ஞாயிறு, 4 அக்டோபர், 2009

பேருந்து நிலையத்திற்கு முத்துவேலர்-அஞ்சுகத்தம்மையார் பெயரைச் சூட்ட காங்கிரசு கட்சியின் எதிர்ப்பு வலுக்கிறது



திருநெல்வேலி, அக். 2: ராதாபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்திற்கு முதல்வர் கருணாநிதியின் பெற்றோரான முத்துவேலர்- அஞ்சுகத்தம்மையார் பெயரை சூட்ட காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வரும் எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். ராதாபுரத்தில் அப்பாவு எம்.எல்.ஏ. முயற்சியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அந்த பஸ் நிலையத்திற்கு முதல்வர் கருணாநிதியின் பெற்றோரான முத்துவேலர்- அஞ்சுகத்தம்மையார் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அங்கு அவர்களது முழு உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தையும், சிலைகளையும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இம் மாதம் 13 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், அப்பாவு எம்.எல்.ஏ.வும் செய்து வருகின்றனர். இதனிடையே, பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ள மைதானம் "காமராஜர் திடல்' என தொடர்ந்து அழைக்கப்பட்டு வந்ததாகவும், இப்போது அதில் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளதால் அதற்கும் காமராஜர் பெயரையே சூட்ட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும், பஸ் நிலையம் திட்டமிட்டப்படி கட்டி முடிக்கப்பட்டு முத்துவேலர்-அஞ்சுகத்தம்மையார் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், பஸ் நிலையம் திறக்கப்பட உள்ள இம் மாதம் 13 ஆம் தேதி வரை உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளதாக போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பி.கே. ஜெயக்குமார், சிவாஜி முத்துக்குமார் ஆகியோர் தெரிவித்தனர். இதுகுறித்து திருநெல்வேலியில் அவர்கள் நிருபர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும். இல்லையெனில் இனிமேலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம். பஸ் நிலையத்தை திறந்து வைக்க துணை முதல்வர் வரும்போது கறுப்புக் கொடி காட்டுவோம். ராதாபுரம் தொகுதி முழுவதும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

கருத்துக்கள்

தொல்காப்பியம், சங்கத் தமிழ், திருக்குறள் முதலானவற்றை எளிய மக்களும் அறியச் செய்த படைப்பாளியான கலைஞரின் பெற்றோரை மதித்து அவர்கள் பெயரைச் சூட்டுவதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், பொருத்தமில்லா இடத்தில் பெயர் சூட்டி விவாதத்திற்கு உள்ளாக்கி அவர்களைக் களங்கப்படுத்துவதும் இழுக்கு. பொருத்தமில்லா நேரத்தில் - ஈழத் தமிழர்களின் பேரழிவிற்கு உடந்தையாகவும் உலகெங்கும் தமிழின வரலாறு மறைக்கப்பட்டு இன ஒடுக்கல் நடைபெறுவது கண்டு தடுக்காமலும் இருந்தமையால் இழுக்கு தேடியுள்ள சூழலில் - இவ்வாறு பெயர் சூட்டுவதும் அவர்களுக்குக் களங்கமாக அமையும். ஆகவே பொருத்தமான சூழலில் இவர்களின் பெயர்களைச் சூட்டுவதே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை.

By Ilakkuvanar Thiruvalluvan
10/4/2009 4:25:00 AM

தொல்காப்பியம், சங்கத் தமிழ், திருக்குறள் முதலானவற்றை எளிய மக்களும் அறியச் செய்த படைப்பாளியான கலைஞரின் பெற்றோரை மதித்து அவர்கள் பெயரைச் சூட்டுவதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், பொருத்தமில்லா இடத்தில் பெயர் சூட்டி விவாதத்திற்கு உள்ளாக்கி அவர்களைக் களங்கப்படுத்துவதும் இழுக்கு. பொருத்தமில்லா நேரத்தில் - ஈழத் தமிழர்களின் பேரழிவிற்கு உடந்தையாகவும் உலகெங்கும் தமிழின வரலாறு மறைக்கப்பட்டு இன ஒடுக்கல் நடைபெறுவது கண்டு தடுக்காமலும் இருந்தமையால் இழுக்கு தேடியுள்ள சூழலில் - இவ்வாறு பெயர் சூட்டுவதும் அவர்களுக்குக் களங்கமாக அமையும். ஆகவே பொருத்தமான சூழலில் இவர்களின் பெயர்களைச் சூட்டுவதே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை.

By Ilakkuvanar Thiruvalluvan
10/4/2009 4:25:00 AM

ஆமா யாருப்பா அந்த முத்துவேலர் - அஞ்சுகத்தம்மையார்? சுதந்திரப் போராட்டத் தியாகிகளா? தமிழுக்காகவும், தமிழனுக்காகவும் தன்னொட வாழ்க்கைய அர்ப்பணிச்சவங்களா? அப்படின்னா வீரப்பனோட பேரையோ, அவங்க அப்பா-அம்மா பேரையோ வைக்கலாமே? ஏன்னா, வீரப்பன் இருந்த வரைக்கும், தமிழனாத்தான் போராடினான். அப்பல்லாம் ஒருபய காட்டுக் குள்ள திருட்டு வேட்டயாட போவமுடியாது. காட்டு விலங்குகள்லாம் பாதுகாப்பா இருந்துது. காட்டுக்கு ராஜாவே அவந்தான். அதனால வீரப்பன் பேர வச்சா தப்பே இல்ல. ஒரு பொதுஎடத்துக்குப் பேரு வச்சா, அதுல ஒரு அர்த்தம் இருக்கணும். அர்த்தமில்லாம ஆட்சி பண்றவங்ககிட்ட வேற என்னத்த எதிர்பாக்கலாம்? கொள்ளக் கூட்டம் உருவாக காரணமா இருந்தவங்களுக்கெல்லாம் இப்படி ஒரு கவுரவமா? கொடுமைடா சாமீ..ஈ ஈ....

By Murugadoss K
10/3/2009 11:27:00 PM

BETTER PUT KANIMOZHIIII SON NAME APPAVU WILL GET MINISTER POST

By JOSEPH EDISON
10/3/2009 6:34:00 PM

What is wrong? don't we worship Shiva-Parvathi , parents of Lord Ganesha, Lord Muruga and their other off-springs? Similarly, we should accept parents of Soniaji, Karunanithiji , Jayalalithaaji and all other great leaders, is it not? In a way, we should salute as a Thanks- giving gesture for having given birth to these great leaders.

By SOMU
10/3/2009 5:49:00 PM

Muthuvelar and Anjugam have not done anything to TN. Hence, it is not proper to name the Bus Station after them. This will create precedent to other political leaders.

By Anbarasi
10/3/2009 2:54:00 PM

Ahhaaahhaaa muthuvelar-anjugam perundhu nilaiyam. OOOOOhhhhhooooohoooo. Just like Mahaatma - Kasturibai Superb. Tamilnadu & India should be proud.

By sbala
10/3/2009 11:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக