ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

ஒளி போனால் என்னஒலி இருக்கிறதே!"

சொல்கிறார்கள்

"தமிழக க்காவல்  துறைக்கு ப் பெருமை சேர்த்தேன்!'

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டிகளில், இரு முறை தங்கப் பதக்கம் வென்றுள்ள, தமிழகக் காவலர் மணிகண்ட பிரபு: சிறு வயதிலிருந்தே போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவு ஒருபுறமிருக்க, சகோதரிகளைப் படிக்க வைக்க, அம்மா படும் கஷ்டத்தை எப்படியாவது போக்க வேண்டும் என, நினைத்தேன்.பிளஸ் 2 வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு, போலீஸ் தேர்விற்கு விற்கப்படும் கையேடுகள், தின நாளிதழ்கள் போன்றவற்றை ஒரு ஆண்டாக படித்து, பொது அறிவுத் திறமைகளை வளர்த்துக் கொண்டேன். பின், காவலர் தேர்விற்கான அறிவிப்புகள் வெளியானவுடன், தேர்வுக்கு விண்ணப்பித்து, மேலும் தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன். நான் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை; போலீஸ் வேலை கிடைத்து விட்டது.வேலைக்குச் சேர்ந்த பின், அனைத்து விதப் பயிற்சிகளையும் போலீஸ் துறையில் கற்றுக் கொடுத்தனர். பயிற்சியின் போதே, துப்பாக்கி சுடுதலில் மூன்றாம் இடம் பிடித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றேன். மாநில அளவில், போலீசிற்கான துப்பாக்கி சுடும் போட்டியில், ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளேன்.கடந்த, 2007, 2010ம் ஆண்டுகளில், அகில இந்திய அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில், ஒரு தங்கப் பதக்கம் வென்று, தமிழக போலீஸ் துறைக்கு பெருமை சேர்த்தேன். தமிழக போலீசிலேயே, தேசிய அளவில் இரண்டு முறை தங்கம் வென்ற, ஒரே போலீஸ்காரர் நான் மட்டும் தான் என, நினைக்கும் போது, பெருமையாக உள்ளது.போலீஸ் துறையில், துப்பாக்கி சுடும் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்குப் பதவி உயர்வும், ஊக்கத் தொகையும் கொடுத்து, மற்ற மாநில அரசுகள் கவுரவிக்கின்றன. ஆனால், இங்கு, 2007ல், நான் தேசிய அளவில் தங்கம் வாங்கியதற்காக, 50 ஆயிரம் ரூபாய் தருவதாக, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அந்தத் தொகையை இன்னும் கொடுக்கவில்லை. 2010ம் ஆண்டு, மீண்டும் தங்கம் பெற்றதற்காக, பரிசுத் தொகை, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது; இதுவரை, ஒரு ரூபாய் கூட வந்து சேரவில்லை.

ஒளி போனால் என்னஒலி இருக்கே!"

எக்கோலொகேஷன்' எனும், ஒலியைப் பயன்படுத்தி, அன்றாடவாழ்வியலை மேற்கொள்ளும் அமெரிக்காவைச் சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத் திறனாளி தானியல் கிஃசு (டேனியல் கிஷ்): சிறு வயதில் தூக்கம், எனக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது. என் பெற்றோர், இரவு நேரங்களில், உறங்கிக் கொண்டிருந்த போது, பல நாட்கள் நான், தூங்காமல் இருந்திருக்கிறேன்.இரவு நேரங்களில் கேட்கும் ஒலி, மிகத் துல்லியமாக இருக்கும். அவற்றை அடையாளம் கண்டு, வித்தியாசம் உணர்ந்து, ஒவ்வொரு ஒலிக்கும் கற்பனையில் ஒரு தோற்றம் கொடுக்க ஆரம்பித்தேன். எதையாவது கண்டதும், உங்கள் மூளைக்குள் எப்படி ஒரு, "இமேஜ்' தோன்று கிறதோ, அது போல, எதையாவது கேட்டதும், என் மூளைக்குள் ஒரு, "இமேஜ்' உருவாகிறது.என் வீட்டிற்குப் பின்னால், நான் விளையாட, நீளமான வராந்தா போன்ற பகுதி இருந்தது. அது என் ராஜ்ஜியம். அந்த வராந்தாவிற்கு அருகில், பெரிய சுற்றுச்சுவர் இருக்கும். இங்கு விளையாடும் போது, விசில் அடித்து ஒலியெழுப்பி, அது சுவரில் பட்டு எதிரொலிப்பதை உன்னிப்பாக கவனிப்பேன்.இப்படி விசிலடிப்பதன் மூலம், எனக்கும், எதிரில் இருக்கும் பொருட்களுக்குமான தூரத்தை கணிக்க ஆரம்பித்தேன். இந்த திறமை, எனக்குள் வளர்ந்து கொண்டே போனது.பள்ளி, கல்லூரிகளுக்குப் போகும் போதெல்லாம், நான் மற்ற மாணவர்களைப் போல, சாதாரணமாகவே இருந்தேன். பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடம் தேர்ந்தெடுத்து, சிறப்பாகத் தேறினேன். எனக்கு, கார், மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரியாதே தவிர, சைக்கிளை சிறப்பாக ஓட்டுவேன். சைக்கிளில், மலை கூட ஏறுவேன்."வேர்ல்ட் ஆக்சஸ் பார் ப்ளையண்ட்' என்ற லாபநோக்கில்லாத நிறுவனத்தை, 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். உலகமெங்கும், வாழும் பார்வையற்ற குழந்தைகளின் திறனை மேம்படுத்துவதே, இந்நிறுவனத்தின் நோக்கம்.சுயமாகவே, நான் கண்டறிந்த, "எக்கோலொகேஷன்' முறையை, இதுவரை, குறைந்தபட்சம், 500 பார்வையற்றவர்களுக்கு போதித்திருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக