award for tamil scholars லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
award for tamil scholars லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஏப்ரல், 2012

thamizh thaay award to madurai thamizh chankam

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டுத் தமிழ் அறிஞர்களுக்கு விருது : தமிழக அரசு




சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டு அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு விருதுகளை வழங்கி, உரையாற்ற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கபிலர் விருது பேராசிரியர் மணவாளனுக்கும், தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் விருது புலவர் ராசுவுக்கும் வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த பெண்மணிக்கான ஒளவையார் விருது திருமதி ஓய்.ஜி. பார்த்தசாரதிக்கு வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்த்தாய் விருது மதுரை தமிழ்சங்கத்துக்கு வழங்கப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் சிறந்த நூல்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நூலாசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபாயும், பதிப்பகத்தாரர்களுக்கு நூல் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. பரிசுத்தொகையாக ஒரு லட்ச ரூபாய், 8 கிராம் தங்க நாணயம், தகுதிச்சான்று வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. தமிழ் அறிஞர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளனர். மேலும், தமிழ் அறிஞர்களுக்கு பரிசுத்தொகையாக 5 லட்ச ரூபாயும், கேடயமும், பாராட்டு சான்றும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

வியாழன், 1 ஏப்ரல், 2010

பத்ம விருதுகளை வழங்கினார் பிரதிபா பாட்டீல்



புது தில்லி, மார்ச் 31: புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கினார்.
÷தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், கர்நாடக இசைக் கலைஞர் உமையாள்புரம் சிவராமன், நாடகத் துறையைச் சேர்ந்த இப்ராஹிம் அல்காஜி, அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் சந்திர ரெட்டி ஆகியோருக்கு பாரத ரத்னாவுக்குப் பிறகு நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
÷இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹிந்தி நடிகர் ஆமிர் கான், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நாராயணன் வகுள் ஆகியோர் பத்ம பூஷண் விருது பெற்றனர்.
÷பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ஹாக்கி வீரர் இக்னேஸ் திர்கே, நடிகை அருந்ததி நாக், மத்திய புலனாய்வுத் துறை முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், தமிழகத்தைச் சேர்ந்த திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி (கல்வியாளர்), டாக்டர் ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி (மருத்துவம்), டாக்டர் ரங்கநாதன் பார்த்தசாரதி (இலக்கியம், கல்வி), சர்வதேச கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், தொழிலதிபர்கள் டி.என்.மனோகரன், வேணு சீனிவாசன் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கருத்துக்கள்

பத்ம விருதுகளையும் சமற்கிருதம், அரபி மொழி அறிஞர்களுக்கான விருதுகளையும் வழங்கக் குடியரசுத் தலைவருக்கு நேரம் இருக்கும் பொழுது தமிழ் அறிஞர்களுக்கான விருதுகளை மட்டும் வழங்க ஏன்நேரம் இல்லை என்பது புதிராக உள்ளது! வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/1/2010 3:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்