தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டுத் தமிழ் அறிஞர்களுக்கு விருது : தமிழக அரசு
கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் சிறந்த நூல்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நூலாசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபாயும், பதிப்பகத்தாரர்களுக்கு நூல் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. பரிசுத்தொகையாக ஒரு லட்ச ரூபாய், 8 கிராம் தங்க நாணயம், தகுதிச்சான்று வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. தமிழ் அறிஞர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளனர். மேலும், தமிழ் அறிஞர்களுக்கு பரிசுத்தொகையாக 5 லட்ச ரூபாயும், கேடயமும், பாராட்டு சான்றும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது