muthukumar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
muthukumar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

elangovan comments about veera porali muthukumar

வீரப்போராளி முத்துக்குமாரின் உயிர்க்கொடை குறித்த கோவனின் பேச்சு கொழுப்பெடுத்த பேச்சு. கடந்த முறை போட்டியி்ட்டு மண்ணைக் கவ்வியவர் இந்த முறைபோட்டியிடவும்  வாய்ப்பில்லாமல் மண்ணைத் தின்பார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

புதன், 26 ஜனவரி, 2011

பயணம் மேற்கோள்வோருக்குப் பாராட்டுகள். பயணத்தின் வெற்றி ஈழ மலர்ச்சி! விரைவில் வெற்றி உண்டாகட்டும்! 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


முத்துக்குமாரின் ஈகச்சுடர் ஊர்தி பயணம்

கன்னியாகுமரி, ஜன. 25: இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் இரண்டாம் ஆண்டு ஈகச்சுடர் ஊர்திப் பயணம் கன்னியாகுமரியிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, மள்ளர் மீட்புக்கழகத் தலைவர் கு. செந்தில் தலைமை வகித்தார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தொடக்கிவைத்தார்.இந்த ஊர்திப் பயணம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், தாம்பரம் வழியாக சென்னை கொளத்தூரில் இம்மாதம் 29-ம் தேதி நிறைவுபெறுகிறது.அங்கு சுடரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பெற்றுக்கொள்கிறார். தொடக்க விழாவில், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலர் ஞானசம்பந்தம், பங்குத் தந்தைகள் லியோன் எஸ். கென்சன், கிளாரட், டங்ஸ்டன் உள்ளிட்டோர் பேசினர்.

புதன், 24 நவம்பர், 2010

முத்துக்குமாருக்குப் படிமம்

அருமையான தீர்ப்பு. போற்றுதலுக்குரிய முத்துக்குமார் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளமையும் பாராட்டிற்குரியது. கொள்ளைக்காரர்கள்,  கொலைகாரர்கள், அரசியல்வாதிகள் என்ற போர்வையில் சிலைகளாக நிற்கையில் தன்னுயிரையே தமிழர் எழுச்சிக்காகக் கொடுத்த முத்துக்குமாருக்குப் படிமம் நிறுவ மறுப்பது
அறமற்றது என்பதை இனியும் கூட உரியவர்கள் உணர மாட்டார்கள். வேறு வகையில் தடை வரும் முன் விரைவில் படிமத்தைத் திறநது விடுங்கள். வீரப் போராளி முத்துக்குமார் புகழ்  ஓங்குக. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு சிலை வைக்க நீதிமன்றம் அனுமதி

First Published : 24 Nov 2010 03:14:52 AM IST


மதுரை, நவ. 23: இலங்கைத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னையில் தீக்குளித்த முத்துக்குமாரின் மார்பளவுச் சிலையை, தஞ்சை அருகே கிராமத்தில் திறக்க அனுமதிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.  இது குறித்து தமிழ்தேச பொதுவுடைமைக் கட்சியின் மாநில பொதுச் செயலர் மணியரசன் தாக்கல் செய்த மனு:  இலங்கையில் பல்லாயிரம் தமிழர்களை இலங்கை அரசு படுகொலை செய்யத் தொடங்கியபோது, அதைத் தடுத்து நிறுத்தி தமிழர்களைக் காக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சென்னையில் முத்துக்குமார் 29.1.2009-ல் தீக்குளித்து உயிரிழந்தார்.   அவரின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது மார்பளவு உருவச் சிலையை தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சியைச் சேர்ந்த சாணுரப்பட்டி கிராமத்தில் தனியார் இடத்தில் நிறுவ மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டோம். ஆட்சியர், அந்த இடத்துக்கான பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டார். அவற்றையும் சமர்ப்பித்தோம். ஆனாலும் அரசிடம் அனுமதி பெறவேண்டும் எனக் கூறி எங்கள் மனுவை நிராகரித்துவிட்டார். எனவே, சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு அளித்த தீர்ப்பு:  தமிழக வரலாற்றில் தங்களுக்குப் பிடித்த வீரர்களுக்கு நடுகல் நாட்டி போற்றுவது மரபாக உள்ளது. இதற்கு அகழ்வாராய்ச்சிகளில் ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழ்தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர், அவரது இயக்கத்தினர் போற்றுதலுக்குரிய முத்துக்குமாரின் மார்பளவுச் சிலையை, தனியார் இடத்தில் நிறுவ அரசிடம் அனுமதி கேட்டுள்ளார்.   அரசு அனுமதி இன்றி சிலை திறப்பது சரியானது அல்ல. இருப்பினும் சாதாரணமான இந்த விஷயத்தை அதிகாரிகள் ஊதிப் பெரிதாக்கிவிட்டனர். மாவட்ட அதிகாரி எழுப்பியுள்ள ஆட்சேபங்கள் சட்டரீதியானவை அல்ல. வருவாய்த் துறை ஆவணங்கள் அதிகாரிகளிடம் இருப்பவை. அவற்றை மனுதாரரிடம் கேட்டது சரியல்ல. மேலும் சிலை களிமண், மரம், உலோகம், கல் ஆகியவற்றால் செய்கிறீர்களா?  வெண்கலத்தினால் மட்டுமே சிலை செய்ய வேண்டும் என அரசு விதி உள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தேவையற்றது. பொது இடத்தில் நிறுவப்படும் சிலைகளுக்கே இந்த விதிகள் பொருந்தும். அரசியல் கட்சியினர் தியாகியாக மதிக்கும் ஒருவருக்கு சிலை வைப்பதை யாரும் தடுக்க முடியாது. முத்துக்குமாரின் சிலை வைக்க மிரட்டல் உள்ளது என அதிகாரிகள் குறிப்பிடவில்லை. எனவே, தனியார் இடத்தில் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

சென்னை பொது மருத்துவமனைக்கு பெரியார் பெயர்: கி. வீரமணி கோரிக்கை


சென்னை, ஆக.21- சென்னை பொது மருத்துவனைக்கு பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 17ம் தேதி பெரியாரின் 132வது பிறந்தநாள் வரவுள்ளது. சென்னை பொது மருத்துவமனையை பெரியார் அதிகமாக பயன்படுத்தியவர். மேலும், அவரை அண்ணா, காமராஜர், லோகியா போன்ற தலைவர்கள் அங்கு தான் சந்தித்து பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.
மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜாஜி பொது மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், பெரியார் பல காலம் தங்கி சிகிச்சை பெற்ற சென்னை பொது மருத்துவமனைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத் தொண்டர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள பெரியார் பற்றாளர்களின் சார்பில் தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கி. வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

இனிமேல் யாராவது அயலவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தாய்நில மக்களுக்கு எதிராகப் போராடினால் அவர்களைக் குண்டர் சட்டத்தில் பாதுகாப்பாகச் சிறையில் வைக்க வேண்டும். முத்துக்குமார் ஈகம் வெல்க! 
வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/22/2010 5:11:00 AM
மதுரை எர்சுகின் அரசு மருத்துவமனைக்கு இராசாசிபெயர் சூட்டப்பட்டதால் சென்னை மருத்துவமனைக்குப் பெரியார் பெயர் வைப்பது பொருத்தமே. ஆனால், சீமான் கூறியது போல் வீரப்போராளி முத்துக்குமார் பெயர்தான் வைக்க வேண்டும். பெரியார் பெயர் பல்கலைக்கழகம், அரசு கட்டடம் முதலானவற்றிற்கு முன்னரே சூட்டப்பட்டுள்ளது. முத்துக்குமாரின் ஈகத்தை - தியாகத்தை-நாம் போற்றும் வகையில் அவர் பெயரைச் சூட்டுவதே முறை. ஆனால், அவர் தன் இறுதி முறியல் அரசின் / ஆளுங்கட்சியின் கையாலாகாத தன்மையைச் சுட்டிக்காட்டியதால் அரசு அது குறித்து எண்ணிப் பார்க்காமல் இருக்கலாம்.எனினும் கலைஞர் எண்ணினால் முடியும். ஆசிரியர் வீரமணி அவர்களுக்கும் பெரியார் பெயர்தான் வைக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருக்காது. இராசீவ் பெயரைச் சூட்ட வலியுறுத்தும் கோவனின் கோரிக்கைக்கு எதிராகத்தான் அவ்வாறு சொல்லியிருப்பார். எனினும் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குத் தந்தை பெரியார் பெயரையும் அரசு பொது மருத்துவமனைக்குத் தமிழர் தாயக உரிமைக்கு உயிரளித்த உத்தமர் முத்துக்குமார் பெயரையும் சூட்ட வேண்டும். பொதுவாக இனிமேல் யாராவதுஅயலவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தாய்நில மக்களுக்
By Ilakkuvanar Thiruvalluvan
8/22/2010 5:10:00 AM
தமிழினத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட தந்தை பெரியார் பெயர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வைப்பது மிகப்பொருத்தம்.வரும் செப்டம்பர் 17 இல் பெரியாரின் பிறந்தநாளில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயலைச்செய்ய உலகத் தமிழர்களின் சார்பில் வேண்டுகிறேன்.
By வேந்தன்,புதுச்சேரி
8/22/2010 1:15:00 AM
"endrum tamizhan" you quoted "வந்தேறிகள்" who is that? - Akash
By Akash
8/21/2010 10:18:00 PM
PERIYAR PLAYED A VITAL ROLE IN BRINGING THE TAMIL TO THIS LEVEL. SO IT IS BETTER TO NAME THE HOSPITAL ON HIS NAME
By SURYAPRAKASH
8/21/2010 8:11:00 PM
திரு கே. வீரமணியின் வேண்டுகோள் நிராகரிக்க பட வேண்டியது. சென்னை பொது மருத்துவ மணைக்கு திரு பெரியாரின் பெயர் பொருத்தமானது அல்ல. பொதுவாக மருத்துவமணைக்கு வருபவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவரவர்கள் வழி படும் கடவுளை நம்பித்தான் வருகிறார்கள். கடவுளை நம்புவன் முட்டாள் கடவுளை வழிபடுகிறவன் காட்டு மிராண்டி என்று உபதேசம் பெயரை வைப்பது அந்த பொது மருத்துவமனையை இழுத்து மூடுவதற்கு சமம். டாக்டர் ரங்காச்சாரி அவர்கள் பெயரை வைப்பதே பொருத்தம்.
By S.Radhakrishnan
8/21/2010 7:50:00 PM
Generally I do not support naming University and Hospitals in the name of politicians. But EVR is a great Indian Leader and life long worked for the upliftment of Dravidians, women, harijans, etc. His self respect and self confidence movements help increase people confidence and progress. He brought Tamil letter revision. I SUPPORT ANYTHING NAMED AFTER PERIYAR INLCUDING CHENNAI GENERAL HOSPITAL. DO NOT NAME ANYTHING IN TAMIL NADU IN THE NAME OF RAJIV, SONIA, ETC. BECAUSE THE NORTH INDIANS DON'T CARE TN LEADERS LIKE KAMARAJ, RAJAJI, ETC.
By MANIMARAN
8/21/2010 6:22:00 PM
தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகால பாரம்பரிய விழுமியங்களை கொச்சைப்படுத்தி வந்தேறிகள் தமிழ்மக்களின் அடையாளங்களை மாற்ற வழிகோழிய ஈரோட்டு இராமசாமியின் பெயரை மார்ச்சுவரிக்கு வேண்டுமானால் வைக்கலாம்.
By என்றும் தமிழன்
8/21/2010 6:07:00 PM
சென்னை பொது மருத்துவனைக்கு ராசாத்தி அம்மாள் பெயர் சூட்ட வேண்டும்.
By Chidambaram
8/21/2010 5:51:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 21 ஆகஸ்ட், 2010

ஆம்! ஆம்! ஆம்! வீரப் போராளி முத்துக்குமார் பெயரைத்தான் சூட்ட வேண்டும். தமிழ் மண்ணில் அயலவர் பெயர் சூட்டக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++

சென்னை, ஆக 21-
நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பழமை வாய்ந்த சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தமிழருக்காக தன் ஒப்பற்ற தன் இன்னுயிரை ஈந்த மாவீரன் தியாகி தமிழர் முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும்.
தமிழர் தம் இனமானம் காக்கவும், தன்மானம் மீட்கவும் தன் இன்னுயிரை ஈந்தவன் முத்துக்குமார். எந்த அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் தமிழர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவன் முத்துக்குமார்.
தமிழ்நாட்டிற்கு தொடர் பற்றவர்கள் பெயரெல்லாம் தமிழ்நாட்டின் வீதியெங்கும் சாலையெங்கும் சூட்டப்பட்டுள்ள நிலையில் தியாகி முத்துக்குமார் பெயர் சூட்டப்படுவதே மிகப் பொருத்தமானது. ஆகவே முத்துக்குமார் பெயரைச் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சூட்ட வேண்டும் என நாம் தமிழர் கோரிக்கை வைக்கின்றது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்திபோராடவும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 18 மே, 2010

இராசபட்சவின் வருகை ஒருமைப்பாட்டுக்கு ​ஆபத்து : ​வைகோ



சென்னை, ​​ மே 17:​ இலங்கை ​ அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையால் நம் நாட்டு ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று ம.தி.மு.க.​ பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்தார்.​ ​​ இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,​​ இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் திங்கள்கிழமை கண்டனப் ​​ ​​ அக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:​ ​​ "இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி ஒருபோதும் ஒன்றிணைய முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார்.​ இலங்கையில் நடக்கும் தமிழர்கள் படுகொலை ஒரு இனப் படுகொலை என்று 1983-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி கூறினார்.​ அவரே,​​ 1984 ஆகஸ்ட்டில் நாடாளுமன்றத்தில் பேசும்போது,​​ இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி தமிழர்களின் பூர்வீக பூமி,​​ அது தமிழர்களின் பூமி என்று குறிப்பிட்டார்.​ ​​ அத்தகைய பூமியில் தமிழர்களுக்கு ​ உரிமை இல்லை என்று கூறும் ராஜபட்ச ஜூன் 8-ம் தேதி இந்தியா வருகிறார்.​ ராஜபட்சவின் ஒவ்வொரு இந்திய வருகையும்,​​ அவருக்கு இங்கு அரசால் அளிக்கப்படும் ஒவ்வொரு வரவேற்பும்,​​ இந்திய ஒருமைப்பாடு என்னும் மாபெரும் சுவரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.​ ​​ இலங்கைத் தமிழர்களின் தனி ஈழப் போர் இன்னும் முடியவில்லை.​ விரைவிலேயே அடுத்த கட்டப் போர் ​ தொடங்கும்.​ உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் அந்தப் போர்க்களம் நோக்கிச் ​ செல்வார்கள்.​ ​ அப்போது தமிழகத்திலிருந்தும் அந்தப் போர்க்களம் நோக்கிச் செல்ல வாலிபர்கள் தயாராக வேண்டும்.​ ​​ ​ இலங்கையில் தமிழர்கள் படுகொலையை பொறுத்துக் கொள்ள முடியாத இளைஞர் முத்துகுமார் கடந்த ஆண்டு தீக்குளித்து உயிரிழந்தார்.​ ​ அவரது ​ மரணம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது.​ ​​ அந்த இளைஞரின் ​ தியாகத்தைப் போற்றும் வகையில்,​​ தஞ்சாவூர் மாவட்டம்,​​ செங்கிப்பட்டியில் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி சார்பில் அவரது சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு ​ செய்யப்பட்டிருந்தது.​ ​​ ஆனால்,​​ அதற்குக் காவல் துறையினர் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துள்ளனர்.​ ​ தனியாருக்குச் சொந்தமான இடத்தில்,​​ முத்துகுமாருக்கு சிலை அமைப்பதை தடுப்பது ஏன்' என்று வினவினார் வைகோ.​ ​​ ​ இலங்கைத் ​ தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.​ ​ நெடுமாறன் பேசியதாவது:​ ஜெர்மனியில் யூத இன மக்களுக்கு எதிரான ஹிட்லரின் கொடுமைகளை ஐரோப்பிய நாடுகள் ​ முதலில் கண்டுகொள்ளவில்லை.​ ​ ஹிட்லரின் தாக்குதல் பிற ஐரோப்பிய நாடுகள் பக்கம் திரும்பிய பின்னரே,​​ அந்த நாடுகள் ஹிட்லரை ஒடுக்க ​ ஒன்று சேர்ந்தன.​ அதனால் இரண்டாம் உலகப் போர் என்னும் பேரழிவு ஏற்பட்டது.​ ​​ ​ இப்போது ​ இலங்கையில் ராஜபட்சவின் தமிழ் இன அழிப்பை உலக நாடுகள் வேடிக்கை ​ பார்க்கின்றன.​ இதனால் தெற்காசியப் பகுதியே பாதிக்கும் அபாயம் விரைவில் ஏற்படக்கூடும் என்றார் பழ.​ நெடுமாறன்.​ ​​ ​ இந்திய கம்யூனிஸ்ட் ​ கட்சியின் மாநில துணைச் செயலர் சி.​ மகேந்திரன்:​ மொழி உணர்வு இல்லாமல் ஒரு அரசியல் கட்சி இயங்க முடியாது.​ ​ இது,​​ கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் பொருந்தும்.​ எனவேதான்,​​ இலங்கையில் தமிழினம் அழிக்கப்படுவதை ​ எதிர்த்து எங்கள் கட்சி போராடி வருகிறது.​ ​கூட்டத்தில் சலசலப்பு:​ ​​ பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிக் கொண்டிருந்தபோது,​​ அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள்,​​ கூட்டம் நடத்த இரவு ​ 10 மணி வரை மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது,​​ இப்போது இரவு 10.40 மணி ஆவதால் ​ கூட்டத்தை முடிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.​ ​​ இதனால் ஆத்திரமடைந்த பார்வையாளர்கள்,​​ போலீசாருக்கு எதிராக முழக்கமிட்டனர்.​ போலீசாரை நெருங்கி கூட்டத்தினர் சென்றனர்.​ அவர்கள் அனைவரையும் ​ திரும்பி இருக்கைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்ட வைகோ,​​ நான் பேச வேண்டியதை,​​ பேசிவிட்டுதான் உட்காருவேன் என்று கூறி பேச்சைத் ​ தொடர்ந்தார்.​ பின்னர் 10.54 மணிக்கு பேச்சை முடித்தார்.​ இதனால் ​ கூட்டத்தில் பெரும் ​ சலசலப்பு ஏற்பட்டது.​ ​
கருத்துக்கள்

1. இந்தியா வலிவாகவும் பொலிவாகவும் இருக்க வேண்டும் என்றால் இனவெறி பிடித்த படுகொலையாளன் இராசபக்சே இங்கு வர இசைவு தரக் கூடாது. ஆனால் கூட்டுக் கொலைகாரனை இந்திய அரச எவ்வாறு புறக்கணிக்கும்? எனவே இந்தியா முழுமையும் இக் கருத்தை எடுத்துச் செல்ல வேண்டுகிறேன். 2) முத்துக்குமார் சிலை திறப்பு இளந்தமிழர் இயக்கம் சார்பில்தான் அமைக்கப்பட்டது என எண்ணுகிறேன். வைக்கோ சரிபார்க்கவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/18/2010 2:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 17 மே, 2010

முத்துக்குமார் பெயரில் பாசறை: திருமாவளவன் அறிவிப்பு

முத்துக்குமார் பெயரில் பாசறை: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, மே 17- முத்துக்குமார் பெயரில் பாசறை தொடங்கப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறி ஓராண்டை எட்டிவிட்டது. மே 18, அந்தப் பேரவலத்தின் நினைவு நாளாக உலமெங்கும் தமிழர்களால் ஆறாத் துயரத்துடன் நினைவுகூரப்படுகிறது.

விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கிறோம் என்னும் பெயரில் அப்பாவிப் பொதுமக்களை சிங்கள ராணுவம் மனிதநேயமற்ற முறையில் கொன்று குவித்ததை உலகமே வேடிக்கை பார்த்தது.

சிங்கள இனவெறியர்களுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உற்ற துணையாய் இருந்து மேலும் மேலும் அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றன.

இத்தகைய சூழலில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதும் ஈழத் தமிழர்களுக்கான ஒரு நிலையான அரசியல் தீர்வை வென்றெடுப்பதும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்களின் முன்னால் உள்ள பெரும் சவாலாக மைந்துள்ளது.

மே 18 - முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இந்த நினைவு நாளில் தமிழீழ மக்களுக்குத் தொடர்ந்து துணை நிற்போம்! தமிழீழ விடுதலை அரசியலை டைகாப்போம்! என இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் உறுதியேற்போம்.

இத்தகைய உறுதியை ஏற்கும் வகையில் ஈழ விடுதலைக்காகத் தன் உயிரைக் கொடையளித்த தம்பி முத்துக்குமார் பெயரில் பாசறை ஒன்றை சென்னையில் தொடங்குகிறோம். அறவழியில் தமிழீழ விடுதலைக்கான அரசியலை முன்னெடுத்துச்செல்லும் ஒரு களமாக இந்த பாசறை மையும்.

இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

படிப்பறிவில்லாத இளைஞர்கள், தவறான அரசியல்வாதிகளால் உசுப்பிவிடப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். எங்காவது படித்தவன் ஒரு டாக்டர், ஒரு இஞ்சினீயர், ஒரு பேராசிரியர், ஒரு பேங்க் மேனேஜர், ஒரு தொழிலதிபர் இது போன்ற பிரச்சினைக்காக தீக்குளித்திருக்கிறார்களா? ஏன் இந்த பிரச்சினையை வைத்து பிழைப்பு நடத்திக்கொன்டு இருக்கும் வைகோவோ, நெடுமாறனோ, திருமாவளவனோ, சீமானோ தீக்குளிப்பார்களா? சூடா டீ கூட குடிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரைவிட்ட இருபதுக்கு மேற்பட்ட இளைஞர்களை பற்றி தெரியும். ஓ.கே., இந்த பணக்காரநாடுகளில் வசதியாக செட்டிலான இலங்கை அகதிகள், இலங்கை பிரச்சினைக்காக எவனாவது தீக்குளித்து உயிரை விட்டிருக்கானா? எண்ணிப்பாருங்கள்.

By Anbarasu, Guindy
5/17/2010 5:38:00 PM

தஞ்சாவூரில் நேற்று வீரப்போராளி முத்துக்குமார் சிலை திறக்கத்தடைவிதித்துள்ளனர். எனவே, வீட்டிற்கொரு முத்துக்குமார் சிலை தந்து பாசறையின் பயணத்தைத் தொடரவாழ்த்துகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 5:38:00 PM

வைகோவையும், நெடுமாறனையும் சமாளிக்க திருட்டு திருமாவை கருணா நன்றாக பயன்படுத்திக் கொள்கிறான். ஒரு எம்.பி பதவிக்கு விலை போன திருமா சென்னை நகர சுவர்களில் மீசையை முறுக்குகிறார். ஆனால் ராஜபக்சேவிடம் மூக்குடை பட்டு வந்தார். ஒரு பக்கம் கொலைகார காங்கிரஸுடன் கூட்டு, மறுபக்கம் ஈழத்தமியர்களுக்கு வக்காலத்து. என்ன ஒரு நாடகம்.

By நவீன் சென்னை
5/17/2010 5:37:00 PM

தலை நிமிர்ந்தோம் உன்னால்.. என்றும் அணி திரள்வோம் உன் பின்னால்.. வாழ்த்துக்கள்.. தலைவா.. வேல்...

By lokesh
5/17/2010 4:57:00 PM

rajapakshevai sanththithu avan thantha virunthai undu kaliththu vittu avan elanamaa pesiyathai kettu thalai kuninthu nindru vittu inge maar thattum ivar - oru uyirth thiyagiyin peyaraal paasarai amaikka (konjamum vetkama illai??)thahuthi atravar..

By sinthanaikkiniyan
5/17/2010 4:36:00 PM

வாழ்த்துக்கள்!.

By Human
5/17/2010 4:04:00 PM

வாழ்த்துக்கள்!.

By Human
5/17/2010 4:04:00 PM

DAI....DAI UNNAI POLA ORU MOLLAMARI, MUDICHAVUKI..YARAVATHU ERUKANGALADA..NAAAYEEEE /// RAJABAKSHE KITTA MALAR KOTHU VANGI VANDHA NAYEEEE NEYALLAM ORU THEVIDI........

By KASAMALM KARUNANIDHI
5/17/2010 4:01:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்