புதன், 11 ஏப்ரல், 2012

thamizh thaay award to madurai thamizh chankam

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டுத் தமிழ் அறிஞர்களுக்கு விருது : தமிழக அரசு




சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டு அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு விருதுகளை வழங்கி, உரையாற்ற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கபிலர் விருது பேராசிரியர் மணவாளனுக்கும், தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் விருது புலவர் ராசுவுக்கும் வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த பெண்மணிக்கான ஒளவையார் விருது திருமதி ஓய்.ஜி. பார்த்தசாரதிக்கு வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்த்தாய் விருது மதுரை தமிழ்சங்கத்துக்கு வழங்கப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் சிறந்த நூல்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நூலாசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபாயும், பதிப்பகத்தாரர்களுக்கு நூல் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. பரிசுத்தொகையாக ஒரு லட்ச ரூபாய், 8 கிராம் தங்க நாணயம், தகுதிச்சான்று வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. தமிழ் அறிஞர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளனர். மேலும், தமிழ் அறிஞர்களுக்கு பரிசுத்தொகையாக 5 லட்ச ரூபாயும், கேடயமும், பாராட்டு சான்றும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக