வியாழன், 3 செப்டம்பர், 2009

பான் கீ மூன் வருகை நோர்வே தமிழர்கள் எதிர்ப்பு
பிரசுரித்த திகதி : 02 Sep 2009

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நோர்வே வருகையின்போது, நோர்வே வாழ் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணி வரை ஒன்றுகூடிய நோர்வே தமிழ் மக்கள், தாயக மக்களின் அவலநிலை தொடர்பாக பான் கீ மூன் தலைமையிலான ஐ.நா.வின் பாராமுகம் மற்றும் செயல் முனைப்பின்மை மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் முகமாக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக