ஞாயிறு, 4 அக்டோபர், 2009

இலங்கை துணைத் தூதரை வெளியேற்ற வேண்டும்: திருமாவளவன், தா.பாண்டியன், கி.வீரமணி கோரிக்கை

First Published : 04 Oct 2009 02:14:27 AM IST

Last Updated : 04 Oct 2009 02:35:25 AM IST

சென்னை, அக். 3: சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரை வெளியேற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரியுள்ளனர்.
"இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்கள் மிருகக்காட்சி சாலை அல்ல. எனவேதான், அவற்றைப் பார்வையிட யாரையும் அனுமதிக்கவில்லை' என துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி கூறியதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இதற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கைகள் விவரம்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்:
தமிழக மீனவர்கள் கச்சத் தீவில் ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும் அனுமதி உள்ளது. துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இதை மறைத்து, உள்நோக்கத்துடன் பேசியுள்ளார். இதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தற்போது போர் முடிந்துவிட்டதென்று கூறும் இலங்கை அரசு, வெளிநாட்டினரையோ, செய்தியாளர்களையோ தமிழ் மக்களைச் சந்திக்க அனுமதி மறுக்கிறது. இந்த நிலையில், முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விலங்குகள் போல் சித்திரித்துப் பேசிய துணைத் தூதரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
கச்சத் தீவு குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை கூறியுள்ள வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை இந்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும். அவரை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரியுள்ளார் திருமாவளவன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: இலங்கைத் தமிழர்களை அழித்ததோடு, இந்தியாவில் இருந்துகொண்டு இந்தியத் தமிழர்களையும் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இழிவாகப் பேசியுள்ளார். இது கண்டனத்துக்குரியது.
கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்.
அவர் இலங்கையில் உள்ள முகாம்கள் மிருகக் காட்சி சாலை அல்ல என்று வர்ணித்திருப்பது அந்த நாடு உலக மக்களின் கருத்தை மதிக்க மறுக்கும் காட்டு மிராண்டி அரசு என்பதைக் காட்டுகிறது.
கச்சத்தீவு, இலங்கைக்கு இந்தியாவால் வழங்கப்பட்டது. கொடை தந்த நாட்டை எச்சரித்திருப்பதும், உங்களுக்கு உரிமை இல்லை என இந்திய மண்ணில் இருந்து பேச இடம் தந்திருப்பதே பெரும் தவறாகும்.
மீனவர்களைக் காக்கவும் கச்சத்தீவில் உரிமைகளை மீட்கவும் வேண்டும் என்று கூறியுள்ளார் தா.பாண்டியன்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் மிருகங்களாக நடத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உலகம் முழுவதும் வெடித்துக் கிளம்பியுள்ளது.
அதனை வேறு வகையில் இலங்கை துணைத் தூதர் ஒப்புக் கொண்டுள்ளார் என்றே இதைக் கருத வேண்டும்.
இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள, துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.


கருத்துக்கள்

தமிழ் இனத் தலைவர்கள் ஒப்புக்கு மாரடித்துப் பயனில்லை. இலங்கையிலும் ஈழத்திலும் தமிழர்கள் உரிமையுடன் வாழும் வரை தமிழ் நாட்டில் இலங்கைத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம், சிங்கள வான் வழிப் போக்குவரத்து, சிங்கள நிறுவனங்கள் எனச் சிங்களம் தொடர்பான எதுவும் தேவையில்லை எனப் போராடி வெற்றி கண்டால் பாராட்டிற்குரியவர்கள்.பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என நடித்துக் கொண்டு காங்கிற்கும் அதன் பின்பாடிகளுக்கும் துதிபாடிகளாக விளங்கிக் கொண்டு ஆரவார ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுப் பயன் இல்லை. முதன்மைக் கட்சிகளை அண்டிப் பிழைக்காமல் தமிழ் நலக் கூட்டணியை அமைத்துப் போராடினால் அன்றித் தமிழர்களுக்கு விடிவு கிடையாது. எனவே அண்டிப்பிழைக்கும் வரை தமிழர் நலன் குறித்துப் பேசி வெறுப்புணர்ச்சிக்கு ஆளாகாமல் இருத்தலே சாலச் சிறந்தது.

உண்மைத் தமிழினத் தலைவர்களாக மாற வேண்டும் என விழையும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/4/2009 4:44:00 AM

This Thirumavalavan, Nedumaran,pandiyan .. velinaadukalukku pokum pothu puli vaalkal ivarai veru oru veeddil thanga vaipparkal. Yean entral thankaludan nintral ivarkal thankaludaiya phone..i paavithu thankalukku bill yeatti viduvarkal enpathal. Ivarkal thanki nintra veedukalil irunthu kondu America mattum naadukalukku avarkal veeddil irunthu osi phone oru kadduppau illamal use panniyi irukkiraarkal. Ithanal anthe veeddu kararkal telephone comppanykku solli long distance calls feature enpathanai cut panni viddaarkal. Intha Pichaikkara naikal pora idankalilum aadkali nimmathiyaka vaazha vida maddarkal. Enke idam kidaithatho anke suruddi viduvom entru nitkirarkal. Ippothu ivarkalum varumaanam illamal nitkirarkal.

By suppan
10/4/2009 4:33:00 AM

I don't find this person is any way worst than our tamil politicians, particularly Thiruma he is the bloody double headed snake! Thiruma is making noise only because sorinai sonia kicked his balls!

By Nethaji
10/4/2009 3:40:00 AM

where is this shameless animal karunanthi comment for this animal statement

By reg
10/4/2009 3:00:00 AM

................................To Thinamani: I would like to thank you and your staff for your efforts in reporting on the horrific acts perpetrated by the Sri Lankan regime. I appreciate your expressively honest portrayal of this monstrous government and its ravaging of Tamil civilians and I hope that other newspapers follow your example of integrity.

By Vani Kumar, London, UK
10/4/2009 2:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக