவிற்காகத்தான் இப்போரை நடததியதாகவும் இந்தியாவின் நட்புறவைப் பெற விடுதலைப் புலிகளைக் கொன் றதாகவும் சிங்கள அரசு சொல்லி வருகிறது. அப்படியாயின் காங்.கின் படுகொலைகளின் பொழுது தேர்தல் ஆதாயங்களுக்காகத் திமுகவும் வேடிக்கை பார்த்தது என்பது உண்மையாகிறது. எனவே, தன் கட்சித் தலைவரிடம் இனியாவது மனம் மாறி, காங்.கை நல்வழிப்படுத்தவும் கட்சி உறுபபினர்களைக் கொண்டு ஈழத் தமிழர் துயரங்கள் தொலைய ஒரே தீர்வு தமிழ் ஈழமே என வலியுறுத்திப் பேசச் செய்யவும் ஆவன செய்வாராக! கழக உறுப்பினர்கள் எண்ணம் தமிழ் ஈழத்தின்பால் இருக்கையில் தலைமை தடுமாற வேண்டா என வலியுறுத்திக் கட்சித் தலைமையையும் அதன வழி காங். தலைமையையும் மனம் மாற்ற வேண்டுகிறேன். தமிழ் ஈழம் வெல்க ! இந்திய - ஈழ நட்புறவு மலர்க!


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2009 4:29:00 AM

because congress dont give what this stubid [dmk] want

By குப்பு