pmk லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
pmk லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 மே, 2010

பாமக-வுடன் கூட்டணி: திமுக முடிவு

சென்னை, மே 30: பாட்டாளி மக்கள் கட்சியுடன் (பா.ம.க.) மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்வது என திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாமக-வுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 2011-க்குப் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 30) நடைபெற்றது. கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாமக-வுடன் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்வது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதுகுறித்து கருணாநிதி கூறியது:பாமக நிறுவனர் ராமதாஸ் 26-4-2010 தேதியிட்டும், 14-5-2010 தேதியிட்டும் இரண்டு கடிதங்கள் எழுதியிருந்தார். அதில் 2011-ல் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட விரும்புகிறோம், இப்போது நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பாமக-வுக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.இதுகுறித்து உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு திமுக, பாமக ஆகிய கட்சிகளிடையே உறவு முறிவு ஏற்பட வேண்டிய நிலை ஏன் உருவானது, அதற்கு திமுக காரணம் அல்ல என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.அண்மையில் பென்னாகரம் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட நிலைமைகள் குறித்தும், திமுக-தான் முதல் எதிரி என்று பாமக நிறுவனரின் பிரகடனம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.இருந்தபோதும் நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்ற அடிப்படையில் மீண்டும் இரு கட்சிகளும் உறவைப் புதுப்பித்துக் கொண்டு அடுத்து வரவிருக்கும் 2011 சட்டப்பேரவை தேர்தலிலும், விரைவில் வரவிருக்கின்ற சட்டப்பேரவை மேலவைத் தேர்தல்களிலும் இரு கட்சிகளும் உடன்பாடு கொண்டு போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.மேலும், 2011-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு அடுத்து நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பாமக-வுக்கு ஒரு இடம் வழங்குவதென்றும் உறுதிபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை பாமக ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம் என்றார்.பாமகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது நல்ல எண்ணத்துடன் எடுக்கப்பட்ட முடிவு, அதில் ராஜதந்திரம் எதுவும் இல்லை.கூட்டணியில் பாமக தொடர்ந்து நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணியில் பாமகவை மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் அவர்கள் ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் கருணாநிதி குறிப்பிட்டார்.இலங்கைத் தமிழருக்கு உதவி:இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ. 500 கோடியை முறையாக பயன்படுத்திட தக்க திட்ட வரைவுகளை செய்திட இலங்கை அரசு இன்னமும் முன்வரவில்லை. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்களும் சரிவர விநியோகம் செய்ப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இவற்றை உடனடியாக சரி செய்திட இலங்கை அரசை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழகத்தில் முகாம்களில் உள்ள 73,572 இலங்கைத் தமிழர்களை இந்திய குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின் கீழ் மறு குடியமர்த்த வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தீர்மானித்து, ஏற்கெனவே கேட்டுக் கொண்டது. இதற்கு மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என்று மத்திய அரசை இக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.மலேசியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள 75 இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற கருணை உள்ளத்தோடு முன் வரவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விலை உயர்வு பிரச்னை:அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சிறுதாவூர் நிலம்: நீதிபதி சிவசுப்பிரமணியம் விசாரணைக் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு ஏழை மக்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இக் கோரிக்கை தொடர்பாக திமுக போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துக்கள்

திமுகவைப் பொறுத்தவரை சரியான முடிவு. ஆனால், பாவம் பாமக. எனினும் அடுத்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காகக் காங்கிரசை அண்டிப் பிழைக்காமல் அதன் கொலைவெறியை மக்களுக்கு உணர்த்துவதன் மூலம் தன் சொந்தக் காலில் நின்று வெற்றி பெறலாம். போதிய ஆதாயம் இன்றியும் தமிழ் நலனுக்காகத் தமிழ் ஓசை நாளிதழையும் மக்கள் தொலைக்காட்சியையும் நடத்தும் பாமுக பதவி வழி ஆதாயத்திற்காகக் கொள்கையை அடகு வைக்க வேண்டா; சாதி வெறியிலும் இறங்க வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/31/2010 5:32:00 AM

இறுதி யுத்தத்தின் போது இந்தியா ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது : ஜனாதிபதி [ ஞாயிற்றுக்கிழமை, 30 மே 2010, 05:22.40 AM GMT +05:30 ] இந்தியா, தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் போது ஆயுதரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஒவ் இந்தியா செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இறுதிப்போரின் போது இந்தியா, எவ்வாறு ஆதரவளித்தது எனக்கேட்ட கேள்விக்கே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார். ஆம், யுத்தத்தின் போது தார்மீக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது என்ற பதிலின் மூலம் ஜனாதிபதி இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். ( எனினும் இந்தியா, இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகிக்கவில்லை என்றே தொடர்ந்தும் கூறிவருகிறது). ஆயுத கொள்வனவு என்பது இராணுவ தீர்மானமாகும். இந்தநிலையில் சீனா, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து ஆயுதங்களை தருவித்ததாக குறிப்பிட்ட அவர், இந்தியாவிடம் இருந்து அனுகூலமான அனைத்தையும் தாம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதேவேளை எவர்

By MANISANKAR
5/31/2010 4:08:00 AM

Hey, Is that one of MuKa's batli (keep) in the photo?

By asdkjfh
5/31/2010 2:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானம்: பா.ம.க. தலைவர்கள் அதிருப்தி

சென்னை, மே 30: கூட்டணி தொடர்பாகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இடம் தருவது தொடர்பாகவும் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பா.ம.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.÷2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7 இடங்களில் எதிலுமே பாமகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. எனவே மாநிலங்களவையில் உறுப்பினர் என்ற முறையில் அன்புமணி மட்டுமே நாடாளுமன்றத்தில் பா.ம.க.வின் பிரதிநிதியாக இருந்தார்.÷இப்போது நடக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் அன்புமணிக்கு இடம் கிடைக்காமல் போனால், நாடாளுமன்றத்தில் பா.ம.க.வுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும்.÷கட்சி நிறுவனர் ராமதாஸின் மகன் என்பதற்காக இல்லாவிட்டாலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வரும் கட்சி என்ற வகையில் இந்த பிரதிநிதித்துவம் தேவை என்று கட்சியின் உயர் தலைவர்கள் கருதுகின்றனர்.÷சாதிவாரி மக்கள் தொகை வேண்டும் என்று கோரியது, மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல் செய்ய வைத்தது போன்றவற்றில் பா.ம.க.வின் பங்கு முக்கியமானதாக இருந்தது என்று அந்தத் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.÷2011-க்குப் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு ஓர் இடம் என்று திமுகவின் தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 2013 ஜூலையில்தான் கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் பதவிக் காலம் முடிகிறது. அப்போதுதான் அடுத்த தேர்தல் வரும். அது வரையில் பா.ம.க.வுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்று அந்தத் தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 1998-ல் முதன்முறையாக மக்களவையில் காலடி எடுத்து வைத்த பா.ம.க.வுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாத நிலை ஏற்படும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கருத்துக்கள்

பதவி போனால் எல்லாம் போகும் என அஞ்சிய பாமக ஈழப்போர் உச்சத்தில் இருந்த பொழுது அன்புமணியைப் பதவி விலக வைத்திருந்தால் இன்றைக்கு ஈழத்திலும் விடிவு ஏற்பட்டிருக்கும். பாமகவிற்கும் முழு வெற்றி கிடைத்திருக்கும். நல்ல கொள்கையைப் பரப்புரை செய்தாலும் எதிரிகள் எமை நத்துவாய் எனக் கோடி இட்டழைத்தாலும் தொடேன் எனும் மனஉறுதியின்றிக் கொலைகாரக் கூட்டணியில் சேரத் துடித்ததற்குச் சரியான தண்டனை. தேர்தல் ஆதாயத்திற்காகக் கூட்டுச் சேர வரும் பாமகவிற்குக்கிடுக்கிப் பிடி போடாமல் பதவியைத் தாரைவார்க்க திமுகவோ அதன் தலைவர்களோ அறிவிலிகள் அல்லர். இனியேனும் திருந்தட்டும் பாமக! தமிழ்நலக் கொள்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளட்டும்! மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடிக்கட்டும்! சாதி வெறியைச் சாக்கடையில் எறியட்டும்! சங்கத்தமிழ் மன்பதையை மீண்டும் உருவாக்கட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/31/2010 5:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++

நடுநிலையுடன் எழுதும் கருத்துகளை வீர வன்னியன் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும். சாதிக்கட்சி என்னும் நிலையிலிருந்து மாறித் தமிழ் நலக்கட்சியாகவும் போதை முதலான நலக்கேட்டுப் பொருள்களை ஒதுக்கும் உணர்வை உருவாக்கும் கட்சியாகவும் தமிழ் ஈழத்திற்குக் குரல் கொடுக்கும் கட்சியாகவும் காட்சியளிக்கும் பாமக தேர்தலுக்கு முன்பு காங்கிரசின் கொலைவெறிச் செயல்களுக்கு எதிராகப் பதவிவிலகியிருந்தால் ஒரு மாற்றம் வந்திருக்கும் என்பதில் என்ன தவறு? இன்றைக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆனதும் கூட்டணியின் தலைமையான காங்கிரசிடம் அமைச்சர் பதவியை எதிர் நோக்கி ஈழத் தமிழர் நலனில் கண்மூடி வாய் பொத்தித் தாழும் நிலை ஏற்படலாம் அல்லவா? இப்படிப்பட்ட ஆசைகளை விட்டு விட்டுத் தேர்தல் தோல்வியால் கையில் எடுத்துள்ள சாதிக் கொடியைத் தூர எறிந்து விட்டுத் தமிழ்ச்சாதிக்காக அக்கட்சி பாடுபடவேண்டும். பாமகவின் பணி வன்னியப் பாடடாளிகளுக்கு என்று குறுகாமல், தமிழ்ப்பட்டாளிகளுக்காகச் சிறக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/31/2010 1:14:00 PM

Dianamani editor vaidyanathan naradhar game started

By saravanan
5/31/2010 1:12:00 PM

The PMK party founder Dr.Ramadoss's intention is to uplift his son and family members as doing by some political leaders. if they contest in the election they will certainly lose deposits.Hence Dr.Ramadoss has made a plan to bring his son thro' indirect way,as he is not a candidate in the election.

By v.thatchanamoorthy
5/31/2010 12:52:00 PM

99.99999999999999999% tamilians will be very very very very very ..happy to hear this news.

By prasath.T
5/31/2010 12:17:00 PM

சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த தமிழக அரசுகளில் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியே பொற்காலமாக இன்னமும் மக்களின் மனதில் உள்ளது. தனக்கென்று சொத்து ஏதும் செர்காதவர், பிரதமர் பதவியையே வேண்டாமென்று விட்டுக் கொடுத்தவர், தன் தாயாரின் வீட்டுக்கு சென்ற தண்ணீர் குழாயை நிறுத்தச் சொல்லி அவரை மற்ற மக்கலோடோ போய் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சொன்னவர். அந்த மாதிரி நல்ல உள்ளம் படைத்த தலைவனுக்கு ஜாதி என்ற கரியைப் பூசி கேவலபடுத்துவது குரூர புத்தியுள்ளவன் செய்யும் செயல். அவரை தோற்கடித்துவிட்டு இன்று நடக்கும் ஆட்சியின் லட்சனத்தைப் பாருங்கள். எல்லோரையும் ஒரு ரூபாய் அரிசியில் வாழும் பிச்சைக் காரனாக மாற்றி, குடிகாரனாக்கி வைத்துள்ளான். பெருகி ஓடும் சாராய சாம்ராஜ்யம், இதைச் செய்பவன் மஞ்சள் துண்டு போட்ட, மதுவே வேண்டாமென்று ஒழிக்கச் சொன்ன பெரியாரின் தொண்டன் என்று சொல்லிக்கொள்பவன். தூ..

By இடி அமீன், உகாண்டா.
5/31/2010 11:37:00 AM

மிஸ்டர் இலக்குவனார், தாங்க்ள் ஏதோ பெரியாரின் பேரன் என்பதைப்போல கருத்தெழுதியுள்ளீர்கள்! ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள முயற்ச்சியுங்கள்! இது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களாகிய ஒரு சமூகத்திற்க்காகமட்டும் போராடுகிற கட்சியல்ல அதில் வன்னிய மக்கள் பெரும்பாலுள்ளார்கள். அதையும் மீற கடந்த காலங்களில் பா.ம.க ஒரு பொருப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டிருக்கிறது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரேகட்சி பா.ம.க. புகையிலைக்கெதிரான நடவடிக்கைகள், ஊடகங்களில் தமிழே முன்னிறுத்தப்பட்டும் அதிலும் வென்றிருக்கும் ஒரு உறுதியான கொள்ளை கொண்ட தலைவர் கொண்டது பா.ம.க. அதன் செயல்பாடுகளை மற்றும் விமர்சியுங்கள்! காழ்ப்புணர்ச்சியில் எதைஎதையோ எழுதாதீர்கள். திமுக வின் எதிர்கால நன்மைக்கு வேண்டி வடக்கு மாவட்டங்களில் வலுவுள்ள ஒரு கட்சி அவர்களுக்கு தேவை கலைஞருக்கும் பிறகு நடக்கும் நடவடிக்கைகளை பற்றி ஆராயமுடியுமானால் புரியும் அதன் தற்ப்போதைய இந்த கூட்டனி. அது இதுதான் ஸ்டாலின் முதல்வராகவேண்டுமானால் அதற்க்கு பா.ம.க வின் ஆதரவு நிச்சயம் தேவை பொறுத்திருந்து பாருங்கள்.

By வீர வன்னியன், ஆத்தூர்
5/31/2010 10:53:00 AM

திமுக சார்பில் எம்பி பதவி கிடைத்துள்ள மூவரும் மிகவும் சிறப்பாக கட்சி பணியாற்றுபவர்கள். வாழ்த்துகள். பாமக திமுக கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் எம்பி சீட் கிடைத்திருக்கும். கடுமையாக திட்டுவதும் தினமும் அறிக்கை விட்டு குடைச்சல் கொடுத்ததும் காடு வெட்டி பேசிய பேச்சும் கூட்டணிக்கு மதிப்பு கொடுக்காத பாமக தற்போது எம்பி சீட் எதிர்பார்ப்பதற்கு எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை. தற்போதும் திமுக இல்லாவிட்டால் அதிமுகவுடன் பேரம் பேசுவதாக பத்திரிக்கையில் செய்திகள் கசிகின்றன. இப்படி ஒரு மானங்கெட்ட அரசியல் பதவி தேவையா? இனிமேலாவது எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறீர்களோ அந்த கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்காமல் இருக்கப் பாருங்கள்..தற்போது திமுகதான் வெற்றிக்குதிரை. நல்ல உறவு தொடர்ந்தால் எதிர்காலத்தில் அன்புமணி மத்தியஅமைச்சர் ஆவர்....

By veera Ganapathy
5/31/2010 10:41:00 AM

தி. மு.க. அவசர பட்டு அவர்களை கூட்டணியில் சேர்த்து இருக்க வேண்டியது இல்லை. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வருவதனால் தி.மு.க. வுக்கு நஷ்டமே தவிர லாபம் ஏதும் இல்லை. தான் ஒரு ஜாதி வெறியர் என்பதை திரு. ராமதாஸ் அவர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த பென்னாகரம் இடை தேர்தலில் மற்றும் ஒரு முறை நிரூபித்து காட்டி இருக்கிறார். இவருடைய அரசியல் நடவடிக்கைகள் எதுவுமே ஒரு தலைவனுக்கு உள்ள ஒரு தகுதி இவருக்கு உண்டா என்பதை கேள்விகுறி ஆக்கி இருகிறதே தவிர இவர் இன்னும் தன தகுதியை வரரது கொள்ள வேண்டிய இடத்தில தான் இருக்கிறார்.

By Tamilan
5/31/2010 10:33:00 AM

"thithum nanrum pirar thara vara". Tani manitha muyarchi miga mukkiam

By Sha
5/31/2010 10:26:00 AM

மிஸ்டர் இலக்குவனார், தாங்க்ள் ஏதோ பெரியாரின் பேரன் என்பதைப்போல கருத்தெழுதியுள்ளீர்கள்! ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள முயற்ச்சியுங்கள்! இது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களாகிய ஒரு சமூகத்திற்க்காகமட்டும் போராடுகிற கட்சியல்ல அதில் வன்னிய மக்கள் பெரும்பாலுள்ளார்கள். அதையும் மீற கடந்த காலங்களில் பா.ம.க ஒரு பொருப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டிருக்கிறது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரேகட்சி பா.ம.க. புகையிலைக்கெதிரான நடவடிக்கைகள், ஊடகங்களில் தமிழே முன்னிறுத்தப்பட்டும் அதிலும் வென்றிருக்கும் ஒரு உறுதியான கொள்ளை கொண்ட தலைவர் கொண்டது பா.ம.க. அதன் செயல்பாடுகளை மற்றும் விமர்சியுங்கள்! காழ்ப்புணர்ச்சியில் எதைஎதையோ எழுதாதீர்கள்.

By வீர வன்னியன், ஆத்தூர்
5/31/2010 10:25:00 AM

Mr. M.K took correct action. Weldon!! M.K.

By Tamilan
5/31/2010 10:14:00 AM

Ilakuvanar Thiruvalluvan.I am not able to understand you.why you want Anbumani to resign at that time.The main culprit is your leader Karuna and congress.Otherwise very big loss in Srilanka could hand been averted. Note: I do not know tamil typing.Other wise I can give fitting reply in tamil.

By legal fan
5/31/2010 8:22:00 AM

இலக்குனார் திருவள்ளுவனின் கருத்தே என்னுடையதும். சாதிகள் என்ற பெயரைச் சொல்லியோ, ஆட்சிக்கு வந்தபின் தங்கள் சாதிகளை ஈடேற்றும் வேலையையோ செய்யக்கூடிய அரசியல் கட்சிகள் நம் இந்தியத் திருநாட்டில் இனியும் இருக்கக் கூடாது. சில ஆண்டுகளே ஆட்சியில் இருந்த காமராசர் தன் சாதியை வாணிபத்துறையில் மேலோங்கச் செய்துவிட்டு கர்மவீரர் என்ற பட்டப் பெயரை அந்தச் சாதிமக்களிடத்தில் பெற்றுவிட்டுச் சென்றார். இப்படிப்பட்ட ஓர் அவலநிலை தமிழகத்திற்கோ இந்தியத் திருநாட்டிற்கோ இனித் தேவையில்லை. ஆகவே தொடர்ந்து சாதிகளற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் திமுகவும் மத்தியில் சோனியா அவர்களின் ஆட்சியும்தான் தொடர்ந்து நம் நாட்டிற்குத் தேவை. சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மறந்து இதனை முயன்றால் வேறு ஒரு பெரியார் பிறந்து வந்தாலும் சாதிக் கொடுமைகளை அகற்ற முடியாது. இனி ஒரு பாரதி பிறந்துவந்து சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினால் ’வேலையைப் பார்த்துக்கொண்டு போப்பா’ என்று எதிர்பாட்டுப் பாடத் தொடங்கிவிடுவார்கள். ஆகவே கலைஞர் அவர்கள் தன்னுடைய அறிப்பகலவன்களாக நினைக்கும் தந்தை பெரியார்,

By Vanan
5/31/2010 7:36:00 AM


வெள்ளி, 11 டிசம்பர், 2009

ஆங்​கில வழி கல்​விக்கு ஆத​ர​வாக செயல்​ப​டும் தமி​ழக அரசு​: ராம​தாஸ் குற்​றச்​சாட்டு



சென்னை, ​​ டிச.​ 10:​ சமச்​சீர் கல்வி முறையை அமல்​ப​டுத்​து​வ​தற்​கான தமி​ழக அர​சின் நட​வ​டிக்​கை​கள் ஆங்​கில வழி கல்​விக்கு அதிக முக்​கி​யத்​து​வம் தரு​வ​தாக உள்​ளன என்று பா.ம.க.​ நிறு​வ​னர் ராம​தாஸ் குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார்.​இது குறித்து அவர் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட அறிக்கை:​அ ​னைத்து குழந்​தை​க​ளும் ஒரே வித​மான கல்வி முறை​யில் பயில வேண்​டும் என்ற நோக்​கி​லான சமச்​சீர் கல்வி முறையை அமல்​ப​டுத்த,​​ தமி​ழக அரசு சில நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்​டுள்​ளது.​ ஆனால் கல்​வியை தனி​யார் மயம்,​​ வணிக மய​மாக்​கும் ஆங்​கில வழி​யி​லான கல்​விக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் வகை​யில்,​​ அர​சின் நட​வ​டிக்​கை​கள் அமைந்​துள்​ளன.​பெ​ரும்​பா​லான மாண​வர்​கள் மாநில அர​சின் பாடத்​திட்​டத்​தின் கீழ்,​​ தமிழ் வழிக் கல்வி பயின்று வரு​கி​றார்​கள்.​ இதில் நான்​கில் ஒரு பகு​திக்​கும் குறை​வா​ன​வர்​களே ஆங்​கில வழி கல்வி நிலை​யங்​க​ளில் படிக்​கின்​ற​னர்.​ வசதி படைத்​த​வர்​கள்,​​ சமு​தா​யத்​தில் மேல்​தட்​டில் இருப்​ப​வர்​க​ளின் குழந்​தை​கள்​தான் ஆங்​கில வழி,​​ கட்​ட​ணப் பள்​ளி​க​ளில் படிக்​கின்​ற​னர்.​அ​னை​வ​ ருக்​கும் சம​மான,​​ தர​மான கல்​வியை வழங்​கும் சமச்​சீர் கல்​வியை நடை​மு​றைப்​ப​டுத்​து​கி​றோம் என்று அரசு அறி​வித்​தது.​ ஆனால் மிகக் குறைந்த எண்​ணிக்​கை​யி​லான மாண​வர்​க​ளுக்கு பயன்​பட்டு வரும் கட்​ட​ணப் பள்​ளி​க​ளும்,​​ ஆங்​கில பயிற்று மொழி​யும் தொடர்ந்து நீடிக்​கும் என்று அறி​வித்​தி​ருப்​பது சமூக நீதிக்கு எதி​ரா​னது.​ அர​சி​யல் சட்​டத்​திற்​கும் எதி​ரா​னது.​ 6 முதல் 14 வயது வரை​யி​லான எல்லா குழந்​தை​க​ளுக்​கும் கட்​டாய,​​ இல​வச கல்வி அளிக்க வேண்​டும் என்​பது சட்​டம்.​ ஆனால்,​​ ஆங்​கில வழி​யி​லான கட்​ட​ணப் பள்​ளி​கள் நீடித்து வரும் நிலை​யில்,​​ அனை​வ​ருக்​கும் இல​வ​சக் கல்வி என்​பது எவ்​வாறு சாத்​தி​ய​மா​கும்?​ஆங்​கில வழிக் கல்​விக்கு ஆத​ர​வான கருத்​து​களை முதல்​வர் கரு​ணா​நி​தி​யும் தெரி​வித்​துள்​ளார்.​ இது வேதனை அளிப்​ப​தாக உள்​ளது.​அண் ​ணா​வின் இரு​மொ​ழிக் கொள்​கையே எங்​க​ளது கொள்கை என்று அறி​வித்​துள்ள கரு​ணா​நிதி,​​ இரு​மொ​ழிக் கொள்​கை​யில் இடம்​பெ​றாத ஒரு கருத்து திணிப்​பை​யும் வெளி​யிட்​டி​ருக்​கி​றார்.​தாய் மொழி​யில் மட்​டும் சமச்​சீர் கல்​வியை கொண்டு வரு​வ​தன் மூலம் எந்த அள​வுக்கு பயன்​பெற முடி​யும் என்​பதை சிந்​தித்து முடி​வெ​டுக்க வேண்​டும் என்று கரு​ணா​நிதி கூறி​யி​ருக்​கி​றார்.​இ​தன் மூலம் ஆங்​கில வழி​யில் கல்வி கற்​றால்​தான் வேலை கிடைக்​கும்;​ போட்டி தேர்​வு​க​ளில் வெற்றி பெற முடி​யும் என்று கட்​ட​ணப் பள்​ளி​கள் நடத்​து​வோர் செய்​யும் பொய் பிர​சா​ரத்​துக்கு முதல்​வர் கரு​ணா​நிதி வலிமை சேர்த்​தி​ருக்​கி​றார்.​ஆங் ​கில வழி பயிற்று மொழி என்​பது இடை​யில் வந்​தது.​ அதற்கு முன்பு தமிழ் வழிப் பள்​ளி​க​ளி​லேயே பெரும்​பா​லா​னோர் படித்​த​னர்.​ அவர்​கள் அறி​ஞர்​க​ளாக,​​ மேதை​க​ளாக,​​ அரசு உயர் அதி​கா​ரி​க​ளாக,​​ மருத்​து​வர்​க​ளாக,​​ விஞ்​ஞா​னி​க​ளாக,​​ சிறந்த நிர்​வா​கி​க​ளாக உயர்ந்​தி​ருக்​கி​றார்​கள்.​எ​னவே,​​ ஆங்​கில வழிக் கல்​வியை கற்​றால்​தான் பயன்​பெற முடி​யும் என்​ப​தெல்​லாம் வெறும் மாயை.​ இந்த மாய வலை​யில் தமி​ழக அரசு சிக்​கி​வி​டக் கூடாது.​த​மிழ் செம்​மொழி மாநாடு நடத்த இருக்​கும் இந்த தரு​ணத்​தில்,​​ தமி​ழக பள்​ளி​கள் அனைத்​தி​லும் தமிழே பயிற்று மொழி என்ற அறி​விப்​பினை முதல்​வர் கரு​ணா​நிதி வெளி​யிட வேண்​டும்.​ இதன் மூலம் நமது கல்வி முறை​யில் இப்​போ​துள்ள ஏற்​றத்​தாழ்வை போக்கி,​​ சமூக நீதியை நிலை​நி​றுத்த முன்​வர வேண்​டும் என ராம​தாஸ் வலி​யு​றுத்​தி​யுள்​ளார்.
கருத்துக்கள்

பா.ம.க., தனது சாதிப் போராட்டங்களை நிறுததி விட்டுத் தமிழ் வழிக் கல்வியை மக்களிடமும் அரசிடமும் வலியுறுத்தும் வகையில் முனைப்பான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்த பொழுது தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்திய தி.மு.க. வும் இதற்கு எதிரான போக்கை நிறுத்தி விட்டு வரும் கல்வியாண்டு முதல் தமிழ் வழிக் கல்வி மட்டுமே நடைமுறையில் இருக்கும் வண்ணம் கல்விக் கொள்கையை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/11/2009 2:33:00 AM

தாய்மொழி வழிக்கல்வியே அறிஞர்கள், அறிவியல் மேதைகள், பிற ஆற்றல் வாய்ந்தவர்களை உருவாக்கும். இதை வலியுறுத்துபவர்கள் குடும்பத்தினர் சிலர் இதற்கு மாறாகப் பிற மொழி வழிக் கல்வியில் படிக்கலாம்.அதன் காரணம் தாய்மொழி வழிக் கல்வியை மதித்து அனைத்துப் பணி வாய்ப்புகளிலும் உயர் கலவி வாய்ப்புகளிலும் அவர்களுக்கு முதன்மை அளிக்காததுதான். எனவே அதைக் காரணம் காட்டிச் சிலர் தாய்மொழி வழிக் கல்விக்கு எதிரான நிலைப்பாட்டை ஆதரிப்பது முறையல்ல.மொழிக் கல்வி என்ற முறையில் சிறப்பான ஆங்கில மொழிக் கல்வியையும் கல்லூரி நிலையில் விரும்பும் மொழிக் கல்வியைப் பெறும் வாய்ப்புகளையும் உருவாக்கித் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தமிழ் நாட்டில் நடைமுறைப் படுத்த வேண்டும். எல்லாருமே தமிழ்வழிக் கல்வி பெறும் சூழலில் உயர்கல்வியில் புறக்கணிப்பு வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு என்னும் சூழல் எழாது. எனவே, பா.ம.க., தனது சாதிப் போராட்டங்களை நிறுததி விட்டுத் தமிழ் வழிக் கல்வியை மக்களிடமும் அரசிடமும் வலியுறுத்தும் வகையில் முனைப்பான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்த பொழுது தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்திய தி.மு.க. வும் இதற்கு எதிரா

By Ilakkuvanar Thiruvalluvan
12/11/2009 2:32:00 AM

Such an idiot. All his grandchildren are learning English and Hindi. Where were his grand children studying when his son was a central minister? Delhi. What is the medium of instruction in Delhi? It should be either Hindi or English not tamil definetly. This guy is the number one idiot, as if he can give job for all tamilians in tamilnadu, Tamilians need not go to any other state or any other country for living.

By Sri
12/11/2009 2:01:00 AM

Such an idiot. All his grandchildren are learning English and Hindi. Where were his grand children studying when his son was a central minister? Delhi. What is the medium of instruction in Delhi? It should be either Hindi or English not tamil definetly. This guy is the number one idiot, as if he can give job for all tamilians in tamilnadu, Tamilians need not go to any other state or any other country for living.

By Sri
12/11/2009 2:01:00 AM

very selfish politician. All his children are studying in english medium.

By sam
12/11/2009 1:29:00 AM

sariyana karuthu

By hari
12/11/2009 1:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 5 அக்டோபர், 2009

அ.தி.மு.க. - பா.ம.க. உறவு முறிந்தது



சென்னை, அக். 4: அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறியது. திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பா.ம.க. தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து பா.ம.க. போட்டியிட்டது. அப்போது பா.ம.க.வுக்கு 7 மக்களவைத் தொகுதிகளையும், 2010-ல் காலியாகும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாநிலங்களவை இடத்தையும் அளிப்பது என உடன்படிக்கை ஏற்பட்டது. மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளிலும் தோல்வி ஏற்பட்டது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்தலுக்குப் பின் கூட்டணியில் உள்ள பிற கட்சித் தலைவர்கள் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர். ஆனால் பா.ம.க. தலைவர்கள் யாரும் சந்திக்கவில்லை. இதனால் அ.தி.மு.க. - பா.ம.க. இடையே அதிருப்தி நிலவுவதாகப் பேசப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கொடநாடு சென்று ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார். தேர்தலுக்குப் பின் இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே எந்தச் சந்திப்பும் நடக்கவில்லை எனவும், எனவே மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியதாகவும் அப்போது மணி தெரிவித்தார். இந்நிலையில் சென்னையில் சனிக்கிழமை (அக். 3) செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை, பா.ம.க. ஆதரிக்கும் என தெரிவித்தார். ஆனால் அடுத்த நாளே அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக பா.ம.க. அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பா.ம.க. அலுவலகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கை: "தேர்தலின்போது ஏற்பட்ட ஒரு மோதல் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, மருமகன் பரசுராமன், தம்பி சீனிவாசன் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 22 பேர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டு, கொலை வழக்கில் சேர்க்கப்பட்டனர். காவல்துறை புலன் விசாரணைக்குப் பின் ராமதாஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இப்பிரச்னை தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, பா.ம.க. தலைவர் கோ.க. மணி, முன்னாள் எம்.பி. கோ. தன்ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினார்கள். ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வேண்டுமென்றே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று விளக்கினார்கள். எனினும் அதற்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் பா.ம.க. நிர்வாகக் குழுக் கூட்டம் திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில், ""இது சாதாரண விஷயம் அல்ல; இத்தகைய நிலைமைக்குப் பிறகும் அ.தி.மு.க.வுடன் தோழமை உறவு என்று சொல்வதற்கு எதுவும் இல்லை; எனவே அ.தி.மு.க.வுடன் இனி உறவு தேவையில்லை; இனியும் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கக் கூடாது'' என ஒருமித்த குரலில் வலியுறுத்தினார்கள். எனவே, "அ.தி.மு.க.வுடன் உள்ள கூட்டணி, தோழமை உறவை பா.ம.க. முறித்துக் கொள்கிறது' என நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஏற்பட்ட கூட்டணி, அக்டோபரில் முறிந்துவிட்டது. பா.ம.க.வின் கூட்டணிகள் 1991 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி. 1996 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி. 1998 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதிகளில் வெற்றி. 1999 மக்களவைத் தேர்தலில் தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் அடங்கிய கூட்டணியில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி. 2001 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பா.ம.க., 20 தொகுதிகளில் வெற்றி. 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. கூட்டணிக்கு திரும்பிய பா.ம.க., 6 தொகுதிகளில் வெற்றி. 2006 சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் நீடித்த பா.ம.க., 18 தொகுதிகளில் வெற்றி. 2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து 7 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி. இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை (அக். 4) அறிவித்துள்ளது.

கருத்துக்கள்

இனி திமுக பக்கம் சேராமல் காங். உடன் சேர முயலாமல் தனி அணி அமைத்தால் நன்று. இல்லையேல் அரசியல் வணிகராக இழப்புக் கணக்கில் மூழ்கி யாராலும் தேற்ற முடியாத நிலையே காண வேண்டும். சாதிப் பித்தையும் பதவிப் பித்தையும் தூக்கி எறிந்து தமிழ்நலக் கட்சியாக மாற வேண்டுகோள் விடுக்கும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2009 2:54:00 AM

ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான். இவன மாதிரி அயோக்கியன், பொறுக்கிய பார்க்கவே முடியாது. இவனுக்கு, கேடிப்ப்பயபுள்ள சனியன் புடிச்ச கருணாநிதியே பரவாயில்லை.

By INdian
10/5/2009 2:46:00 AM

ramdas pondra varhalai makkal adayalam, kandu sariyanma paadam puhatta veandum makkal inium amalihalaha irukkadeerhal abu salik

By abu salik
10/5/2009 2:24:00 AM

Makalai emalinu ninikum ramadoss pondra ayokurkuluku vote poduvathai eniyavuthu niruthuvom.

By ananth
10/5/2009 1:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *