திங்கள், 7 அக்டோபர், 2013

நூறு நாள் வேலைத் திட்டம் தேவையா? - நம்மாழ்வார்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_821070.jpg

நூறு நாள் வேலைத் திட்டம் தேவையா? வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேச்சு
காரைக்குடி : ""வறட்சி நிவாரணம் வழங்குவதை விட, வறட்சிக்கான காரணத்தை கண்டுபிடித்து நிவர்த்தி செய்ய வேண்டும்,'' என, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.

காரைக்குடியில் செந்தமிழர் பேரவை சார்பில் நடந்த உணவுத்திருவிழாவில், அவர் பேசியதாவது: கனிம வளங்களை, தோண்டி எடுப்பதுதான், அரசியல்வாதிகளின் மிகப்பெரிய தொண்டாக உள்ளது. இந்த நாடு நமக்கு உரியது என்று கொடி பிடிக்க வேண்டிய காலம், இது. வனம், பயிர், விதை, கால்நடை மட்டுமன்றி, உழைக்கக் கூடிய கரங்களையும், "நூறுநாள் வேலை திட்டம்' என்ற பெயரில் இழந்து நிற்கிறோம். "ஏசி' அறையில் உட்கார்ந்து கொண்டு, விவசாய திட்டங்களை திட்டமிட கூடாது. விவசாய மட்டத்திலிருந்து திட்டமிடல் வரவேண்டும்."பச்சை புரட்சி' என ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளனர். அதனால், விவசாயிக்கு பலன் இல்லை. ரஷ்யாவின் மடகாஸ்கரில், ஒரு ஏக்கருக்கு சராசரியாக 6 டன் நெல் விளைகிறது. நாம், 2 டன் எடுக்க சிரமப்படுகிறோம். முன்னோர்கள் மேற்கொண்ட, ஒற்றை நாற்று நடும் முறையை மேற்கொண்டால், விளைச்சலை பெருக்கலாம்; ஒற்றை நாற்று நடவு முறைதான், விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததாக கூறும் திருந்திய நெல் சாகுபடி.

பூமியை உயிரோட்டமாக வைக்க வேண்டும். அனுபவமே சிறந்த அறிவு. வறட்சி நிவாரணம், 31 மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குரிய காரணத்தை கண்டுபிடித்து, நிவர்த்தி செய்ய வேண்டும். கருவேல மரங்களை அகற்றுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும். கண்மாய் வண்டல் மண்ணை, விவசாயிகள் எடுத்து பயன்படுத்த அனுமதி தரவேண்டும்இவ்வாறு பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக