திங்கள், 31 அக்டோபர், 2011

மூவர் விடுதலைக்கு மாற்று வழக்குரை அளிக்க முதல்வருக்கு வேண்டுகோள்


மூவர் விடுதலைக்கு மாற்று வழக்குரை அளிக்க முதல்வருக்கு வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 30/10/2011



தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் நீதித்தேவதையின் கருணையை எதிர்நோக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் மீதும் கருணை காட்டிய மாண்புமிகு முதல்வர் அவர்கள், அம்மூவரின் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரி 30.8.2011 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் தானே தீர்மானம் கொணர்ந்து நிறைவேற்றி உள்ளார். ஆனால் உயர்நீதிமன்றத்தில் அரசின் உள்துறைச் செயலர் அளித்துள்ள, வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் எனும் எதிர்வாதம் மாண்புமிகு முதல்வரின் தாய் உள்ளத்திற்கு முரணாக உள்ளது. ஒருவேளை, நீதி மன்றமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னால்கூட, மாறு பட்ட தீர்ப்பு வந்தது எனில் அது மாண்புமிகு முதல்வரின் எண்ணத்திற்கு மாறானதாக அமையும். இவ்வாறு தள்ளுபடி செய்யுமாறு சொல்லுவது மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்பதாகத்தான் பொருளாகிறது. எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டு, சட்ட மன்றத்தீர்மானத்தின் படியை இணைத்து, நாட்டு மக்களின் மொத்த எண்ணத்திற்கு ஏற்ப தம்மால் கொண்டு வந்த தீர்மானத்தின்படி மூவரின் தூக்குத் தண்டனையையும் நீக்குமாறு வேறு எதிர்வாதுரை அளிக்கச் செய்ய வேண்டும்.
ஈழத்தமிழர்களின் மீது கொடுமைகளை இழைத்தவர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியதிலும் மூவர் விடுதலை மன்றாடலிலும் உலகமக்கள் உள்ளங்களில் உயர்ந்து உள்ள மாண்புமிகு முதல்வர் அவர்கள், மாநிலங்களின் உரிமைகளை ஒடுக்கும் மத்திய அரசிற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்காத புரட்சித்தலைவி அவர்கள், தமிழக அரசின் உரிமையைக் காக்கும் வகையில் தம்மால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். மூவர் உயிரையும் காத்து உலகத்தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு திரு இலக்குவனார் திருவள்ளுவன் மூவர் விடுதலையை வலியுறுத்தி உள்ளார்.



or

மூவர் விடுதலைக்கு மாற்று வழக்குரை அளிக்க முதல்வருக்கு வேண்டுகோள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக