ஞாயிறு, 4 அக்டோபர், 2009

சாதியைக் கூறாமல் "தமிழன்' என்று கூறும் நிலை வர வேண்டும்: ஸ்டாலின்



கரூர், அக். 3: "நீ யாரென்று கேட்டால் சாதியைக் கூறாமல் நான் தமிழன் என்றோ அல்லது நான் மனிதன் என்றோ கூறும் நிலை வர வேண்டும்' என்றார் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், வீரணம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது:
நீங்கள் யார்? என்று கேட்டால், நம்மில் எத்தனை பேர் நான் தமிழன் என்றோ, மனிதன் என்றோ கூறுகிறோம். எல்லோரும் அவரவர் சாதியைதான் கூறுகிறோம். இந்த நிலை மாற வேண்டும். நான் தமிழன் அல்லது நான் மனிதன் என்று கூறும் நிலை வர வேண்டும்.
சதிக்கு கால் முளைத்ததால் அது சாதி; அதேபோல, சா"தி'-க்கு கொம்பு முளைத்தால் அது "தீ'யாக மாறிவிடும்.
இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாதவகையில், உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ரூ. 20,000 அளிக்கும் திட்டம் உள்பட பெண்களின் முன்னேற்றத்துக்கென மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் இப்போது 4,05,680 சுய உதவிக் குழுக்கள் 65,20,000 பெண்களுடன் செயல்பட்டு வருகின்றன. கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் ரூ. 4,188 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய ஆட்சியில், ரூ. 76 கோடி சுழல்நிதியாகவும், ரூ. 1,644 கோடி கடனாகவும் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 99 சதவீத கடன் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டு வருகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும் என்றார் ஸ்டாலின்.


கருத்துக்கள்

மிகச் சரியான கருத்து. ஆனால் சொல்பவர்கள் முன்மாதிரியாக நடந்து கொண்டால்தான் பிறரும் தம்மைச் சாதிவழியாகச் சிந்திக்காமல் தமிழனாகவோ மனிதனாகவோ சிந்திப்பர். அடி மனத்தில் இருந்து இந்த உரை வந்தது என்றால் முதலில் கலைபண்பாட்டுத் துறையை முறைகேடாக இசைவேளாளர்களை நியமித்து இசை வேளாளர்துறையாக மாற்றியதை - திமுக ஆட்சியில் மேற்கொண்ட நியமனங்களை நீக்கம் செய்து சாதிக்கு அப்பாற்பட்ட தகுதி அடிப்படையிலான நியமனங்களை மேற்கொண்டு - தமிழினத் துறையாக மாற்ற வேண்டும். துணை முதல்வர் முன்வருவாரா?

மாண்புமிகு முதல்வரின் கட்டுப்பாட்டில் வரும் கலைபண்பாட்டுத்துறை

சீரடைய வேண்டும் என விரும்பும்

இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
10/4/2009 5:09:00 AM

UNNAI POLUM UNATHU APPANAI POLUM THAMILAI VITKUM PORUKKIKAL TAMIL NADDAI AALUM MADDUM TAMILAN TAMILANANKA IRUKKA MAADDAAN.ILANKAI TAMILANAIP PAAR...AVAN TAMILAN !!!

By Mathi
10/4/2009 4:36:00 AM

Let Karunanidhi, and Stalin, Alagiri, and other members of the family who own DMK choose the MLA, and MP candidates without basing caste, and religion. First question they ask is what is the caste from which this candidate applicant comes from. The statement by Stalin , a dictator whose name he bears must correct himself before talking about others. Caste, and religion are going to stay for a long time, and may come out in a different form. When is he going to give scholarship for education or reservation of jobs without caste? Does he have courage to do so?

By guest
10/4/2009 4:11:00 AM

is it possible until your dirty family die and get lost from tn politics

By reg
10/4/2009 3:06:00 AM

FANTASTIC&MARVELLOUS ADVICY BY DY CM STALIN.EASYTO ADVISE AND PROPOGATE.BUT DIFFICULT TO FOLLOW BY THE PREACHER HIMSELF. LET MLAsMPs&POLITICIANS START THIS IDEAL INCLUDING NAMING THEMSELVES IN THOOYATAMIL>I AM SURE TAMILNADU WILL PROSPER.VAAZHA THOOYATAMIZHARHAL.VAAZHA ANNANAAMAM?AYYANIN KURIKKOL.

By VALADI LAKSHMINARAYANAN SETHURAMAN
10/4/2009 1:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக