இளையராசா, மைத்துனர்கள், பிள்ளைகள் வளர்ச்சியில் தூணாகத் திகழ்ந்தவரை இழந்துவாடும் சுற்றத்தினருக்குத் தினமணி இணைய நேயர்கள் சார்பில் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!
First Published : 01 Nov 2011 11:09:59 AM IST
Last Updated : 01 Nov 2011 11:17:24 AM IST
சென்னை, நவ.1: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா (58) மாரடைப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.சென்னை தியாகராய நகரில் குடும்பத்தாருடன் வசித்து வந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இரவு 10.40 மணியளவில் அவர் காலமானார்.பண்ணைபுரத்தைச் சேர்ந்த ஜீவா, இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரி மகள் ஆவார். இசையமைப்புப் பணிகளுக்காக ஹைதராபாத் சென்றுள்ள இளையராஜாவுக்கு, ஜீவா மறைந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உடனடியாகப் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை வருகிறார்.அதன் பின்னரே, இறுதிச் சடங்கு குறித்த விவரங்கள் தெரிய வரும் என இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்தார்.இளையராஜா- ஜீவா தம்பதியருக்கு கார்த்திக் ராஜா, யுவன்ஷங்கர் ராஜா ஆகிய இரண்டு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர்.
கருத்துகள்
By Anandkumar
11/1/2011 12:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/1/2011 12:16:00 PM