திங்கள், 5 அக்டோபர், 2009

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை: தேமுதிக எதிர்ப்பு



சேலம், அக். 4: இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கூடாது என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியேற்ற உரிமை வழங்குவது, இலங்கையில் நடைபெறும் இனவெறி அரசின் கொள்கைகளை நாமே நிறைவேற்றி வைப்பதைப்போல் ஆகிவிடும். தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க சிந்திப்பது, சிங்களவரிடம் இந்தியாவும், தமிழகமும் சரணடைய செய்யும் முயற்சிதான். தேமுதிக இதை ஒருபோதும் ஏற்காது என்றார்.

கருத்துக்கள்

இந்த நிலைப்பாட்டை மாற்றாமல் போராடி வெற்றி காண்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2009 3:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக