புதன், 3 அக்டோபர், 2012

உசுபெகிசுதானில் தமிழ் ஆய்வு - Tamizh research in Uspikisthan

உசுபெகிசுதானில் தமிழ் ஆய்வு

First Published : 03 October 2012 05:31 AM IST
இந்த விழாவில் விருது பெற்றவர்கள் சிலர் ஆற்றிய உரையின் சாராம்சம்:
லோலா. மக்துபா: திராவிட மொழிக் குடும்பத்தின் பிரதான மொழியான தமிழுக்கும், உஸ்பெஸ்க் மொழிக்கும் நிறையத் தொடர்புகள் உள்ளன. இரு மொழி
களுக்கிடையே உள்ள தொடர்புகள் குறித்து நேரடி ஒப்பாய்வு, தொகுப்பாய்வு நடைபெறுகிறது.
கு.சின்னப்பபாரதியின் பவளாயி நாவலில் பெண் விடுதலை குறித்து குறிப்பிட்ட கருத்துகள்தான் உஸ்பெகிஸ்தானிலும் இப்போது எதிரொலித்து வருகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டுதான் அங்கு தமிழை வளர்க்கும் வகையில் தமிழாய்வு நிறுவனம் நடத்தப்படுகிறது என்றார் அவர்.
உபாலி லீலாரத்ன: கு.சின்னப்பபாரதியின் மூன்று நாவல்கள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இலங்கையில் இப்போது தமிழர்களும், சிங்களர்களும் கு.சி.பா. பற்றியே பேசுகின்றனர்.
நாடுகள் எதுவானாலும் மொழி, இனம், சாதி ஆகியவற்றின் பெயரால் ஏற்படும் மோதல்களே சகோதரர்களாக வாழும் மக்கள் மத்தியில் வேறுபாடுகளை உருவாக்குகிறது. இவ்வாறான வன்முறையை வளர்ப்பது மனித குலத்துக்கு எதிரானது.
புலவர் செ.ராசு: கல்வெட்டுகள் பண்டைய வரலாற்றை பறைசாற்றுகின்றன.
அத்தகைய கல்வெட்டுகள் குறித்த ஆய்வுகளும், பதிப்புகளும் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம். நமது வரலாற்றில் 122 ஆண்டு கால கல்வெட்டுகள் அச்சுக்கு வராததால் பல வரலாற்றுத் தகவல்களை வளரும் சமுதாயத்துக்குத் தெரியப்படுத்த இயலவில்லை.
எனவே, கல்வெட்டுகள் மூலம் வரலாற்றை அறிவோம், அதை வரும் காலத்துக்கு அறிவிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக