திங்கள், 5 அக்டோபர், 2009

இலங்கைத் தமிழர் பிரச்னை:
அக்டோபர் 9-ல் திருச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்



சென்னை, அக். 4: இலங்கையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு திருப்பி அனுப்பக் கோரி திருச்சியில் அக்டோபர் 9-ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். அவர்களுக்கு சம உரிமை, மாநில சுயாட்சி வழங்கி அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும். இந்தப் பிரச்னைகளில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு உரிய நிர்பந்தத்தை அளித்து தீர்வு காண வலியுறுத்தி திருச்சியில் அக்டோபர் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கருத்துக்கள்

தமிழர்களின் தாயகம் தமிழ் ஈழம் என்பதை உணராத வரையில்அல்லது உணர்நததை மக்களுக்கு உரைத்துப் போராடாதவரையில் மார்க்சியப் பொதுவுடைமையினர் போலிப் போராட்டங்களில் ஈடுபட்டுப் பயனில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2009 3:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக