சனி, 6 அக்டோபர், 2012

"சாவுக்கு ப் பறை அடிக்க மாட்டோம்!' "

சொல்கிறார்கள்


 "சாவுக்கு ப் பறை அடிக்க மாட்டோம்!' "

புத்தர் கலைக் குழு' என்ற பெயரில், பறை இசையை பரப்பி வரும் மணிமாறன்: சென்னை கோடம்பாக்கத்தில் பிறந்து, வளர்ந்தேன். சிறு வயதி லிருந்தே, கானா பாட்டு தான் எனக்கு உயிர். 10 வயதிலேயே கானாவிற்கு, டோலாக்கு இசைப்பது, பறை அடிப்பது என, அந்தக் கலைஞர்களுடன் ஒன்றிவிட்டேன். அந்த வயதில் அது உற்சாகமாக இருக்கும். பெரும்பாலும் சாவு வீடுகளில் தான் கானா பாட வேண்டும். சடலத்தை வைத்துக் கொண்டு, அவர் எத்தனை கெட்டவராக இருந்தாலும், அவரைப் போற்றிப் புகழ்ந்து பாட வேண்டும். இதில் கானாக் குழுக்களுக்கு இடையே போட்டி நடக்கும். அதிலேயே பழகி, பறை இசைப்பதுடன், எனக்கு பாடல் எழுதுவதும் கைவந்தது. சிவகங்கையில், அழகர்சாமி வாத்தியாரிடம் பறை இசைப் பயிற்சி எடுத்தேன். கிலுகிலுப்பை, தமுறு, கால் சலங்கை, தூம்பு, பறை ஆகிய ஐந்தும் சேர்ந்தது தான் ஒரு முழுமையான பறை இசை. ஒவ்வொரு வட்டாரத்திற்கும், ஒரு ஆட்டம் உண்டு. ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு அடி உண்டு. சென்னையில் சாவுக்கு அடிப்பதை, "ஒத்தையடி' என்பர். இதை திருமண வீட்டிற்கோ, கோவில்களுக்கோ அடிக்க முடியாது. பயிற்சி முடித்து, சென்னை வந்து சில காலம் கழித்து, ஒரு குழுவை அமைக்கும் முயற்சியில் இறங்கினேன். என் திருமணத்திற்குப் பின், குடும்பம் சகிதமாக பறை அடிக்கும் எங்களை, பலரும் வித்தியாசமாகப் பார்த்தனர். தற்போது எங்கள் குழுவில், 25 பேர் உள்ளனர். எங்களுக்கு என, சில விதிமுறைகள் உள்ளன. எத்தனை ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும், நாங்கள் ஒரு போதும், சாவுக்கு பறை அடிக்க மாட்டோம். கோவில் திருவிழாக்களில், குடும்ப நிகழ்ச்சிகளில், கட்சி நிகழ்ச்சிகளில், அரசியல் கூட்டங்களில் பறை இசைக்கிறோம். இப்படி, நிகழ்ச்சிகள் நடத்துவதில் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை, சமூகத்திற்காக செலவிடுகிறோம். பறை, பெருமைக்குரிய கருவி; பாரம்பரியக் கருவி. அது இந்திய ஜாதியச் சாக்கடையில் சிக்கிவிட்டது; அதை மீட்டு எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக